Jump to content

வறட்சி: சில மைல்களில் அபாயம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வறட்சி: சில மைல்களில் அபாயம்…

ஜெரா

Drought-2-800x365.jpg

படங்கள் | கட்டுரையாளர்

அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில் ஐதாகவும் இருந்தமைக் கான எச்சங்கள் உண்டு. கடந்த 100 வருடங்களுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். செல்வச் செழிப்புடனும், சீருடனும்தான் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இங்கு சிதைந்து கிடக்கும் வீடுகளும், மாடி மனைகளும் தக்க சாட்சி.

தீவுக்குள்ளால் வரும் முட்புதர்களையும், எஞ்சிய மிருகங்கள் நீருக்காகவும், உணவுக்காகவும் அலையும் கால்தடயப் பாதைகளையும், பழைய தார் வீதிகளையும் இணங்கண்டு நடந்து கிராமத்துக்குள் ஏதாவது ஒரு மூலையால் உள்நுழையலாம். பயங்கரமான பாழடைந்த வீடுகளே வரவேற்கின்றன. ஆங்காங்கே வெட்டைகளில் மாடுகள் செத்துக் கிடக்கின்றன. மாட்டுப் பிண நாற்றம் மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது. இன்னும் சில இடங்களில் இறந்த ஆடுகள், மாடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டற்கான தடயங்களும் அந்தத் தீவு முழுதும் பார்க்கக்கூடியதாகவுள்ளது. சில இடங்களில் மாடுகள் மரணத்தின் கடைசி வாசலில் நின்று துடித்துக் கொண்டிருக்கின்றன. கிடைக்கின்ற கொட்டன்களால் இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் ஓங்கி ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிட்டு கடந்து போகுமாறு எம்மிடம் கெஞ்சிவதைப் போன்று “ம்மா” என கறகறக் குரலில் ஓலமிடுகின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையில் காய்ந்து சருகாகி தரையோடு ஒட்டிய புற்களை மண்ணோடு சேர்த்து வறண்டி வறண்டி சாப்பிடுகின்றன மண் தின்னிமாடுகள். இந்த நேரம் அவற்றின் வயிறுகள் வெடித்திருக்கக்கூடும். மண்ணால் நிரம்பிய வயிறுகள் ஒவ்வொரு மாட்டின் வயிற்றின் உள்ளும் பெரும் பூமிப் பந்தை வைத்திருந்தன.

Drought-3-e1408533247579.jpg

கோரமான இந்தக் காட்சிகள் அந்தக் காய்ந்த நிலம் முழுதும் காணக்கிடைப்பதால் மாட்டுப் பிணங்கள் மீதான ஈர்ப்பு வெகு சீக்கிரமே சலிப்புத் தட்டிவிடுகிறது. எங்காவது மனிதத் தடயங்கள் இருக்கவேண்டும். தேடிக்கண்டுபிடி எனக் கால்களுக்குத் தீவிரமாகத் தகவல் அனுப்புகின்றது மூளை.

ஆள்நடமாட்டத் தடயமுள்ளத் தெருமுனையில் பல வர்ண கான்கள் (நீர்க் கொள்கலன்கள்) நேர்த்தியாக, நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவொரு நீர்த்தாங்கி. ஆனால், அதற்குள்ளும், அதனை சூழவுள்ள இடங்களிலும் எம் உடலில் பிசுபிசுக்கும் வியர்வையைத் தவிர மருந்துக்குக்கூட நீர் எடுக்க முடியாது. கொதிக்கின்ற வெயிலில் கருகிய சறுகுகள் பற்றியெரியத் தயாராகின்றன. அவ்வளவு வெயில். அந்த இடத்துக்கு அருகில் சென்றால், மனிதப் பேச்சரவங்கள் கேட்கின்றன. சற்றுத் தொலைவில் ஒரு தொகை மனிதர்கள். ஆண்கள், பெண்கள், அதிகளவு சிறார்களுமாக ஒவ்வொருவர் நிழலையும் இறுக்கமாக ஆக்கிரமித்து அமர்ந்திருக்கின்றார்கள். அனைவரிலும் வெயிலின் கருமை தெரிகிறது. கண்களிலும், முகத்திலும் வெயிலேற்றிய வாட்டம் நிரந்தரமாகவே இடம் பிடித்திருக்கிறது. சில குழந்தைகளுக்கு வெயிலிலிருந்து தற்காலிக பாதுகாப்பை அம்மாக்களின் சேலைத்துண்டுகள் தருகின்றன. அந்தத் தீவில் நிழல்தர ஒரு மரம்கூடவா இல்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போல பனையும், தென்னையும், பயன்தந்து இப்போது பயன்தராத ஏனைய மரங்களும் உண்டு. ஆனால், அவை எதிலுமே இலைகள் இல்லை. எல்லாம் கருகி நீண்ட நாட்களாகிவிட்டன. இலைகளற்ற மொட்டை மரங்களும் பறட்டைக்காட்டில் முளைக்கும் முட்செடிகளும், சுடுகாட்டில் செழிக்கும் எருக்கலையும் தாராளமாய் நிற்கின்றன. பனையே கருகத் தொடங்கியிருக்கின்றதெனில் அந்தத் தீவைக் கொழுத்தும் வெயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

