Jump to content

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்


Recommended Posts

ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர்.

சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர்.

தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். அத்துடன் சிறீலங்காவில் சுயாதீன சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டில் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா வருடாந்த கூட்டத்தொடாரில் நாடுகளின் அறிக்கையில் சிறீலங்கா விடயத்தை விவாதித்த ஒரே நாடு கனடா என்பது மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டிலும் சிறீலங்கா விடயத்தை முதன்மைப்படுத்திய மட்டுமன்றி ராஐபக்ச பேச எழுந்தபோது கனடா பிரதமர் வெளிநடப்பும் செய்தார். சிறீலங்காவில் 2013 நடைபெறவுள்ள மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி புறக்கணிப்போம் என்ற எச்சரிக்கையும் கனடிய பிரதமர் விடுத்தார்.

அத்துடன் ஜ.நா மனித உரிமை அவையில் சமர்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் முன்மொழிந்தும், வாக்களிக்கும் நாடாக இல்லாவிட்டாலும் அதன் வெற்றிக்காக பல நாடுகளை அணுகி காத்திரமாக உழைத்தும், பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், தமது மகிழ்ச்சியை வெளியிட்டு ஆதரித்த நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக நன்றியறிதலை முதலாவதாக வெளியிட்ட நாடும் கனடாவே.

சமீபத்தில் உண்மைந்pலையை கண்டறிய கனடாவின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாகச் சிறீலங்கா சென்று திரும்பிய கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், ரிக் டைஸ்ரா, லிபரல் கட்சித்தலைவர் பொப் ரே, மறைந்த புதிய சனநாயகக்கட்சித் தலைவர் ஐக் லேட்டன் அவர்களின் துணைவியார் ஒலிவியா சோ, எனப் பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுடன் இணைந்து கொண்டனர்.

உலகில் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் மேற்கு கரையான வன்கூவரில் இருந்து கியுபெக் வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் கணிசமானவர்களின்; தொகுதிகளில் தமிழர்கள் யாரும் கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழர் நலனை மட்டும் முன்னிறுத்தி செயற்படும் உறவுகளின் பெருமுயற்சியே இத்தகைய பாரிய கனடிய மாற்றத்திற்கான காரணம் என்றனர் கனடியத் தமிழர்கள். இந்நிகழ்வு பாரிய எழுச்சியையும் பெரும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக பலரும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கின்றார் எமது செய்தியாளர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58141&category=TamilNews&language=tamil#.T3siVVnfUA8.facebook

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன்.....அளவில் சிறிய தொகை ஆயினும் .அற்பணிப்புடனான மக்களின் பங்களிப்பு.....மூன்று வருடங் களுக்கு முன்

நாம் தெருத் தெருவாக அழுததிற்கு கிடைத்த சிறு ஆறுதல்.இது....நன்றி கனடாவுக்கு....

Link to comment
Share on other sites

கலந்துகொண்டு இந்த அரசியல் நோக்கத்திற்கு ஆதரவு கொடுத்த உறவுகளுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

Link to comment
Share on other sites

.

... நம்மளில் கனக்க தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களுக்கும் ... பின் உள்ள மர்மங்கள் ஒன்றுமே ... துரோகங்களில்லை!!!!!!!!

இப்போ உந்த கனேடிய நிகழ்வில் ... தேசிய கொடி பிடிக்காதது ... தேசத்துரோக குற்றம்??? துரோகம்???? .... இதை... தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களின் பாசையில் சொல்வதானால் ... துரோகம்!!!!!!!!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

Link to comment
Share on other sites

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

Link to comment
Share on other sites

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

Link to comment
Share on other sites

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

புரியவில்லை. இதைத் தானே யுத்தம் நடக்கும்போது பலர் சொன்னார்கள். கொடியே பிடிக்காதீர்கள். வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று. அன்று கவனயீர்ப்பு எதற்காகச் செய்தோம்?? வன்னியில் மக்கள் படுகொலையைத் தடுப்பதற்காகத் தானே?? அப்போது ஞான உதயம் வரவில்லையா? இன்று அகூதா கற்பிக்கின்ற நியாயம் உற்பட, பல விடயங்களைப் பிறர் சொன்னார்கள். அவர்களை இவர்கள் வர்ணித்த விதம் எப்படியா??உலகத் தமிழர் தடை செய்யப்பட்டபோது, குறித்த பிரிதொரு அமைப்பின் அலுவலகத்தில் தான் இவர்கள் கூட்டங்கள் வைத்தார்கள். அன்று, அந்த அமைப்பு, கொடி பிடிக்க வேண்டாம். மக்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னதற்காக, அந்த அமைப்பின் அலுவலகத்தில் இவர்கள் அலுவலக நேரத்தில் பிற்பாடு கால் வைத்ததில்லை.( அலுவலக நேரம் என்று சொன்னது புரியவில்லை எனில் தனிமடல் போடுங்கள்.)உண்மையில் நேற்றுத் தான் கொடி பிடித்திருக்க வேண்டும். யார், இதற்கு நன்றி சொல்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக.... யார் குத்தினாலும் அரிசியானச் சரி எனலாம். ஆனால் இவர்கள் குத்துவது கொஞ்ச். வீணாக்குவது பல மடங்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா?  அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

நானும் அதைத் தான் கேட்கின்றேன். கவனயீர்ப்புப் போராட்டத்தை நாங்கள் ஏன் நடத்தினோம்?? சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றச் சொல்லித் தானே?? அப்போது மக்கள் படுகொலைத் தடுக்கின்றதை முன்னிலைப்படுத்தாமல், பிடிவாதமாகப் பல வேலைகளைச் செய்யப் போய் இத்தனை அழிவுகளையும் தடுக்க, கேட்க எமக்கு நாதியின்றிப் போய் விட்டது.

