Jump to content

வறட்சி: சில மைல்களில் அபாயம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வறட்சி: சில மைல்களில் அபாயம்…

ஜெரா

Drought-2-800x365.jpg

படங்கள் | கட்டுரையாளர்

அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில் ஐதாகவும் இருந்தமைக் கான எச்சங்கள் உண்டு. கடந்த 100 வருடங்களுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். செல்வச் செழிப்புடனும், சீருடனும்தான் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இங்கு சிதைந்து கிடக்கும் வீடுகளும், மாடி மனைகளும் தக்க சாட்சி.

தீவுக்குள்ளால் வரும் முட்புதர்களையும், எஞ்சிய மிருகங்கள் நீருக்காகவும், உணவுக்காகவும் அலையும் கால்தடயப் பாதைகளையும், பழைய தார் வீதிகளையும் இணங்கண்டு நடந்து கிராமத்துக்குள் ஏதாவது ஒரு மூலையால் உள்நுழையலாம். பயங்கரமான பாழடைந்த வீடுகளே வரவேற்கின்றன. ஆங்காங்கே வெட்டைகளில் மாடுகள் செத்துக் கிடக்கின்றன. மாட்டுப் பிண நாற்றம் மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது. இன்னும் சில இடங்களில் இறந்த ஆடுகள், மாடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டற்கான தடயங்களும் அந்தத் தீவு முழுதும் பார்க்கக்கூடியதாகவுள்ளது. சில இடங்களில் மாடுகள் மரணத்தின் கடைசி வாசலில் நின்று துடித்துக் கொண்டிருக்கின்றன. கிடைக்கின்ற கொட்டன்களால் இரண்டு கொம்புகளுக்கும் நடுவில் ஓங்கி ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிட்டு கடந்து போகுமாறு எம்மிடம் கெஞ்சிவதைப் போன்று “ம்மா” என கறகறக் குரலில் ஓலமிடுகின்றன. ஏதோ ஒரு நம்பிக்கையில் காய்ந்து சருகாகி தரையோடு ஒட்டிய புற்களை மண்ணோடு சேர்த்து வறண்டி வறண்டி சாப்பிடுகின்றன மண் தின்னிமாடுகள். இந்த நேரம் அவற்றின் வயிறுகள் வெடித்திருக்கக்கூடும். மண்ணால் நிரம்பிய வயிறுகள் ஒவ்வொரு மாட்டின் வயிற்றின் உள்ளும் பெரும் பூமிப் பந்தை வைத்திருந்தன.

Drought-3-e1408533247579.jpg

கோரமான இந்தக் காட்சிகள் அந்தக் காய்ந்த நிலம் முழுதும் காணக்கிடைப்பதால் மாட்டுப் பிணங்கள் மீதான ஈர்ப்பு வெகு சீக்கிரமே சலிப்புத் தட்டிவிடுகிறது. எங்காவது மனிதத் தடயங்கள் இருக்கவேண்டும். தேடிக்கண்டுபிடி எனக் கால்களுக்குத் தீவிரமாகத் தகவல் அனுப்புகின்றது மூளை.