அவர்கள் ஆபிரிக்க நாடொன்றில் வாழ்பவர்களைப் போல நீருக்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, அரச நிர்வாகத் தரப்பொன்று நீர் வழங்குமாம். எவ்வளவு நீரெனில் குடும்பமொன்றுக்கு ஒரு தடவையில் 20 லீற்றர்கள். ஆக குடும்பமொன்றில் 10 பேர் இருந்தாலும், 2 பேர் இருந்தாலும், வாரமொன்றுக்கு 40 லீற்றர் நீர் மட்டுமே அவர்களால் செலவிட முடியும். வாரத்துக்கு 40 லீற்றர் நீர். நமக்குப் போதுமா? நம்பமுடிகிறதா இந்த யதார்த்தத்தை?

நீர் வழங்குநர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. குறித்த இரு தினங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களையும், அவர்கள் நீரள்ளும் கிணற்றின் நீர் கொள்லளவினவைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் மட்டும் வருவதில்லை. வரும்வேளையில் வரிசையில் காத்திருப்பவர்கள் அந்த வாரத்துக்கான பாக்கியசாலிகள்.

அதையும் கடந்து, அங்கு வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் துணையோடு தீவுக்குள் ஆழ ஊடுறுவலாம். அந்த ஊரைக் கடந்து “கட கட மொட மொட” சத்தத்தோடு அயல் கிராமங்களுக்கு பைப் நீர் செல்கிறது. இடையிலிருக்கும் அவர்களுக்கும் அதிலொரு பகுதி நீரைத் தந்தால் மேலும் சீவிக்க முடியும் என்ற கதையைச் சொல்லியபடி வானைப் பார்க்கிறார் அந்த வழிகாட்டி. அவர் நிற்குமிடம் குடமுண்டகுளம். அந்த ஊருக்கே தொன்மையான குளம் அது. 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் வற்றி வெடித்திருக்கிறது அந்தக் குளம். அதனை அண்டிய அனைத்து நிலங்களும் தோட்டங்களால் செழித்தவை என்பதற்கான பயிர்களின் அடிக்கட்டை சான்றுகளைத் தொட்டுக் காட்டுகிறார் அவர். குளத்துக்குள்ளே கிணறுதோண்டியும் நீருக்காகப் போரடியிருக்கின்றனர். அங்கு எந்தக் கிணற்றையும் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாத அபாயம் நீடிக்கிறது. மேலும் ஆழமாகத் தோண்டினால் அருகிலிருக்கும் கடலின் உப்புத் தண்ணீர், நன்னீரோடு கலந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு எந்தக் காலத்திலும், எந்தப் பெரிய மழையானாலும் நன்னீருக்கு சாத்தியமிருக்காது. அண்மையில் நட்ட பயிர்களை, தோட்டங்களைக் காட்டுகிறார். கருகி நிற்கின்றன அனைத்தும். அங்கு இனி எருக்கமிலையைத் தவிர வேறெதையும் பயிரிட முடியாதளவுக்கு நிலமும் வறண்டுவிட்டது. குளிக்க, காலையில் கழுவ, துணி துவைக்க எதற்கும் நீரில்லை என்கிறார். எல்லா குளங்களும் வானைப் பார்த்துப் பிளந்து கிடக்கின்றன.

