Jump to content

உராய்வு


Recommended Posts

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply

உராய்வு கவிதைத் தொகுப்பில் இருந்த ஒரு கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி மதுரன் அண்ணா....

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கவி வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு ... நல்லா எழுதியிருக்குறீங்க இளைஞன் ... வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உராய்வு கவிதைத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் தனித்தனியே அவற்றிற்கான சிறப்பியல்புகளை சொல்லி செல்கின்றன. இவ்வளவு ஆற்ற்ல்களையும் கொண்டுள்ள ஒரு படைப்பாளியின் கவிதை ஒவ்வொன்றினையும் படிக்கின்ற போது அழகிய எண்ணக்கருக்களை அழமாய் உள்வாங்கவைத்து, அடுத்த கவியினை வேகமாய் புரட்டிடும் ஆவலை தூண்டியது என்றால் மிகையல்ல. உண்மையில் இவ்வளவு திறமைகளை கொண்டுள்ள ஒரு படைப்பாளியை யாழ்களம் பெற்றதில் நாம் பெருமையும் பேர் உவகையும் கொள்கின்றோம்.  

வீதியில் வாழும் மானிடர்க்கு -இங்கே

வீடுகள் இல்லையடா

வீதியில் கிடந்த கற்களுக்கு -இங்கே

கோவில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்  

சோறுமே இல்லையடா

நாள்தோறும் இந்த வெற்று சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா

கூவும் குயிலும் கூடிவாழும் -காட்டில்

கடவுள் அவைக்கில்லை

தாவும் குரங்கும் வரங்கள் வேண்டிடக்

கோவில் செல்வதில்லை

ஆயிரம் ஆண்டவர் ஆயினும் குறைகள்

இன்னும் தீரவில்லை

ஊருக்கு ஊர் ஓர் கோவிலைக் கட்டியும்

வேதனை ஆறவில்லை.

:lol:

கவிவரிகள் அருமை தொடர்ந்தும் எழுதுங்கள் :lol:

Link to comment
Share on other sites

உராய்வு

கவிதை தொகுப்பு கிடைத்தும் பல நாட்களாகியும் நேரம் இல்லை என்றா காரணத்தால் முழுமையாக ரசித்து வாசிக்க முடியவில்லை. இன்று கிடைத்தது அரிய சந்தர்ப்பம்.

வெண்ணிலாவைப்போல் மாமரத்திற்க்கடியில் தென்றலோடு கதை பேசிக்கொண்டு வாசிக்க ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் பனிக்காலத்தில் தனது இலைகளை இழந்து வசந்த காலத்தின் அறிகுறியாக கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டு கொண்டு இருக்கும் ஆப்பிள் மரம் தான் எனக்கு வசதியாக கிடைத்தது. இதமான இளம் தென்றலுக்கு பதிலாய் பலமான குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. குளிர்காற்றின் குளிர்மையை உணராமல் மெய்மறந்து கவிதைக்குள் மூழ்கினேன்

அன்புடன், உராய்வுடன், நன்றியுடன் என்று பக்கங்களில் கி.பி அரவிந்தன் அவர்களின் முகவுரையுடன் கவிதை தொகுப்பின் ஆசிரியார் சஞ்சீவ்காந்த் (இளைஞன்) அறிமுகமும் அதனைத்தொடர்ந்து நன்றியுரையும் தொடர்ந்தது. நான் வாசித்த தொகுப்புகளில் நன்றியுரை கடைசியில் தான் இடம்பெறும். ஆனால் இந்த தொகுப்பில் புதுமையாக நன்றியுரையை முதல் பக்கத்திலே போட்டிருந்தார்கள்.

"காலத்தின் கவிக்கூர் இவன்" என்ற ஏ.சி. தாசீயஸ் அவர்களின் அடை மொழிக்கு ஏற்ப ஒவ்வொரு கவி வரிகளும் மிகவும் உயிரோட்டமாகவும் திரும்பவும் வாசிக்க தூண்டும் தன்மையையும் கொண்டிருந்தது.

