Jump to content

ஐ.நா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்குமா?

முத்துக்குமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கென 12 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழுவில் விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள், பாலினத்துவ நிபுணர்கள், சட்ட ஆலோசகர்கள் என்போர் அங்கம் வகிக்கின்றனர். விசாரணைக்குழுவின் ஆரம்பச் செயற்பாடுகள் இவ் வருடம் யூலை மாதத்தில் ஆரம்பமாகும் என்றும், 2015 மார்ச் மாதமளவில் விசாரணைச் செயற்பாடுகள் முடிவடையும் என்றும் கூறப்படுகின்றது. விசாரணைச் செலவுகளுக்கென 1 192 000 அமெரிக்க டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்குழு என்று சொல்வதிலும் பார்க்க ஆய்வுக்குழு எனக் கூறலாம். முன்னைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனின் நிபுணர்குழு போல இதுவும் ஒரு ஆய்வுக்குழுவாக இருக்கும். ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான விடயங்கள் ஐ.நாவிடம் அறிக்கை வடிவில் இருக்கின்றன. இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

இலங்கையில் அரசாங்கம் ஐ.நா விசாரணைக்குழுவினை அனுமதிக்கப்போவதில்லை. இதனால் நேரடிச் சாட்சியங்கள் விசாரணைக்குழுவிற்கு குறைவாகவே இருக்கும். எனினும் மறைமுகமாக கூடியளவு சாட்சியங்களை பெற்று விசாரணைகளை நடாத்தவே அது முயற்சி செய்யும். சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் காப்பகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் சாட்சியமளிக்க முற்படலாம். போரின் பின்னர் இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் சாட்சியமளிக்க முற்படலாம்.

நிலத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்தால் சில சாட்சிய நெறிப்படுத்தல்களைச் செய்யலாம். ஆனால் அதற்கான விருப்பங்களோ செயற்திட்டங்களோ அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மாவை சேனாதிராஜா, தாம் சாட்சியங்களைப் பெற்று கையளிக்கப் போவதாக கூறியிருந்தாலும் நடைமுறையில் அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளைச் செய்யலாம். உண்மையில் இந்தப் பணி நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசாரணைக்குழு தொடர்பாக அரசாங்கம் தனது பிரதிபலிப்பை தெளிவாகவே வெளிக்காட்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலேயே இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இலங்கையில் விசாரணைக்குழுவை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

அரசாங்கம் தன்னுடைய தீர்மானத்திற்கு மக்கள் அந்தஸ்தினைக் கொடுத்து தப்பி விட முயற்சிக்கின்றது. இதற்காகத்தான் ஐ.நா. விசாரணைக்குழுவை அனுமதிப்பதா? இல்லையா? எனத் தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை பாராளுமன்றத்திடம் விட்டுவிட்டுள்ளது.

போர் தொடர்பான மனித உரிமை மீறல்கள் அரசாங்கம் தொடர்பான குற்றச்சாட்டாக இல்லாமல், அரசு தொடர்பான குற்றச்சாட்டாகவே மகிந்தர் அரசாங்கம் மாற்ற விரும்புகின்றது. போர், அரசினை பாதுகாப்பதற்காக நடாத்தப்பட்டதனால் போர் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவே பார்க்க வேண்டும் என அரசாங்கம் வாதிடுகின்றது.

மகிந்தர் அரசாங்கத்தின் இந்த முடிவினால் எதிர்க்கட்சிகள் குழம்பிப் போயுள்ளன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும் என அவை அஞ்சுகின்றன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விசாரணைக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும், அதற்கு நான் தயார். விசாரணைக்குழுவினைப் பகிஷ்கரித்தால் இராணுவத்தை குற்றவாளியாக்கி விடுவர் என கூறியிருக்கின்றார்.

ஜே.வி.பி ஆதரவு வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. சுயாதீனமான உள்ளக விசாரணையை உடனடியாக நடாத்த முன்வர வேண்டும். விசாரணைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு அறிக்கை 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுதல் வேண்டும். யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும். ஜனநாயகமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை ஆயுதங்கள் மூலம் ஒடுக்கியமை தொடர்பாக விசாரிக்கப்பட்டு அறிக்கை மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பாகவும் இவ் விசாரணை நடாத்தப்படல் வேண்டும். கைதிகளின் மீதான தாக்குதல் தொடர்பாகவும் விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பனவே அவ் நிபந்தனைகளாகும்.