Drought-6.jpg?resize=330%2C221

Drought-4.jpg?resize=162%2C109

Drought-1.jpg?resize=496%2C332

இதற்கென்ன தீர்வு? இந்தக் கடல் நீரை நன்னீராக்கித்தாருங்கள். இங்கேயே வாழ்கிறோம். அல்லது இந்தப் பாழடைந்த வீடுகள் மட்டுமே இனி இங்கிருக்கும் என்கிறார் கடலைப் பார்த்து. நீரைத் தேடி இடம்பெயரத் தொடங்கிவிட்டோமா என்ற அச்சம் மேலிட “குடிக்க தண்ணி தாங்கோ” என்று கேட்க வாயெடுத்து, குற்ற உணர்வால் மனங்கோனிக் கொள்கிறோம். நானும் ஏதாவதொரு மரத்தை எப்போதாவது கொன்றிருப்பேன்…

“…மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு…” உன்னிகிருஸ்ணனின் மகள் பாடிய இனிய இசை ஹெட்செற் மூலமாக காதுக்குள் இனிக்க, கருகும் தீவுகளை இணைக்க, சீனாக்காரன் வேகமாக அமைக்கும் வீதியைக் கடந்து அந்தப் பயணம் யாழ். நகரின் எல்லை முடியுமிடத்தில் முடிகிறது. குளிரூட்டியில் வைக்கப்பட்ட கூலான ஒன்றரை லீற்றர் தண்ணீர் போத்தலை அறுபது ரூபாய்கள் கொடுத்து வாங்கி, அப்படியே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்து, முகத்தில் ஊற்றி, அந்தத் தீவில் பட்ட வெயில் தீயை அணைத்துக் கொள்கிறேன். வெயில் குரூரமானது.

அனல் கொதிக்கும் அந்தத் தனித்தீவுக்குப் பெயர் சரவணை. யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிலோமீற்றர்களில்தான் அந்த அபாயம் இருக்கிறது.

நன்றி: உதயசூரியன்

http://maatram.org/?p=1805

Link to comment
Share on other sites

என்ர ஊர் எப்போது தனித்தீவானது.

 

 

உங்கட ஜில்லாக்களின் "ஒன்றியத்தைச்" சொல்லி இருப்பார்  :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனித்தீவல்ல!எனது ஊரின் எல்லையூர்.ஒருகாலத்தில் சரவணைத்துங்கிள(சரவணைப் புகையிலை)தென்பகுதியில் பேமஸ்.மிளகாய்,வெங்காயம் எல்லாம் செழிப்பாக வளரும்.அந்த அழகை இரசித்தபடியே பாடசாலை சென்றிருக்கிறேன்.தண்ணீரைத் தேக்கும் வழிமுறைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.!990 ஆம் கோட்டையை நோக்கிய இராணுவநடவடிக்கையால் மக்கள் முற்றாக வெளியேறி இருந்தார்கள்.பின்னர் திரும்பி வந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகுசிலரே.ஆட்பற்றாக்குறையாலும் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் கவனிப்பாரற்று இருந்ததாலும் மழை வீழ்ச்சி குறைந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. நீர்வசதிமட்டும் இருந்தால் யாழ்நகருக்கு மிக அண்மையில்(20-30நிமிடப்பயணம்)பெறுமதியான இடமாக மாற வழியுண்டு.மத்தியகிழக்குநாடுகளிலே மனிதர்கள் வாழும் போது இங்கே முடியாதா????நீரப்பிரச்சனை துpர்க்க முடியாத பிரச்சனை அல்ல.சம்பந்தப்பட்டவர்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்காது.தீவகத்தில் மனிதர்கள் திரும்பவும்வந்து வசிக்கவிடாமல் செய்த புண்ணியம் அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈபிடிபிக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளம்புலம்,புளியங்கூடல் ,நாரந்தனை.....சரவணையின் எல்லைக்கிராமங்கள் இதில் எந்த ஊர் எங்கள் புலவர்ஜி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.