Jump to content

கரிக்காய் பொரித்தேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சத்திமுத்துப் புலவர் பாடிய பாடல் இது!

வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.

போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.

சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சத்திமுத்துப் புலவர் பாடிய பாடல் இது!

வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.

போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.

சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,

ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே.... :D

நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம் :icon_mrgreen: (எனக்கென்னவோ ரோமியோவின் கண்களுக்கு பறவைகளின் சொண்டுகள், பழுத்த இலைகள் எல்லாம் உதடுகள், இதழ்களாக தெரிகிறதுபோல இருக்கு என்னவோ எல்லாம் அசாதாரணமாகத் தெரியுது. ஆளைக் கொஞ்சம் இனி உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.) :o நாங்கள் நிற்கிறது தமிழும் நயமும் பகுதி..... இதற்குள் கேர்ல் பிரண்டைக்கூட்டி வருவது நியாயமா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே.... :D

நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம் :icon_mrgreen: (எனக்கென்னவோ ரோமியோவின் கண்களுக்கு பறவைகளின் சொண்டுகள், பழுத்த இலைகள் எல்லாம் உதடுகள், இதழ்களாக தெரிகிறதுபோல இருக்கு என்னவோ எல்லாம் அசாதாரணமாகத் தெரியுது. ஆளைக் கொஞ்சம் இனி உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.) :o நாங்கள் நிற்கிறது தமிழும் நயமும் பகுதி..... இதற்குள் கேர்ல் பிரண்டைக்கூட்டி வருவது நியாயமா? :unsure:

தமிழ் சிறியின் ;உதட்டுச் சாயம்; திரியை வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, உடனே இந்தத் திரிக்கு வந்து கருத்தெழுதப் போக இப்படியாகிவிட்டது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூதுப்பாடல்கள் வரிசையில் பொதுவாக தனிமனிதத் தூதுகளைத்தான் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன.

எங்களுடைய காலத்தில் மட்டும்தான் இந்தத்தூது ஒரு இனத்தின் தூதாகப் பதியப்பட்டிருக்கிறது.

பண்பாட்டால், மொழியால் ஒன்றித்த இனமாகவும் பூகோளரீதியில் கடலினால் பிரிவுபடுத்தப்பட்ட ஒரு இனமாகவும் வாழும் தமிழினத்தின் இரு வேறு நிலங்களின் ஊடான வாழ்நிலைகளை இந்தத்தூதுப்பாடல் வெளிக்கொணர்கிறது. இந்தத்தூதுப்பாடலைப்பற்றி நிறையவே எழுதலாம்.

தமிழினத்தின் ஒரு பகுதியினர் வாழும் இந்திய நாட்டினால் ஈழத்தில் அதே தமிழினம் அழிக்கப்படும்போது உருவாக்கப்பட்ட பாடல்.

இன்னொரு நூற்றாண்டின் பின்னர் இந்தப்பாடல் தூது இலக்கியத்தின் மிகப்பெரும் பொக்கிசமாகக் கருதப்படும் நிலையை எய்தும். அதேபோல்தான் தூதுக்கவிதைகளும் தொடர்ந்து தூது என்ற பொருளுக்கமைய இருக்கும் படைப்புகளை இந்தத்திரியில் முடிந்தவரை இணைப்போம் உங்களுக்கும் தெரிந்த பற்பல தூது இருக்கலாம் இணையுங்கள். இதோ வாழ்விடத்தால் வேறுபட்ட ஒரே இனம் தன் வாழ்விடத்தின் துயரங்களை கடல்பிரித்த துயரோடு எடுத்து வருகிறது ...

வீசும் காற்றே தூது செல்லு - தமிழ்

நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு

ஈழத்தில் நாம் படும்வேதனைகள் - இதை

எங்களின் சோதர்ர் காதில் சொல்லு

(வீசும் காற்றே தூது செல்லு)

இங்கு குயிலினம் பாட மறந்தது - எங்கள்

வயல்வெளி ஆடை இழந்தது

மங்கைகளின் பெருமங்களம் போனது - சாவு

எமக்கொரு வாழ்வென ஆனது

(வீசும் காற்றே தூது செல்லு)

உங்கள் கொடிமலர் இங்கு மடியுது

ஊர்மனை யாவிலும் சாக்குரல் கேட்குது

இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை - உங்களின்

இராணுவம் செய்து முடிக்குது.

