Jump to content

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்


Recommended Posts

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்

கிட்டத்தட்ட 5மாதம் அவனுடன் பேசியிருக்கிறேன். இதுவரையில் தனக்காகவோ தனது மனைவிக்காகவோ தனது 3வயது மகனுக்காகவோ ஒரு சதம்கூடக் கேட்கவில்லை. ஒவ்வொருமுறை கதைக்கிற போதும் தன்கூட இருக்கிறவர்கள் தன்போல சிறைகளில் அடைபட்டவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் போன குடும்பங்கள் ,தன்னோடு களமாடி வீரச்சாவணைத்த தோழர்களின் குழந்தைகள் குடும்பங்களைளையே நினைவு கொள்வான். அவர்களுக்கான உதவிகளின் அவசியத்தை ஞாபகப்படுத்துவதும் அதற்கான ஒழுங்குகளைத் தேடுவதிலுமே இதுவரை நாளும் உரையாடியிருக்கிறான்.

மனசுக்குள் தானும் விடுதலையாகிப்போக வேண்டுமென்ற ஆசையிருப்பினும் அதனை வெளியில் சொல்வதில்லையோ என்னவோ தனது விடுதலைக்காக எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. விடுகிற நேரம் போவோமென்றே இருந்தான். ஆனால் கடந்த மாதம் வந்த தீர்ப்பில் அவன் பிணையில் செல்வதற்கான வாய்ப்பை சட்டத்தரணி உறுதிசெய்து சொன்னார். 5லட்சம் பிணைக்கான பணத்தை ஒழுங்கு செய்யும்படி சட்டத்தரணி கூறிவிட்டார். 5சதத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலமையில் 5லட்சம் அவனுக்கு எட்டாக்கனிதான்.

விடயத்தை மனைவிக்குத் தெரிவித்தான். தனது கழுத்தில் கிடந்த தாலியைக் கொண்டு 5லட்சத்தைப் பெற்றுக் கணவனை வெளியில் கொண்டு வந்துவிடலாம் என்று நம்பித் தாலியை விற்கப்போனதிலும் ஏமாற்றம்தான். ஆனாலும் தாலிக்கு கிடைத்த 2லட்சத்தோடு வந்து மீதி 3லட்சத்துக்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறாள் அவனது மனைவி.

புதுவருடத்தன்று வாழ்த்துச் சொன்னவனிடம் வழக்கு நிலமைகள் எந்தளவில் உள்ளதென்பதை விசாரித்த போது 3லட்ச விடயத்தை தயக்கத்தோடு சொன்னான்.

அப்ப காசொழுங்கு செய்ய வேணுமென்ன ? இது நான்.

ஏலுமெண்டா முயற்சிச்சு பாருங்கோ. கட்டாயமில்ல....10ம் திகதிக்குள்ள கிடைக்குமெண்டா....அதற்கு மேல் அவன் அதுபற்றி எதையும் கேட்கவில்லை.

அவனுக்கான 3லட்சத்தை எப்படித்திரட்டுவதென்ற குழப்பம். இந்தப்பெரிய தொகையை அவன் பெயர் சொல்லியும் சேகரிக்க முடியாத நிலமையில் அவனது நிலமை.

01.01.2012வரையும் அவன் இன்னும் உயிரோடிருக்கிற விடயத்தை அவனை அறிந்தோம் பழகினோம் அவனைப்போலொருவனுக்கு நட்பாயிருந்ததற்காக ஆயிரம் கோடி புண்ணியம் செய்தோம் என்ற எவருக்கும் சொல்லேல்ல. ஒன்று அவன் அதனை விரும்பவில்லை. காரணம் மற்றவர்களைத் தொல்லை கொடுக்கக்கூடாதென்ற மனம்.

சமாதான காலத்தில் பணியென்று ஊர்போனவர்கள் மாதக்கணக்காக அவனோடு பணிபுரிந்திருக்கிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் அவனுக்காக எவரும் எதையும் செய்யவுமில்லை. அவனைத் தேடவுமில்லை. புலம்பெயர்நாடுகளிலிருந்து போய் அவனுடன் பணியாற்றிய பழகியவர்கள் புலம்பெயர் சமூகம் தன்னைமட்டுமல்ல தன்போன்றவர்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்களேயென்ற கவலை உள்ளுக்குள் இருந்து கண்ணீராய் பலதரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் யாரையும் மனம் நோகாமல் அவைக்கும் என்னென்ன இடைஞ்சலோ தெரியாதென அவர்களில் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை.