வருக 2004 என்ற தலைப்பின் கீழ்

" வருகவென வரவேற்று வாழ வைத்த ஆண்டுகளே வரலாற்றில் நீர் எங்கு போனீர்?"

என்ற கேள்வியுடன் முதல் கவி தொடர்கின்றது.

"விருந்துண்டு விடைபெற்று விரைந்தோடிய ஆண்டுகளே வரலாற்றில் நீர் என்ன செய்தீர்?"

என்று கவிவரிகள் தொடருகின்றன.

"வெள்ளை நிழலும் வேண்டாம் வெளிச்ச நிலவும் வேண்டாம்.

சூரிய நிலவும் வேண்டாம் . சூடாத வெயிலும் வேண்டாம்.

பூவாய் மழை பெய்யவும் வேண்டாம். நிலவில் நிலமொன்றும் வேண்டாம்.

புன்னகை தேசம் வேண்டும் புதுமை தேசியம் எமக்கிங்கு வேண்டும்."

நிலவில் ஒரு வீடு கட்டி தாருகின்றேன். மழை பூவாய் பொழிய வேண்டும் என்று சின்ன சின்ன ஆசைகளில்

கவிதை எழுதுபவர்களுக்கு ஒரு கடி அங்கை.

அன்புள்ள என்று தொடங்கும் கவி வரிகளில் கண்களை ஒடவிடுகின்றேன். அன்புள்ள என்ற வரிகளை பார்த்தவுடன்

அட இளைஞன் கவிதை தொகுப்பிலும் தன் காதலுக்கு தூது விடுகின்றாரா என்ற எண்ணத்துடன் பக்கங்களை புரட்டுகின்றேன்.

"அன்புள்ள தாயகமே

ஆசை மகன் எழுதும் மடல்

நானிங்கு நலமம்மா

நீயங்கு நலம் தானா"

என கண்ணீருடன் எமது தாய் நிலத்தை நினைத்து உருகிய வரிகள் எமது கண்களையும் நனைக்கின்றன.

"எத்தனை நாள் ஆகியதோ

உன் மடியில் நானுறங்கி."

ஆம் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களின் ஏக்கங்களையும் அந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

"என் வீட்டு தோட்டத்தில் பூத்த கொடி நலம் தானா?"நான் வைத்த மல்லிகையே நலம் தானா? நான் வைத்த பல நிறமுடைய ரோஐாவே நலம் தானா? இலையே தெரியமால் புத்து குலுங்கும் நித்தியாகல்யாணியே நீ நலம் தானா? ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு நிறத்தை காட்டும் குரோட்டான்ஸ்களே நீங்களும் நலம் தானா என்று நம்மையும் கவி எழுத தூண்டும் வரிகள்.

நமது பாரம்பரிய பாட்டுக்களில் ஒன்றான தாலாட்டு பாடல்களை இப்போது நாம் கேட்பது மிகவும் அருமையாக இருக்கின்றது. பிள்ளைகளை தூக்க வைக்கும் போதும் சினிமா பாடல்களை முணுமுணுக்கும் எமது தலைமுறைக்கு விடுதலையின் பங்குதாரர் என்னும் தலைப்பில் எமக்காக உயிர் நீத்த மாவீரார்களின் புகழ் பாடி புதுமையாக "ஆராரோ ஆரோ ஆராரோ" வரிகளில் தந்து இருக்கின்றார்.

"சுட்டெரிக்கும் சூரிய வீரார்

எட்டிப் பகை வென்ற வீரர்"

ஆம் நமக்காக தம்முயிரை தியாகம் செய்த நம் மாவீரார்கள் புகழ் பாடுகின்றது அந்த தலாட்டு கவி வரிகள்.

கடவுள்:

"வீதியில் வாழும் மானிடர்க்கு

இங்கோ வீடுகள் இல்லையாடா

வீதியில் கிடந்த கற்களுக்கு இங்கே

கோயில்கள் ஏதுக்கடா?

