Jump to content

நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்


Recommended Posts

நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்

யாழ் இணைய செய்தி அலசல்

எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ்

'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர்.

அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகால தனது சகாக்களின் ஏமாற்று உத்திகளையே இவரும் பயன்படுத்துகிறார். அவர்களின் அனுபவங்களையும் உதவியாகக் கொண்டே 'அரசியல் தீர்வு' பற்றியதான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

சர்வகட்சி மாநாடு, அனைத்துக்கட்சி மாநாடு, வட்டமேசை மாநாடு போன்ற பெயர்மாற்றங்கள் ஒருபுறம். ஒற்றை ஆட்சி, சமஷ்டி ஆட்சி, ஐக்கிய இலங்கைக்கு உட்பட்ட தீர்வு, மாகாண சபை, மாவட்ட சபை, பிரதேச சபை

போன்ற பல்வேறு அதிகார சபைகள் பற்றிய பேச்சு மறுபுறம். இவற்றின் மூலம், இதோ செய்கிறோம்,இந்தா வருகிறது, ஜனவரியில் தீர்வு, பெப்ரவரியில் தீர்வு என்று பூச்சாண்டிகள் தான் தினம் தினம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது:

1. 'அரசியல் தீர்வு' என்பது சிங்கள அரசால் முன்வைக்கப் படக்கூடிய ஒன்றா? இல்லையா?

2. (சிங்கள அரசால் முன்வைக்கப்பட முடியாத) இத்தகைய ஒரு தீர்வுக்காய் எத்தனை காலம் காத்திருப்பது?

3. அவ்வாறாயின், கொல்லப்படும் மக்களைக் காப்பதற்கு மாற்று வழிமூலம் அரசியல் தீர்வைக் காண்பது எப்படி?

இம் மூன்று விடயங்கள் தொடர்பான சில பார்வைகளை சுருக்கமாக இக்கட்டுரை தருகிறது.

அரசியல் தீர்வு

மகிந்த ராஜபக்ச அவர்கள் அரசுத்தலைவராக பதவியேற்றார். வந்த வேகத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இராணுவ வழித் தீர்வில் விருப்பம் காட்டினார். 'அரசியல் தீர்வு' விடயத்தில் நாட்டம் அற்றவராக இருந்தார். இதனைச் சகலரும் அறிவர்.

ஆயினும், சர்வதேசம் விடுமா? 'அரசியல் தீர்வு' காண் என்றது. அதனால் ஒரு வித்தை காட்டும் உத்தியாக 'அரசியல் தீர்வு' விடயத்தை கையிலெடுத்தார். அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் ஒன்று கூட்டினார். சர்வகட்சி எனப் பெயர் சூட்டினார். தீர்வைக் காணுங்கள் என்று பணித்தார்.

யார் அவர்கள்? 'அரசியல் தீர்வு' என்பதையே எதிர்க்கும் கட்சிகள். இதன் அடிப்படையில், தீர்வு எதுவும் எட்டப்படாது நிலை தோற்றுவிக்கப்பட்டது. நீண்டு செல்லக்கூடிய நிகழ்ச்சிநிரல் உருவாக்கப்பட்டு தொடர்கிறது. இதனை செவ்வனவே செய்கின்றன இந்தக் கட்சிகள்.

அதுமட்டுமல்ல. அவ்வப்போது இந்தக் கட்சிகள் ஒன்று கூடும். சர்வதேச நெருக்கடிகளுக்கு ஏற்ப, என்ன அதிகாரம் கொடுக்கலாம் என மதிப்பிடும். பின்னர் அது கொடுக்கப்படக்கூடாது என விவாதிக்கும். இப்படியாக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் தொடர்ந்து வருகின்றது.

இன்றைய அரசுத்தலைவர் தனித்து முடிவெடுக்கும் பிரத்தியேக அதிகாரம் கொண்டவர். அதனை இராணுவ ஏவுதலுக்காகவும், வட கிழக்கை பிரிப்பதற்காகவுமே அவர் பயன்படுத்திவருகிறார். ஆனால், வட கிழக்கில் ஒரு தேசியத் தீர்வை முன்வைப்பதற்கு அவர் முன்வரவில்லை. இந்த வெளிப்பாடு, இன்றைய அரசுத்தலைவரிடம் இருந்து நாம் அமைதித் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்கி நிற்கிறது.

