Jump to content

அப்கானிஸ்தான்: 10 இடங்களில் குண்டு வெடிப்பு !


Recommended Posts

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இன்றைய தாக்குதலுக்கு தலிபான் இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கிடையில் ஜலால்பாத்தில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2%E0%AF%8D-105400311.html

Link to comment
Share on other sites

ஆப்கான் தலைநகர் காபூலில் திடீரென நுழைந்த தலபான்கள் தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். முதலாவதாக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தலைநகரில் உள்ள கோட்டல் ஒன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்தபடியே சரமாரியான தாக்குதல்களை நடாத்தினார். இந்த கோட்டல் ஈரானிய தூதராலயத்திற்கும், அதிபர் மாளிகைக்கும் அருகில் உள்ளது. இவர் அங்கு சென்றதும் பெரும் புகை மூட்டம் கோட்டலில் இருந்து கிளம்பியது. அடுத்து ரஸ்ய தூதரலயம் கிரனைட் தாக்குதலுக்கு இலக்கானது. மறுபுறம் ஜலலாபாத்தில் இருந்த விமான நிலையம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இவருடைய தாக்குதல்களில் ராக்கட் தாக்குதல்கள் முக்கியம் பெற்றது.

காபூலில் உள்ள வெளிநாட்டு தூதராலயங்கள், பாராளுமன்றம் என்பன பல்வேறு தாக்குதல்களுக்குள் சிக்குண்டுள்ளன. முதலாவதாக ஜேர்மனிய, பிரிட்டன் தூதராலயங்கள் மீது பெருமளவு மோட்டார் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிய தூதராலயம் சேதமடைந்துள்ளதாக சற்றுமுன் ஜேர்மனி தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதராலயத்தை நோக்கி தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அதுபோல பாராளுமன்றத்திற்குள் பல குழுக்களின் தாக்கதல் நடாத்தியுள்ளன. அனைத்தையும் தாமே நடாத்திக் கொண்டிருப்பதாக தலபான்கள் தெரிவித்தார்கள்.

மொத்தத்தில் காபூல் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வரும் 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்ற பேச்சுக்கள் நடைபெறும்வேளையில் தலபான்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

http://www.alaikal.com/news/?p=102819

Link to comment
Share on other sites

தாக்குதல் நடாத்திய தலபான்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்

நேற்று ஆப்கான் காபுல் நகரின் கண்களுக்குள் சுமார் 18 மணி நேரம் விரலை விட்டு குடைந்தெடுத்த தலபான் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ஆப்கான் போலீசாரும், அரசும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆப்கான் தலைநகருக்குள் நுழைந்த தலபான் தற்கொலைப் படையினர், அந் நாட்டின் பாராளுமன்றம், வெளிநாட்டு தூதராலயங்கள் உட்பட மேலை நாடுகளின் அத்தனை இலக்குகளையும் தாக்கி அழிக்கும் பணிகளை முன்னெடுத்தன. தாக்குதல் ஆரம்பித்தபோதே சுமார் 16 பேர்வரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் மேலை நாடுகளில் வெளியான செய்திகள் தாக்குதல்களைத் தெரிவித்தாலும் சேத விபரங்களை வெளியிடாது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தன. இன்று காலையில் அனைத்து தலபான்களும் கொல்லப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியிட்டன.

சேத விபரங்களை வெளியிட்டால் மேலை நாடுகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பும், ஆப்கான் போர் பற்றிய விமர்சனங்கள் இரட்டிப்பாகும் என்பது தெரிந்ததே. அதே நேரம் இந்தத் தாக்குதலை முறியடிக்க நேட்டோவின் வான் படைகளும் துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை மட்டும் பிரலாபித்து பேசப்படுகிறது.

மேலை நாடுகளின் முக்கிய வல்லரசுகள் அனைத்தினதும் தூதராலயங்கள் சேதமடைந்துள்ளன. அத்தோடு தலபான்களின் பழைய விரோதியான ரஸ்ய தூதராலயமும் தாக்குலுக்குள்ளானது. முன்னர் தற்கொலைப் படையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் நுழைந்து நடாத்திய தாக்குதல் போல இதனுடைய வியூகம் இருந்தது கவனிக்கத்தக்கது.

ஆப்கானில் நுழைந்த மேலை நாடுகள் வரும் 2014ல் அங்கிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்த பேச்சுக்கள் சென்ற வாரம் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுக்கும், ஆப்கான் அதிபர் ஹர்மீட் கார்சாய்க்கும் இடையில் நடந்துள்ளன. வரும் 2014 ல் ஆப்கானுக்கு புதிய அதிபர் வரவிருக்கிறார், அவரால் பதவிக்கு வந்தவுடன் தலபான்களை எதிர் கொள்ள முடியாது ஆகவே நேட்டோ படைகள் மேலும் சில காலம் நிலை கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

நேற்று சிறிய ரக இயந்திரத் துப்பாக்கியை தூக்கி ஆப்கான் போலீசார் போர் நடாத்தும் இலட்சணத்தை மேலை நாட்டு ஊடகங்கள் காட்டின. அவர்களுடைய திறமை சிரிப்பார் சிரிக்கும்படியாக இருந்தது. பழைய தேவர்; பிலிம்ஸ் படங்களில் ; எம்.ஜி.ஆரை சுடப்போகும் நம்பியார் அவரைச் சுடாமல் மண் சட்டிக்கு சுடுவதுபோல ஆப்கான் போலீசாரின் உடல் மொழி இருந்தது.

இந்த நிலையை அவதானித்துத்தான் தலபான்கள் சரியான தருணத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலானது மேலை நாடுகளுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்த வகுக்கப்பட்ட வியூகமாக இருக்கிறது. ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறினால் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அது பலத்த சிக்கலாக மாறும். எனவே நேட்டோவை ஆப்கான் சகதிக்குள் சிக்கவைக்க வேண்டிய தேவை எதிரணிக்கு இருக்கிறது. மேலை நாடுகளை மேலும் பொருளாதார மந்தத்திற்குள் சிக்குப்பட வைக்க அது அவசியமாகவும் உள்ளது. இந்த விவகாரத்தின் சூத்திரதாரி பின்லேடனோ, ஓமர் முல்லாவோ அல்ல, அதற்கு அப்பால் மறைந்துள்ளது தெரிகிறது.

தலபான்களின் தாக்குதல் மிகப்பெரிய இராஜதந்திரப் பின்னணியில் நடந்துள்ளதாகவே மேலை நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ அமைதிக்காக எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தகர்ப்பதற்கு தலபான்கள் எடுத்த முயற்சியே இந்தத் தாக்குதல் என்று டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் கூறியுள்ளதை இங்கு அவதானிக்க வேண்டும்.

கேள்விகள்…

ரஸ்ய தூதராலயத்தை ஏன் அவர்கள் தாக்கினார்கள்… இது முதல் கேள்வி..

அதுபோல சீன தூதராயத்தை ஏன் தாக்கவில்லை.. இது இரண்டாவது கேள்வி.

நேற்றய 18 மணி நேர தலபான்களின் தாக்குதல்களின் மர்ம முடிச்சு இந்த இரண்டு கேள்விகளுக்குள்ளும் முயங்கி நிற்கிறது அம்ம.. என்க..

http://www.alaikal.com/news/?p=102897

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.