நாதியற்று வாழும் நம்மவர்க்கு நாளும்

சோறு இல்லையாடா

நாள்தோறும் இந்த வெற்றுச் சிலைக்கு

பூசைகள் ஏதுக்கடா?.

முக்கியமாக புலம் பெயர்ந்து கோயில்கள் அமைப்பதை வியாபாரமாக கொண்எருக்கும் அடியார்கள் உணர வேண்டிய உண்மை வரிகள்.

கவிதை வரிகளுடன் கூடிய அனைத்து காட்சிப் படங்களும் அருமை. ஒவியார் மூனாவின் திறமைக்கு இந்த இளைஞனின் உராய்வு தொகுப்பு சிறந்த சான்று. ஒரு சில கவிதை வரிகளில் சில ஆங்கில சொற்கள் உட்புகுந்தியிருந்தாலும் அதற்கான விளங்கங்கள் அந்த பக்கங்களின் முடிவில் தென்படுகின்றது.

"இவள் யாரோ" என்று காதல் வரிகளில் தொடங்கி இளவயதினள் இவள் யாரோ? என்று கேள்வியையும் கேட்டு விட்டு இவள் என் தோழி என்று சாதரணமாக

சொல்லி தப்பித்து கொள்கின்றார்.

வர்ணிக்க தோன்றுகின்றதே, சிற்பி, பிறந்த நாள் பரிசு, காதல் நோய், வெளிச்ச குப்பை என பல சிறு தலைப்புகளிட்டு அந்த தலைப்புகளுக்கு ஏற்றவாறு கவி

படைத்திருப்பது பாராட்டதக்கது.

"உண்ணா விரத்தின் பசிக்கு தன்னை உணவாக கொடுத்தவன்"

என்று தியாகி தீலிபன் அண்ணாவையும் வர்ணிக்க தவறவில்லை இந்த கவிஞர்.

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

"மரித்து விட்ட மனிதம்

மறந்து விட்ட மனித மனம்"

என்று இந்த கலியுக காலத்து மனித மனங்களை பற்றி கவி வடித்து அனைவரையையும் சிந்திக்க வைத்து இருக்கின்றார்.

ஒளி வழி விழி என்ற தலைப்பின் கீழ்

"நிழலின் நிசத்தை நீ உணர மறுக்கிறாய் என்னென்றால் கடலின் கண்ணாடியில் உன் முகத்தை பார்க்கின்றாய்."

சில விடயங்கள் நடக்காது என்று நன்கு தெரிந்திருந்தும் ஏனோ சிறு குருட்டு நம்பிக்கையை உருவாக்கி வாழ பழகிக் கொண்டு விட்டோம்.

"நன்மதியில் உன் விதியை உணர மறுக்கிறாய்" அழகான கருத்து நிறைந்த வரிகள்.

அடுத்த தலைப்புகளான கூடல், ஊடல், காதல் அனைத்து தலைப்புகளிலும் வரைந்த கவிகள் அற்புதம்.

புலம்(பல்) இலக்கியம்

"கூட்டிலே பூட்டிய குரங்குளாக

வெளிநாட்டிலே மாட்டிய நம்மினம் ஐயனே"

அருமையான கற்பனை வளத்துடன் கூடிய வரிகள். புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் எம்மை குரங்குகளாக வர்ணித்து இருப்பது வருத்தத்தை தந்தாலும் அந்த வரிகள் மறுக்கப்படதா உண்மை வரிகள். கறுப்பினத்தவர்களை பார்த்து உடுப்பு, வெள்ளையார்களை பார்த்து நடை, சீனார்களை பார்த்து சாப்பாடு என்று எல்லா இனத்தையும் பார்த்து மாறி மாறி தாவிக் கொண்டிருக்கும் நம்மை குரங்குக்கு ஒப்பிட்டதே மேல் என்று படுகின்றது.

புகைக்காதீர், மரபணு, கணணி, ஒசோன் தலைப்பில் கீழ் வந்த கவிகள் வியப்பில் ஆழ்த்துகின்றது.

