Jump to content

காசும் கடவுளும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு  பரீட்சை

மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன்

 

பரீட்சையில தேர்வாகணும்

நானும் கும்பிட்டு

மகனையும் கும்பிடவைத்து

அர்சனை

ஐயருக்கு காசு

உண்டியலில் பணம் என வெளியில்வரும்  போது

ஒரு ஐம்பது ஈரோக்கள்  காலி..

 

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

 

பெடியள்.... உசாராத்தான் இருக்கிறார்கள்.

பாவம்... ஐயரும் பிழைத்துப் போகட்டுமே... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருப்பவர்களிடம்தான் கல்வியும் போய்ச் சேருகிறது.  

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144394#entry1034599

 

 

இது  உண்மைதானே  தமிழச்சி

 

அந்தக்காலத்திலிருந்து

பணம் படைத்தோரே படித்து உயர் பதவிகளுக்கு சென்றனர்.

பணம்

எல்லாவற்றையும் தீர்மானிக்கத்தொடங்கி  பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

 

எனது மூத்தவன்

இன்னும் ஒரு வருடம் வெளிநாட்டில் படித்தால்

தனது வருமானத்தை இரட்டிப்பாக்கமுடியும் என்றான்

ஆனால் என்னால் இதற்கு மேல் முடியாது

எனது விரல் வீக்கத்துக்கு இதுவே பெரிது

 

ஆனால் பணமுள்ளவனால் தொடர்ந்து  படித்து

மேலே செல்லமுடியும்...

 

நன்றி  வருகைக்கும்  கருத்துக்கும் சகோதரி

Link to comment
Share on other sites

இது  உண்மைதானே  தமிழச்சி

 

அந்தக்காலத்திலிருந்து

பணம் படைத்தோரே படித்து உயர் பதவிகளுக்கு சென்றனர்.

பணம்

எல்லாவற்றையும் தீர்மானிக்கத்தொடங்கி  பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

 

எனது மூத்தவன்

இன்னும் ஒரு வருடம் வெளிநாட்டில் படித்தால்

தனது வருமானத்தை இரட்டிப்பாக்கமுடியும் என்றான்

ஆனால் என்னால் இதற்கு மேல் முடியாது

எனது விரல் வீக்கத்துக்கு இதுவே பெரிது

 

ஆனால் பணமுள்ளவனால் தொடர்ந்து  படித்து

மேலே செல்லமுடியும்...

 

நன்றி  வருகைக்கும்  கருத்துக்கும் சகோதரி

 

தாயகத்தில் முன்னர் அந்த நிலை இருக்கவில்லையே.   பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்தார்கள்.  பணம் இல்லாதவர்கள் படித்து முடித்ததும் தாயகத்திலேயே வேலை செய்தார்கள். 

 

வெளிநாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை விசுகு.  இங்கு அரசாங்கமே லோன் கொடுத்துப் படிப்பிக்க வைக்கிறது.  நாமே பணம் கொடுத்துப் படிக்கும் நிலையிருந்திருந்தால் வெளிநாட்டிற்கு வந்த அனைவருமே தொழிற்சாலைகளில்தான் வேலை பார்த்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் முன்னர் அந்த நிலை இருக்கவில்லையே.   பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்தார்கள்.  பணம் இல்லாதவர்கள் படித்து முடித்ததும் தாயகத்திலேயே வேலை செய்தார்கள். 

 

வெளிநாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை விசுகு.  இங்கு அரசாங்கமே லோன் கொடுத்துப் படிப்பிக்க வைக்கிறது.  நாமே பணம் கொடுத்துப் படிக்கும் நிலையிருந்திருந்தால் வெளிநாட்டிற்கு வந்த அனைவருமே தொழிற்சாலைகளில்தான் வேலை பார்த்திருப்போம்.

 

எனது சகோதரி  ஒருவர் லண்டனில் உள்ளார்

அவரது வருமானத்துக்கும் மேலாக ரியூசன் காசு கட்டுகின்றார்

தொலைபேசி  எடுத்தால்  மூச்சு வாங்குவார்

கேட்டால்

ஓட்டம்

ஓட்டம்

ஓட்டம்

 

ஒரு ரியூசன் முடிய அடுத்தது

ஒரு நாள் பேசிப்போட்டேன்

பொடியள் படித்து வாறதுக்குள்ள நீ போய்ச்சேரப்போறாய் என.