01.01.2012 வளமைபோன்ற புதுவருட வாழ்த்தொன்று ஸ்கைபில். அவனுடன் பழகிய பணியாற்றிய ஒருவர். அவனைப்பற்றித் தெரிவித்து அவன் இன்னும் உயிருடன் சிறையொன்றில் வாழ்கிறானென்று சொன்ன போது அந்த நண்பர் வெளிப்படுத்திய அவன்மீதான அன்பில் வியந்து போனேன். அவன் தோழனில்லை என் தம்பி கடவுள் என்றெல்லாம் கதை அவிழ்ந்தது. ஒடிந்துபோன நம்பிக்கை எனக்குள் மீண்டும் புத்துயிர் கொண்டது. அவனுக்குத் தேவைப்படுகிற 3லட்சம் பற்றி உதவி கேட்க ஆளின்றிப்போன துயர் அற்றுப்போன சந்தோசம். அவனுடன் சமாதான காலத்தில் ஒன்றாயிருந்த அமெரிக்க கனடிய அவுஸ்ரேலிய ஐரோப்பிய பிரமுகர்களிடமெல்லாம் பேசி அவனுக்கு உதவி கிடைக்கும் போன்ற விம்பத்தை எனக்குள் விதைத்தார் நண்பர். இருண்டு போன அவன் வாழ்வு மீண்டும் ஒளிகாணப்போகிற மகிழ்ச்சியை விதைத்தது நண்பரின் கதை.

10ம் திகதிக்குள் உதவி கிடைத்தால் அவன் பிணைவரலாமென்ற என்ற வேண்டுகைக்கு 5நாளில் பதில் தருவதாகச் சொன்ன நண்பர் 12ம் திகதியாகியும் தொடர்பிலும் இல்லை உதவ முடியாதென்ற சொல்லைக்கூடச் சொல்லாமல் மறைந்துவிட்டார்.

ஒருவரை மட்டும் நம்பியிராமல் அவனுக்குச் சொல்லாமல் அவனை நேசிக்கிறோம் சாமியாக வணங்க வேண்டியவன் என்றெல்லாம் கதைசொன்ன மேலும் சிலரிடமும் பிச்சைபோடுமாறு 9ம் திகதி இரவுவரை தொடர் முயற்சி தோல்விதான். ஒரு கர்ணனும் கருணை காட்டவில்லை.

பெரிய பொறுப்பில இருந்தவரை எப்பிடி அரசாங்கம் சிம்பிளா பிணையில விடுவாங்கள் ? உது அரசாங்கம் எங்கடை வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைக்கச் செய்யிற திட்டமிட்ட வேலையெண்டுதான் நாங்கள் நம்பிறம். உங்கை கன சதியள் நடக்குது....உங்களிலயும் எங்களுக்குச் சந்தேகம்....? அதெப்பிடி உங்களாலை மட்டும் அவையோடையெல்லாம் கதைக்க முடியுது ? உங்களாலை மட்டுமெப்படி அங்கை உதவியளைக் குடுக்க முடியுது ? கேள்விகளால் அவர்கள் தேசியவீரர்களாயினர்.

000 000 000 000

உந்தச் சமாதானப் பேச்செண்ட காலங்களில என்னெண்டு இயக்கம் அரசாங்கத்தோடை சேந்து வேலை செய்தது ?

தமிழ்ச்செல்வன் கட்டுநாயக்காவில கைகுலுக்கி வெளிநாடு வெளிக்கிட அதே கட்டுநாயக்கா வளாகத்துக்கை கரும்புலியையும் புலனாய்வாளனையும் கைதும் நடந்ததே அதெப்பிடி ?

பிறேமதாசாவோடை மேசையில இருந்து கொண்டு அரசியல் பேசேக்கையும் சந்திரிகாவோடை சமரசம் பேசேக்கையும் எப்பிடியாம் எதிரியோடை பேச்சுவார்த்தை நடந்தது ? அப்பெல்லாம் இயக்கம் சமரசம் செய்துதானே எல்லாத்தையும் செய்தது ?