அரசாங்கம், எதிர்க்கட்சிகளை விலகமுடியா பொறிக்குள் மாட்ட முயற்சிக்க, ஜே.வி.பி அரசாங்கத்தை பொறிக்குள் மாட்ட முயற்சிக்கின்றது. அரசாங்கம் ஜே.வி.பி.யின் நிபந்தனைகள் எவற்றையும் நடைமுறைப்படுத்த போவதில்லை. இது விடயத்தில் சிங்கள வெகுஜன அபிப்பிராயம் அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது ஆதரவாகவே வாக்களிக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும். தேர்தல்கள் வர இருப்பதால் சிங்கள வெகுஜன உளவியலுக்கு மாறாக நடந்து கொள்ள அவை தயாராகவில்லை. அரசாங்கத்துடன் இணைந்துள்ள தமிழ்- முஸ்லிம் கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றிற்கு சில சங்கடங்கள் இருந்தாலும் ஆதரவாகவே வாக்களிக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே எதிராக வாக்களிக்கும்.

இங்கு எழும் கேள்வி, இந்தியா இந்த விசாரணையை எப்படிப் பார்க்கும்? ஒத்துழைக்குமா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை இந்த விசாரணையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முதலாவது போரில் இந்தியாவிற்கும் பங்கு இருக்கின்றது. சிவசங்கர் மேனன், நாராயணன் போன்றோர் நேரடி ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். விசாரணை இடம்பெற்றால் இந்தியாவின் பங்களிப்பு ஆவண ரீதியாக வெளியில் வரும். இது இந்திய அரசாங்கத்திற்கு தமிழ் நாட்டு மட்டத்திலிருந்தும் ஏனைய மட்டங்களிலிருந்தும் பலத்த நெருக்கடிகளை உருவாக்கும்.

இரண்டாவது, இந்தியா உள்நாட்டு தேசிய இன விவகாரங்களில் இலங்கையை விட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது. தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அசாம், மணிப்பூர், நாகலாந்து, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் இது அதிகளவில் இடம்பெற்றுள்ளது. மாவோஜிஸ்டுகள் செல்வாக்குள்ள பிரதேசங்களில் பழங்குடிகள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது. இதனை ஆதரித்தால் நாளை இந்தியாவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களையும் விசாரணை செய்யும்படி கோரிக்கைகள் வரும். அதனை இந்தியா விரும்பவில்லை.

மூன்றாவது, இலங்கையைப் பாதுகாப்பதாகும். தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் இலங்கை இருக்க வேண்டும் என்பதற்காக இது விடயத்தில் இலங்கைக்கு சார்பாகவே நிற்க முயற்சிக்கும். இதன் அடிப்படையில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஜெனிவாவில் நடுநிலை வகித்தது. இதைவிட, விசாரணை என்பதற்கூடாக மேற்கின் அதிகரித்த தலையீடு வருவதையும் இந்தியா விரும்பவில்லை. இலங்கைத் தீவு தனது தலையீட்டிற்கு மட்டும் உரியது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

மேற்கூறிய நிலைப்பாடுகள் எல்லாம் காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்பதும் உண்மை தான். மோடி அரசாங்கம் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது இங்கு எழும் இன்னோர் கேள்வி. பெரிய நாடுகளைப் பொறுத்தவரை வெளிவிவகாரக் கொள்கைகளில் புதிய அரசாங்கம் அதிக மாற்றங்களைச் செய்வதில்லை. வெளிவிவகார உறவுகளை சடுதியாக மாற்றுவது நாட்டிற்கு தீங்கினைக் கொண்டுவரும் என்பதே இதற்குப் பின்னாலுள்ள காரணம். இதைவிட வெளிஉறவுக் கொள்கை தீர்மானத்திலும் நடைமுறைப்படுத்தலிலும் அரசியல் தலைவர்களைவிட அதிகாரிகள் அதிக பங்கெடுப்பதும் இம் மாற்றமின்மைக்கு ஒரு காரணம். எனவே உடனடியாக பண்பு ரீதியான மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஆனால் தலைமையின் இயல்புக்கேற்ப அளவு ரீதியான மாற்றங்கள் இடம்பெறலாம்.

மோடியைப் பொறுத்தவரை காங்கிரஸ் அரசாங்கம் போல சென்னையை முழுமையாக புறக்கணிக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் தமது அரசியற்தளம் பலவீனப்பட்டுப்போகும் என்பதற்கு அப்பால் புவிசார் அரசியல் முக்கியத்துவம் தமிழ் நாட்டிற்கும் இருப்பதால் அதனைத் தனிமைப்படுத்தவும் விரும்பவில்லை.