(வீசும் காற்றே தூது செல்லு)

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல்

கை வந்து தாங்கிடும் நீளமல்லோ

எத்தனை எத்தனை இங்கு நடந்திட

எங்களின் சோதர்ர் தூக்கமல்லோ

வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார் - புலி

வீர்ரை காட்டினில் தேடுகிறார்

தாங்க முடியல்லை வேதனைகள் - இதை

தாயகப்பூமியின் காதில் சொல்லு.

வீசும் காற்றே தூது செல்லு)

Link to comment
Share on other sites

இப்பொழுதுதான் எம் இனம் பசியாற "கறிக்காய்" பொரிக்கின்றீர்கள் அக்கா! தொடர்க உங்கள் பயணம் எம் விடுதலைப் பாதை வழியே! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=VarjKW8WG9c

ஏரிக்கர பூங்காத்தே

நீ போறவழி தென்கிழக்கோ

அட தென்கிழக்கு வாசமல்லி

என்ன தேடிவர தூது சொல்லு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூது இலக்கியத்தைப்பற்றி இந்த கரிக்காய்த் திரியில் எவ்வளவோ பதியலாம் எல்லாவற்றையும் ஒன்றாகப் பதிவிட்டு வாசிக்கும் உங்களுக்கு வெறுப்பேற்றாமல் சிறிது சிறிதாக சுடச்சுட வடையைச்சாப்பிட்டுக் கொண்டு மெல்லிய சாயம் ஊறிய தேனீர் குடிக்கிற மாதிரி ஒரு சுவையான பதிவாக இதை நகர்த்துவோம் என்று தேடலை முடுக்கி விட்டேன்... நீங்கள் நன்றாக இரசிக்கக்கூடிய ஒரு பதிவு கண்ணில் பட்டது நாமதான் தூது பற்றி ஒரு திரியை திரிச்சுக் கொண்டிருக்கிறோமே... இந்த "குரங்கு விடு தூது" என்ற கதையையும் இங்கு இணைக்கலாம் தானே என்று தூக்கி வந்து விட்டேன் வாசியுங்கள்.

குரங்கு விடு தூது!

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

"குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?" என்று கேட்டான், மட்டி

"மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!" என்றான் மடையன்.

"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான், முட்டாள்.

"ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?" என்று கேட்டார், பரமார்த்தர்.

"பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?" எனக் கேட்டான், மண்டு.

"நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்" என்று விளக்கம் சொன்னான், மூடன்.

"இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்" என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. "சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, "லபக்" என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.

அதைக் கண்ட பரமார்த்தர், "சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!" என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.

அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!" என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், "ரங்கா, ரங்கா!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மடத்துக்கு வந்து சேர்ந்ததும், "நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.

"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.

"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான், முட்டாள்

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் பூராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், "நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு" என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.

அடுத்த கணம், "டமால், டுமீல்" என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்.

"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.

Link to comment
Share on other sites

என்ன இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவே பயப்பிடுறீங்களா?

சும்மா ஒதுங்கி இருக்காமல் வாங்கோ...இங்கு படித்த பீதாம்பரங்கள் என்று எவருமில்லை. முடிந்தவரைக்கும் நாங்களே கூழ் முட்டைகளாகவும் குஞ்சு முட்டைகளாகவும் இருப்போம்.

இனிய பொழுதில் ஓடியோடி பாடல்களை இணைக்கிற நீங்கள் இங்கு தூதுப் பாடல் இணைக்கச் சொல்லிக் கேட்டும் இணைக்கவில்லையே.... :unsure:

நாம நம்ம பாட்டில ஒரு ஓரமா வந்து போறம், இதுக்குள்ள வந்தால் எங்க நீங்க எங்களைப் பொரிச்சுப் போடுவீங்களோ என்ற பயம் தான் அக்கா... ^_^

நீங்கள் கேட்டதிற்காக தேடி எடுத்து ஒரு திரைப்படப் பாடல் இணைகிறேன்...