இங்கை மாவீரர்நாள் கொண்டாட கோலெடுக்கிறியள்...மாவீரர் நாளைக் கொண்டாடப்போறமெண்டோ எடுக்கிறியள் ? பொய்க்காரணம் சொல்லித்தானெ எடுக்கிறியள் ? கரும்புலிகள் நாளைச் செய்யேக்க பொலிஸ் வந்தா கரும்புலியளின்ரை படங்களை பூக்களாலை மறைச்சுக் கலைவிழாவெண்டுதானே சொல்லியிருக்கிறியள் ? இதுகளெல்லாம் என்ன வகையான விட்டுக் கொடுப்புகள் ?

கேட்க முடிந்த கேள்விகளை அந்தத் தேசியத் தூண்களிடம் கேட்கத்தொடங்க....

உங்களுக்கு அரசியல் விளங்கிறேல்ல....என்றுதான் தொடர்பை அறுத்துக் கொண்டு போனார்கள்.

தேசியத்தின் பெயரால் மாதச்சம்பளம் எடுத்தும் தேசியத்தின் பெயரால் வசதியை அனுபவித்தும் வாழும் இவர்கள் மீது அவன் இன்னமும் அன்போடிருக்கிறான். இவர்களை நேசிக்கிறான். ஆனால் தங்கள் கல்லாப்பெட்டிகளைத் திறக்க விரும்பாத பழிசுமத்தல் குற்றச்சாட்டு என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த கழுகுகளை நேசிக்கிற நம்புகிற அவனுடன் தொடர்பு கொண்டு நீங்கள் நம்புகிற எல்லாரும் உங்களை நம்பவில்லை துரோகியாய் நினைக்கிறாங்கள் என்று சொல்ல.....அவன் நம்பவேயில்லை. அப்பவும் சிரித்தான் அவர்களை நம்பினான்.

அவையளுக்கும் என்ன பிரச்சனையோ ? என்றான்.

நீங்க திருந்தமாட்டியள்....சொன்ன எனக்குச் சொன்னான்.

என்னாச்சி செய்யிறது அவையள் இருக்கிற நிலமையில இப்பிடித்தான் நினைக்க வரும்போல....ஆச்சி எனக்காக அவையளைப் பகைக்காதையம்மா....!

இத்தகைய மனம் படைத்த இவனை எப்படி ஒன்றாய் இருந்து பழகியவர்களால் நம்ப முடியாது போகிறது ?

சரி பாப்பம் வேறை வழியைத் தேடுவம்...என்றேன். ஆச்சி அதைவிடுங்கோ கஸ்ரப்படாதையுங்கோ....எனத் தனது விடுதலையில் அக்கறையெடுக்காது திரும்பவும் 10கைதிகளின் குடும்பங்களின் விபரங்களை எழுதச் சொன்னான்.

ஒவ்வொரு குடும்பத்தின் கதையும் ஒவ்வோரு வகையான சோகம். அதிலும் குறிப்பாக சந்திரமோகன் என்ற முன்னாள் போராளியின் குடும்பத்தை முதலாவதாக பாக்கச் சொன்னான். சந்திரமோகனின் பிரதேசத்தில் இவன் மக்களுடன் பணி செய்த காலங்கள் பற்றி நிறையச் சொன்னான். சொல்லும்படி முன்னேற்றமில்லாத சந்திரமோகனின் ஊரில் இவன் 100பேரை ஆழுமையாளர்களாக உருவாக்கிய கதையைச் சொன்னான்.

