Jump to content

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் - புதிய தெரிவுகளை உருவாக்கும் அரசாங்கம்? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் - புதிய தெரிவுகளை உருவாக்கும் அரசாங்கம்? - நிலாந்தன்:-

20 ஜூலை 2014

காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதே காலப்பகுதியில் இவ்வாறு ஓர் அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மூவர் அடங்கிய இக்குழுவின் தலைவராக சேர். டெஸ்மன் டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மற்றைய இருவர்களில் ஒருவர் பேராசிரியர்.சேர்.ஜெவ்றி நைஸ் எனப்படும் பிரித்தானியர். மூன்றாமவர் அமெரிக்க சட்ட நிபுணரான பேராசிரியர் டேவிட் கிறேன்.

இக்குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சேர். டெஸ்மன் டி சில்வா ஒரு ராணி சட்டத் தரணி. போர்க் குற்றங்கள் தொடர்பாகவும், மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாகவும், அரசுகள் தொடர்பாகவும் அரசுத் தலைவர்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக மட்டத்திலான விசாரணைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பொதுநலவாய நாடுகளில் மரணதண்டனைக்கு எதிராக வெற்றி பெற்ற பல வழக்குகளை முன்னெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

மற்றவர் சேர். ஜெவ்றி நைஸ் இவரும் ஒரு ராணி சட்டத்தரணி. முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் பிரதான வழக்குத்தொடுநராக பணி புரிந்தவர். 1995ஆம் ஆண்டு யூலை மாதம் யூகோஸ்லாவியாவில் உள்ள ஸ்ரெபெரினிக்காவில் 8372 முஸ்லிம்கள் கொல்லப்பட்டமையை அனைத்துலக சமூகம் இனப்படுகொலையாக ஏற்றுக்கொண்டு விட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மூன்றாமவர் அமெரிக்கச் சட்ட நிபுணரான பேராசிரியர் டேவிட் கீறேன். ஆமெரிக்கப் படைத்துறையில் 20 ஆண்டுகள் சேவையற்றிய பின் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் 10 ஆண்டுகள் மூத்த புலனாய்வு அதிகாரியாக இருந்தவர். மேற்கு ஆபிரிக்காவின் சத்தி மிக்க யுத்தப் பிரபுவான லைபீரியத் தலைவர்; சாள்ஸ் ரெய்லரை யுத்தக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்த விசாரணைகளுக்குப் பொறுப்பாய் இருந்தவர். அப்பொழுது அவர் சொன்னார், ''துப்பாக்கியின் ஆட்சியை விட சட்டத்தின் ஆட்சி மிகவும் பலமானது' என்று. மேலும் இவர் சியாரா லியோனில் அனைத்துலக போர்க் குற்ற விசாரணை மன்றின் பிரதான வழக்கு தொடுநராகவும் இருந்தவர்.

மேலும், இவ்வாண்டு வெளியிடப்பட்ட 2014சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் அறிக்கை எனப்படும் அறிக்கையை தயாரித்தது இம்மூவரும்தான் என்பதை இங்கு உற்றுக்கவனிக்க வேண்டும். இவ்வறிக்கையானது சிரிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போன சுமார் 11000 பேர்களைப் பற்றிய ஒரு அறிக்கையாகும். சிரிய அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் மேற்கு நாடுகளுக்கு வேண்டிய தகவல்களை இது வழங்குகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் உலகப் பரப்பில் குறிப்பாக, ஆபிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் என்பவை தொடர்பான விசாரணைகளில் தேர்ச்சியும் நிபுணத்துவமும் பெற்றவர்களும் மேற்கு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டவர்களுமே இந்நிபுணர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதே இந்நிபுணர் குழுவின் பணியாகும். அந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும். இப்படிப் பார்த்தால், இந்நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாதவை. ஆனாலும், அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமைகளைக் கொண்ட ஒரு நிபுணர் குழு இது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு ஏதோ ஒரு விகிதமளவிற்கு அனைத்துலக பரிமாணத்தை, அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனிக்கிறது என்று தெரிகிறது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவோடு இந்த நிபுணர் குழுவை ஒப்பிட முடியாது. முன்னையது அனைத்துலகத் தீர்மானத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதால் அதற்கு முழு அளவிலான அனைத்துலக அங்கீகாரமும் அனைத்துலக ஆணையும் உண்டு. ஆனால், இந்நிபுணர் குழுவிற்கு அந்தளவிற்கு அங்கீகாரம் கிடையாது. ஏனெனில், இது ஒரு அனைத்துலகத் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்படவில்லை. மாறாக, அனைத்துலகத் தீர்மானம் ஒன்றை எதிர்கொள்ளும் உத்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நிபுணத்துவத்தைப் பொறுத்தவரை இரு குழுக்களிலும் உள்ளவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளுமைகள் தான். ஆனால், மனித உரிமைகள் ஆணையகத்தின் குழு எனப்படுவது ஒரு விசாரணைக் குழு. பின்னையது ஓர் ஆலோசனைக் குழு. இதை இலங்கை அரசாங்கமே நியமித்தது. இப்பிடிப் பார்த்தால், இக்குழுவிற்கு இருக்கும் அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு.