இத்தனை பேரை இழந்தபோதும் யாரும் அன்று எமக்குக் குரல் கொடுக்காமல் போனதற்கு இவர்களின் இப்படியான பிடிவாதப் போக்குக் காரணமாக இருக்கவில்லை என்கின்றீர்களா?? இன்று நீங்கள் கற்பிக்கின்ற நியாயங்களை மற்றவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் துரோகியானவர்கள்.

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

Link to comment
Share on other sites

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா? அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

விளம்பரம் என்றும் பார்க்கலாம், தவறில்லை. ஆனால், இந்த அமைப்புக்களின் சார்பாக ஐ.நா.வுக்கு சென்ற பலரும் தமது நேரம், குடும்பம், வேலை, பணம் என பலவற்றை தாயக மக்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்தார்கள்.

ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களே தமது கருத்துக்களை முன்வைக்கமுடியும். அந்த வகையில் கிருபாகரன் அவர்கள் மட்டுமே கருத்தை வைத்தார் என நம்புகிறேன். ஆனந்தசங்கரி அவர்கள் பேசியது ஒரு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பாக.

முள்ளிவாய்க்கால் வரை நாம் இவ்வாறான செய்பாடுகளில் ஈடுபடவில்லை, மூன்று வருட காலமாகவே நாம் முயற்சித்து வருகின்றோம்.

Link to comment
Share on other sites

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறித்தவர் ஜெனிவா சென்றும் பேச முடியவில்லை என்கின்றீர்கள். பார்வையாளர் வரிசையில் இருந்து விட்டு வருவது தாயக மக்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு?? என்பது எவ்வகையில் பொருந்துகின்றது.

Link to comment
Share on other sites

குறித்தவர் ஜெனிவா சென்றும் பேச முடியவில்லை என்கின்றீர்கள். பார்வையாளர் வரிசையில் இருந்து விட்டு வருவது தாயக மக்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு?? என்பது எவ்வகையில் பொருந்துகின்றது.

அதற்கான பதில் இங்கே இருக்கலாம். தயவு செய்து வாசித்துப்பாருங்கள்.

http://www.ncctcanada.ca/images/docs/NCCT%20Press%20Release%20-%20Forum%20on%20US%20Resolution%20-%20March%2027th%202012.pdf

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100091&hl=&fromsearch=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

Link to comment
Share on other sites

நாடு கடந்த அரசின் சார்பில் (செலவில்) இங்கிலாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரையன், சட்டவல்லுநர் கேரன் பார்க்கர், பேராசிரியர்கள் போல் நியூமன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு, தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

அந்த 25,000 டொலர்களும் மக்களின் பணம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா அகூதா? அந்த 25,000 டொலர்களும் ஐ.நா. மனித உரிமை அவையின் செயற்பாட்டிற்காகத் தான் செலவிடப்பட்டதா?

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

Link to comment
Share on other sites

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

அமைப்பின் சார்பாக பல நாடுகளுக்கும் சென்று வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்கின்றமை ( தென் ஆபிரிக்க பிரயாணம்) ;

வண இமானுவேல் அடிகளார் அவர்களின் இந்திய பிரயாண முயற்சியும் இந்தியாவுடனான செயற்பாடுகளும்;

ஜெனீவாவில் பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தல்;

பல நாடுகளில் அந்தந்த நாட்டு பிரநிதிகள் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்களில் தொடர்புகளை ஏற்படுத்தல் (ex: USTPAC in US)

22 ஆவது தொடரை நோக்கிய அரசியல் வேலைப்பாடுகள்;

GTF remains resolute that only an independent, international investigation will bring justice to the victim’s of war crimes and crimes against humanity, and their families. However, these important small steps can pave the way for an international mechanism towards truth, accountability and lasting peace on the island. http://globaltamilforum.org/gtf/

Link to comment
Share on other sites

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாணி சமீபத்தில் எழுதிய கட்டுரை ரொரன்ரோ ஸ்ராரில்::

http://www.thestar.com/opinion/editorialopinion/article/1154643--sri-lanka-on-notice-where-do-we-go-from-here

Link to comment
Share on other sites

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

Gary Anandasangaree Legal Counsel for Canadian Tamil Congress (CTC) on behalf of Lawyers Rights Watch Canada (LRWC) made the following intervention at the UN Human Rights Council meeting today (March 2nd 2012) after the Sri Lankan government's permanent representative to the UN made her statement.

http://www.canadiantamilcongress.ca/article.php?lan=eng&cat=&id=34

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

அவர்கள் முயற்சிக்கிறார்கள், தவறுகளை ஏற்கும் பக்குவமும் உள்ளது. எனவே அவற்றை சுட்டிக்காட்டி ஒன்றாக நடந்து செல்வதே வழி என எண்ணுகிறேன். மாற்று வழி இருப்பாதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

------------------------------

</br>

</br>எனக்கு இவர்களைப் போட்டுத் தாக்க வேண்டும் என்ற நோக்கமில்லை. தமிழீழத்திற்காக உழைக்கின்ற அனைவரும் வரவேற்கப்பட வேண்டும் என்பதே என் அவா. ஆனால், இவர்கள் தாங்கள் மட்டுமே என்ற நோக்கத்தில் செயற்படுவதும், அதற்காக மற்றவர்களைப் பகைப்பதும் தான் பிடிக்கவில்லை.

செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் மக்களை நோக்கியதாகவே இருக்கின்றதாகவே தெரிகின்றது. எதிரியை நோக்கியதாக இல்லை. அப்படியான விளம்பரங்களையும், பெயரையும் வைத்து என்ன இலாபம்.... இதற்கு பொதுவான எல்லாக் கனடாத் தமிழ் அமைப்புகளும் விதிவிலக்கல்ல!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.