சந்திரமோகனும் ஒரு சிறையில் கைதியாய் இருக்கிறான். அவனுக்கு 4 பிள்ளைகள். ஒரு பிள்ளை வெள்ளை முள்ளிவாய்க்காலில செல்பட்டு இறந்து போக அதேயிடடத்தில் சந்திரமோகனின் சகலனும் தலையில் செல்பட்டு இறந்து போக இரு உடல்களையும் அருகில புதைச்சுப்போட்டு சந்திரமோகனின் குடும்பம் போனதாம். பிள்ளையை இழந்த துயரில சந்திரமோகனின் மனைவி மனநோயாளியாகிப்போய் அவனுடைய மிச்சம் 3பிள்ளைகளும் செல்பட்ட காயங்களோடை உடல் ஏலாம இருக்கினமாம். அந்தப்பிள்ளையளையும் கவனிக்க முடியாத பிள்ளைகளையே மறந்த நிலமையில சந்திரமோகனின் மனைவி இருக்கிறாவாம். சந்திரமோகனின் குழந்தை இறந்த இடத்தில் இறந்த மைத்துனனின் மனைவி மொறிஞ்சலாதான் சந்திரமோகனின் பிள்ளைகளையும் அவனது மனைவியையும் பராமரிக்கிறாவாம். அன்றாடம் சாப்பிடவோ உடுதுணிகளுக்கோ வசதியில்லாமல் இருக்கினமாம்.

இப்போது அவன் தனது நிலமையைப் பற்றி அக்கறைப்படவில்லை. சந்திரமோகனும் அவன்போன்ற பலரது நிலமைகளையும் தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனது விடுதலையை எதிர்பார்த்திருக்கிற அவனது மனைவியைக்கூட மறந்து இன்னும் மற்றவர்களை எப்படி இவனால் நேசிக்க முடிகிறது ? உண்மையான போராளியொருவனின் மனது இப்படித்தானிருக்குமோ ? எண்ணிக் கொள்கிறேன்.

இப்போது 20ம் திகதி தவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலை பணம் கட்டாட்டில் பிறகு அவனுக்குத் தண்டனைதான்.

இன்று 12ம் திகதி. இன்னும் எட்டுநாளில் அவனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்தால் சரி அல்லது ????

12.01.2012 காலை 9.40மணி. எனது நகரில் உள்ள நகை அடைவு கடையில் ஒரு பவுணுக்கு எத்தினை யூரோ கிடைக்குமெனக் கேட்டேன். ஒரு பவுணுக்கு 100யூரோ தருவினமாம். 4வீதவட்டி 3மாதமொருமுறை வட்டி கட்ட வேணும்.

இப்பத்தைய பவுண் விலையில ஏப்பிடியும் ஒரு ஆயிரத்து ஐநூறு யூரோ கிடைக்குமென்று என்னிட்டைக் கிடந்த ஒருநெக்லஸ், ஒரு சோடி காப்பையும் கொண்டு போனதிலும் தோல்விதான். 600€தான் தரலாமென்றான் கடைகாரன். நானும் நகையள் சேத்து வைச்சிருக்கலாம். பவுணென்னத்துக்கெண்டு நினைச்சு எதையும் சேர்த்து வைக்காதது இப்போ உறைத்தது.

ஓவ்வொருமுறை ஒவ்வொருதனும் தனது குடும்ப நிலமையை வறுமையைச் சொல்கிறபோதும் கடைசி எல்லைவரை சென்றும் அவர்களுக்கான அவசர உதவிகளை ஒழுங்கு செய்ய முடியாது போகிற நேரங்களில் இதை விப்பமோ அடைவு வைப்பமோண்டு நினைக்கிற நெக்லஸ்சும் காப்பும் வெள்ளைக்காறனின் அடைவு கடை அலுமாரிக்குள் போய் சிரித்து விடைதந்தது. கடைகாரன் தந்த கடதாசிகளில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

பெரியதாள் வேணுமோ இல்லது சின்னத்தாள் வேணுமோ ? காசுப்பெட்டியில் நின்ற வெள்ளைக்காரி கேட்டாள். ஒற்றை ஐநூறையும் நூறு யுரோவையும் தரச்சொன்னேன். கையில் காசைத் தந்தவள். இந்நாள் இனிய நன்நாளாய் அமையட்டுமென வாழ்த்தினாள். பதிலுக்கு உனக்கும் அப்படியே அமையட்டுமென்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறேன். இன்னும் மிஞ்சியிருக்கிற 8நாளில் எப்படி 3லட்சத்தின் மீதியைச் சேர்ப்பதென்ற சிந்தனைதான் ஞாபகமெல்லாம் நிறைகிறது. இறுதி முயற்சி இன்னும் 8நாளில் தொங்குகிறது.

