Jump to content

கருத்துக்கணிப்பு: அவுஸ்திரேலிய அரசு கடல்வழியாகச் செல்லும் தமிழ் அகதிகளைக் கையாளும் முறை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?


Recommended Posts

தற்போது கடல்வழியாக அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குள் உட்புக முயன்ற தமிழ் அகதிகளின் படகுகள் வழிமறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டும், மற்றையவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையும் உள்ளது. இக் கருத்துக்கணிப்பு அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த ஞாயிறு வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com

 

வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம்.

http://www.yarl.com/node/8093

 

ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.

http://www.yarl.com/poll

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையரசின் அடக்குமுறை தொடர்வதால் அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும்.
Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே போட்டிருக்கிறேன். ஆனால் அவுஸ்திரேலியா பரிசீலிக்க வேண்டும் என்பதே எனது உண்மையான பதில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையரசின் அடக்குமுறை தொடர்வதால் அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
                                   
இலங்கையரசின் அடக்குமுறை தொடர்வதால் அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விடயத்தை இரண்டு பிரதான இலக்குங்களோடு தமிழ் மக்கள் அணுக வேண்டும்.

 

1. சிறீலங்கா தமிழர்களுக்கு பாதுகாப்பான இடமல்ல.. அங்கு உள்ளது பயங்கரவாதப் பிரச்சனை அல்ல.. இனப்பிரச்சனை. அதற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படாமல் இந்த அகதிகள் பிரச்சனைக்கு முடிவில்லை என்பதைச் சொல்லுதல்.

 

2. சிறீலங்கா விவகாரத்தில் சர்வதேச.. ஐநா தலையீட்டைக் கோருதல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான சர்வதேச வாழிடத்தில் நிம்மதியான வாழ்வை வழங்குதல்.

 

அந்த வகையில் எங்கள் தெரிவு.. முதலாவது. :icon_idea:

Link to comment
Share on other sites

கருத்துக் கணிப்பு முடிவுகள் :

 

இலங்கையரசின் அடக்குமுறை தொடர்வதால் அகதிகளாக வரும் தமிழர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும். 61% (290 வாக்குகள்)

உயிராபத்து உள்ள தமிழர்களை ஐ.நா.வின் அகதிகளுக்கான காரியாலயமூடாக அவுஸ்திரேலியா இனங்கண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். 25% (121 வாக்குகள்)

அகதிகளாக வருபவர்களில் அதிகமானோர் போரில் பாதிக்கப்படாத பொருளாதார அகதிகள் என்பதால் அவர்களைத் திருப்பி அனுப்புவதில் தவறில்லை. 10% (51 வாக்குகள்)

போர் முடிவடைந்து இலங்கைத் தீவில் அமைதி நிலவுவதால் தமிழர்களை திருப்பி அனுப்புவதில் தவறில்லை. 1% (6 வாக்குகள்)

மொத்த வாக்குகள் : 468

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஆறு வாக்குகள் போட்டிருக்கின்றார் போலக்கிடக்கு ^_^  ^_^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.