Jump to content

மத்திய அரசுக்கு அடிக்கிறது தி.மு.க., ஜால்ரா: பவார், மம்தாவை போல் ரோஷமே இல்லை


Recommended Posts

[size=5]மத்திய அரசுக்கு அடிக்கிறது தி.மு.க., ஜால்ரா: பவார், மம்தாவை போல் ரோஷமே இல்லை[/size]

[size=3]

[size=4]மத்திய கூட்டணி அரசுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் சரத் பவார் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மம்தாவும் அடுத்த குண்டை வீசியுள்ளார். எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை தான், ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகிப்போம், என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தாவும், பவாரும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அந்த கூட்டணியில் உள்ள தி.மு.க., தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்ற போதிலும், பதவி சுகத் துக்காக, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது.[/size]

[/size]

[size=3]

[size=4]மத்திய அமைச்சரவையில், தனக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படாததை எதிர்த்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரும், அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேலும், மத்திய அமைச்சர் பொறுப்புகளில் இருந்து, விலகவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக, தங்களது அமைச்சரவை பணிகளைக் கவனிக்காமல், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சரத் பவாரின் இந்த அதிரடி அரசியலில், மத்திய அரசு ஆடிப் போயுள்ளது.[/size]

[/size]

[size=3]

[size=4]அடுத்த அடி: சரத் பவார் கொடுத்த அடியில் இருந்து மீள்வதற்குள், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தாவிடமிருந்து, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் தியாகிகள் தினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில், மம்தா பானர்ஜி, தனக்கு போக்கு காட்டி வரும் மத்திய அரசை குறி வைத்து, அனல் கக்கும் வார்த்தைகளால், சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.[/size]

[/size]

[size=3]

[size=4]அவர் பேசியதாவது: யாருடைய தயவின் பேரிலும் நாங்கள் அரசியல் நடத்த விரும்பவில்லை. யாருடைய தயவும் எங்களுக்கு தேவை யில்லை. எங்களுக்கு மரியாதை கிடைக்கும் வரை, மத்திய அரசில் அங்கம் வகிப்போம். அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் எங்களுக்கு காங்கிரசின் தயவு தேவையில்லை. இங்கு, தனியாகவே அரசியல் நடத்துவது என, முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அளித்த கடன்களுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில், மூன்றாண்டு கால அவகாசம் கேட்டுள்ளோம். எங்களின் இந்த கோரிக்கைக்கு, மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பதற்காகக் காத்திருக்கிறோம்.[/size]

[/size]

[size=3]

[size=4]டில்லிக்கு...: முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு, பெருமளவு கடன் வாங்கி, மாநில அரசுக்கு பெரும் சுமையை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதற்கு, பிரதமர் எப்படி அனுமதி அளித்தார். தேவைப்பட்டால், எங்களின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன், டில்லி நோக்கிச் செல்லவும் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடம், நாங்கள் இரவலோ, சிறப்பு நிதியோ கேட்கவில்லை. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், எங்களைப் பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். இதை, அவர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார். மம்தாவின் இந்த தடாலடியான பேச்சு, காங் கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள பதவிக் காலத்தை, சுமுகமாக கழிப்பது எப்படி என, காங்., தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.[/size]

[/size]

[size=3]

[size=4]ஜால்ரா: ஐ.மு., கூட்டணியில் உள்ள, சரத் பவாரும், மம்தாவும், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு முக்கிய கட்சியான தி.மு.க.,வோ கொஞ்சம் கூட ரோஷமே இல்லாமல் காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் தொடர்ந்து ஜால்ரா அடித்து வருகிறது. [size=5]இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்து விட்டு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றார். இவரது மிரட்டலுக்கு மத்திய அரசு பணியாத நிலையில், ராஜினாமா முடிவை கைவிட்டார். இது தவிர, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லை பெரியாறு விவகாரம், காவிரியில் தண்ணீர் தராமல் கர்நாடகா மிரட்டல் போன்ற தமிழக நலன் சார்ந்த விஷயங்களிலும், பெட்ரோல் விலை உயர்வு குறித்த விஷயத்திலும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதைத் தவிர்த்து, வெறும் கடிதங்களை மட்டுமே, தி.மு.க., தலைவர் எழுதி வரு கிறார். சமீபத்தில் கூட, மத்திய அரசுக்கு பயந்து, டெசோ மாநாட்டில், தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்ற உத்தேசமில்லை என, தி.மு.க., பல்டி அடித்தது .[/size] மற்ற கூட்டணி கட்சிகள் எல்லாம், காங்கிர சையும், மத்திய அரசையும் மிரட்டி வரும் நிலையில், தி.மு.க.,வின் இந்த அமைதியான போக்கை, வட மாநில அனைத்து கட்சித் தலைவர்கள் கிண்டலுடன் விமர்சித்து வருகின்றனர்.[/size]

[/size]

[size=3]

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி எப்போது உண்மையான அரசியல் செய்தவர்.

குடும்பத்திற்காக கூட்டணி மாறி ஜால்ரா அடிப்பதே அவரின் கட்சிக் கொள்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.