Jump to content

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா

சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல்ல. அது ஏற்கனவே புகைந்துகொண்டிருந்த ஒரு விவகாரம்தான். ஆனால், கடந்த முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்தியிருந்த தீச்சுவாலையின் பிரகாசத்திற்கு முன்னால், அந்தப் புகை சிங்கள தேசியவாதிகளின் கண்களை உறுத்தியிருக்கவில்லை.

தமிழீழ விடுதலை புலிகள் என்னும் பலம்வாய்ந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு, தமிழர்களுடன் மொழியால் ஒன்றுபட்ட, ஆனால், மதத்தால் வேறுபட்ட முஸ்லிம்களின் ஆதரவு, அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது. புலிகள் ஒரு தனிநாட்டை இலக்குவைத்து, இலங்கையின் இராணுவ நிலைகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்த வேளையில், முஸ்லிம்களை உற்றுநோக்க வேண்டிய சூழல் தெற்கில் இருந்திருக்கவில்லை. அவ்வாறு செயற்படவும் முடியாது. ஆயினும், அந்த நேரத்தில் கூட முஸ்லிம்கள் குறித்து சிறிது கலக்கம் தெற்கில் ஏற்படாமல் இல்லை. புலிகளுக்கும் – அரச படைகளுக்கும் இடையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில்தான் ஹெல உறுமய என்னும் சிங்கள கடும்போக்குவாத அமைப்பு உருப்பெற்றது. அப்போது ஹெல உறுமயவின் தத்துவ ஆசிரியராக இருந்தவர்தான், தற்போது அமைச்சராக இருக்கும் சம்பிக்க ரணவக்க. முஸ்லிம்களுடன் ஆட்சியாளர்கள் நெருக்கமாக இருந்த அன்றைய சூழலில் கூட சம்பிக்க, முஸ்லிம்கள் குறித்து எச்சரிப்பவராகவே இருந்தார். தமிழர்களை விடவும் முஸ்லிம்கள் ஆபத்து நிறைந்தவர்கள் என்று அன்றே அவர் எச்சரித்திருந்தார். முஸ்லிம்கள் குறித்த ஒரு அச்சவுணர்வு தெற்கில் ஏலவே இருந்த ஒன்றுதான் என்பதை தெளிவுபடுத்தவே மேற்படி உதாரணத்தை இங்கு எடுத்தாண்டேன்.

இந்த பின்னனியில்தான், ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசானது முப்பது வருடகால யுத்தத்தில் பாரிய வெற்றியீட்டியது. யுத்த வெற்றியென்பது வெறுமனே புலிகளின் முடிவாக மட்டும் இருக்கவில்லை, மாறாக அது, தெற்கின் தேசியவாதிகளுக்கு ஆசுவாசமாக சிந்திப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தது. அதுவரை புலிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி சிந்தித்துவந்த சிங்கள தேசியவாதிகளின் கவனமானது, அதுவரை தங்களுடன் நெருங்கியிருந்த முஸ்லிம்கள் பக்கமாகவும் திரும்பியது. அதுவரை கண்ணையுறுத்தாமல் புகைந்து கொண்டிருந்த முஸ்லிம் விவகாரம், தமிழர் விவகாரத்தை காட்டிலும் பாரதூரமானது என்பதை அவர்கள் உணர ஆரம்பித்ததன் விளைவே, தற்போது மேலெழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாடாகும். இதன் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாவிட்டாலும், முஸ்லிம்கள் குறித்த அச்சவுணர்வு சிங்கள தேசியவாதிகள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதே உண்மை.

இந்த பின்னனியில் உருவாகியிருக்கும் அமைப்புத்தான் தற்போது முஸ்லிம்களால் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிற பொதுபல சேனா. இந்த அமைப்பு, ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து முஸ்லிம்கள் குறித்து எச்சரிக்கின்ற ஒரு அமைப்பாகவே, அது தன்னை முன்னிலைப்படுத்தி வந்திருக்கிறது. அது முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆரம்பத்திலிருந்தே முன்வைத்து வருகிறது. முஸ்லிம்களின் சனத்தொகை பெருக்கம், அத்துடன், முஸ்லிம்கள் வர்த்தகத் துறையில் செலுத்திவரும் செல்வாக்கு ஆகியவற்றை இலக்காகக் கொண்டே பொதுபல சேனாவின் பிரச்சாரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாகவே அளுத்கம சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து அரசின் முன்னாள் கூட்டாளியான மங்கள சமரவீர, பாதுகாப்பு அமைச்சுமற்றும் புலனாய்வுப் பிரிவின் மீது குற்றம் சாட்டியிருந்தார். அவர்களின் ஆசியுடனேயே மேற்படி அளுத்கம சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் எவருமே அரசின் மீது நேரடியாக குற்றம்சாட்டியிருக்கவில்லை. மாறாக காவல் துறையின் மீதே குற்றம்சாட்டியிருந்தனர். எனவே, இதன் மூலம் முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் மங்கள சமரவீரவின் கருத்தை நிராகரித்திருக்கின்றனர். இதன் மூலம் தாங்கள் இதுவரை அரசுடன் பேணிவரும் உறவை எந்த வகையிலும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்பதில் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் தெளிவாக இருந்தனர். இதில் அவர்கள் தங்களுக்குள் கட்சிகளாக பிளவுபடவும் இல்லை. ஆனால், இந்த விடயத்தை சரியாக கவனிக்கத் தவறிய தமிழ் அரசியல் தரப்புக்கள், மேற்படி தாக்குதல் சம்பவத்தின் விளைவாக முஸ்லிம் – தமிழர் உறவு மலரப் போவதாக கற்பனை செய்துகொண்டனர். நாடு கடந்த அரசின் பிரதமராக தன்னை அடையாளப்படுத்திருக்கும் உருத்திரகுமாரன் கூட, முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கை விடுமளவிற்கு நிலைமை சென்றது.

