Jump to content

தென்னாசியா மீதான அமெரிக்காவின் செல்வாக்கு தளர்கின்றது? - ஓர் ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

South%20asian%20leaders.jpg

இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. 

இவ்வாறு Eurasia Review இணையத்தில் Chintamani Mahapatra* எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

தென்னாசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கானது மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இப்போக்கானது எதிர்காலத்தில் மேலும் அதிகமாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்ற பின்னர், தென்னாசியா மீதான மூலோபாயக் கொள்ளை வகுப்பாளராக அமெரிக்கா விளங்கியது. இதற்கும் மேலாக தென்னாசியாவானது அமெரிக்காவின் வர்த்தகத் துறைக்கு பல்வேறு பொருளாதார வாய்ப்புக்களையும் வழங்கியது. 

பாகிஸ்தான் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்ததன் பின்னர் அமெரிக்காவானது தென்னாசியா தொடர்பில் கவனம் செலுத்தத் தொடங்கியது. பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்பைப் பேணிய போதிலும் சில சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானுக்கு உதவ முடியாதிருந்தது. தென்னாசிய ஒப்பந்த அமைப்பு மற்றும் மத்திய ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றில் பாகிஸ்தான் உறுப்புரிமை பெற்றிருந்த போதிலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவால் உதவ முடியவில்லை. 

1970களின் பிற்பகுதியில், ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் தலையீட்டை மேற்கொண்டதன் பின்னரே தென்னாசிய விவகாரத்தில் அமெரிக்கா தீவிர ஈடுபாட்டைக் காண்பித்தது. 

இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் பார்வையில் நோக்கும் போது, பனிப்போருக்குப் பின்னான காலப்பகுதியில் அமெரிக்கா, தென்னாசியா மீது தீவிர அக்கறை காண்பிக்கத் தொடங்கியது. தென்னாசியப் பிராந்தியத்தில் நிலவிய அணுவாயுதப் பயன்பாடுகள் மற்றும் அமெரிக்கா மீதான ஆப்கானின் செப்ரம்பர் 2001 பயங்கரவாதத் தாக்குதல் போன்றன அமெரிக்காவின் கவனத்தை தென்னாசியாவின் பக்கம் திசைதிருப்பியது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவானது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்ததுடன், இந்தியாவுடன் வியக்கத்தக்க மூலோபாயப் புரிந்துணர்வு உடன்படிக்கையையும் மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் தென்னாசியா குறிப்பிடத்தக்க முன்னுரிமையைப் பெற்றுக் கொண்டது. 

2001ல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது. ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறுவது தவிர்க்க முடியாததாகும். பல பில்லியன் டொலர்கள் செலவில் அமெரிக்காவால் ஆப்கானில் நடாத்தப்பட்ட யுத்தமானது தென்னாசியா மீதான அமெரிக்காவின் செல் 
க்கை 2014ன் பின்னர் கணிசமானளவில் குறைக்கும் என்பது நிச்சயமானதாகும். ஆப்கானிய தலிபானின் மீளெழுகை மற்றும் அரச சாரா அமைப்புக்களை எதிர்த்து நிற்பதற்கான வல்லரசு நாட்டின் இயலுமைகள் போன்றன தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும். 

இரண்டாவதாக, ஆப்கான் யுத்தத்தின் போது பாகிஸ்தான் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் இராணுவ, பொருளாதார உதவிகள் தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். வரலாறு மீண்டும் மீண்டும் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாததாகும். 1989ல் ஆப்கானிலிருந்து சோவியத் பின்வாங்கியதன் பிறகு ஏற்பட்டது போன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு முடிவுக்கு வரும். 

மூன்றாவதாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸின் காலத்தில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட 'மூலோபாய பங்களிப்பின்' தோற்றத்துடன் இந்தியா மீதான அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கிய போதிலும், தற்போதைய அமெரிக்காவின் பராக் ஓபாமா அரசாங்கம் இந்தியாவுடனான உறவில் நீட்சியை ஏற்படுத்தாது என்பது தெளிவாகும். ஓபாமாவின் முதலாவது நிர்வாகக் காலப்பகுதியில், இந்தியாவுடனான உறவு ஓரளவு நிலைத்திருந்தாலும் கூட, இரண்டாவது அரசாங்கத்தில் இந்தியா மீது மிகக் குறைவாகவே அக்கறை காண்பிக்கப்படுகிறது. 