ஆனாலும், இப்படியொரு குழுவை நியமித்ததன் மூலம் அரசாங்கம் அனைத்துலக நெருக்கடிகளிலிருந்து தன்னை சுதாகரித்துக் கொள்ள முற்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவை தான் ஏற்கப் போவதில்லை, பொருட்படுத்தப்போவதும் இல்லை என்றவொரு தோற்றத்தையே இதுவரையிலும் அரசாங்கம் வெளிக்காட்டி வந்தது. ஆனால், அவர்களுக்கு உள்ளுர ஒரு பயம் இருந்தது என்பதையே இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு உணர்த்துகிறது. தனது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏதோ ஒரு விகிதமளவிற்காவது அனைத்துலக பெறுமனங்களுக்கு ஏற்புடையதாக மாற்ற வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை காலம் பிந்தியேனும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா.வின் நிபுணத்துவ உதவிகளைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசாங்கம் இப்பொழுது தானாகத் தேடிச் சென்று நிபுணர்களை வரழைத்திருக்கிறது. ஐ.நா.வின் நிபுணத்துவ உதவிக்கும் இவ் ஆலோசனைக் குழுவிற்குமிடையில் பெரிய அடிப்படையான வேறுபாடு உண்டு. ஐ.நா.வின் நிபுணத்துவ ஆலோசனை எனப்படுவது ஐ.நா. மன்றத்தின் ஆணைக்குட்பட்டே செயற்படும். ஆனால், அரசாங்கத்தின் நிபுணர் குழு அரசாங்கத்தின் ஆணைக்குட்பட்டது. இப்படிப் பார்த்தால் இது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் ஒரு பலவீனமான, காலத்தால் பிந்திய அனைத்துலக நீட்சி எனலாம். சற்றுக் கூராகச்சொன்னால், ஒரு தந்திரமான நீட்சி என்றும் சொல்லலாம்.

எதுவாயினும், நிபுணர் குழுவில் இடம்பெற்றிருப்பவர்களின் கடந்த கால வரலாற்றையும் தகைமைகளையும் கவனத்தில் எடுக்கும்போது, இந்நிபுணர் குழுவானது அனைத்துலக மட்டத்தில் ஏதோ ஒரு விகிதமளவிற்கு கவனிப்பைப் பெறக்கூடும். குறிப்பாக, இந்நிபுணர் குழுவை வைத்து அரசாங்கம் மேற்குலகத்தை திசை திருப்புவது கடினமாகவே இருக்கும். இதன் மூலம் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து அரசாங்கமானது தன்னை எந்தளவு தூரத்திற்கு சுதாகரித்துக்கொள்ள முடியும் என்பது பற்றி இப்பொழுதே எதிர்வு கூறுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக, அனைத்துலக மட்டத்திலிருந்து வரும் ஒரு நெருக்கடியை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்ற விடயப் பரப்பை சற்று உற்றுக் கவனிப்பதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் பிராந்திய அளவில் அல்லது அனைத்துலக அளவில் நெருக்கடிகள் வரும்போது முதலில் வீரம் காட்டுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் இனிச் சமாளிக்க முடியாது என்று தோன்றும்போது முன்பு காட்டிய வீரத்திற்கு முற்றிலும் தலைகீழாக பணிந்து போவார்கள். சிங்கள ஆட்சித் தலைவர்களினுடைய செழிப்பான இராஜதந்திர பாரம்பரியம் இதுவென்பதை ஏற்கனவே தமிழில் மு. திருநாவுக்கரசு போன்ற ஆய்வாளர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமது அரசைப் பாதுகாப்பதற்காக சிங்களத் தலைவர்கள் சாம, பேத, தான, தண்ட என்ற நான்கு வகையான உத்திகளையும் தருணத்திற்கேற்ப கையாள்வது உண்டு என்பதே இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்று அனுபவமாகக் காணப்படுகின்றது. தயான் ஜெயதிலக போன்றவர்கள் அரசாங்கத்தோடு முன்னரைப் போல நெருக்கமில்லை என்றாலும் கூட அடிக்கடி பொறுத்த நேரங்களில் பல்லி சொல்வதைப் போல அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்வதும், ஆலோசனை கூறுவதும், நினைவுபடுத்துவதும் அதைத் தான். அதாவது, சிறிய இலங்கைத்தீவானது தனது பெரிய வெல்லக் கடினமான சக்தி மிக்க வெளி எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாளும் என்பதே கடந்த கால அனுபவமாகக் காணப்படுகின்றது.