முஸ்லிம் – தமிழ் உறவு குறித்து அவ்வப்போது பலரும் விவாதிப்பதுண்டு. இவ்வாறான விவாதங்களை எடுத்து நோக்கினால், இவ்வகை விவாதங்கள் அனைத்தும் அவ்வப்போது மேலேழும் அரசியல் போக்கில் நிலைகொண்டிருப்பதை காணலாம். கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான விருப்பத்தை கூட்டமைப்பு வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு இணங்கும் பட்சத்தில், தாம் அவர்களுக்கு முதலமைச்சரை வழங்கவும் தயாராக இருப்பதாக அறிவித்தார். முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து ஒரு சாதகமான பதில் வருமென்னும் நம்பிக்கையுடன் சம்பந்தர் காத்திருந்தார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸோ, கூட்டமைப்பு நீட்டிய நடப்புக் கரத்தை புறந்தள்ளி, ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கைகோர்த்தது.

புலிகள் வலுவாக இருந்த காலத்தில் முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் புத்திஜீவிகள் என்போரும் புலிகளின் தவறுகளை முன்னிலைப்படுத்தியே, தங்களின் அரச பிணைப்பை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், இன்று சம்பந்தன் போன்ற மிதவாத, சர்வதேசம் அங்கீகரித்திருக்கின்ற தலைவர் ஒருவருடன் இணைந்து பணியாற்ற முடியாமைக்கு என்ன காரணத்தை அவர்கள் சொல்வார்கள்? சம்பந்தனுடன் இணைந்து பணியாற்ற முடியாத ரவூப் ஹக்கீமால், வேறு எந்தவொரு தமிழ் தலைவருடனும் இணைந்து பணியாற்ற முடியும்?

ஹக்கீம் உட்பட்ட முஸ்லிம் தலைவர்கள் எவரும், கணிசமான தமிழ் மக்கள் இறுதிப் போரில் அகப்பட்டுக்கிடந்த சந்தர்ப்பத்தில், ஒரு சிறு கரிசனையைக் கூட காண்பித்ததற்குச் சான்றில்லை. ஆனால், தெற்கில் உள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்திருந்தனர். இது குறித்த ஒரு சிறு குற்றவுணர்வு கூட முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் என்போருக்கு ஏற்படவில்லை. யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட, கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காக முன்னெடுத்த எந்தவொரு செயற்பாட்டிலும் முஸ்லிம் தலைவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள முயன்றதில்லை. அவ்வாறிருந்த போதும், கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு இடம் கொடுத்திருந்தது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னரான கடந்த ஜந்து வருடங்களில் முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஒரு கையைக் கூடஉயர்த்தியதற்குச் சான்றில்லை. இதனை இன்று முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக கதைகள் புனைவோர் கருத்தில்கொள்ள வேண்டும்.

இன்று ஒரு அளுத்கம என்னும் சம்பவத்திற்கு பின்னர் முஸ்லிம்கள் தமிழர்களின் பக்கமாக நிற்பார்கள் என்பதை எதனைக் கொண்டு மதிப்பிடுவது? இப்பத்தியாளரின் கணிப்பில், தமிழர்கள் என்னதான் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலும், முஸ்லிம் தலைவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்ப்பரசியலில் ஒருபோதுமே ஈடுபடப் போவதில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களவில் இதற்கு நியாயமுண்டு. சிங்கள மக்களும் – தமிழ் மக்களும் எதிர் மனோபாவத்தில் இறுகிப்போன கடந்த நான்கு தசாப்தங்களில் முஸ்லிம்கள் தங்களை பல்வேறு துறைகளிலும் வளர்த்துக் கொண்டனர். அந்த வளர்ச்சி சிங்களவர்களையும் தாண்டிச் சென்றுவிட்டது. அவர்களது இந்த அபார வளர்ச்சிக்கான அடிப்படையாக இருப்பது அரச ஆதரவு என்னும் கவசம்தான். எனவே, அந்தக் கவசத்தை அவர்கள் ஒருபோதும் கழற்றி வீசி, வீரம் பேசத் துணியமாட்டார்கள். இதனை விளங்கிக் கொள்ளாமல் முஸ்லிம்கள் தொடர்பில் கற்பனையை வளர்த்துக் கொள்வதானது, முஸ்லிம்களின் பிரச்சினையல்ல, மாறாக, அது அறியாமையென்னும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் பிரச்சினையாகும்.

அளுத்கம போன்று இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்கள் சினம்கொண்டு, அரசிற்கு எதிராகத் திரும்பப் போவதில்லை. வேண்டுமானால் தங்களுக்குள் நிலவும் கட்சி பேதங்களை புறம்தள்ளி, ஓரணியாக நின்று அரசுடன் பேரம் பேசவே முற்படுவர். தற்போதிருக்கும் அரசுமும் முஸ்லிம் தலைவர்களின் எல்லைக் கோட்டை தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறது. எனவே, முஸ்லிம் – தமிழ் அரசியல் இணைவு தொடர்பில் கற்பனைகளை வளர்ப்போர், கொஞ்சம் நிதானமாக இருந்தால், அது தமிழர்களுக்கு நல்லது. அதீத அரசியல் கற்பனைகள், தமிழ் சமூகத்திற்கு உதவாது.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

http://maatram.org/?p=1434

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.