Jump to content

அண்டார்டிகா ஏரியைத் துளைத்து ஆய்வு செய்ததில் புதிய உயிர்கள் கண்டுபிடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
halley-resercu-210814-200-world.jpg

பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

  

அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால் பாசி, செடி, கொடி, தாவரம் முதலிய எந்த உயிரினங்களும் அந்த ஏரிகளில் வாழும் வாய்ப்பு இல்லை எனக் கருதப்பட்டது.

பெரிய உயிர்கள் இல்லையெனினும் ஏரியில் ஒரு செல் நுண்ணுயிரிகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினார்கள். வில்லன்ஸ் ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டாலும் அவை எதை உணவாக உட்கொள்ள முடியும் என்பதில் சர்ச்சை இருந்து வந்தது. அதனால் அண்டார்டிகாவில் உள்ள வில்லன்ஸ் ஏரியில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் அந்த ஏரியைத் துளைத்து ஆய்வு செய்கையில் துளையிடும் உபகரணங்களில் உள்ள நுண்ணுயிரிகள் ஏரியில் புகுந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் உயர்வெப்ப நீரை குழாய் மூலம் பாய்ச்சி ஏரி மேல் உள்ள பனியில் துளையிடும் முயற்சியை மேற்கொண்டார்கள். வெப்பநீரில் நுண்ணுயிரிகள் தங்காது என்பதால் வெளியே உள்ள நுண்ணுயிரிகள் ஏரியில் நுழையும் வாய்ப்பு இல்லை.

இப்படி கஷ்டப்பட்டு ஓட்டை போட்டு, சுமார் 120 லிட்டர் ஏரி நீரை வெளியே எடுத்தார்கள். இந்த நீர், பல மில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேற்பரப்பையே பார்த்திராத நீர். அதை ஆய்வு செய்ததில் 4000 வகை நுண்ணுயிரிகள் ஏரி நீரில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நுண்ணுயிரிகள் அனைத்தும் கீமோஆட்டோட்ராப் (chemoautotrophs) எனும் வகை நுண்ணுயிரிகள். இவை தம் உணவைச் சூரிய வெளிச்சம் மூலம் அன்றி, ஏரியில் படிந்துள்ள மினரல்கள், கெமிக்கல்கள் மூலம் அடையக் கூடியவை.

"நுண்ணுயிரிகள் பாறையை உண்டு உயிர்வாழ முடியுமா?" எனும் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு இருந்ததாகவும், பாறையில் உள்ள மினரல்களை உணவாக உட்கொண்டு நுண்ணுயிரிகள் உயிர்வாழ முடியும் என இக்கண்டுபிடிப்பு நிரூபித்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வியாழன் கிரகத்தின் துணை நிலவான யுரோபாவில் (Europa), மிகப் பெரும் சமுத்திரம் ஒன்று இப்போதும் திரவ வடிவில் காணப்படுகிறது. ஆனால் வில்லன்ஸ் ஏரியைப் போல, அந்தச் சமுத்திரமும் மிகப் பெரும் பனிப் பாளத்தால் மூடப்பட்டுள்ளது. வில்லன்ஸ் ஏரியைப் போல, யுரோபா சமுத்திரத்தின் உள்ளும் சூரிய வெளிச்சம் படுவதில்லை. ஆக வில்லன்ஸ் ஏரி நீரில் நுண்ணுயிரிகள் உருவாகி, பிழைத்திருக்க முடியுமெனில் யுரோபா சமுத்திரத்தின் உள்ளும் நுண்ணுயிரிகள் இருக்கும் வாய்ப்பு உண்டு அல்லவா?

ஆக, இந்தக் கண்டுபிடிப்பு, போலார் சயன்ஸ் (Polar science) விஞ்ஞானிகளை விட, ஆஸ்ட்ரோபயாலஜி துறை விஞ்ஞானிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதுவே யுரோபாவின் நுண்ணுயிரிகளை ஆராய, நாசாவுக்கும் தூண்டுதலாக அமையலாம் என அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115397&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.