சர்வகட்சி மாநாடு

இன்றைய அரசுத் தலைவரால் கூட்டப்பட்டிருக்கின்ற அரசியல் கட்சிகள் எவை? அவை அனைத்தும் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை. அவர்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள். ஆதலால், சர்வகட்சி மாநாடு பிரேரிக்கும் விடயம் என்பது சிங்கள மக்களால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் ஒருபக்கத்து யோசனை மட்டுமே. அதுவே முடிவல்ல. எனவே, இக் கட்சிகளின் அபிப்பிராயங்கள், முடிவுகள் அல்லது இழுத்தடிப்புகள் யாவும் சிங்கள மக்களால் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனை என்ற வகையிலேயே பார்க்கப்படவேண்டும்.

'வட கிழக்கு' வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும். அதன் மூலமே ஓர் தீர்வுக்கு வரவேண்டும். இம் முறையே இலங்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு நியாயமான அணுகுமுறையாகும்.

அதை விடுத்து 'வட கிழக்கு' மக்கள் பிரச்சனைக்கு, அம்பாந்தோட்டை பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண முற்படுகிறார் இன்றைய அரசுத் தலைவர். இப்போக்கிலிருந்து நாம் மீண்டும் புரிந்துகொள்ளக்கூடியது, 'அரசியல் தீர்வு' எட்டப்பட முடியாத நிலையில் காய்களை நகர்த்தி வருகிறார் என்பதேயாகும்.

சர்வதேசமும் நிர்ப்பந்தமும்

இந்தக் காலகட்டத்தில் நாம் இன்னொரு விடயத்தை அவதானிக்கவேண்டும். சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தி ஓர் 'அரசியல் தீர்வு'க்கு இணங்க வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படும் எந்தத் தீர்வும் நிலையானது இல்லை. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசுத் தலைவர் ஒரு கணம் சம்மதித்தாலும், மறுகணம் அதை மீறுவதற்கான சகல முயற்சிகளிலும் இறங்குவார். இதுவே வரலாற்று உண்மை.

எனவே இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தீர்வு எட்டுவது என்பது சாத்தியமான அணுகுமுறை அல்ல. அதாவது, இந்தியத் தரப்பாலேயோ, அமெரிக்க தலைமையிலான இணைத்தலைமை நாடுகளாலேயோ அல்லது ஐக்கிய நாடுகளினாலேயோ இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் இலங்கை அரசு ஒரு தீர்வுக்கு வருமாயின் அது விரைவில் கலைந்து போகும் ஒரு தீர்வாகவே இருக்க முடியும். ஆகவே நாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டுவது என்பது தேவையற்ற ஒரு கால விரையமேயாகும்.

தீர்வு - நிறுவுதல், நியாயப்படுத்துதல்

அப்படியாயின், தமிழர்களுக்கான எதிர்காலத் தீர்வு என்பது என்ன? எவ்வகையில் இது கையாளப்படுக் கூடியது? இதுவே இன்றைய கேள்வி ஆகும். இலங்கைத் தமிழர்கள் 'தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும்' முடிவை எப்போதோ பெற்றுள்ளனர். அதற்கான போராட்ட வழிமுறைகளிலும் பல ஆண்டு காலமாக இறங்கி தடம்பதித்து வருகின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கான 'அரசியல் உரிமை' என்பது நிலை நிறுத்தப்படவேண்டிய ஒன்றாக விளங்குகிறது. இதனால், சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தரும் என்ற நம்பிக்கையை நாம் தொடர்ந்தும் பேணி வருவது தேவையற்ற ஒன்று.

பதிலாக, தமிழ்பேசும் மக்கள் தமக்கு உகந்த தீர்வை தாமே முன்மொழிந்து அதனைப் பிரகடனம் செய்வதன் மூலம் நிறுவுவதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் தீர்வானது சர்வதேச அரங்கில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட தீர்வுகளில் ஒன்றாக அமைவது சிறப்பானதாகும். இது விரைந்த அங்கீகாரத்துக்கு ஓர் உந்து சக்தியாக அமையும். இவ்வாறான ஓர் நடைமுறை தமிழ் மக்களால் முன்னெடுக்கப் படுவதானது, 'இலங்கை அரசு தீர்வுத் திட்டத்தை தீர்மானிக்கும் காலம் வரை நாமாக மேற்கொள்ளும் ஓர் நடவடிக்கை' என நியாயம் கொள்ளல் அவசியமாகும்.

