Jump to content

ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு)

பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்!

சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்!

சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்!

ஆனால்...

திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்!

சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர்.

"நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட்டுமல்ல! பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதநேயப் போரின் செயலகப் பணிப்பாளரும்கூட." என்று அப்பொழுது மார்தட்டிக் கொண்டவர் அல்லவா நீங்கள்?

ஆனாலும் பாலியல் வதைகளை கிரேக்க தத்துவத்துடன் நீங்கள் ஒப்பிடுவீர்கள் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை.

வவுனியா வதைமுகாம்களில் எமது வன்னிப் பெண்களுக்கு எதிராக உங்களது சிங்களப் படைகள் கட்டவிழ்த்து விட்ட பாலியல் கொடூரங்களை கடந்த ஓராண்டுகளாக எமது ஊடகங்கள் வெளிக்கொணர்ந்திருந்தன.

ஆனாலும் இவற்றுக்கெல்லாம் எங்கே சாட்சி என்று அன்று முழங்கினீர்கள்.

சணல்-4 தொலைக்காட்சியில் வெளிவந்த ஒளிப்படங்களை 'டொக்ரேர்ட் இமேஜ்' என்று கற்பிதம் செய்து உங்களது கலாநிதி ஆய்வுத்திறனை வெளிப்படுத்தினீர்கள்!

இப்பொழுது தமிழ்வாணி என்ற ஒரு சாட்சி உங்களை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உங்களது ‘வீரர்கள்’ புரிந்த வீரபிரதாபங்களை அவர் ஏற்கனவே புட்டுவைத்துவிட்டார். எமது மக்களைக் கொன்றவர்கள் யார் என்பதையும் உலகிற்கு அவர் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்.

இப்பொழுது வவுனியா வதைமுகாம்களில் உங்களின் 'மனிதநேய வீரர்கள்' புரிந்த சாகசங்களையும் அவர் அம்பலப்படுத்திவிட்டார்.

கேட்கவே காது கூசுகின்றது. தமிழ் குருதி துடிதுடிக்கின்றது. நிலத்தில் வீழ்ந்துகிடந்து நெஞ்சில் ஓங்கியடித்துக் கதறியழ வேண்டும் போல் உள்ளது.

கண்ணகியை இழிவுபடுத்திய கனக-விஜயரை கங்கைக் கரையில் தோற்கடித்துத் தலையிற் கல்லும், கங்கை நீரும் ஏற்றி வந்து கண்ணகி அம்மனுக்கு அபிசேகம் செய்ய வைத்த சேரன்செங்குட்டுவனின் வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்.

ஆனாலும் என்ன?

எங்களின் மலர்களை அழித்த உங்களது படைகளை தண்டிப்பதற்கு திராணியற்றவர்களாகிவிட்டோம்.

வீதிகளில் இறங்கி நாம் விட்ட கண்ணீர் உலகின் மனச்சாட்சியை இன்னமும் இளகவைக்கவில்லை.

நாம் அழுது கொண்டேயிருக்கின்றோம்.

ஆனால் நீங்கள்...

"வவுனியா முகாம்களில் பாலியல் உறவும் இடம்பெற்றிருக்கலாம். கிரேக்க தத்துவமும் பேசப்பட்டிருக்கலாம்!" என்று எக்காளமிடுகின்றீர்கள்.

உங்களது வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட எங்களது மூன்று இலட்சம் உறவுகளும் என்ன சோக்கிரட்டீசையும், அறிஸ்ரோட்டிலையும் பற்றியா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்?

விடுதலை! விடுதலை! விடுதலை!

அந்த ஒற்றைச்சொல்லுக்காக அல்லவா அவர்கள் இவ்வளவு துயரங்களையும் சுமந்தார்கள்.

சிலுவை சுமக்கும் இனம் ஈழத்தமிழினம் என்றால் சிலுவையில் அறையப்பட்ட இனக்கூறு வன்னி மக்கள்.