ஆள்நடமாட்டத் தடயமுள்ளத் தெருமுனையில் பல வர்ண கான்கள் (நீர்க் கொள்கலன்கள்) நேர்த்தியாக, நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவொரு நீர்த்தாங்கி. ஆனால், அதற்குள்ளும், அதனை சூழவுள்ள இடங்களிலும் எம் உடலில் பிசுபிசுக்கும் வியர்வையைத் தவிர மருந்துக்குக்கூட நீர் எடுக்க முடியாது. கொதிக்கின்ற வெயிலில் கருகிய சறுகுகள் பற்றியெரியத் தயாராகின்றன. அவ்வளவு வெயில். அந்த இடத்துக்கு அருகில் சென்றால், மனிதப் பேச்சரவங்கள் கேட்கின்றன. சற்றுத் தொலைவில் ஒரு தொகை மனிதர்கள். ஆண்கள், பெண்கள், அதிகளவு சிறார்களுமாக ஒவ்வொருவர் நிழலையும் இறுக்கமாக ஆக்கிரமித்து அமர்ந்திருக்கின்றார்கள். அனைவரிலும் வெயிலின் கருமை தெரிகிறது. கண்களிலும், முகத்திலும் வெயிலேற்றிய வாட்டம் நிரந்தரமாகவே இடம் பிடித்திருக்கிறது. சில குழந்தைகளுக்கு வெயிலிலிருந்து தற்காலிக பாதுகாப்பை அம்மாக்களின் சேலைத்துண்டுகள் தருகின்றன. அந்தத் தீவில் நிழல்தர ஒரு மரம்கூடவா இல்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போல பனையும், தென்னையும், பயன்தந்து இப்போது பயன்தராத ஏனைய மரங்களும் உண்டு. ஆனால், அவை எதிலுமே இலைகள் இல்லை. எல்லாம் கருகி நீண்ட நாட்களாகிவிட்டன. இலைகளற்ற மொட்டை மரங்களும் பறட்டைக்காட்டில் முளைக்கும் முட்செடிகளும், சுடுகாட்டில் செழிக்கும் எருக்கலையும் தாராளமாய் நிற்கின்றன. பனையே கருகத் தொடங்கியிருக்கின்றதெனில் அந்தத் தீவைக் கொழுத்தும் வெயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

அவர்கள் ஆபிரிக்க நாடொன்றில் வாழ்பவர்களைப் போல நீருக்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, அரச நிர்வாகத் தரப்பொன்று நீர் வழங்குமாம். எவ்வளவு நீரெனில் குடும்பமொன்றுக்கு ஒரு தடவையில் 20 லீற்றர்கள். ஆக குடும்பமொன்றில் 10 பேர் இருந்தாலும், 2 பேர் இருந்தாலும், வாரமொன்றுக்கு 40 லீற்றர் நீர் மட்டுமே அவர்களால் செலவிட முடியும். வாரத்துக்கு 40 லீற்றர் நீர். நமக்குப் போதுமா? நம்பமுடிகிறதா இந்த யதார்த்தத்தை?

நீர் வழங்குநர்கள் எப்போது வருவார்கள் எப்படி வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. குறித்த இரு தினங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களையும், அவர்கள் நீரள்ளும் கிணற்றின் நீர் கொள்லளவினவைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் மட்டும் வருவதில்லை. வரும்வேளையில் வரிசையில் காத்திருப்பவர்கள் அந்த வாரத்துக்கான பாக்கியசாலிகள்.

அதையும் கடந்து, அங்கு வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் துணையோடு தீவுக்குள் ஆழ ஊடுறுவலாம். அந்த ஊரைக் கடந்து “கட கட மொட மொட” சத்தத்தோடு அயல் கிராமங்களுக்கு பைப் நீர் செல்கிறது. இடையிலிருக்கும் அவர்களுக்கும் அதிலொரு பகுதி நீரைத் தந்தால் மேலும் சீவிக்க முடியும் என்ற கதையைச் சொல்லியபடி வானைப் பார்க்கிறார் அந்த வழிகாட்டி. அவர் நிற்குமிடம் குடமுண்டகுளம். அந்த ஊருக்கே தொன்மையான குளம் அது. 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் வற்றி வெடித்திருக்கிறது அந்தக் குளம். அதனை அண்டிய அனைத்து நிலங்களும் தோட்டங்களால் செழித்தவை என்பதற்கான பயிர்களின் அடிக்கட்டை சான்றுகளைத் தொட்டுக் காட்டுகிறார் அவர். குளத்துக்குள்ளே கிணறுதோண்டியும் நீருக்காகப் போரடியிருக்கின்றனர். அங்கு எந்தக் கிணற்றையும் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாத அபாயம் நீடிக்கிறது. மேலும் ஆழமாகத் தோண்டினால் அருகிலிருக்கும் கடலின் உப்புத் தண்ணீர், நன்னீரோடு கலந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு எந்தக் காலத்திலும், எந்தப் பெரிய மழையானாலும் நன்னீருக்கு சாத்தியமிருக்காது. அண்மையில் நட்ட பயிர்களை, தோட்டங்களைக் காட்டுகிறார். கருகி நிற்கின்றன அனைத்தும். அங்கு இனி எருக்கமிலையைத் தவிர வேறெதையும் பயிரிட முடியாதளவுக்கு நிலமும் வறண்டுவிட்டது. குளிக்க, காலையில் கழுவ, துணி துவைக்க எதற்கும் நீரில்லை என்கிறார். எல்லா குளங்களும் வானைப் பார்த்துப் பிளந்து கிடக்கின்றன.