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியானது மக்களின் ஆணையுடன் பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட அமோக வெற்றியானது இந்தியா மீது அமெரிக்காவுக்கு ஈடுபாட்டை அதிகரித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

அமெரிக்காவுக்கு வருகை தருமாறு மோடியிடம் ஒபாமா அழைப்பு விடுத்தமை, அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிசா பிஸ்வால் தேசாய் இந்தியாவில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு இந்தியாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டமை, அமெரிக்காவின் செனற்றர் ஜோன் மக்கெய்ன், பிரதி இராஜங்கச் செயலர் வில்லியம் ஜே பேர்ண்ஸ் ஆகியோர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஸ் ஆகியோருக்கிடையிலான இந்திய-அமெரிக்க மூலோபாயக் கலந்துரையாடலைத் தயார்ப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வருகை தந்தமை போன்றன இந்தியா மீது ஒபாமா தீவிர கவனம் செலுத்துகிறார் என்பதைச் சுட்டிநிற்கின்றன. 

ஆனால் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்வதில் பெரிதளவில் ஆர்வங்கொள்ளவில்லை என்பது போல் தெரிகிறது. இதற்குப் பதிலாக மோடி, தனது அயல்நாடுகளுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்பி அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை பூகோளத்தில் சக்தி வாய்ந்த தலைமைத்துவ நாடாக மாற்றுவதில் சிரத்தை காண்பிக்கிறார். தேவ்யானி கோப்பிறகேட் மீது அமெரிக்க அதிகாரிகளால் பத்து மாதங்களுக்கு முன்னரேயே நுழைவுவிசை மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையில் உளவியல் ரீதியான விரிசலை ஏற்படுத்தியது. இந்தியாவில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட, இவ்விவகாரம் தொடர்பில் இந்தியா தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வது மிகச் சுலபமானதல்ல. 

தென்னாசியாவின் சிறிய நாடுகளான பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா போன்றவற்றுடன் ஒபாமா நிர்வாகத்தின் உறவானது அண்மைய ஆண்டுகளில் மோசமானதாக உள்ளது. 2014 ஜனவரியில் பங்களாதேசில் தேர்தல் இடம்பெற்று அவாமிக் கட்சி அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்ட பின்னர் பங்களாதேசுடன் வர்த்தக உறவைப் பேணுவதில் அமெரிக்கா தயக்கம் காண்பித்து வருகிறது. தற்போதைய பங்களாதேஸ் அரசாங்கமானது ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டமை மற்றும் பங்களாதேசின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஆடை ஏற்றுமதி குறைவடைந்தமை போன்றன அமெரிக்காவின் வர்த்தக உறவில் விரிசல் ஏற்படக் காரணமாகும். 

சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கமானது பொறுப்பளிக்கத் தவறியமையானது அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்கா தன்னால் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு அழுத்தங்களை வழங்கியிருந்த போதிலும் சிறிலங்கா இதனை மேற்கொள்ளத் தவறியுள்ளது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் சார் உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்தை எதிர்த்தல் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதாவது அமெரிக்காவானது தான் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் ஆனால் ஏனைய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதனை எதிர்ப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 

குறிப்பாக, இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. 

நேபாளத்தில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவானது நேபாளத்துடனான தனது நெருக்கத்தை அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். ஆனால் சீனாவுடன் ஒப்பிடும் போது, நேபாளத்தின் மீதான அமெரிக்காவின் செல்வாக்கு மிகக் குறைவாகும். இந்நிலையில் தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்ச்சியடையும் அதேவேளையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது என்பதைச் சிந்திக்கும் தருணம் இதுவாகும். 

Chintamani Mahapatra - Professor, School of International Studies, JNU.

 

http://www.puthinappalakai.com/view.php?20140717110895

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.