Jump to content

சென்னையின் டேஸ்ட்டான ஹோட்டல்கள்


Recommended Posts

27-1380262256-hsb.jpg

 

ஹோட்டல் சரவணபவன்
 
காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது!
 
 
27-1380262331-anjappar.jpg
 
அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல
 
செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹோட்டல். சைவமோ, அசைவமோ எதுவா இருந்தாலும் நல்லா காரசாரமா வளைச்சுகட்டி அடிக்கலாம் இங்க. நாட்டுக்கோழி ரசமா இருந்தாலும், ஸ்வீட் கார்ன் சூப்பா இருந்தாலும் அஞ்சப்பர் சமையல் தனிரகம்தான்.
 

27-1380262364-thalappakatti.jpg

 

திண்டுக்கல் தலப்பாக்கட்டி
 
உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டி பிரியாணிதாங்க. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரக சம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!...அடாடாடாடா என்னத்த சொல்ல?!!...வந்து சாப்பிட்டு பாருங்க!!!

 
27-1380262397-ponnusamy.jpg
 
பொன்னுசாமி ஹோட்டல்
சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் இருக்கற பக்கம் போனீங்கனாலே உள்ளயிருந்து வர்ற வாசனை தன்னாலே உங்கள உள்ள இழுத்திரும். செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல் என்று பூந்து விளையாடுறாங்க பொன்னுசாமி ஹோட்டலில். அதனால இங்க எப்பப்பாத்தாலும் கூட்டம் ஜேஜேன்னுதான் இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுல நீங்க பொன்னுசாமி ஹோட்டல் போறீங்கன்னா முன்பதிவு செஞ்சிக்கறது நல்லது.
 
27-1380262434-nammavvb.jpg
 
நம்ம வீடு வசந்தபவன்
நம்ம வீடு வசந்தபவன்னு சும்மா பேரு வைக்கலங்க..நிஜமாவே நம்ம வீட்டு சமையல் மாதிரி சுத்தபத்தமா, அக்கறையோட செஞ்ச உணவு வகைகளை அன்போட பரிமாறுறாங்க இங்க..சுடச்சுட மணக்க மணக்க இந்த சமையல சாப்பிடும்போது நம்ம அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்குதுன்னு தோணும்!
 
27-1380262473-rathnacafe.jpg
 
ரத்னா கஃபே
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். அப்படியே ஜாலியா ஜிலுஜிலுன்னு மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டே நடந்து வந்து ரத்னா கஃபேயில காப்பி குடிக்கிறது அடடா தேவாமிர்தம்தான் (2010-ஆம் ஆண்டு NDTV அவார்ட் வாங்கிய காப்பி). அதோட சுடச்சுட இட்லி சாம்பாரும் சாப்பிட்டு பாருங்க அப்பறம் குட்டிபோன பூனை மாதிரி அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பீங்க!
 
27-1380262292-buhari.jpg
 
புஹாரி ஹோட்டல்

சென்னையின் பழமையான ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ பிரியர்களின் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் புஹாரி சிக்கன தெரியாதவங்க சென்னையில ஒருத்தரும் இருக்க முடியாது. புஹாரிங்கற பேரச் சொன்னாலே நாக்குல எச்சு ஊறுற அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிரபலம். ஒரு வாட்டி இங்க வந்து பாருங்க அதுக்கப்புறம் உங்க பொண்டாட்டி சமையலயே மறந்துடுவீங்க. அவங்களும் சமைக்கிற தொந்தரவு இல்லாம ஜாலியா வீட்ல சீரியல் பாக்கலாம்ல?!!

 

http://tamil.nativeplanet.com/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள பல ஓட்டல்கள் முதலில் மக்களுக்கு அறிமுகமான போது தரமும் சுவையும் இந்ததென்னவோ உண்மைதான், ஆனால் நாள்பட நாள்பட வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தங்களின் குறுக்குவழி வியாபார புத்தியை காட்டி கொள்ளையடிக்கிறார்களென்பதே உண்மை.

 

தற்பொழுது தரமும், சுவையும் சுமார்தான், ஏனெனில்  வியாபர யுக்தி என்ற பெயரில் தன்னுடைய பிரபல பெயரை மற்றவர்களுக்கு பயன்படுத்திகொள்ள அனுமதிக்கும் ஃப்ரான்சைஸ்(Franchise)  முறை. புதிதாக ஓட்டல் தொழில் தொடங்குபவர்கள், மேற்கண்ட ஓட்டல் உரிமையாளருக்கு வருடம் இவ்வளவு தொகை என ஒப்பந்தம் செய்துகொண்டு தன்னுடைய உணவு தயாரிக்கும் முறையை பயன்படுத்திக்கொள்ளாமென ஒப்பந்தம் செய்து வெற்றி பெற்ற பெயரில் போலிகளை சந்தைகளில் புகுத்தி மக்களை ஏமாற்றுவது.

 

பிரபலமான கே.எஃப்.ஸி யும் அப்படியே!

மேற்கூறிய ஓட்டலகளில் முதன்முதலில் எங்கே தொழில் முறையில் வெற்றி பெற்றனரோ அந்த இடத்தில் வேண்டுமானால் ஓரளவு தரமும், சுவையும் இருக்கலாம். மற்ற கிளைகள் அனைத்தும் சுத்த மோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.