மோடி அரசாங்கத்தினால் இலங்கையையும் எதிராளியாக்க முடியாது. தமிழ்நாட்டையும் எதிராளியாக்க முடியாது. எனவே கொழும்புக்கும் சென்னைக்குமிடையே ஒரு சமநிலைப்படுத்தலைக் கொண்டு வரவே அது முயற்சிக்கும். அந்த சமநிலைப்படுத்தலுக்காக 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி அது வற்புறுத்தும். அதேவேளை சீனாவிலிருந்து அதிகம் விலகும் படியும் வற்புறுத்தும்.

இந்த வற்புறுத்தலுக்கு இலங்கையின் பிரதிபலிப்புக்கேற்பவே இந்தியாவின் அணுகுமுறையும் இருக்கும். தற்போதைக்கு நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்பே அதிகம் உண்டு. கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்தல் என்ற இந்தியாவின் விருப்பத்தை மகிந்தர் அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பதும் இங்கு கவனத்திற்குரியது. மகிந்தர் அரசாங்கத்தினால் இதனை நடைமுறைப்படுத்துவது கடினம். 13வது திருத்தம் என்பது ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு தீர்வு. ஒற்றையாட்சியில் அதிகாரக்குவிப்பு மத்திய அரசிடம் இருப்பதால் அதிகாரப் பங்கீட்டுக்குப் பதிலாக ஒரு நிர்வாக பரவலாக்கமே அங்கு இருக்கும். இது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.

ஆனால் இந்த நிர்வாகப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கே மகிந்தர் அரசாங்கம் தயாரில்லை என்பது தான் இங்குள்ள பிரச்சனை. குறிப்பாக காணி, பொலிஸ் சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறுப்புகள் மாகாண அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்படுவதையோ, காணி நிர்வாகம் ஒப்படைக்கப்படுவதையோ மகிந்தர் அரசாங்கம் விரும்பவில்லை. தம்முடைய பிடி அங்கு இல்லாமல் போய்விடும் என்பதும் இராணுவ நிர்வாகம் பலவீனமடைந்துவிடும் என்பதும் தான் அதற்கு காரணம். குறைந்தபட்சம் தற்போது மேற்கொள்ளப்படும் பச்சை ஆக்கிரமிப்புகளை நிறுத்துவதற்கு கூட மகிந்தர் அரசாங்கம் தயாராகவில்லை.

ஜெயலலிதா குறைந்தபட்சம் பூரண சுயாட்சியையாவது எதிர்பார்ப்பார். இது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. சர்வஜன வாக்கெடுப்பு என்கின்ற உயர்ந்த கோரிக்கையை வைத்திருக்கும் ஜெயலலிதா, மாகாண சபை முறையினை தீர்வாக ஏற்கமாட்டார். அதுவும் ஜெயலலிதாவின் கொடும்பாவி கொழும்பில் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவினை சமாதானப்படுத்துவது இலகுவாக இருக்காது. எனவே கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.

மறுபக்கத்தில் கொழும்பையும் சென்னையையும் சமநிலைப்படுத்துவதற்கு அப்பால் கொழும்பையும் புதுடில்லியையும் சமநிலைப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. சீனாவின் பிரசன்னத்தை இலங்கையில் இல்லாமல் செய்வதன் மூலம் இந்த சமநிலைப்படுத்தலை மேற்கொள்ள முடியும். இது விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒரு இந்திய தேசியவாத கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் அரசாங்கத்தை விட சற்றுக் கறாராகவே இருக்கும். இந்த விடயம் இராஜதந்திர மொழியில் பேசப்படுமே தவிர, தமிழர் விவகாரம் போல வெளிப்படையாக பேசப்படமாட்டாது. தமிழர் விவகாரத்தை அதிகளவில் வற்புறுத்தும் போது சீன விவகாரமும் அதற்குள் மறைந்து நிற்கும்.

மகிந்தர் அரசாங்கத்தினால் சீனாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது. மகிந்தர் விரும்பினாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வளவிற்கு சீனா இலங்கையில் காலூன்றி விட்டது. இது விடயத்தில் மகிந்தர் அரசாங்கம் செய்யக்கூடியது சீனாவைப் போல இந்தியாவிற்கும் இலங்கையில் இடம்கொடுப்பது தான். ஆனால் மோடி இதனை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்ற கூடாது என்பதே அவரின் நிலைப்பாடு.

மொத்தத்தில் சமநிலைப்படுத்தல் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=238cc50d-716d-4372-97a6-47e6e97c552a

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.