Jump to content

மாவீரர்நாள் உரை 2007 - அதனை எப்படி புரிந்து கொள்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

மாவீரர்நாள் உரை 2007

- அதனை எப்படி புரிந்து கொள்வது?

எழுதியவர்: உ. துசியந்தன்

நவம்பர் 27. மாவீரர் நாள்.

விடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள்.

அன்று, உலகத்தின் சிறு மூலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கும்.

அது ஒரு தேசத்தின் குரலாய், தேசியத்தின் குரலாய்,

விடுதலையின் குரலாய், தமிழீழ வேட்கையின் குரலாய் ஒலிக்கும்.

அதனை சர்வதேசம் செவிமடுக்கும்.

விடுதலை வேண்டிநிற்கும் தமிழினம் மட்டுமல்ல,

பேரினவாதம் கக்கும் சிங்களத் தேசம் மட்டுமல்ல,

அகில உலகும் அந்த நாளுக்காய் காத்திருக்கும்.

ஆயிரம் கற்பனைகள், ஆயிரம் எதிர்பார்ப்புகள்,

அரசியல் ஆய்வுகள், எதிர்வுகூறல்கள்

என்று உலகமே அந்த உரையைச் சுற்றிவரும்.

"உலகத்தின் தூக்கம் கலையாதோ?

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?"

என்று ஈழத் தமிழினம் ஏங்கிக் கிடக்கும்.

சர்வதேசமோ தூங்கிக் கிடக்கும்.

"நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்,

நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே."

என்று ஒருவன் முழங்குவான்.

அவன் குரல் கேட்க சர்வதேசம் விழித்துக் கொள்ளும்.

ஓம். தமிழீழத் தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரை தான் அது.

ஆண்டுக்கு ஒரு முறை அவன் ஆற்றும் உரை.

அது தமீழீழ போராட்ட செல்நெறியை உலகுக்கு அறிவிக்கும் உரை.

ஓம் இந்த ஆண்டும் பேசினான்.

அழுத்தமாய், மிக நுணுக்கமாய்.

இந்த ஆண்டு ஆற்றப்பட்ட மாவீரர்நாள் உரையானது, கடந்த ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளிலிருந்து மாறுபட்டதாய், புதிய வடிவம் கொண்டதாய் அமைந்திருக்கிறது. இது நுண்ணிய அரசியல் வெளிப்பாடுடைய, அழுத்தமும் ஆழமும் நிறைந்த இராஜதந்திர மொழியாக பரிணமித்துள்ளது. தமிழிலும் இராஜதந்திரரீதியாக பேசமுடியும்/உரையாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ள உரையாக இது அமைந்துள்ளதென்றால் மிகையாகாது.

அந்தவகையில், இக் கட்டுரையானது மாவீரர்நாள் உரைக்கான விளக்கவுரையோ, பொழிப்புரையோ அல்ல. மாறாக, இவ்வுரையை நாம் எவ்வாறாகப் புரிந்துகொள்ளலாம் என்பது பற்றிய ஒரு பார்வை மட்டுமே.

மாவீரர்நாள் உரை ஆற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகும் நிலையில், இதுவரையும் தமிழர் மட்டத்தில் எதுவித ஆழமான ஆய்வோ அலசலோ வெளிவரவில்லை என்பது கவலைக்கிடமானது. அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இருந்தவரை, அவரூடாக உரைபற்றிய மிகத் தெளிவான புரிதல் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவரின் மறைவுக்கு பின்னான முதலாவது உரையாக இந்த ஆண்டின் மாவீரர்நாள் உரை அமைந்திருக்கிறது என்பதுவும், தேசியத் தலைவனின் உரை தொடர்பாக தமிழ் மக்களுக்கு சரியான புரிதலை எவரும் ஏற்படுத்தவில்லை என்பதுவும், இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

இந்நிலையில்தான் அன்ரன் பாலசிங்கம் என்கிற தத்துவாசிரியனின் இழப்பு எத்தகைய பாரிய இழப்பு என்பது புரிகிறது. அத்துடன் இவ்வாறான சூழலில் தான் அந்த மதியுரைஞனின் தேவைபற்றியும் தெளிவாக உணரப்படுகிறது. அத்தோடு, ஈழத்தமிழரின் அறிவுஜீவி மட்டம் வறண்டு கிடக்கிறது என்கிற கசப்பான உண்மையும் வெளிப்படுகிறது. ஒரு தேசியத் தலைவனின் உரையை மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் தமிழர் தரப்பில் இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது.