12.01.2012

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

வணக்கம் அக்கா

இவ் பணஉதவி செய்யும் வங்கி கணக்கு இலக்கத்தை என் இணைய முகவரிக்கு அனுப்புங்க நான் அந்த உறவுக்காக முயற்சி செய்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

வாசித்தேன்

கண் கலங்குவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

தேசியம் பேசுவோர் தேசியத்துக்காய் உழைப்போர் என வரிக்கு வரி நீங்கள் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று மட்டும் எழுதத்தோன்றுகிறது. நானும் அதற்குள் வருவதால்.

தேவை முழுவதையும் ஒரு தொகுதியினர் தொடர்ந்து சுமப்பதென்பது மிகவும் கடினமானதும் தோல்வியடையக்கூடியதுமான முயற்சியாகும். இல்லாத ஒன்றை அகப்பை போட்டுக்கிண்டுவதால் என்ன பலனோ அதுவே இங்கும். கடந்த 30 வருடங்களாக போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைத்தோர் விபரங்களைக்கண்ணுற்றால் அவர்கள் இன்று நொந்து நூலாகியிருப்பதைக்காணலாம். அந்த நிலையிலேயே நானும்.

ஆனாலும் உழைப்பில் ஒரு பகுதியை என் மக்களுக்கு கொடுப்பது எனும் எனது நிலைப்பாட்டின்படி என்னால் ஏதாவது இவருக்கு செய்யமுடியுமா? என பார்க்கின்றேன்.. நன்றி தங்களது முயற்சிகளுக்கு.

Link to comment
Share on other sites

வணக்கம்

என்னால் ஒரு சிறு தொகை மட்டும் அந்த உறவிற்க்கு தர முடியும். அதை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது முதல் முறை போல் பதில் கிடைக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா, நான் இசுலாமிய நண்பருக்கும், சிங்கள நண்பருக்கும் ஐந்நூறு யூரோவையும், பல்லு துலக்கி வாங்க நூறு யூரோவையும் சேர்த்து அறுநூறு யூரோவை உங்களுக்கு அனுப்ப சேர்த்துவிட்டேன். சிறிய தொகையை அனுப்ப முன்பு சென்ற போது அவர்கள் சிறிய தொகையிலும் பார்க்க பெரிய தொகையை வயர் பண்ண கேட்டார்கள்.

நான் இத்தொகையை வரும் செவ்வாய் அன்று வெஸ்டர்ன் யூனியனுக்குள்ளால் அனுப்புகிறேன். நீங்கள் எவருக்கு உதவி தேவையோ அவருக்கு உதவுங்கள். (தயவு கூர்ந்து எனது தகவல்கள் மிகவும் இரகசியமாக நேசக்கரத்தால் பேணப்படவேண்டும்)

நானும் உங்களை போல் நொந்து நூடுல்சா இருந்தாலும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற எங்கள் பழமொழியை நம்புபவன்.

நானும் வேறு வழிகளில் இன்னும் சேர்க்க முனைகிறேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு நான் 500€ அனுப்பிவிடுறேன் சாந்தி அக்கா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நன்றிகள்

இலக்கை அடைந்து விட்டீர்களா சாந்தியக்கா.?

Link to comment
Share on other sites

கருத்திட்ட புலிக்குரல் , விசுகு , கருத்துகந்தசாமி ,குழவி , உதயம் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

எத்தனையோ பேரின் துயரங்களைச் சுமக்கிற இதயத்தால் இந்தத் தோழனின் சுமையைத் தாங்க முடியாத கட்டத்திலேயே எழுத்தாக்கினேன். இதனை எழுதி முடியும் வரை அழுதேன். அந்தளவுக்கு தாங்க முடியாத துயரம் அவன் கதை.

ஆனால் நான் எதிர்பார்க்காத முடிவை கருத்தெழுதிய நீங்கள் ஆதரவுக்கரம் நீட்டி அவனைக்காப்பாற்ற முன்வந்த கருத்துக்களைப் பார்த்த போது என்னால் நம்பவே முடியவில்லை.

வளமைபோல பலர் வருவார்கள் இதிலும் விவாதம் செய்வார்கள் தங்களது சந்தேகங்களென்று கேள்விகள் கேட்பார்களென்றே நினைத்தேன். ஆனால் அவனது நல்லிதயதத்தைக் காக்க நீங்கள் தருகிற நேசக்கரத்தை உயிருள்ளவரை மறவேன். அந்தத்தோழனும் மறக்கான்.

please confirm the receipt of the money i sent. thank you.