படம்: காதல் ஒரு கவிதை

பாடல்: என் தூது நீ செல்

பாடியவர்கள்: SPB & சித்திரா

இந்த இணைப்பில் En Thoothu Sel Sel என்ற பாடலைத் தெரிவு செய்து கேட்கவும்

http://www.inbaminge...Oru%20Kavithai/

பெண்:

செல் செல்... செல் செல்...

என் தூது நீ செல் செல்

என் தோழி நீ செல் செல்

என்ன மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

மனதின் மையலை மடலில் எழுதி

நான் தர உன்கையில்

துணைச் சேர இப்படி எங்கும்

மனம் ஓர் ஓலை எழுதாதோ

இங்கோர் பூவை சொப்பனம் காண

ஏதோ ஆசை எழுந்தாச்சோ

தூது செல்லையோ புறவே நீ தான்

சீதை பாவமடி

என் தூது நீ செல் செல்

என்ன மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

ஏங்கினேன்....

மங்கை வாழ்வில் உயிர் போல்

அவன் தான் அன்புக்கு வாழ்த்து

சொல்லாதோ பெண்

ஓ அன்பே மோகம் கொண்டால்

எப்பவும் தான் தூங்காதோ பெண்

பூப்போல் நான் தான் ஏங்குகிறேன்

தென்றலைச் சேர்ந்திடத்தான்

ஆண்

என்னாசை மோகம் மறைந்திடாது

பெண்மான் மீது உண்டானது

உடல் தான் இங்கே உயிரில்லாமல்

நாளும் உருகிப் பாடுது

துடிக்குது நெஞ்சு தூது செல்லாயோ

ஓ.....

பெண்மானை தேடி

என் தூது செல் செல்

இப்போது நீ செல் செல்

என் மோகங்கள் ஏன் ஏன்

என் சோகங்கள் ஏன் ஏன்

பெண்:நில்லாமல் நாளும் ஊறும் ஊற்றோ

ஓயாது கண்ணா உயிர் காதல்

ஆண்:இயற்கை நியதி இதுதானம்மா

ஏன் நமக்கு ஒரு காவல்

பெண்:கண்களின் பாடல் நம்மை இணைக்க

ஆண் & பெண்:கண்களின் பாடல்நம்மை இணைக்க

கலந்தது இரு உயிர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுத்தேடலில், நாளை எமது மூன்றாம் தலைமுறை இன்றிருக்கும் எம்மைப்பற்றி அறிய முற்படும்போது எங்களுடைய படைப்பிலக்கியங்கள்தான் அவர்களுக்கான பல தகவல்களை வழங்கப்போகிறது. விடுதலை வேண்டிப் போராடும் காலத்தில் காலநதிகளில் அள்ளுண்ட எச்சங்களாக பூமிப்பந்தின் நிலப்பரப்பெங்கும் ஈழத்தமிழினம் வியாபித்திருந்ததையும், புலம் பெயர்க்கப்பட்ட எங்களுக்கும், தாயக வேர்களுக்குமான உறவின் தேடலையும் ஏக்கத்தினையும் இன்றைய பதிவுகளே மூன்றாம் தலைமுறைக்கோ அல்லது அதற்குப் பின்னால் தேடல்களை மேற்கொள்ளும் எவருக்காயினும் உதவப் போகின்றன. ஒரு வேளை இன்னும் நான்கு சந்ததிக்குப்பின் எம்மைப் போல யாரோ சிலர் தூது இலங்கியங்களில் தேடல் நடாத்தவும் கூடும். அப்போது இந்த யாழின் பதிவுகூட அவர்களின் தேடலில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இனிவரும் சந்ததியின் தேடலுக்காக இந்தப்பதிவில் கீழ்வரும் பகுதியையும் இணைக்கிறேன்.