இது ஒருபுறமிருக்க, மாவீரர்நாள் உரை ஆற்றப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா ஊடகங்களின் ஊடாகவும், புலம்பெயர்ந்த தமிழர் ஊடகங்களூடாகவும் சில எதிர்பார்ப்புகள் விதைக்கப்பட்டன. "மாவீரர்நாள் அன்று தனிநாட்டுப் பிரகடனம் செய்யப்படப் போகின்றது - இதை தனது மாவீரர்நாள் உரையில் பிரபாகரன் அறிவிப்பார்" என்கிற ஒரு செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. சிறிலங்கா அரச/ஊடகத் தரப்பால் உருவாக்கப்பட்ட இச்செய்தியை, புலம்பெயர்ந்த தமிழர் தரப்பு ஊடகங்களும் அழகுபடுத்தி மக்கள் மத்தியில் அலங்கார ஊர்வலம் விட்டன.

இந்தத் தனிநாட்டுப் பிரகடனச் செய்தியை இரண்டு வகையாக நோக்கலாம்:

ஒன்று: தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான சிறிலங்கா அரசின் பயமும், அதனால் சர்வதேசத்தை புலிகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வண்ணம் திசைதிருப்பும் நோக்கோடு பரப்பப்பட்ட செய்தியாக இருக்கலாம்.

இரண்டு: தமிழ மக்களிடத்தில் ஆசையையும் எதிர்பார்ப்பையும் தூண்டி உச்சநிலைக்குக் கொண்டு சென்று, கடைசியில் அப்படி ஒரு அறிவிப்பு வராத நிலையில் அது புலிகள் மீதான எதிர்ப்பாகவும், ஏமாற்றமாகவும் மாறும் என்கிற உளவியல் ரீதியான திட்டமிட்ட முன்னெடுப்பாக இருக்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூக மட்டத்தில் ஓரளவேனும் உணரக்கூடியதாக இருக்கிறது. அது எதிர்ப்பாக இல்லாதுவிட்டாலும், ஒருவகை ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. இதனை மாவீரர்நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. இந்நேரத்தில் தான் புலம்பெயர்ந்த ஊடகங்களினதும், அறிவுஜீவி மட்டத்தினரதும் பணி மிகப்பெரியதாக இருத்தது. ஆனால், அவர்கள் அந்தக் கடமையை இதுவரைக்கும் செய்யவில்லை என்பது ஏமாற்றமே.

அடுத்து, சர்வதேச மட்டங்களில் இருந்து மாவீரர்நாள் உரை பற்றிய கருத்துக்கள் எவையும் உத்தியோகபூர்வமாக வரவில்லை என்பதும் இன்னொரு முக்கிய செய்தி. எழுத்துக்களாகவும், பேச்சுக்களாகவும் நேரடியாக எதிர்வினை நிகழவில்லையே ஒழிய, மாவீரர்நாள் உரையைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளில் அவை வெளிப்படுகிறது, தொடர்ந்தும் வெளிப்படும் என்பதே உண்மை. உதாரணத்தி்ற்கு மாவீரர் நாள் உரை முடிந்த இரண்டு வாரங்களின் பின்னர்தான் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மாவீரா் நாள் உரையினை தொட்டு பதிலிறுத்தார். இது தான் இந்த முறை மாவீரர்நாள் உரையின் இராஜதந்திர வெற்றி. இதனால் தான் இந்த முறை ஆற்றப்பட்ட உரை, ஆழமான அர்த்தமுள்ள இராஜதந்திர உரையாக அமைந்திருந்தது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.