[சர்வதேச அரங்கில் இணக்கம் காணப்பட்ட (இடைக்கால) தீர்வுகளாக 'ஒஸ்லோ உடன்படிக்கை', சுனாமி காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 'PTOM உடன்படிக்கை' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.]

இவ்வாறு இலங்கை அரசின் முடிவுக்காக காத்திருக்காது, சர்வதேச சட்ட வரையறைகளுக்கு அமைவான, அதன் ஆதரவு பெற்ற தீர்வுத் திட்டம் ஒன்றை தமிழர்கள் தாமாகவே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகிறது. இப்படியாக உருவாகும் நிர்வாகத்தை கட்டிக்காப்பதே (அரசியல் இராணுவ நடவடிக்கைகள் மூலம்) தமிழர் தரப்பின் கடமையாகிறது.

Link to comment
Share on other sites

மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டு இக்கட்டுரை தொடர்கிறது. முதலாவது விடயம். போர் என்பது தீர்வல்ல. அது வெளிப்படையானது. அவலங்கள் நிறைந்த இந்தப் போர் முடிவுக்கு வருதல் வேண்டும். முடிவுக்கு வருதல் என்கின்ற நிகழ்வு, ஒருபகுதியினருடைய தோல்வியினால் நிகழும்போது மீண்டும் வேற்றுருவில் பிரச்சனைகள் தோன்ற வாய்ப்பக்கள் அதிகமுண்டு. சர்வதேச நிர்மாணங்களுக்கிணங்க ஒரு தீர்வு ஏற்படும் போது அது பேணப்படுதலில் சர்வதேசம் முக்கிய பங்காற்றும். ஆனால் இதுவரையிலான ஒப்பந்தங்கள் எதனையும் சிங்கள அரசுகள் மதித்து நடந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. அதனை நன்றாக மீண்டுமொருமுறை உலகிற்குப் புரியவைப்பதுவே புலிகளின் நிலைப்பாடு

தீர்வைச் சிங்களம் தருமா? அப்படியென்றால் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதுபோல் இதுவும் சுதந்திரம் பெறுதல் என்று கருத முடியுமா? அப்படிக் கருதப்பட்டால், தீர்வென்பதைச் சிங்களத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தீர்வு எவருக்குத் தேவையோ அவர்களே சிங்களத்துக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அந்த வேலைத்திட்டம் விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்படுகின்றது. அதே நேரம் புலம் பெயர்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சர்வதேசத்திற்கு செய்திகளைச் சொல்வனவாக இருக்க முடியுமே தவிர அவைமீது எவ்வித அழுத்தங்களைப் புகுத்த முடியாது.

தீர்வுக்காகக் காத்திருத்தல், சிங்கள அரசு தீர்வினை முன்வைத்தலென்பது உலகைத் திருப்திப்படுத்தும் ஒரு நாடகம் மட்டுமே. சர்வதேசம் கொடுக்கும் இலங்கை மீதான அழுத்தங்களும் இப்போதைய நிலையில் தமிழர் தரப்பை ஏமாற்றும் ஒரு வேலைத்திட்டந்தான். விடுதலைப்புலிகளால் தென்னிலங்கை முழுவதும் யுத்தம் பற்றிய பயவுணர்வு ஏற்படுத்தப்படும்போது மட்டுமே சிங்களம் தனது அரசைத் தீர்வைநோக்கித் தள்ளிவிடும். அந்த நிலைவரும்போதுதான் தமிழர் அரசியலில் எந்தப் பேரினவாத அரசியல் கட்சிகளும் குளிர்காய முடியாதுபோகும்.

Link to comment
Share on other sites

ஈழத்தை போலவே மிக முக்கியமான இடத்தில் அதே அளவான முக்கியத்தோடை இருக்கும் தாய்வானை ஒருக்கா ஒப்பிட்டு பாருங்கள்...

சீன பிராந்திய ஆதிக்கத்துக்குள்ளும், அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் நாடான தாய்வான் இண்றுவரை ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்க படாத நாடு... ஆனாலும் சுயமான தேச வரைகளோடு தனித்துவமான ஆட்சியை செய்து வருகிறது...