எங்கேயோ எல்லாம் தூது இலக்கியத்தை தேடுகின்றேனே 2004 இல் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு, என்னால் எழுதப்பட்ட இந்த வரிகள்கூட ஈழத்தின் தூது இலக்கியத்தில் நீங்கா இடத்திற்குரியது. முதன்மைப்படுத்துவதற்கல்ல இப்பதிவு . இது கால நதிகளில் நீள நடக்கின்ற ஈழத்தமிழினத்தின் புலம் பெயர்க்கப்பட்ட வாழ்க்கை வரிகளாகவும்.......

இந்தப்பதிவு ஏற்கனவே 2009 சனவரி மாதம் இந்தக்களத்தில் பதவிடப்பட்டது அப்பதிவை மறுபடியும் இவ்விடத்தில் இணைக்கின்றேன்

நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது.

ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’

என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள்.

மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன்.

இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன.

இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன.

தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல்.

கட்புலன் அறியாக் காற்றே!

உட்புலன் அசைக்கும் உந்து பொருளே!

உயிர்ப்பில், இயற்கை அணைப்பில்

நின்னை உணர்த்தும் உயிர் மூலமே!

தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன்.

தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம்

உரியபடி சேர்த்து விடு! - இல்லாவிடின் அவன்

உக்கிரத் தமிழ் செப்பி உன்னையும் எரித்திடுவான்

உயிர்க்கொடையால் ஒளி துலங்கும்

சூரியத்திரு நாட்டிடையே

மயிர் கூச்செறி கவிகள் மொழிகின்ற வீரியரே!

வடமேற்குத் திக்குதனில் வாரணம் பல கடந்து

கண்மறைந்து கிடக்கின்ற ஈழத்து மங்கையிவள்

இங்கு இடர் சூழ்ந்த வாழ்வுதனை,

எம்மினத்தின் இலக்கற்ற போக்குதனை

சுடரும் எம் தேசியச் சுமைதாங்கி உமைநோக்கி

இவள் சிந்தை கண்டதினை

இம்மடலால் செப்ப வந்தேன்.

அரங்கேறும் போதிருக்கும் ஆயிரம் நண்பர்களும்

பொழிப்புரை முடித்திறங்க இருநூறாய் மாறும் நிலை

உங்களுக்கு மட்டுமா?

இன்னவளுக்கும் அதேதான்

சின்ன மாற்றம் சபையேறும் பேச்சிலல்ல.

புனிதர்கள் போர் அறியாப் புல்லர்கள் இங்கு சிலர்

தனிநபராய் , குழுநிலையாய் ஊராயும் கூர்முனையால்

ஆர்.சி.எம்.பியும் அந்நிய நாடிதுவும்

கனியாத உறவாகி காழ்ப்புணர்ச்சி கொள்வதுவும்

இலக்கியப் பூக்களெல்லாம் இலக்குகள் ஏதுமின்றி

கிடைக்கின்ற மேடைகளில் இடைக்கிடை என்றாலும்

தலைகாட்டிப் பெயரெடுத்தால் தமக்கிது காணுமென்று

தாயக உணர்வகற்றி திசைக்கொன்றாய் திகழுவதும்,

பூவுக்குள் புறம் தைத்துப் பூலோகம் வியத்திருக்கும் - ஈழ

மாதிற்கு இழுக்குத் தரும்

புலம்பெயர் பெண்ணினமும், தற்கொலைச் செறி நிலையும்,

அப்பா கள்ள நம்பர்,அம்மா சிங்கிள் மதர்,

பிள்ளைகள் தனித்தனியே பிரத்தியேகப் பிச்சைப்பணமும்

எம்மவர் நிலைமாற்ற எள்ளிநகை வாழ்வியலும்,

தாயகப் பேச்செடுத்தால் தேவையில்லாச் சங்கதியாய்

தூயதொண்டர்களைத் தூசிக்கும் வாசகத்தால்

மாயமான் வலை வீழ்ந்த மதிகெட்ட மாக்களுமாய்

தூரதேசத்திலிங்கே தமிழர் மாசடைந்து கிடக்கின்றார்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்

நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்,

பேருக்குப் பதவிகள், பிரத்தியேக விருதுகள்

வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்

அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்!

எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

ஒண்ட வந்த இடம் ஒய்யாரப்புலமென்று

பண்டை மறந்த சிலர் பரிவட்டம் கட்டுகிறார்

வெள்ளைக் கொக்கின் புலத்தில்

காக்கைக்கு என்ன வேலை?

காலம் மாறும் போது கண்ணீர்தான் மிச்சமாகும்.

இங்கு

தமிழினத்து நிலை கண்டு மூச்சு முட்டித் துடிக்கின்றேன்.

தறிக்கெட்ட நிலையிருந்து மீட்க மனம் வெடிக்கின்றேன்.

வாட்டம் எனை வடிக்க வழிதேடி நொடிக்கின்றேன்.

கேட்டு நகைக்காதீர் கேவலமாய் நினைக்காதீர்!

நலிந்து நகை மறந்த நாடோடிப் பாடலிது

இன்னொருவர் நாட்டினிலே எத்தனை நாள் உவந்திருப்பேன்?

சூரியக்கதிர் மறுக்கும் வீரியப் பனித்திரையில்

வேகும் நெஞ்சோடு விறைப்பெய்திக் கிடக்கின்றேன்.

தீ மூட்ட முடியாமல் திகைத்துப் புகைக்கின்றேன்.

நேற்றை விட நாளைகள் நிலைமாறிப் போகலாம்

வேற்றுவர் சூழ்ச்சியினால் வெந்தணலில் வீழலாம்

இருப்பினும் தாயகப் புலவனே!

நான் துருப்பிடிக்கப் போவதில்லை.

நெஞ்சக் குழிக்குள்ளே விடுதலை

நெருப்புத் தழல் சொரிய,

தாயகத் திசைநோக்கித் தவமியற்றி நிற்கின்றேன்.

வாழத் தெரியாத பைத்தியம் என்றென்னை

ஏளனப்படுத்துவோர் எண்ணிக்கை பல – ஆயினும்

இறுமாந்து நிமிர்கின்றேன்.

ஈழமேகி வாழும் நாட்களை எண்ணியபடி.

கண்டதைக் கேட்டதைக் கொட்டித்

தீர்த்ததாய் எண்ணவேண்டாம்

துருப்பிடிக்கா எந்தன் தேடலிலே இன்னும் வரும்.

இப்போது விடை பெற்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் இலவச நாளிதழ்கள்

நேரிய இலக்கற்ற நிலைமாறும் எழுதுகோல்கள்,

பேருக்குப் பதவிகள், பிரத்தியேக விருதுகள்

வெள்ளித்திரை மின்மினிகள் வீதியுலா வருவதற்கும்

அள்ளி வழங்க ஆயிரமாய் இளையவர்கள்!

எங்கே போகிறது? என்னினமோ தெரியவில்லை

கோவில்கள், குடமுழுக்குகள்,

கொஞ்சி விளையாடும் காஞ்சீபுரங்கள்,

கழுத்து நிறைந்த கனமான தாலிகள்,

மதியச் சாப்பாடு, மரக்கறி அன்னதானம்,

கொழுப்பேறிய உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு!

மாற்றங்கள்???

Link to comment
Share on other sites

.

மேலும் ஒரு தூது..

பூஜைகேத்த பூவிது நேத்துத்தான பூத்தது

அட பூத்தது யாரத பாத்தது

ஊரெல்லாம் உன்ன பத்தி வெறும் வாய மெல்ல

தோதாக யாரும் இல்ல தூது சொல்ல :mellow:

வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள

கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல

சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற

கொட்டி போன குடுமிக்கு சீப்பு தேடுற

என்ன பாத்து என்ன கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற

கால நேரம் கூடிபோச்சு மாலை வந்து மாத்துற

பூஜைகேத்த பூவிது…… நேத்துத்தான பூத்தது……

அட பூத்தத யாரது பாத்தது

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தூது பற்றிய தேடலில் இன்று அகப்பட்டது இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனின் எழுத்தில் அண்ணனும் தங்கையுமாக காற்றிடம் தூதையும், துன்பத்தையும் சொல்கின்ற அருமையான பாடல் திரி திசை மாறுகிறதோ என்று நினைக்கவேண்டாம் சங்க இலக்கியங்களையும் பேசுவோம். வெள்ளித்திரைகளின் இன்னிசைத் தமிழையும் சுவைப்போம். இன்றைய யதார்த்தங்களுக்குள்ளும் மூழ்கி முத்தெடுப்போம்

தங்கை

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - நீ

சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ?

வண்ணமலர்களில் அரும்பாவாள் - உன்

மனதிற்குக் கரும்பாவாள் - இன்று

அலை கடல் துரும்பானாள் என்று

ஒரு முறை கூறாயோ?

(இந்த மன்றத்தில்)

நடு இரவினில் விழிக்கின்றாள் - உன்

உறவினை நினைக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள் - அவள்

விடிந்தபின் துயில்கின்றாள் எனும்

வேதனை கூறாயோ?

அண்ணன்

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - என்

கண்ணுக்குக் கண்ணான இவள் சொன்னது சரிதானா?

தன் கண்ணனைத் தேடுகிறாள் - மனக்

காதலைக் கூறுகிறாள் - இந்த

அண்ணனை மறந்துவிட்டாள் என்று

அதனையும் கூறாயோ..ஓஓஒ

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன் - என்

கண்ணுக்குக் கண்ணான இவள் சொன்னது சரிதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவியைத் திருமணம் செய்து கொள்ளப் பொருள் வேண்டும். அதனால் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்தான். இதனை ஆற்றமாட்டாத தலைவி வருந்தினாள். தனது மனக்குமுறலை,

‘‘தும்பியே! இப்பிரிவு நோய்த் துன்பம் குறைவதற்காக நான் உனக்கு ஒன்று உரைக்கின்றேன் கேட்பாயாக. உன் உடம்பு கரியது. உன் அறியும் அறிவும் கரியது. ஆதலால் நீ அறமில்லததாய் ஆயினாய்.

மனையைக் காப்பதற்காகப் போடப்பட்டுள்ள வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவினை நீ ஊதிவிட்டுச் செல்வாய். ஆனால் அதுபோன்று இருக்கக் கூடிய பசலையை ஊதமாட்டாய். மேலும் உனது பெட்டையை விரும்பி விரைவாகப் பறந்து சென்று அதன் மனம் மகிழ அன்பு செய்வாய். அதனாலேயே நீ என்னை மறந்தாய்.

என் மீது அன்பில்லாது பொருள் காரணமாகப் பிரிந்த என்னுடைய காதலரிடம் சென்று என்நிலையை அவருக்கு எடுத்துரைத்து அவரைத் திரும்பி வருமாறு செய்யாத உனது செயல் விரும்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் நீ வாழ்வாயாக’ என்று கூறுகிறாள்.

‘‘கொடியை வாழி! தும்பி! இந்நோய்

படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென

மெய்யே கருமை அன்றியும் செவ்வன்

அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே

மனை உறக்காக்கும் மாண் பெருங்கிடக்கை

நுண்முள்வேலித் தாதொடு பொதுளிய

தாறுபடு பீர;க்கம் ஊதி வேறுபட

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்ச்

சிறுகுறு பறவைக்கு ஓடி விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பிலர;

வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர;க்கு

என்நிலை உரையாய் சென்று அவண் வரவே’’

என்ற இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

தும்பி தன் துணையாகிய சிறுகுறும் பறவைக்கு விரைந்தோடி அன்பு செய்யக் கூடிய இயல்புடையதாக இருந்தும் தன்னுடைய துன்பத்தைச் சிறிதும் அறியவில்லையே என்ற வருத்தத்தில் தலைவி தும்பியைப் பார்த்து, ‘‘உன் உடம்புதான் கருப்பு அறிவும் கரிதோ நீ கொடியை’ எனக் கூறுவது இன்புறத் தக்கதாக உள்ளது.