இணையம் பகுதியில்

"வலைக்குள் ஒர் உலகம்

வலைப்பின்னலினால் பின்னப்பட் நாடுகள்"

இந்த கவிதையை வாசிக்கும்போது யாழ் இணையத்தை பற்றி தனது சொந்த அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் என்று தான் தோன்றுகின்றது.

"முகமூடிகள் கூட அங்கு முகமூடி அணிகின்றன. அதையும் அடிக்கடி மாற்றல்"

பாடசாலையில் படிக்கும்போது மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று என்றே படித்திருந்தோம். இங்கே கவிஞர் நான்கவதாக கணணியையும் சேர்த்திருப்பது நிஐமானதாக இருக்கின்றது. "உடை, உணவு, உறையுள் நான்காவது அத்தியாவசியம் கணணி" என்கின்றார் இந்த இளைஞன். .

பெண்ணியப் பேச்சுப் பகுதியில் இருந்து "அடக்கம் என்றார் அதில் அர்த்தம் அடங்கி கிடக்கும் என்றார். அவளை முடங்கச் செய்தார்." பெண் விடுதலை பற்றி பேசிப் பேசியே பெண்களை முடங்க வைக்கும் மூடவர்களை பார்த்து கோபத்துடன் தனது கேள்விக் கணைகளை வீசுகின்றார்.

நான் மட்டும் பகுதியில் இருந்து

"வெளிச்சம் தேடி இருட்டுக்குள் பயணிக்கின்றேன்." யாருமில்லமால் வாழ்கின்றேன். எதிரே எனக்கு ஆறுதல் சொல்லி அரவணைக்கவும் இல்லை. அதே நேரம் எனக்கு எதிரியாகவும் ஒருவரும் இல்லை என்று தனது தனிமையை நினைத்து புலம்புவார்களுக்காக அந்த வரிகளை படைத்திருக்கின்றார் இந்த கவிஞர்.

வாழ்க்கை

"பிறப்புக்கும்

இறப்புக்கும்

தோன்றிய முரண்பாடு"

உண்மை"

உண்மை உணர்வுகளை உன்னுள் உணராதவன்

உண்மை உணர்வுகளை உன்னுள் துளிர்க்காதவன்

உணரும் உர்வுகளை உன்னுள் நினைக்கதவன்

உன்னையே உணரா நீ உண்மையா அறிவாயா?

இன்னும் இங்கு குறிப்பிடதா தலைப்புக்களில் ஏராளமான கவித்துளிகள். வாசிக்க இன்பம் தரும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கின்றது. உண்மையான வாழ்க்கை நடைமுறையினை தனது எழுத்துக்களால் நம்முன் கொண்டு வந்து இருக்கின்றார் இந்த இளைஞன்.

தொகுப்பில் பல அறிவியல் துறை சார்ந்த கவிதைகள் காணப்படுவது சிறந்த முயற்சி.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைய தலைமுறைக்கு நல்லா எடுத்துக்காட்டாக இளைஞன் திகழ்கின்றார். உராய்வு தொகுப்பில் தனது பணியைத் தொடங்கிய இளைஞன் இன்னும் பல தொகுப்புக்களை வெளிவிட கடவுள் கிருபை புரியவேண்டும் என்று வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

வாவ்.....பிரமாதம்.....அற்புதமான விமர்சனம்.... இன்னொமொரு படைப்பாளியை அடையாளம் கண்டு கொள்கிறது யாழ் களம்....

Link to comment
Share on other sites

எனது பார்வையில் உராய்வு

யாழ் களத்தில் எல்லோரினது விமர்சனத்தை பார்த்த பின்பு எனக்கும் அந்தப்புத்தகத்தை எப்படியாவது வாசிக்க வேண்டும் என்று ஆவல் என்னுள் கொளுந்துவிட்டு எரிந்தது. எனது நீண்ட நாள் ஆவல் இன்றே பூர்த்தியடந்தது. வெண்ணிலா ரமா போல எனக்கு ஆற அமர இருந்து வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கவிதைப்புத்தகம் கையில் கிடைத்தவுடன் அதை வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வேகமே என்னுள் ஏற்பட்டது.