இந்திய பிராந்திய ஆதிக்கத்துக்குளும் அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் ஈழம் கூட அதுபோல வாழலாம்... அதோடு கூடுதலாக இலங்கை படைகளை சமாளிக்கும் திறனையும் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது... சீனாவை சமாளிக்கும் தாய்வானுக்கும் ஈழத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்க போவது இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிநாட்டையே ஒருதலைப்பட்சமா பிரகடனப்படுத்தலாம் எண்டு அங்கால கதை நடக்குது................. இங்க என்னடா எண்டா தூக்கி குப்பையில போட்ட ஒஸ்லோ உடன்பாட்டையும்.............. சுனாமி உடன்பாட்டையும் ஒருதலைப்பட்சமா பிரகடனப்படுத்தலாமாம்.................... என்னவோ போங்கோ இப்ப எத்தின தரம் நாங்கள் தனிநாட்டை பேப்பர்களிலயும் இன்ரர்நெட்டிலயும் பிரகடனப்படுத்திட்டம்....................

:D:lol:

அதென்ன சர்வதேச சட்ட வரையறைக்குள்ளான தீர்வு............ வரையறைக்கு வெளியிலான தீர்வு???????????? உப்பிடியே எல்லாத்துக்கும் சர்வதேசத்துக்கு பயந்துகொண்டு இருந்தா இவ்வளவு போராட்டமும் நடந்திருக்குமா???????????????? சும்மா ptom atom எண்டுகொண்டு................ ஆய்வாளர் மாருக்கு எழுதுறதுக்கு வேற ஒண்டும் கிடைக்கல போல :D

Link to comment
Share on other sites

ஈழத்தை போலவே மிக முக்கியமான இடத்தில் அதே அளவான முக்கியத்தோடை இருக்கும் தாய்வானை ஒருக்கா ஒப்பிட்டு பாருங்கள்...

சீன பிராந்திய ஆதிக்கத்துக்குள்ளும், அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் நாடான தாய்வான் இண்றுவரை ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கீகரிக்க படாத நாடு... ஆனாலும் சுயமான தேச வரைகளோடு தனித்துவமான ஆட்சியை செய்து வருகிறது...

இந்திய பிராந்திய ஆதிக்கத்துக்குளும் அச்சுறுத்தலுக்குள்ளும் இருக்கும் ஈழம் கூட அதுபோல வாழலாம்... அதோடு கூடுதலாக இலங்கை படைகளை சமாளிக்கும் திறனையும் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது... சீனாவை சமாளிக்கும் தாய்வானுக்கும் ஈழத்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்க போவது இல்லை..."

அமெரிக்கா போல உடன்பிறவா சகோதரன் எங்களிடமில்லை.தாய்வானுக்கு அமெரிக்கா உடன் பிறவா சகோதரன்.

Link to comment
Share on other sites

அமெரிக்கா போல உடன்பிறவா சகோதரன் எங்களிடமில்லை.தாய்வானுக்கு அமெரிக்கா உடன் பிறவா சகோதரன்.

ஒருவேளை நீங்கள் ஹொங் ஹொங் கைத்தான் தாய்வான் எண்று சொல்கிறீர்களோ எண்று சந்தேகமாக இருக்கிறது....! ஹொங் ஹொங் இப்போ சீனாவில் கைகளில்...

தாய்வானுக்கு அமெரிக்காவில் ஆசி கிடையாது.... இருக்கும் ஆதரவு எல்லாம் எதிரிக்கு எதிரி ஆதரவு நிலைதான்.... அதயும்தாண்டி சீனாவை(இந்தியாவை அல்ல) எதிர்க்கும் தீரம் எல்லாம் அமெரிக்காவுக்கு கிடையாது... அப்படியான சீன எதிர்ப்பை தாங்கும் சக்தியும் தாய்வானுக்கு கிடையாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை நீங்கள் ஹொங் ஹொங் கைத்தான் தாய்வான் எண்று சொல்கிறீர்களோ எண்று சந்தேகமாக இருக்கிறது....! ஹொங் ஹொங் இப்போ சீனாவில் கைகளில்...