தும்பிசேர்கீரனாரின் குறுந்தொகைத் தலைவியோ,

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர;நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’’

எனத் தும்பியைத் தன் தலைவனிடம் தூதுவிடுகிறாள்.

தலைவி தும்பியிடம் நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’ என்று தூது அனுப்புகிறாள்.

http://puthu.thinnai.com/?p=9363

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பி தன் துணையாகிய சிறுகுறும் பறவைக்கு விரைந்தோடி அன்பு செய்யக் கூடிய இயல்புடையதாக இருந்தும் தன்னுடைய துன்பத்தைச் சிறிதும் அறியவில்லையே என்ற வருத்தத்தில் தலைவி தும்பியைப் பார்த்து, ‘‘உன் உடம்புதான் கருப்பு அறிவும் கரிதோ நீ கொடியை’ எனக் கூறுவது இன்புறத் தக்கதாக உள்ளது.

தும்பிசேர்கீரனாரின் குறுந்தொகைத் தலைவியோ,

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர;நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’’

எனத் தும்பியைத் தன் தலைவனிடம் தூதுவிடுகிறாள்.

தலைவி தும்பியிடம் நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’ என்று தூது அனுப்புகிறாள்.

http://puthu.thinnai.com/?p=9363

மின்னஞ்சல் வசதி இல்லாமல், சங்ககாலத்துக் காதலர்கள், தும்பி,பறவை, நிலா, முகில் என்று தேடி நல்லாவே துன்பப் பட்டுட்டாங்க உடையார்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்காய் பொரிக்கும் சட்டியில் பொரிய விருப்பமா? :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

NaLadhamayanthi%252313.jpg

சரி.. :rolleyes:

எல்லோருக்கும் ஒரு போட்டி :icon_mrgreen:

சங்க இலங்கியத்தில் ஒரு சோடி,..... அன்னத்தைத் தூது விட்டனர் அந்த சோடியின் பெயர்கள் என்ன?

இந்த இலக்கியத்தை படைத்த புலவரின் பெயர் என்ன?

எத்தகைய தருணத்தின் அன்னம் தூது சென்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகழேந்திப் புலவர் இயற்றிய 'நளவெண்பாவில்' நிடத நாட்டின் மன்னன், நளன், தனது காதலுக்காகத் தமையந்திக்கு, அன்னத்தைத் தூதனுப்புகின்றான்!

இளவேனிற் காலத்தில், தமையந்தி, பூங்காவில் உலாவியபோது, அன்னம் அவள் முன் தோன்றியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகழேந்திப் புலவர் இயற்றிய 'நளவெண்பாவில்' நிடத நாட்டின் மன்னன், நளன், தனது காதலுக்காகத் தமையந்திக்கு, அன்னத்தைத் தூதனுப்புகின்றான்!

இளவேனிற் காலத்தில், தமையந்தி, பூங்காவில் உலாவியபோது, அன்னம் அவள் முன் தோன்றியது!

விரல் நுனியில் தகவலை வைத்திருக்கிறீங்க, வாழ்த்துகள் புங்கையூரன்;

காலம் தான் உடனே வரவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்

கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,

தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,

நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான்.

மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த

காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,

தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்

பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான்.

இது ஒரு அழகிய தமிழ்ப் பாடல்!

கூகிளாண்டவரிடம் போகாமல்,எமக்குத் தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

அகன்ற பெரிய மார்பும், சதைப்பிடிப்பான... தோளும்

நாரத முனிவரின் பேச்சாற்றலும்,

பத்து மாலைகளை அணிந்த கழுத்தும், சிவபெருமான் கொடுத்த வாளும் இருக்க...

வீரத்தை போர்முனையில் காட்டாது, வெறுங்கையுடன் திரும்பிப் போனான்.

சத்தியமாக, கூகிளாண்டவரிடம் போகவில்லை. அவ்வளவும்... சொந்தச் சரக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், on 12 April 2012 - 06:44 AM, said:

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்.