இலங்கை - இந்திய உடன்படிக்கைக்கு முன்னரும், பின்னரும் ஜெயர்த்தன அப்பிடித்தான் நடந்து கொண்டார். இந்திய வான்படை விமானங்கள் உணவுப் பொதிகளைப் போடும் வரையிலும் அவர் மீசையை முறுக்கிக் கொண்டு வீரம் காட்டினார். ஆனால், உணவுப் பொதிகள் போடப்பட்டதும் அவர் குத்துக்கரணம் அடித்தார். கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ரஜீவ் காந்தியையும் அருகில் வைத்துக்கொண்டு ''மன்னிப்பேன், மறக்கமாட்டேன்' என்று சொன்னார். உணவுப் பொதிகள் போடப்படும் வரையிலும் இந்தியாவுக்கு எதிராக வீரம் காட்டிய அவர், பொதிகள் போடப்பட்டதும் இந்தியாவின் காலைப் பிடித்தார். அதிலிருந்து தொடங்கி இந்தயாவை சரணடைந்து கையாள்வது என்ற ஒர் உத்தி மாற்றத்திற்கு அவர் போனார். அதில் பெருமளவு வெற்றியையும் பெற்றார். நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும் அந்த வெற்றிதான்.

ஜே.ஆர்.இற்கு பின்னர் வந்த பிரேமதாஸ ஜே.ஆரைப் போல தந்திரசாலி அல்ல. ஆனால், அவரும் தனது முன்னோடிகளைப் போலவே முதலில் வீரம் காட்டினார். பின்னர் பம்மிக்;கொண்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேறக் கோரும் விடத்தில் தொடக்கத்தில் அவர் இந்தியாவிற்கு சவால் விட்டார். அப்பொழுது இந்தியத்தூதுவராக இருந்த மெஹோத்ராவை கடுமையாகச் சீண்டினார். ஆனால், அமைதியான சுபாவமுடைய மெஹோத்ரா ஒரு கட்டத்தில் நீங்கள் மோதலுக்குத் தயார் என்றால் நாங்களும் தயார் என்ற தொனிப்பட மிரட்டியபோது பிரேமதாஸ பம்மத் தொடங்கினார். அதன் பின் இந்தியாவோடு இது தொடர்பில் நேர அட்டவணையை வரைவதற்கு உடன்பட்டார்.