இலக்கியமாக இருந்தாலும், இயந்திரமாக இருந்தாலும், அரசியல் உரையாக இருந்தாலும் அது யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பது முதன்மையான விடயங்களில் ஒன்று. அந்தவகையில் இந்த மாவீரர்நாள் உரை யாரை நோக்கியது என்பது பற்றி முதலில் பார்ப்பது முக்கியமானது. அதில் இந்த உரையின் முதன்மையானதும், வெளிப்படையானதுமான இலக்கு சர்வதேச சமூகமே. ஓம் - முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தை நோக்கியே இந்த உரை அமையப்பெற்றுள்ளது. அதனால் தான் இந்த உரை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளும் மொழியில் உரையாற்றப்பட்டது.

யாரை நோக்கி உரையாற்றப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள். புரிந்துகொண்டுள்ளார்கள்.

சாதாரண மக்களுக்கு, அதாவது சாதாரணமாக இந்த உரையை நோக்குபவர்களுக்கு அது ஒரு சலனமும் இல்லாத அமைதியான நீரோட்டமாகவே இருக்கும். நீருக்கடியில் ஒரு பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருப்பதையும், அது ஒரு சுனாமிப் பேரலையை உருவாக்கும் வல்லமை கொண்டது என்பதையும் கடலின் மேல்மட்டத்தைப் பார்க்கும் சாதாரணர்களால் புரிந்துகொள்ள முடியாதுதான். அதனால் தான் 'என்ன தலைவர் ஒண்டும் சொல்லேல' என்பது போன்ற குரல்களை பல இடங்களில் கேட்க முடிகிறது. அலை எழும்போது தான் உண்மை உணரப்படும். அந்தச் சுனாமிப் பேரலை சிங்களப் பேரினவாதத்தை விழுங்கப் போகிறது என்பதுவும் உணரப்படும்.

இதனடிப்படையில், இனி இந்த மாவீரர் நாள் உரைபற்றிப் பார்ப்போம்: மாவீரர்நாள் உரையை மூன்று முக்கிய அடுக்குகளாக பிரித்து அணுகலாம்:

1. சிங்களப் பேரினவாதத்தின் நிலை

2. சர்வதேச சமூகத்தின் நிலை

3. தமிழர் தரப்பின் நிலை (தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை)

முதலாவது: சிங்களப் பேரினவாதத்தின் நிலை:

அ) தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆ) இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

இ) ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

இரண்டாவது: சர்வதேச சமூகத்தின் நிலை:

அ) இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

ஆ) அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது.

இ) இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.

ஈ) சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன.

உ) அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது.

ஊ) எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மூன்றாவது: தமிழர் தரப்பின் நிலை:

அ) நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்.

ஆ) பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்.

இ) புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.

ஈ) அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சயம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

முடிவுரை:

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

[*இவை தலைவரின் உரையில் இருந்து தொகுக்கப்பட்டவையாகும்.]

இந்தவகையாக, தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரையை பகுத்து, புரிதலை உண்டுபண்ணமுடியும். மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பல்வேறு செய்திகளைச் சொல்லி நிற்கின்றன. பல பரிமானங்களைக் கொண்டவை அவை. அவற்றை தனித்தனியாக பிரித்து அலச முடியும். அவற்றின் அர்த்தமும், ஆழமும் மிகப்பெரியது.

தொடர்பாடற்துறையில் மிகவும் பிரபலமானதும், அண்மைக்காலங்களில் பரந்துபட்டு கையாளப்படுகிறதுமான ஒரு வடிவம் Friedemann Schulz von Thun என்பவரின் "நான்கு காதுகள்" என்கிற வடிவம். Friedemann Schulz von Thun ஒரு தொடர்பாடல்துறை விஞ்ஞானி. அவர் யேர்மனியர். உளவியல் துறை பேராசிரியராக Hamburg பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவருடைய இந்த "நான்கு காதுகள்" என்கிற வடிவம் மூலம் தமிழீழத் தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரையை அணுகி, இன்னும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ள நாம் முயற்சிக்கலாம்.