தெரிந்த தமிழை வைத்து, இந்தப் பாட்டுக்களின் கருத்தையும், இதில் சம்பத்தப் பட்டவர்களையும் பற்றி, ஒரு பத்துவரிகளுக்குள், எழுதுங்களேன்!

வாரணம்-யானை யானைகளுடன் பொருதிய மார்பும். வரை-மலை.தன்தாய் ஒவ்வொரு நாளும் வெள்ளியங்கிரி மலைக்குப் போய் வழிபடுவதா அந்த மலையை பெயர்தெடுத்து என் அன்னையின் காலடியில் கொண்டு வந்து சேர்ப்பேன் என்று மலையை பெயர்த்து தோள்களில் ஏற்றினான்.நாரத முனிவருடன் தன் தலையை வெட்டி யாழாகவும் தன்நரம்புகளையே யாழின் நரம்புகளாகப் பாவித்து அவருக்கு ஈடாக தமிழிசையை இசைத்த நாவும். தார் அணி மௌலி பத்தும்-பத்து தலைகளில் ஏறிய மகுடங்களும்,சிவன் கொடுத்த வாளும் (விபிடணணின் துரோகத்தால் )வீரத்தையும் களத்திலே விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை மாநகருக்குள் சென்றான்.

எங்கள் தலைவன் இராவணணின் பெருமைகளை மறைக்க முடியாமல் கம்பர் அவனை இந்த இடத்தில் உயர்த்தி பாடி இகழ்கின்றார்.

இசைபாடி ஈழத்தை ஆண்டவனாம் இராவணனை வசைபாடிச் சென்று விட்டான் வம்பனவன் கம்பனடி!

இது என் சொந்தச் சரக்குத்தான் பிழையுண்டேல் பொறுத்தருள்க.

விடங்கொண்ட மினைப்போலும்

வெந்தணல் மெழுகைப் போலும்

படங்கொண்ட பாம்பின் வாயில்

பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராம பாணம்

செருக்களத்துற்ற போது

கடன்பட்டார் நெஞ்சம் போலே

கலங்கினான் இலங்கை வேந்தன்.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை

மனச் சிறையில் கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி-உடல்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய தமிழ் சிறிக்கும், புலவருக்கும் நன்றிகள்!

எங்கள் தலைவன் இராவணணின் பெருமைகளை மறைக்க முடியாமல் கம்பர் அவனை இந்த இடத்தில் உயர்த்தி பாடி இகழ்கின்றார்.

உண்மை தான் புலவரே!

சம்பந்தர் கூடத் தனது திருநீற்றுப் பதிகத்தில், திருநீற்றை ஒப்பிடுவதற்குச் சரியான உவமை தேடித் தவிக்கின்றார்!

வேறு வழியில்லாது, இராவணன் மேலது நீறு என்றே பாடுகின்றார்! ஆரியன் வேறு வழி காணாது, திராவிடனைத் தூக்கிப் பிடிக்கும், இடங்களில் இதுவும் ஒன்று!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியங்களில் தூது விடுபவையாக கிளி, புறா, அன்னம், காற்று, அலை, முகில் இப்படி பல்வகையான தூதுகள் உள்ளன இன்று அலையைத் தூதுவிடும் ஒரு காதலர்களின் பாட்டை கேட்டு அதில் வருகின்ற வார்த்தைகளில் தென்படும் பொருளை இரசிப்போம்.

Link to comment
Share on other sites

நல்லாய் இருக்கு ....பாட்டு! :mellow: :mellow: :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர் சிதற திரண்டேறிப் பொழிவீர்காள்

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான்

தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே."

இந்தத் தூது யாரால் யாருக்கு விடப்பட்டது? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர் சிதற திரண்டேறிப் பொழிவீர்காள்

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான்

தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே."

இந்தத் தூது யாரால் யாருக்கு விடப்பட்டது? :rolleyes:

ஆண்டாள் மேகத்தை பார்த்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.