Jump to content

குறும்படம் - Elavu Jaffna Tamil Short film


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குறும்படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசமலர் கனவிலேயே பல குறும்படங்கள் எடுத்து சாகடித்து விடுகிறார்கள். ஒரு சிறுவன் கேலி அவமானங்களைத் தாண்டி , நேர்மையாய் உழைத்து வாங்கிய முற்றுப்பெறாத வீதியில் வீசப்பட்ட கேக்கை விட ,

 

பொஸிட்டிவ் சிந்தனையுடன் வந்த கிழிந்த துண்டுப் பேப்பரில் பிஞ்ச தேன்குழல் துண்டு தித்திப்பாய் இருக்கு எனக்கு...!

Link to comment
Share on other sites

  • 5 months later...

சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள்

 

அது ஓர் அழகான குடும்பம். கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னே நொறுக்குத் தீனி வகையறாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிறுவன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான்.

 
சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர். இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' என்ற அர்த்தம் கொண்ட படமொன்றைச் சொல்கின்றனர் பெற்றோர். அப்படியில்லை என்று மறுக்கும் சிறுவன், அதில் முதல் வார்த்தை மட்டும் என்கிறான்.
 
மாமாவா எனக் கேட்க ஆமாம் என்கிறான். அடுத்த வார்த்தை என்னவென்று அவர்களும் ஆர்வமாய்க் கேட்கின்றனர். தன் மீதே கைவைத்துக் கொள்ளும் சிறுவனைப் பார்த்து என்ன என்ன என்று பரபரக்கின்றனர். ஒரு வழியாய் மகன் தன்னைத்தானே குறிப்பிடுகிறான் என்பது அவர்களுக்குப் புரிகிறது.
 
முதல் வார்த்தை மாமா, இரண்டாவது என்னை, மூன்றாவது வார்த்தையில் என்ன இருக்கும் என யோசிக்கின்றனர். சிறுவனின் உடல்மொழி அந்தப் பெற்றோருக்கு மட்டுமல்ல... நமக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.
 
நம் அனைவருக்கும் ஒரு முக்கிய விழிப்புணர்வை ஊட்டும் அந்தக் குறும்படத்தை நீங்களே பார்த்துணருங்கள்...
 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6969335.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குறும் படம்.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 1 month later...
அவனால் அவளுக்கு நேர்ந்தது என்ன?
 
தலைநகர் டெல்லி முதல் தளவாய்ப் பட்டணம் வரை, பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பயம், இரவு வீட்டுக்கு பத்திரமாகப் போய்ச் சேருவோமா என்பதே!
 
நடக்கும் சம்பவங்களும், வெளிப்படும் செய்திகளும் எல்லோரின் மனதிலும் பயத்தை விதைத்து விட்டன. தவறான நோக்கோடு பார்க்கும், தொடரும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, செய்ய வேண்டிய வழிமுறைகளை ஃபேஸ்புக் முதல் பக்கத்து வீட்டு பாட்டி வரை அனைவரும் வாரி வாரி வழங்குகின்றனர்.
 
இங்கே ஓர் இளம்பெண் தனியாக நடந்து வந்துகொண்டிருக்கிறாள். இருள் சூழ்ந்த இரவு. வழியில் புகைப்பிடித்தவாறே ஓர் இளைஞன், அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
 
பயத்தில் நகர எத்தனிப்பவளின் செல்பேசி அழைக்கிறது. தன் அம்மாவிடம் பேசிக்கொண்டே வீடு செல்லத் தொடங்குகிறாள். நடந்து செல்லச் செல்ல அந்த இளைஞன், இவளைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறாள். நடையில் வேகம் கூட்ட அவனும் அதற்கு இணையாக வருகிறான்.
 
ஒரு கட்டத்தில் அப்பெண் ஓடத் தொடங்க அவனும் ஓட்டமாய் வருகிறான். கால் தடுக்கி ஓரிடத்தில் கீழேயும் விழுந்துவிடுகிறாள். இளைஞன் அவளை நெருங்கிவிட, அடுத்து நேர்ந்தது என்ன? நீங்களே இந்த 2 நிமிட வீடியோவைப் பாருங்கள்...
 
நச்சென்று நாலே வாக்கியத்தில், ஓர் அவசியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது இக்குறும்படம்.

 


http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7173347.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...


உன்னை அறிந்தால்... 'செல்ஃபி' குறும்படம்

 

ரயில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டியின் ஒரு கட்டத்தை நிரப்ப யோசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பயணி. பதிலைக் கூறிவிட்டு, செல்பேசி அழைத்ததும் எழுந்து வெளியே வருகிறார் நம் கதாநாயகன்.

 
பேசி முடித்துப் பாக்கெட்டில் போட எத்தனிக்கும் சமயத்தில் தவறுதலாக முன்னால் நிற்கும் பயணியின் பேண்டில் கை படுகிறது. கண் முன்னேயே பிக்பாக்கெட்டா எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார் அப்பயணி. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.
 
ரயிலை விட்டு இறங்கியதும், பரிசோதகர் எல்லோரையும் விட்டுவிட்டு இவரிடம் மட்டும் டிக்கெட்டைக் காட்டச்சொல்கிறார். சிறிது தூரம் சென்று டாக்ஸி அருகில் நிற்பவரிடம், டிரைவர் என்று நினைத்து வண்டி வருமா என இளம்பெண்ணொருத்தி கேட்கிறாள். இது போல வரிசையாய் நடக்கும் சில சம்பவங்கள் அவரைக் காயப்படுத்துகின்றன.
 
எப்போதுமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெண்ணி வருந்துகிறார் அவர். அவமானமாய் உணர்ந்து கலங்கி நிற்பவரின் முன்னால் நடக்கும் அந்த சம்பவம், மனவோட்டத்தையும், அவரின் மீதேயான மொத்த மதிப்பீடுகளையும் ஒற்றை நொடியில் தகர்த்தெறிந்து செல்கிறது. அப்படி என்ன நடந்தது? விடை, குறும்படத்தில்!
 
குறைவான வசனங்களில் சொல்ல வந்தது நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்ந்து ஒலிக்கும் இசை பார்ப்பவர்கள் மனதின் வழி ஊடுருவித் தாங்கவியலாப் பாரமொன்றை இறக்கி வைத்து விட்டுச் செல்கிறது.
 
எப்போதுமே, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்புதான் நம்மை அதிகம் அலைக்கழிக்கிறது; காயப்படுத்துகிறது. சுய பரிசோதனை தேவையோ என்று எண்ண வைக்கிறது.
 
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையின் மூலமே மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும். நாம் எல்லோருமே நம் மனசைத்தான் முதலில் செல்ஃபி எடுக்க வேண்டும். தகுந்த காட்சியமைப்புகளோடு, தன்னை உணர்தலை மென்மையாய் உணர்த்துகிறது ஆகாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட செல்ஃபி குறும்படம்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.