'நான்கு காதுகள்' வடிவம் பற்றி முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்:

நாம் ஒரு விடயத்தை (இன்னொருவருக்கு) சொல்கிற போது, அது நான்கு விதமாக அர்த்தப்படுகிறது. ஒவ்வொரு என்னுடைய வெளிப்பாடும் (நான் விரும்புகிறேனோ விரும்பவில்லையோ, எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ) நான்கு அடுக்குகளை/தளங்களைக் கொண்டுள்ளது.

1. உள்ளடக்கத் தளம்

நாம் சொல்கிற விடயத்தில் உள்ள விபரங்களை, தரவுகளை உள்ளடக்கியது. சரி பிழை, ஓம் இல்லை, பொருத்தமானது பொருத்தமற்றது, காணும் காணாது போன்ற குறிப்புகளையும் உள்ளடக்கியது.

2. 'எனது நிலை'த் தளம்

நாம் ஒரு விடயத்தை சொல்கிறோம் என்றால், அதில் எமது நிலைப்பாடு என்ன, எமக்குள் என்ன நினைக்கிறோம் போன்ற எம்மைப் பற்றியவற்றை உள்ளடக்கியது.

3. உறவுத் தளம்

நாம் ஒரு விடயத்தை யாருக்கு சொல்கிறோமோ, அவருக்கும் எமக்குமான உறவுநிலை என்ன, அவர் எமக்கு யார் என்ற உறவுநிலை பற்றியவற்றை உள்ளடக்கியது.

4. எதிர்பார்ப்புத் தளம்

நாம் ஒரு விடயத்தை சும்மா சொல்வதில்லை. அதன்மூலம் எதனை அடையவிரும்புகிறோம், என்ன நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம் போன்ற எதிர்பார்ப்புகள், ஆசைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

உதாரணம்:

செய்தி: "பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்."

உள்ளடக்கத்தளம்:

உலகமெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்கிறார்கள். தமிழருக்கென தனிநாடு இல்லை.

"எனது நிலை"த் தளம்:

1) (சிங்கள அரசுக்கானது) நாங்கள் 30 இலட்சம் பேர், அடக்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். இலங்கைத் தீவில் தான் நாம் சிறுபான்மை இனம். ஒட்டுமொத்தத் தமிழினமும் சேர்ந்தால், சிங்களம் தான் சிறுபான்மை இனம்.

2) (உலகத் தமிழினத்துக்கானது) தமிழீழம் அமைந்தால் அது உலகத்தமிழருக்காய் என்றும் ஆதரவுக்குரல் கொடுக்கும். தமிழர் மீது அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் அதிகார பலத்தோடு அந்தத் தமிழர் அருகில் நிற்கும்.

3) (சர்வதேசம்) எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கெல்லாம் நாடு இருக்கிறது. அதை அங்கீகரிக்கிறீர்கள். ஆனால், 80 மில்லியன் உலகத் தமிழர் பலம் இருக்கிற எமது நாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை. உலகெங்கும் தமிழர் வாழ்கிறார்கள். உங்கள் நாடுகளிலும் தமிழர் வாழ்கிறார்கள். அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்கள். தேர்தலில் வாக்களிக்கிறார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்கு தமிழர்களிடம் இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள்.

உறவுத் தளம்:

நாம் தமிழர்கள். தனித்துவமான ஒரு இனம். தொப்புள்கொடி உறவுகள்.

எதிர்பார்ப்புத் தளம்:

1) (உலகத் தமிழர்) தமிழர்கள் ஒன்றிணையவேண்டும், உணர்வோடு கிளர்ந்தெழ வேண்டும். தமிழீழம் அமைய செயலாற்றவேண்டும்.

2) (சர்வதேசம்) தமிழர் தேசத்தை அங்கீகரியுங்கள்.

இதேபோன்று மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு விடயங்களையும் புரிதலுக்குட்படுத்தலாம். அப்படி உட்படுத்துகிறபோது, உள்ளே பொதிந்து கிடக்கிற பல நுண்ணிய அரசிய் வெளிப்பாடுகளும், இராஜதந்திர நகர்வுகளும் புரியும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் புரிதல்களையும் எழுதுங்கள். அரசியல் ஆய்வாளர்களை மட்டும் நம்பியிராதீர்கள்.

Link to comment
Share on other sites

உ) அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது.

ஊ) எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.