உதயம் நீங்கள் அனுப்பி வைத்த 100பிரித்தானியபவுண்கள் (€116,42 EUR ) கிடைத்தது. மிக்க நன்றிகள். இன்னும் எங்களுக்காய் இயங்குகின்ற ஈரநிலமாய் இரங்குகிறவனைக்காக்க உங்கள் உதவி பேருதவியாகும்.

வணக்கம்

என்னால் ஒரு சிறு தொகை மட்டும் அந்த உறவிற்க்கு தர முடியும். அதை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது முதல் முறை போல் பதில் கிடைக்காதா?

நீங்களே துன்பத்தில் இருப்பதாக முதல் எழுதியிருந்தீர்கள். அதற்குள் நானும் சுமையைத் தரக்கூடாதென்றே உங்கள் முதல் மடலுக்கு பேசாமலிருந்தேன். இம்முறை உங்களால் இயன்றதை உதவினால்எங்களுக்காக வாழ்ந்த ஒருவனை மீட்க உதவும்.

தனிமடலில் விபரங்கள் போட்டுள்ளேன். பாருங்கள்.

Link to comment
Share on other sites

அக்கா, நான் இசுலாமிய நண்பருக்கும், சிங்கள நண்பருக்கும் ஐந்நூறு யூரோவையும், பல்லு துலக்கி வாங்க நூறு யூரோவையும் சேர்த்து அறுநூறு யூரோவை உங்களுக்கு அனுப்ப சேர்த்துவிட்டேன். சிறிய தொகையை அனுப்ப முன்பு சென்ற போது அவர்கள் சிறிய தொகையிலும் பார்க்க பெரிய தொகையை வயர் பண்ண கேட்டார்கள்.

நான் இத்தொகையை வரும் செவ்வாய் அன்று வெஸ்டர்ன் யூனியனுக்குள்ளால் அனுப்புகிறேன். நீங்கள் எவருக்கு உதவி தேவையோ அவருக்கு உதவுங்கள். (தயவு கூர்ந்து எனது தகவல்கள் மிகவும் இரகசியமாக நேசக்கரத்தால் பேணப்படவேண்டும்)

நானும் உங்களை போல் நொந்து நூடுல்சா இருந்தாலும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற எங்கள் பழமொழியை நம்புபவன்.

நானும் வேறு வழிகளில் இன்னும் சேர்க்க முனைகிறேன்....

குழவி, மிக்க நன்றிகள். கடந்தவாரமும் முஸ்லீம் ஐயாவின் பிள்ளைகளுடன் பேசினேன். படிக்கவசதியில்லையன்ரி ஏதாவது செய்வீங்களா என அவரது மூத்த பிள்ளை அழுதாள். கொஞ்சம் பொறுக்குமாறு கூறியுள்ளேன். உங்கள் உதவியை நேரடியாக அனுப்பினால் அனுப்புச் செலவு குறையும். இங்கு எனக்கு அனுப்பி நான் அங்கு அனுப்புவதைவிட உங்களுக்கு ஒரே செலவுடன் அனுப்பலாம்.

உங்களுக்கு தனிமடல் போடும் பட்டனை காணவில்லை. மின்னஞ்சல் முகவரியை எனது அஞ்சலுக்கு அஞ்சலிட்டுவிடுங்கள்.

இதுவரை யாரினது விபரத்தையும் யாருக்கும் கொடுக்கவில்லை நேசக்கரம்.ஆனால் சிலர் தங்கள் கற்பனைகளால் தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கிவிட்டுள்ளார்கள். நேசக்கரம் யாருக்காகவும் இயங்கவில்லை. மண்ணை நேசித்தவர்களுக்காக சிறு அணிலாய் இயங்குகிறது. இதில் உங்கள் ஆதரவு கிடைப்பது ஒரு உயிரை வ பலரை வாழ வைக்க உதவவுள்ளது.

தயைகூர்ந்து மின்னஞ்சல் இடவும்.