உங்களது சிப்பாய்களுடன் எமது பெண்கள் கிரேக்க தத்துவம் பேசும் அளவிற்கு சிங்களச் சிப்பாய்கள் எல்லாம் அரசியல் தத்துவஞானிகளாகி விட்டார்களா?

உண்ண உணவின்றி, அருந்த நீரின்றி கூடாரங்களுக்குள் வதைபட்ட எமது பெண்கள் புராதன அதென்சின் மக்களாட்சி பற்றித்தான் அப்பொழுது சிந்தித்திருப்பார்களா?

அல்லது கிரேக்க தத்துவஞானி தூசிடெசின் ‘வலிமையே வெல்லும்' என்ற வாய்மை பற்றிச்சிந்திருப்பார்கள் என்கின்றீர்களா?

அல்லது தமது மானத்தைக் காப்பதற்கு கண்ணபிரான் வெகுண்டெழுந்து வருவான் என்று நம்பியிருந்திருப்பார்களா?

அன்று திரௌபதியின் துகிலை துச்சாதன் அகற்ற முற்பட்ட பொழுது கண்ணபிரான் அவள் மானம் காத்தான்.

ஆனால் எமது பெண்களின் மானம் காக்க எவரும் வரவில்லையே! ஏன்?

ஐ.நா மன்றமே எங்கே போனாய்? பன்னாட்டு நீதிமன்றமே ஏன் மௌனியானாய்? நவநீதம்பிள்ளை அம்மையாரே ஏன் எங்களுக்காக உங்களது குரல் ஓங்கியொலிக்கவில்லை.

பாலியல் வல்லுறவு ஓர் போர் ஆயுதம் என்று அன்று பன்னாட்டு நீதிமன்றில் சட்ட வரைவிலக்கணம் அளித்தவர் அல்லவா நீங்கள்! றுவாண்டாவில் மட்டுமா போர் ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு கையாளப்பட்டது? எமது பெண்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஐயா!

சிங்களத்தின் சமாதானச் சிங்கமே! போர்ப் புத்திஜீவியே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்களது கிருசாந்தியை உங்களது சிங்கங்கள் குதறியபொழுது...

எங்களது கோணோஸ்வரியின் பெண்ணுறுப்பில் உங்களது சிங்கங்கள் எறிகுண்டுவைத்து கொன்றபொழுது...

எங்களது தர்சினியினை குதறிக் கிணற்றிற்குள் உங்களது சிங்கங்கள் வீசிய பொழுது...

அதை உங்களது சனநாயக அரசு மறுத்துரைத்தது.

அப்பொழுது கிரேக்க தத்துவம் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை.

அடங்காப்பற்று வன்னி மண்ணின் புதல்விகளை கூட்டாக உங்களது அரசும், படைகளும் மானபங்கப்படுத்திய பொழுது சோக்கிரட்டீசும், அறிஸ்ரோட்டிலும், தூசிடெசும் எங்களது சிந்தனையில் வரவில்லை.

ஆனால் இப்பொழுது சேரன்செங்குட்டுவனைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம்!!!

அடோல்வ் கிட்லர், சுலோபடான் மிலோசவிக், சார்ள்ஸ் ரெய்லர், ரடோவான் கராட்சிக், பசீர் அல் ஓமார் போன்ற போர்க்குற்றவாளிகளின் வரிசையில் மகிந்த ராஜபக்சவும் பொன்சேகாவும் இணைக்கப்பட வேண்டும் என்று துடிக்கின்றோம்.

கிரேக்க தத்துவத்தை அலசிய ஆராயலாமா? என்று யோசிக்கின்றோம்.

நீங்களும் பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் அல்லவா?

- சேரமான்-

Link to comment
Share on other sites

:unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருகப் புணர்சியில் தோன்றிய மனித உருப்படைத்த மிருக இனத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.