தொடர்ந்து வாசிக்க...

http://rasikai.blogspot.com/2006/05/blog-post_27.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"அகிம்சை தன்னை கூவி ஏலம் விட்ட

தற்போதை பாரத்தின் அன்றை தீலிபன்."

மகாத்மா காந்தி அவர்களை நமது திலீபன் அண்ணாவோடு ஒப்பிட்டு இருப்பது சிறிது முரண்பாடாக தான் எனக்கு தெரிகின்றது. காந்தியின் நிலை வேறு. தீலிபன் அண்ணாவின் நிலை வேறு. காந்தியின் சாவின் அடக்கு முறையாளன் சம்மதப்படவில்லை. ஓரு ஆயுதம் தாங்கிய போராளி தன்னை அகிம்சைவாதியாக மாற்றுவது கடினம் என எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் தீலிபன் அண்ணா அதை சாதித்து காட்டினார். இதில் ஆசிரியாரின் கூற முனைந்தது என்ன என்பதை அறிய ஆவல்.

போராட்ட வழிமுறை மட்டுமே ஒப்பீட்டுக்கு அடித்தளமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது அகிம்சை வழிப் போராட்டம். கவிதையில் கூறப்படும் ஒப்பீடுகள் சரியாக அனைத்தும் பொருந்த வேண்டும் என்பதல்ல. உதாரணமாக பிரபாகரனை "முருகனுக்கு நிகரானவன்" என்று பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றது எனது இந்தக் கவிதையில் ஒரு மறைமுகமான விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் காந்தியைப் பற்றிய கவிதை. ஆழநோக்கினால் இக்கவிதையின் நோக்கம் வேறு...

நன்றி ரமா. கவிதைகள் அனைத்தையும் வாசித்து உங்கள் கருத்துக்கைள பொறுமையாக எழுதியமைக்கு.

நன்றி ரசிகை. எனது எழுத்துக்களை இரசித்தமைக்கு. இரசித்ததோடு நில்லாமல் உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எழுத்துவடிவில் தெரிவித்தமைக்கு எனது நன்றி.

Link to comment
Share on other sites

2 வருசம் முன்பு - இதே தலைப்பில் நடந்த புடுங்கலை பார்த்து -(வேட்டி ஏன் கட்டல - பொட்டு ஏன் வைக்கல )

வாசிக்காமலே - தவிர்த்தன் -!

இப்போதானே கவனிச்சன் -முந்தி போல இல்ல -எவ்ளோ விசயம் !

நானும் - இங்க வாறன் - யாரும் வேணாம் - என்று சொன்னாலும்! :roll: 8)

Link to comment
Share on other sites

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க எழுதவில்லை சுண்டல் தம்பி அவங்க Type பண்ணிதான் இருக்கிறாங்க.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பற்றி சரியா புரிந்து வைத்திருக்காய் பிள்ள u have a very bright future sundhal......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலாக இருந்து கரம் (கார சுண்டல்) சுண்டலாக புரமோஷன் நான் தாறன்...............

Link to comment
Share on other sites

ரமாக்கா...ரசிகை பெரியம்மா......விமர்சனங்கள் அருமையாக இருக்கின்றன...நீங்கள் எல்லாம் இப்பிடி எழுதுவிங்களானு நினைக்க தோணுது...

பெரியம்மாவா? :roll: எப்பேல இருந்து? :shock: சொல்லவே இல்லை. :lol:

Link to comment
Share on other sites

மேற்கோள்:

அப்போ 2 வருஷத்துக்கு முதலே நீங்கள் யாழ் வாசகராஃ?

ஆமா சுண்டல் - இணைந்ததுதான் - பிந்தி! 8)

Link to comment
Share on other sites

  • 6 months later...

http://manaosai.blogspot.com/2006/12/blog-post_21.html

வலைபதிவர் சந்திரவதனாவின்... உராய்வு பற்றிய விமர்சனம்... மேலை உள்ள இணைப்பில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.