ஜெயவர்த்தன, பிரேமதாஸ இருவரோடும் ஒப்பிடுகையில் இந்த அரசாங்கமானது, பெருமளவிற்கு வேறுபாடான ஒரு அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது. அவர்கள் மோதியது ஒரு பிராந்தியப் பேரரசோடு. இந்த அரசாங்கம் எதிர்கொள்வது ஒரு அனைத்துலக சமுகத்தை. தவிர இந்த அரசாங்கம் இதற்கு முன்பிருந்த சிங்களத் தலைவர்களால் வெல்ல முடியாது என்றிருந்த ஓரு யுத்தத்தை வெற்றி கொண்டிருக்கிறது. அந்த வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் ஒரே முதலீடு. அந்த வெற்றியின் மீது கட்டியெழுப்பட்டிருக்கும் வீரப் படிமத்தை முன்னிறுத்தியே உள்நாட்டில் தனது எதிரிகளை தோற்கடித்து வருகின்றது. உள்நாட்டில் நிறுவி வைத்திருக்கும் வீரப்படிமத்தின் தொடர்ச்சியாக வெளியுறவுக் கொள்கையையும் வகுக்க முற்பட்டபோதே மேற்கு நாடுகளோடு முரண்படும் நிலை தோன்றியது. வெற்றியை முதலீடாகக் கொண்டு ஆட்சியைத் தொடரும் வரை உள்நாட்டில் இது மிகச் சக்தி வாய்ந்த அரசாங்கமாக இருக்கும். அதேசமயம், அனைத்துலக அளவில் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகின்றது. வெற்றிதான் இந்த அரசாங்கத்தின் பலம். வெற்றிதான் இந்த அரசாங்கத்திற்குச் சிறை. வெற்றி தான் இந்த அரசாங்கத்திற்கு பொறியும்.

வெளிச் சவால்களுக்கு வளைந்து கொடுக்கும்போது உள்நாட்டில் நிறுவி வைத்திருக்கும் வெற்றிப் படிமம் உடைய நேரிடும். இது பிரேமதாஸிற்கும் ஜெயவர்த்தனவிற்கும் இருந்ததைவிடவும் ஒப்பீட்டளவில் கடினமானது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. சிறிய விட்டுக் கொடுப்புக்கள், சிறிய சுதாகரிப்புகள், சிறிய தளர்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைக் குழு போன்ற புதிய தெரிவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த அரசாங்கம் நெருக்கடிகளை வெட்டியோடப் பார்க்கிறது. பிரேமதாஸவைப் போல, ஜெயவர்த்தனவைப் போல தலை கீழ் சரணாகதிக்கு அது இதுவரையிலும் போகவில்லை. ஏனெனில், இது தனது சொந்த வெற்றியின் கைதியாகவுள்ள ஓர் அரசாங்கம். இவ்வாறாக மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் அளவிற்கு வளைந்து கொடுக்க தயாரற்றிருக்கும் ஒரு காரணத்தினால் தான் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழு என்றவொரு நகர்வை மேற்கு நாடுகள் மேற்கொண்டன. இப்பொழுது அந்த நெருக்கடியைச் சமாளிக்க நிபுணர்களின் ஆலோசனைக் குழுவை அரசாங்கம் உருவாக்கி இருக்கின்றது. இது கூட ஒப்பீட்டளவில் சிறியளவிலான நெகிழ்வுப் போக்குத்தான். மேற்கு நாடுகள் எதிர்பார்ப்பது அதைவிடக் கூடுதலானது.

எனவே, வரப்போகும் பத்து மாதங்களிற்குள் அரசாங்கம் மேலும் புதிய தெரிவுகளை உருவாக்க வேண்டியிருக்கும். மேற்கு நாடுகளின் நகர்வாகக் காணப்படும் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகளை எதிர்கொள்வதற்காக மேற்கத்தைய பாரம்பரியத்தைச் சேர்ந்த மூன்று நிபுணர்களை அணுகியது என்பது மேற்கு நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறு வெற்றிதான்.

இவ்வாலோசகர் குழுவின் தலைவராக இருக்கும் சேர். டெஸ்மன் டி. சில்வா உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக வெற்றி பெற்ற வழக்குகள் பலவற்றில் சம்பந்தப்பட்டிருக்கிறார். கென்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவரை அவர் முன்பு அப்படிப்பட்ட வழக்கொன்றிலிருந்து விடுவித்திருக்கிறார். பிரிட்டிஷ; சட்டத்துறை வட்டாரத்தில் மரண தண்டனைக்கு எதிராக பொதுநலவாய நாடுகளில் ஆகக் கூடிய வழக்குகளை வெற்றிபெற்ற ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.ஆயின், மேற்குலகம் தன்னை நோக்கி வீச முற்படும் சுருக்குக் கயிற்றிலிருந்து அவர் தன்னையும் மீட்பார் என்று இலங்கை அரசாங்கம் நம்புகின்றதா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109585/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.