Jump to content

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது?

எல்.சிவலிங்கம்

இலங்கையில் கலவரம் என்பது முதன் முதலில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலோ அல்லது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலோ நடக்கவில்லை. 1883 ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற முதல் கலவரமானது சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலேயே இடம்பெற்றது. அதன் பின்பு அனகாரிக தர்மபால போன்ற சிங்கள மதக் கடும்போக்குவாதிகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தத்தினை முன்னிறுத்திய அதேவேளை, சிங்கவர்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்திய வண்ணம், பெரும்பான்மை சிங்களவர்களிடையே சிறுபான்மை மக்களுக்கு எதிரான கடும்போக்குவாதத்தினை மிகக் கச்சிதமாக உருவாக்கினார்கள். கொட்டாஞ்சேனையில் சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்று சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின்னர், சிங்களவர்களால் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் 1983 இல் நிகழ்த்தப்பட்டது. அதற்கு முன்னர் 1915 ஆம் ஆண்டு புத்தளத்தில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்றது. அதன் நூறாவது ஆண்டு நினைவு பூர்த்தி அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் நிலையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் படிப்படியாக அதிகரித்த அளவில் நாடு முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

முப்பது வருடகால யுத்தம் இடம்பெற்று முடிவுற்றுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியே இலக்கு என்று கூறும் அரசாங்கம், முஸ்லிம் நாடுகளின் தயவில் இயங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் வேண்டி நிற்கும் அரசாங்கம், நீதி அமைச்சர் உட்பட பல முஸ்லிம் அமைச்சர்களை தன்னகத்தே கொண்டுள்ள அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏன் ஊக்குவிக்க வேண்டும்? இதன் உண்மையான பின்னணி என்ன?

இதற்கான பதில் தமிழ் மக்களின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமாகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்தபோது தமிழ் மக்கள் தனிநாடு கேட்கவில்லை. தாம் சிங்கள மக்களுக்கு சமமாக சகல உரிமைகளையும் பெற்று அமைதியாக வாழவே அவர்கள் விரும்பினர். ஆனால் இலங்கை அரசாங்கம் சுதந்திரம் கிடைத்தவுடன் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் பரவலாக முடுக்கி விடப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் மொழி இழிவுபடுத்தப்பட்டது. 1958 இல் தமிழ் மக்களுக்கெதிரான கலவரம் இடம்பெற்றது. அற்ப சொற்ப சலுகைகளைத் தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய பண்டா- செல்வா மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் பலவந்தமாக நாடுகடத்தப்பட்டனர். பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்னும் முறை அமுல்படுத்தப்பட்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் ஏவிவிடப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுத்தனர். இதன் மூலம் புரியும் உண்மை யாதெனில், தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தினை ஏவி, தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி, தமிழ் மக்கள் மீது நன்கு திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதத்தினை முடுக்கிவிட்டு, இன்று தமிழ் மக்களின் பொருளாதாரம் கல்வி, வாழ்வாதாரம் என அனைத்தையும் ஏப்பமிட்டு சிங்கள தேசம் எக்காளமிட்டு நிற்கின்றது. நாட்டை விட்டு தமிழ் கல்விமான்கள் வெளியேறினார்கள். தமிழ் வணிகர்கள் வெளியேறினார்கள். இறுதியில் இலட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். இன்று தமிழ் மக்கள் மிகப் பரிதாபகரமான நிலையில் தான் சிறிலங்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோன்ற நிலைமையினை முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்னும் நன்கு திட்டமிட்ட குறிக்கோள்களுடன்தான் யுத்தம் முடிவுற்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கக்கபட்டுள்ன. இங்கு எழும் கேள்வி யாதெனில் யுத்தம் உக்கிரமாக இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் நாடுகளும் பெருமளவிற்கு அரசாங்கத்தின் பக்கமே நின்றுள்ள போது ஏன் தற்போது அரசாங்கம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது என்பதாகும்.