தாய்வானுக்கு அமெரிக்காவில் ஆசி கிடையாது.... இருக்கும் ஆதரவு எல்லாம் எதிரிக்கு எதிரி ஆதரவு நிலைதான்.... அதயும்தாண்டி சீனாவை(இந்தியாவை அல்ல) எதிர்க்கும் தீரம் எல்லாம் அமெரிக்காவுக்கு கிடையாது... அப்படியான சீன எதிர்ப்பை தாங்கும் சக்தியும் தாய்வானுக்கு கிடையாது...

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

Link to comment
Share on other sites

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

உங்களிட்ட சொந்த சரக்கு எண்டு ஒண்டு இருக்குதுதானே..??? அதை வச்சு நீங்களே முடிவு எடுக்கலாமே...

ஒருவேளை தனிநாடு பிரகடனம் செய்தால், தாய் நாட்டுக்கு உங்களின் உதவி எப்படியாக இருக்கும் எண்டு முதலிலை சொல்லுங்கோ... பிரகடனம் சாத்தியமா இல்லையா எண்டு முடிவு பற்றி யோசிக்கலாம்...!! அங்கீகாரம் தேவையா இல்லையா எண்டதையும் யோசிக்கலாம்...

தாயகத்திலை பொருளாதடை இருக்கு... உணவை உற்பத்தி செய்ய முடியவில்லை... பொருளாதாரத்தை பலப்படுத்த உற்பத்திகளுக்கு மூலப்பொருள் இல்லை... மீன் பிடிச்சு சாப்பிடலாம் எண்டால் கடலுக்கு போக கட்டுமரம்தான் இருக்கு வலைக்கு தட்டுப்பாடு...!

நெடுமாறன் அண்ணா உணவு பொருட்களை ஏத்தி யாழ்ப்பாணம் அனுப்ப போறார் எண்டா அப்பிடியோ சங்கதி அவருக்கு ஏன் வேண்டாத வேலை, உது சரி வராது. எண்டு விடுப்பு கதைக்கிறதுக்குதான் எங்கட சனம் சரி... அதுக்கை அடங்கி கிடந்த செய்தியை எத்தினை பேர் விளங்கி கொண்டிங்கள்..??

ஆகிரமிப்பையும் தடையையும் மீறி தமிழகத்தான் ஈழத்தவனுக்கு உணவுதர முன் வருவான் என்பதை உலகுக்கும் ,இந்தியாவுக்கும் சொன்ன செய்தியாக எத்தினை பேருக்கு விளங்கிச்சுதோ நான் அறியேன்...!! அப்படி அடக்கு முறை வந்தாலும் தருவேன் என்னும் அந்த தமிழன். ஈழம் மலர்ந்தாலும் கட்டாயம் தருவான்...! அப்படி தமிழக உறவு செய்ய விளைந்ததை ஏன் இந்த புலம் பெயந்தவனால் செய்ய முடியவில்லை, அல்லது முடியாதா..??

அப்படி எல்லாருமாய் சேந்து ஊருக்கு சாப்பாட்டை அனுப்புவம் எங்கட மக்களை நாங்கள் தாங்குவம் எண்ட நினைப்பு எங்கட ஆக்களுக்கு வராது... அப்படி செய்யிறது சாத்தியம் இல்லை எண்டுவியள் அதோட தமிழீழபிரகடனம் சாத்தியமா எண்டு விடுப்பு புடுங்க மட்டும்தான் முடியும்...!

(( அதாவது முதலிலை தமிழீழத்தை நீங்கள் அங்கீகரியுங்கள்...)

Link to comment
Share on other sites

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க???????????????????????????? சர்வதேசத்தின்ர அங்கீகாரம் தேதவையோ தேவையில்லையோ???????

அங்கீகரித்தலை ஆரம்பத்தில் எந்த நாடுகளிலும் ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கம் காட்டுவார்கள். சர்வதேசத்தினுடைய தலையீடென்பது தவிர்க்க முடியாதது, என்பது விடுதலைப் புலிகளின் கருத்து. ஆனாலும் சர்வதேசத்தின் இயலாமை ஒருகட்டத்தில் வெளிப்படும்போது தனித் தமிழீழத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவது எழிதாகும். சர்வதேசத்தின் ஓரங்கமாக தமிழீழம் ஆவதற்கு அவர்களின் ஆதரவு தேவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.