நாளைக்கு நான் 500€ அனுப்பிவிடுறேன் சாந்தி அக்கா. :)

நன்றியென்று சொல்லி உன்னை மறக்க முடியவில்லையடா தம்பி. இப்படி எத்தனைதரம் ஓடிவந்து உதவியிருக்கிறாய். நேரில் சந்தித்தால் உன்னை வணங்குவேனடா. சாமிகள் உன்போன்றவர்களிடமே வாழ்கிறார்கள்.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா

வாசித்தேன்

கண் கலங்குவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

தேசியம் பேசுவோர் தேசியத்துக்காய் உழைப்போர் என வரிக்கு வரி நீங்கள் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று மட்டும் எழுதத்தோன்றுகிறது. நானும் அதற்குள் வருவதால்.

தேவை முழுவதையும் ஒரு தொகுதியினர் தொடர்ந்து சுமப்பதென்பது மிகவும் கடினமானதும் தோல்வியடையக்கூடியதுமான முயற்சியாகும். இல்லாத ஒன்றை அகப்பை போட்டுக்கிண்டுவதால் என்ன பலனோ அதுவே இங்கும். கடந்த 30 வருடங்களாக போராலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைத்தோர் விபரங்களைக்கண்ணுற்றால் அவர்கள் இன்று நொந்து நூலாகியிருப்பதைக்காணலாம். அந்த நிலையிலேயே நானும்.

ஆனாலும் உழைப்பில் ஒரு பகுதியை என் மக்களுக்கு கொடுப்பது எனும் எனது நிலைப்பாட்டின்படி என்னால் ஏதாவது இவருக்கு செய்யமுடியுமா? என பார்க்கின்றேன்.. நன்றி தங்களது முயற்சிகளுக்கு.

விசுகு, இன்று எல்லாவற்றையும் இழந்துவிட்டு சிறைகளில் வாடுகிற எங்கள் பிள்ளைகளை துரோகியாக்கிற தேசியத்தூண்கள் மீதுதான் எனது கோபம். உங்களில் இல்லை. இவன் உயிருடன் இருப்பதாக சொன்னவுடன் எங்கள் உயிர் உறவு தம்பி நண்பன் என்று நம்ப வைத்தவர்கள் அவனைக் கைவிட்ட துரோகத்தை தாங்க முடியவில்லை.

சமரசம் சிலவேளைகளில் தேவைப்படுகிறது. ஆனால் அதனை தமக்கான சாதகமாகப்பயன்படுத்துகிற கொள்ளையர் மீது அன்புகாட்ட முடியவில்லை. விவாதங்களில் கலப்பதில்லை அரசியல் பேசுவதில்லை இயன்றவரை உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவோமென்று ஒதுங்கினாலும் சிலவற்றை சிலநேரங்களில் சொல்லியாக வேண்டியுள்ளது.

எனது வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தியிருப்பின் மன்னியுங்கள்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள்

இலக்கை அடைந்து விட்டீர்களா சாந்தியக்கா.?

இதுவரையில் கிடைத்த உதவி :-

மொத்தம் 2100€தேவை.

இதில் எனது பவுண் 600€

உதயம் - €116,42 EUR

ஜீவா - 500,00€

மொத்தம் - 1216,42€

இன்னும் தேவைப்படும் உதவி - 883,58€

வணக்கம் அக்கா

இவ் பணஉதவி செய்யும் வங்கி கணக்கு இலக்கத்தை என் இணைய முகவரிக்கு அனுப்புங்க நான் அந்த உறவுக்காக முயற்சி செய்கின்றேன்

தனிமடலில் விபரங்கள் போட்டுள்ளேன். பாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா

நான் திங்கட்கிழமை இலங்கை பெறுமதி 5000.00 (ஜயாயிரம்) பணம் வங்கியில் இடுகின்றேன். இது என் சிறிய உதவி........

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா

நான் திங்கட்கிழமை இலங்கை பெறுமதி 5000.00 (ஜயாயிரம்) பணம் வங்கியில் இடுகின்றேன். இது என் சிறிய உதவி........

நன்றிகள் புலிக்குரல்.

Link to comment
Share on other sites

உதயம் மேலதிகமாக தனது வீட்டில் உள்ள நண்பர்களிமிருந்து பெற்றுத்தந்த உதவி

69,84€

மிகஇக நன்றிகள் உதயம்.