Drought-6.jpg?resize=330%2C221

Drought-4.jpg?resize=162%2C109

Drought-1.jpg?resize=496%2C332

இதற்கென்ன தீர்வு? இந்தக் கடல் நீரை நன்னீராக்கித்தாருங்கள். இங்கேயே வாழ்கிறோம். அல்லது இந்தப் பாழடைந்த வீடுகள் மட்டுமே இனி இங்கிருக்கும் என்கிறார் கடலைப் பார்த்து. நீரைத் தேடி இடம்பெயரத் தொடங்கிவிட்டோமா என்ற அச்சம் மேலிட “குடிக்க தண்ணி தாங்கோ” என்று கேட்க வாயெடுத்து, குற்ற உணர்வால் மனங்கோனிக் கொள்கிறோம். நானும் ஏதாவதொரு மரத்தை எப்போதாவது கொன்றிருப்பேன்…

“…மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு…” உன்னிகிருஸ்ணனின் மகள் பாடிய இனிய இசை ஹெட்செற் மூலமாக காதுக்குள் இனிக்க, கருகும் தீவுகளை இணைக்க, சீனாக்காரன் வேகமாக அமைக்கும் வீதியைக் கடந்து அந்தப் பயணம் யாழ். நகரின் எல்லை முடியுமிடத்தில் முடிகிறது. குளிரூட்டியில் வைக்கப்பட்ட கூலான ஒன்றரை லீற்றர் தண்ணீர் போத்தலை அறுபது ரூபாய்கள் கொடுத்து வாங்கி, அப்படியே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்து, முகத்தில் ஊற்றி, அந்தத் தீவில் பட்ட வெயில் தீயை அணைத்துக் கொள்கிறேன். வெயில் குரூரமானது.

அனல் கொதிக்கும் அந்தத் தனித்தீவுக்குப் பெயர் சரவணை. யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிலோமீற்றர்களில்தான் அந்த அபாயம் இருக்கிறது.

நன்றி: உதயசூரியன்

http://maatram.org/?p=1805

Link to comment
Share on other sites

என்ர ஊர் எப்போது தனித்தீவானது.

 

 

உங்கட ஜில்லாக்களின் "ஒன்றியத்தைச்" சொல்லி இருப்பார்  :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனித்தீவல்ல!எனது ஊரின் எல்லையூர்.ஒருகாலத்தில் சரவணைத்துங்கிள(சரவணைப் புகையிலை)தென்பகுதியில் பேமஸ்.மிளகாய்,வெங்காயம் எல்லாம் செழிப்பாக வளரும்.அந்த அழகை இரசித்தபடியே பாடசாலை சென்றிருக்கிறேன்.தண்ணீரைத் தேக்கும் வழிமுறைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.!990 ஆம் கோட்டையை நோக்கிய இராணுவநடவடிக்கையால் மக்கள் முற்றாக வெளியேறி இருந்தார்கள்.பின்னர் திரும்பி வந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகுசிலரே.ஆட்பற்றாக்குறையாலும் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் கவனிப்பாரற்று இருந்ததாலும் மழை வீழ்ச்சி குறைந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. நீர்வசதிமட்டும் இருந்தால் யாழ்நகருக்கு மிக அண்மையில்(20-30நிமிடப்பயணம்)பெறுமதியான இடமாக மாற வழியுண்டு.மத்தியகிழக்குநாடுகளிலே மனிதர்கள் வாழும் போது இங்கே முடியாதா????நீரப்பிரச்சனை துpர்க்க முடியாத பிரச்சனை அல்ல.சம்பந்தப்பட்டவர்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்காது.தீவகத்தில் மனிதர்கள் திரும்பவும்வந்து வசிக்கவிடாமல் செய்த புண்ணியம் அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈபிடிபிக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளம்புலம்,புளியங்கூடல் ,நாரந்தனை.....சரவணையின் எல்லைக்கிராமங்கள் இதில் எந்த ஊர் எங்கள் புலவர்ஜி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.