Jump to content

ஈழத்தில் புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

*கண்ணன் இசைக்குழு
*இரட்டையர் இசைக்குழு
*கலாலயா இசைக்குழு
*அருணா இசைக்குழு
*மண்டலேஸ்வரன் இசைக்குழு
* றெக்ஸ் இசைக்குழு
* ரங்கன் இசைக்குழு
* நவகீதா இசைக்குழு
* சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு
* பீற் நிக்ஸ் இசைக்குழு
* சுந்தரையர் இசைக்குழு
* கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்)

இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் !

 

நன்றி முகனூல்

 

Link to comment
Share on other sites

பரமேஷ் கோணேஷ் சகோதரர்கள் ஒரு இசைக்குழு வைத்திருந்தார்களே.. அது என்ன இசைக்குழு?!

 

இலங்கையில் முதலாவது தமிழ் பாடல் இசைத்தட்டை வெளியிட்ட பெருமையும் இவர்களைத்தானே சேரும்.. அது மட்டுமல்ல.. ஜேர்மனியில் 'புலிகளின் புயலிசை' எனும் இசை நிகழ்வை நொய்ஸ் எனும் நகரத்தில் முதன்முதலாக நிகழ்த்தியவர்களூம் இவர்கள்தான். ஜேர்மனியில் வசித்த தமிழ் கவிஞர்கள் இயற்றிய பாடல்களை ஜேர்மனியில் வசித்த தமிழ் பாடகர்கள் பாட, ஒரே நாளில் இரண்டு மண்டபம் நிரம்பிய காட்சிகளாக இடம்பெற்றது.

 

உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது ஈழத்து மெல்லிசைப்பாடல். 1968 இல் இயற்றப்பெற்ற இப்பாடல் இசைத்தட்டில் பதியப்பெற்று1970 இல் இருந்து இலங்கை வானொலியில் ஒலித்தது.

 

https://www.youtube.com/watch?v=UftRCXxWjys

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ் கோணேஸ் கோஷ்டியை பழையசனம் மறக்கவே மறக்காது... :)

Link to comment
Share on other sites

1990 களில் யாழ்ப்பாணத்தில் வெற்றி நடை போட்ட ராஜன் இசைக்குழு......சாந்தன் இசைக்குழு எல்லாம் தவறவிடப்பட்டு இருக்கே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் புகழ்பெற்றிருந்த தமிழ்க் கலாமன்றத்தினரின் அனுசரணையுடன் ஜீவன் ஜோசப் என்னும் கலைஞரின் தலைமையில் ஓர் இசைக்குழுவும் இருந்தது. கோயில் திருவிழாக்காலஙகளில் விற்கப்படும் சிறிய குழாய் போன்றவோர் விசிலை வைத்து ஜீவன் ஜோசப் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடியசைந்ததா' என்னும் பாடலை இசைத்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றது நினைவுக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.