வகுப்பில் முழுப்பேரும்  ரியூசன் படிக்கும் போது

தனது பிள்ளை பின் தங்கிவிடுமாம்.. :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரியூசன் எண்டால் என்னெண்டு தெரியாத ஆக்கள் லண்டனிலை எங்கடை சனம் வீட்டை ஒரு கிழமைக்கு இருந்தால் காணும். :D
 
பெடியளுக்கு சாப்பிடவே நேரமில்லை. :D
Link to comment
Share on other sites

எனது சகோதரி  ஒருவர் லண்டனில் உள்ளார்

அவரது வருமானத்துக்கும் மேலாக ரியூசன் காசு கட்டுகின்றார்

தொலைபேசி  எடுத்தால்  மூச்சு வாங்குவார்

கேட்டால்

ஓட்டம்

ஓட்டம்

ஓட்டம்

 

ஒரு ரியூசன் முடிய அடுத்தது

ஒரு நாள் பேசிப்போட்டேன்

பொடியள் படித்து வாறதுக்குள்ள நீ போய்ச்சேரப்போறாய் என.

வகுப்பில் முழுப்பேரும்  ரியூசன் படிக்கும் போது

தனது பிள்ளை பின் தங்கிவிடுமாம்.. :(  :(  :(

 

இது அவர்கள் தங்கள் பிள்ளைகளில் நம்பிக்கையில்லாத் தன்மையைக் காட்டுகிறது.  லண்டனில், உயர்தரத்தின்போது மட்டுமே ரியூசன் தேவைப்படும்.  இவர், ஒடும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, வீட்டில் பிள்ளைகள் படிக்கும்போது கவனிப்பதோடு, சின்ன வயதிலிருந்தே அவர்களது மதிப்பெண்களை அவதானித்து வந்திருந்தால் இந்த ஓட்டம் தேவையிருக்காது.  ஆனால், எம்மவர்கள் மத்தியில் ரியூசன் என்பது ஊறிப்போய் விட்டது.  அடுத்த தலைமுறையோடாவது இது அழியட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இருப்பதை விட.... இங்கிலாந்தில் "ரியூசன்" கலாச்சாரம் அதிகம் இருப்பதை.. அவதானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கம் காசும் கல்வியும் இந்தப்பக்கம் காசும் கடவுளும்
இடையில் எல்லாவற்றுக்கும் மூளை என ஒன்று இருக்க வேண்டும்
அது வேலை செய்யாவிட்டால் எத்தனை கடவுளிடம் சென்றாலும் எத்தனை 

காசைக் கொட்டினாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.


பகுத்தறிவாளிகள் பலர்  பகுத்து அறிபவர்கள் சிலரே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கம் காசும் கல்வியும் இந்தப்பக்கம் காசும் கடவுளும்

இடையில் எல்லாவற்றுக்கும் மூளை என ஒன்று இருக்க வேண்டும்

அது வேலை செய்யாவிட்டால் எத்தனை கடவுளிடம் சென்றாலும் எத்தனை 

காசைக் கொட்டினாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

பகுத்தறிவாளிகள் பலர்  பகுத்து அறிபவர்கள் சிலரே :)

 

 

உதையெல்லாம் கடந்து  போயாச்சு வாத்தியார்

படிக்காதவனையும் காசு படிப்பிக்கும் என்று நிரூபிக்கப்பட்டு பலவருடமாகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு  பரீட்சை

மாரியம்மன் கோயிலுக்கு போயிருந்தேன்

 

பரீட்சையில தேர்வாகணும்

நானும் கும்பிட்டு

மகனையும் கும்பிடவைத்து

அர்சனை

ஐயருக்கு காசு

உண்டியலில் பணம் என வெளியில்வரும்  போது

ஒரு ஐம்பது ஈரோக்கள்  காலி..

 

வெளியில் வந்ததும்

மகன் சொன்னான்

உங்களிடம் காசு  இருந்ததால்

நான் பாசாகிவிடுவேன்

காசு இல்லாதவன்.......?

முருகன் சிவனுக்கு உபதேசித்தான்!

 

சிவன் வெட்கப்படவில்லை!

 

சிரித்தான்....!

 

அவனுக்குள் ஒரு குரல் ...!

 

வயதா முக்கியம்?

 

வார்த்தைகள் தானே முக்கியம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் சிவனுக்கு உபதேசித்தான்!

 

சிவன் வெட்கப்படவில்லை!

 

சிரித்தான்....!

 

அவனுக்குள் ஒரு குரல் ...!

 

வயதா முக்கியம்?

 

வார்த்தைகள் தானே முக்கியம்! :D

 

முருகனது  உபதேசம்

சிவனுக்கு வெட்கத்தை தரவில்லை

ஓங்கி குட்டியது போலிருந்தது

வயதா முக்கியம்

வார்த்தைகள் தானே முக்கியம்

அதனால் தான் இங்கு படைத்தோம் அதை :icon_idea:

 

நன்றியண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.