இதற்குரிய காரணம் மிகத்தெளிவானது. யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலத்தில் சிங்கள மக்கள் பெருமளவிற்கு பொருளாதார சமூக நலன்களைத் தியாகம் செய்துள்ளார்கள். தற்போது அரச ஊழியர்கள் பெருமளவு சம்பள உயர்வினை எதிர்பார்க்கின்றார்கள். மீனவர்கள், விவசாயிகள், சாதாரண பொதுமக்கள் என அனைவரும் சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள். பொருளாதார சலுகைகள் வழங்கப்படாவிட்டால் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி வரும் என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இதற்கு உதாரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஓய்வூதிய பிரச்சினை தொடர்பாக போராடிய சிங்கள இளைஞர் சுட்டுக் கொல்லப்படார். நீர்கொழும்பில் மண்ணெண்ணை விலை உயர்வுக்கு எதிராகப் போராடிய சிங்கள மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரத்துபஸ்வலவில் நல்ல நீர் கேட்டுப் போராடிய பல சிங்கள மக்கள் இராணுவத்தினரால் படுகொலை செயப்பட்டனர்.

ஆகவே நாடு அமைதியாக இருந்தால் சிங்கள மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அவர்களுக்கு மிகப் பெரியளவில் பொருளாதார சலுகைகளை வழங்கும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் இல்லை. உள்நாட்டில் தமிழ் மக்கள் சகல வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளதால் சிங்கள மக்களுக்கு எதிராக மிக நெருங்கிய மற்றுமொரு எதிரியை உருவாக்குவது நீண்ட கால வெற்றியினைத் தரும் என ஆட்சியாளர்கள் நினைப்பது தெளிவாகத் தெரிகின்றது. இதற்காகவே கோட்டாபய ராஜபக்ச பொதுபல சேனாவினை உருவாக்கினார். பொதுபல சேனா முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் சனத்தொகையினை விஞ்சி விடுவார்கள் எனவும், முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் வேகமாகப் பரவுகின்றது எனவும் முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. இதன் மூலம் கலாலினை இல்லாமல் செய்து, பள்ளிவாசல்களை தாக்கி, முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கி இன்று முஸ்லிம் பொதுமக்களைத் தாக்குமளவிற்கு பொதுபல சேனா வளர்ந்துள்ளது.

இங்கு அரசாங்கம் அடைந்துள்ள இலக்கு யாதெனில், சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் திருப்பி சிங்கள மக்களை சிங்கள பௌத்த பேரினவாதம் மூலம் அரசாங்கம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் முதல் வெற்றி அடையப்பட்டுள்ளது. இந்த வெற்றி தொடரப்போகின்றது என்பதற்கு அறிகுறியாக சில முஸ்லிம் பிரதேசங்களில் சில பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் வணிக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. அழுத்கமவிற்கு அடுத்ததாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல நகரம் இலக்கு வைக்கப்படலாம் என் முஸ்லிம் நண்பர் ஒருவர் இன்று என்னிடம் கூறினார்.

இந்நிலையில் அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அரசாங்கத்தில் இவர்களை யாரும் கிஞ்சித்தும் கணக்கெடுக்கவில்லை. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர்கள் வாள்வெட்டில் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அழுத்கமையில் முஸ்லிம் மக்களின் வீடுகளை எரித்து சூறையாடியவர்களில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் காணப்பட்டார்கள் என்று முஸ்லிம் மக்கள் பொலிசில் முறைப்பாடு செய்தபோது அப்படி எழுத அழுத்கம பொலிசார் மறுத்து விட்டனராம். முஸ்லிம் அமைச்சர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அழுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தன்னைத் தெளிவாக சிங்கள இனவாதியாகக் காட்டிக் கொள்கின்றாராம். முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்ற முஸ்லிம் மக்கள் ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்து 'முஸ்லிம்களாகிய நாங்கள் எந்தத் தவறும் இதுவரை செய்யவில்லை. ஆனால் நாங்களும் தமிழ் மொழி பேசிக்கொண்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்ததுதான் நாங்கள் செய்த ஒரே தவறு' என கூறியதாக அழுத்கமயைத் சேர்ந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.

அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட போது முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக ரிசாத் பதியுதீன், அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி அரசாங்கத்தினை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ் மக்கள் ஜெனீவாவில் நீதிகேட்டுப் போராடிக் கொண்டிருக்கையில், ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி முஸ்லிம் நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக ஆக்கிரோசமாகப் போராடுவதற்கு வழி செய்து, தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகத்தினைச் செய்தார். ஆனால் இன்று அதே ஹக்கீம், நவநீதம் பிள்ளை அம்மையாரிடம் முஸ்லிம் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய பட்டியலினைக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் பழி ஹக்கீமைச் சுற்றுகின்றது என என்னிடம் ஒரு தமிழ் நண்பர் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாட்டு மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்தி பற்றி கிஞ்சித்தும் கவலையில்லை. நாட்டில் ஊழல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் வறுமை மோசமடைந்து கொண்டிருக்கின்றது. மக்களிடையே போசாக்கின்மையானது இந்தியா, பங்களாதேஸ், நேபாளம், பாகிஸ்தான், செனகல், மாலாவி போன்ற நாடுகளை விட இலங்கையில் மோசமாக உள்ளது. ஜெனிவாவில் பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் ஆதரவு பலமாக இருந்தும் தாம் தோற்றுப்போனமை அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். கடன்களை அள்ளிக்கொடுக்க சீனா தயாராக உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் எவ்வகையில் மீறப்பட்டாலும் சீனா கண்டுகொள்ளப் போவதில்லை. ரஸ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபையில் இலங்கையைக் காப்பாற்றும் என்ற அதீத நம்பிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.

ஆகவே இலங்கையில் ஆட்சியினைத் தொடர்ச்சியாகத் தக்கவைக்க வேண்டிய நடவடிக்கைகளே அரசாங்கத்திற்கு தற்போது தேவைப்படுகின்றன. சிங்கள மக்கள் சிங்கள பௌத்த தேசியவாதம் என்னும் மாயைக்குள் கட்டுண்டு ஒற்றுமையாக இருக்கும் வரை, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இந்த அரசாங்கத்திற்கு தேவையில்லை என்னும் முடிவுக்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டனர். அதற்கேற்றாற் போல் எதிர்க்கட்சிகள் எல்லாம் நலமடிக்கப்பட்டு செயலிழக்கக் செய்யப்பட்டு விட்டன. இனிமேல் தேர்தல் நடந்தாலும் தொடர்ச்சியாக ராஜபக்சாக்களே வெல்லப் போகின்றார்கள். இராணுவம் அதற்குரிய வேலைகளைச் செய்யும். தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடப்பதாகக் வெளியுலகிற்குக் காட்டப்படும். இத் தேர்தல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளின் தேவை இருக்காது.

இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்னும் கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. அடக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனம் இன்னுமொரு சிறுபான்மை இனம் ஒடுக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது முறையாகாது. முஸ்லிம் தலைவர்கள் விட்ட தவறுகளை தமிழ் தலைவர்கள் விடக்கூடாது. அந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் அறிக்கை விட்டமை மிகச் சாரியான நடவடிக்கையே. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டவில்லை. 'ஹக்கீம் ஜெனீவாவிற்கு சென்று தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது போன்று தமிழ் தலைவர்களாகிய நாங்கள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்' என்று முஸ்லிம் மக்களிடம் கூற வேண்டும். முஸ்லிம் தலைமைகளின் வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கை பெற்றோலிய இறக்குமதிக்கு முற்றுமுழுதாக முஸ்லிம் நாடுகளில் தங்கியுள்ளது. தேயிலை ஏற்றுமதி வருமானமும் முஸ்லிம் நாடுகளிடமிருந்து கணிசமாகக் கிடைக்கின்றது. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையிலிருந்து ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி விட்டால் இலங்கைப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தே யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட காரணமாக இருந்தன. ஆகவே முஸ்லிம்கள் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் நாட்டு மக்கள் மூலம் இந்தியாவினை வழிக்குக் கொண்டு வர வேண்டும். எந்த பாகிஸ்தானும் இந்தியாவும் இலங்கைக்கு யுத்தத்தில் கை கொடுத்தனவோ அதே பாகிஸ்தானும் இந்தியாவும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உறுதியான தீர்வினை பெற்றுத் தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பேர்தான் இராஜதந்திரம்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=32583369-705c-4e32-8eb5-44a94a463cbd

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.