883,58€ - 69,84€=813,74€

இன்னும் தேவைப்படும் உதவி 813,74€

Link to comment
Share on other sites

உதயம் மேலதிகமாக தனது வீட்டில் உள்ள நண்பர்களிமிருந்து பெற்றுத்தந்த உதவி

69,84€

மிக்க நன்றிகள் உதயம்.

883,58€ - 69,84€=813,74€

இன்னும் தேவைப்படும் உதவி 813,74€

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 500€ க்கு நான் எனது நண்பர்களுடன் பேச்சு வார்த்தையிலுள்ளேன்.

மீதியை சமாளிக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

ஒரு 500€ க்கு நான் எனது நண்பர்களுடன் பேச்சு வார்த்தையிலுள்ளேன்.

மீதியை சமாளிக்கமுடியுமா?

ஓம் விசுகு மீதியை என்ன வழியாகவேனும் ஒழுங்கு செய்து முடிப்பேன். இதுவே பெரிய உதவி. தனிமடலுக்கு விபரம் போடட்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடுங்கோ.

சொந்தத்தொழிலில் இருப்பதால் பணக்கொடுக்கல் வாங்கல்களை நேரடியாக மட்டுமே என்னால் செய்யமுடியும். அதற்கும் ஒழுங்கைத்தேடவும்.

Link to comment
Share on other sites

விசுகு உங்கள் தனிமடலுக்கு விபரம்போட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா 100€ அனுப்பப்பட்டுள்ளது.கிடைத்ததும் அறிய தரவும்.நன்றி.

நுணாவிலான், நீங்கள் அனுப்பிய 100€வில் கழிவு போக 96,45€ கிடைத்தது மிக்க நன்றிகள்.

விசுகு உங்கள் பக்க உதவியின் நிலமை எப்படியென்பதனை அறியத்தாருங்கள்.இன்று இலங்கை நேரம் மதியம் உரியவர்களுடன் கதைத்தேன். யாரும் தொடர்பு கொள்ளவில்லையெனச் சொன்னார்கள்.

நாள் நெருங்குவதால் கேட்கிறேன். தொல்லைதருவதாக கோவிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது விடயமாத்தான் தொடர்ந்து பேசிவருகின்றேன். இன்று முடிவு(எவ்வளவு) தெரியும்.

நான் முன்பே எழுதிய இதற்கும் வழியைக்கண்டு பிடிக்கவும்.

சொந்தத்தொழிலில் இருப்பதால் பணக்கொடுக்கல் வாங்கல்களை நேரடியாக மட்டுமே என்னால் செய்யமுடியும். அதற்கும் ஒழுங்கைத்தேடவும்.

Link to comment
Share on other sites

அது விடயமாத்தான் தொடர்ந்து பேசிவருகின்றேன். இன்று முடிவு(எவ்வளவு) தெரியும்.

நான் முன்பே எழுதிய இதற்கும் வழியைக்கண்டு பிடிக்கவும்.

அவர்களுக்கு நீங்கள் நேரடியாக அனுப்பவதற்கான வங்கி விபரத்துக்கு அல்லது குறித்த பெயருக்கு மணிகராம் அல்லது வெஸ்ரேன் யூனியன் ஊடாக அனுப்புங்கள்.

நேரடியாக உங்களைச் சந்தித்து எடுத்து அனுப்புவதற்கு உடனடியாக ஆட்களில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 500€ மணிகிராம் ஊடாக அனுப்புகின்றேன் மேலதிக தொடர்புகளை நீங்களே பாருங்கள். நானும் இன்னும் இரண்டு எனது குடும்ப அங்கத்தவர்களுமாக சேர்ந்து ( பொங்கல் நாளில் இந்த நல்ல விடயத்தைச்செய்யுமாறு நான் கேட்டதற்கிணங்க) இதைச்செய்கின்றோம். அவர் வெளியில் வந்தவுடன் அது பற்றி முன்னர் தந்தது போல் ஒரு கடிதம் தரவும். தொடர்ந்து வேறு உதவிகளைக்கேட்க இந்த ஒழுங்கு உதவியாக இருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
    • இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.