Jump to content

லைக்காவின் கத்தியின் நுனியில் கலையின் உயிர்கொல்லும் அனைத்துலக உயிரோடையின் நிகழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா நிறுவனம் மகிந்த அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் வேறு காரணங்களுக்காகவும் அந்த ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுதுங்க்க கொலைசெய்யப்பட்டார். பின்னதாக 2009 ஆண்டில் மந்தனா இஸ்மையில் அதன் தொடர்ச்சியைப் எழுதிய போது அரச கூலிகளால் தாக்கப்பட்டார். இலங்கை வாழ் தமிழ் – சிங்கள மக்களின் வரிப்பணத்தைக் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து கொள்ளையடித்த லைக்கா நிறுவனம் என்ற பல்தேசிய பெரு வியாபாரிகள் தென்னிந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் கடந்த ஐந்து வருடங்களுக்க்கு மேலாக ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் லைக்காவின் தயாரிப்பே. அப்போது லைக்கா ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் படத்தைத் தயாரித்திருந்தார்கள்.

இப்போது விஜய் நடித்த கத்தி படம் லைக்கா புரடக்ஷன் என்ற பெயரிலேயே தயாரிக்கப்படுகின்றது. இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் சட்டவிரோதப் பணத்தை வைத்திருக்கும் மாபியாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தல், வரிப்பணத்தை திருட்டு போன்ற இன்னோரன்ன வழிகளில் குவியும் பணத்தை படம் தயாரித்து இலாபமீட்டுகிறோம் என்று கணக்குக் காட்டுவதற்காகவே பல படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மில்லியன் கணக்கில் சட்டவிரோதப் பணம் புழங்கும் தொலைத்தொடர்பு வியாபாரிகளான லைக்கா சினிமாத் தயாரிப்பில் ஈடுபடுவது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை என 2012 ஆம் ஆண்டில் கார்டியன் நாழிதழ் வெளிப்படுத்தியிருந்தது. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்டது.

லைக்கா என்ற பல்தேசிய வியாபார நிறுவனம் தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் வரியை பிரித்தானிய அரசிற்குக்கூட வழங்கவில்லை. லைக்கா மூன்று வருடங்களாக கோப்ரட் வரியக் கட்டாமல் ரோரிக் கட்சிக்கு நன்கொடை வழங்கி வருகிறது என கார்டியன் நாழிதழ் தெரிவித்திருந்தது.. இலங்கையில் மக்களின் பணத்தை சுருட்டுவதில் லைக்கா ஈடுபட்ட இதே நிறுவனம் கத்தி, கோடரி, அலவாங்கு என வரிசையில் சினிமா எடுத்து வரிப்பணத்தை கலை கலாச்சார வன்முறையாக மக்கள் மத்தியில் விதைக்கிறது.

இந்த நிலையில் லைக்காவிற்கு எதிரான போராட்டங்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகளால் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. கருத்தியல் தளத்திலும் செயற்பாடுகளாகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று, ஈழப் போராட்டம் போன்றே லைக்காவிற்கு எதிரான போராட்டமும் கூலிகளால் உள்வாங்கப்பட்டுள்ளது.

லைக்கா என்ற நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இதுபோன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களின் நுளைவாயிலாக அந்த நிறுவனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பல்தேசிய நிறுவனங்க்களையும் அம்பலப்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை மக்களதும் புலம்பெயர் மக்களதும் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தென்னித்தியத் திரைப்பட அழுக்குகளை புலம்பெயர் மக்களின் தலைகளில் கொட்டும் கலாச்சார வன்முறைக்கு எதிரான உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஈழத்தின் பாரம்பரியக் கலை கலாச்சரப் படைப்புக்களை வளர்த்தெடுக்க இதனைப் பயன்படுத்த எண்ணினர்.

இவ்வாறான மக்கள் சார்ந்த எழுச்சிகளை தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் லிபாரா போன்ற லைக்காவின் போட்டி அமைப்புக்கள் சார்ந்து செயற்பட ஆரம்பித்தனர்.

இக்கூலிகள் தென்னிந்தியாவிலும் கூலிப்படைகளை அமர்த்தி லைக்காவிற்கு எதிரான போராட்டத்தை வியாபாரப் போராட்டமாகத் திசைதிருப்ப முயன்றனர்.

தமது வயிற்றுப் பிழைப்பிற்காக நடத்தப்படும் இப்போராட்டங்கள் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே திசைதிருப்பியுள்ளது.

லைக்கா எதிர்ப்பை முன்வைத்து புலம் பெயர் ஈழத்து இளம் கலைஞர்களின் மத்தியில் உருவான கலை – கலாச்சார மறுமலர்ச்சியைச் சிதைக்கும் இப்போராட்ட வியாபாரிகள் எதிர்ப்பதற்கு லைக்காவைத் தவிர ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன.

அப்பட்டமான பாலியல் வக்கிரங்கள் நிறைந்த பாடல்களைக் கூட பீலிங்கோடு பாடுங்கள் என்று குழந்தைகளிடம் கேட்கும் சுப்பர் சிங்கர் என்ற அருவருப்பு விஜய் ரிவி இன் நிகழ்ச்சிகளில் ஒன்று. ஈழத் தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சியைப் பொறுத்துக்கொள்ளாத தேசியத்திற்கு எதிரான விதேசிய சக்திகள் சுப்பர் சிங்கரை பிரித்தானியாவிற்கு அழைத்து வருகின்றனர். அதுவும் தமிழ்த் தேசியத்த்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் ஐ.எல்.சி வானொலி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற தலையங்கத்தில் இயங்கும் இந்த வானொலியின் விளம்பரதாரர்களில் பிரதானமானவர்கள் லைக்கா. லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்சி விளம்பரம் இந்த வானொலியில் வந்து போகிறது.

சுப்பர் சிங்கரை நடத்தி வானொலி நடத்துவதற்கான நிதி சேர்க்கப் போகிறோம் என்கிறார்கள். அழுகிய கலைகளின் போதையூட்டி மக்களிடம் பணம் கறப்பதை நிதி சேகரிப்பு என்கிறார்கள். இதற்கும் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அனைத்துலக உயிரோடைத் தமிழ் என்ற வானோலி அனைத்துல உயிரெடுக்கும் தமிழ் என்பதை கலைப் போதை வியாபாரத்தின் ஊடாக நிறுவியுள்ளது.

தேசியம் என்றால் தேசியக் கலைகளை அல்லவா வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் இவர்களிடம் கேட்டுத் தொலைக்கக்கூடாது.

அரைகுறை ஆங்கிலத்தின் நடுவே இடைக்கிடை கொச்சைத் தமிழ்ப் பேசும் விஜய் தொலைக்காட்சி என்ற சாபக் கேடு புலம்பெயர் தமிழர்களது கலைகளையும் ஈழத்துக் கலைகளையும் மட்டும் அழிக்கவில்லை. தமிழக மக்களின் போரட்ட உணர்வையும் அழிப்பதற்குப் பயன்படும் அதிகாரவர்க்கத்தின் அழிகருவி.

கத்தியைத் தடை செய் என்று இஸ்லாமிய – கிரீஸ்தவ – இந்து மதவாதிகள் போல யாரும் கேட்டதில்லை.(தென்னிந்தியக் கூலிகளைத் தவிர) கத்தியைப் புறக்கணியுங்கள் ஜனநாயகவாதிகள் மக்களைக் கோரினார்கள். இதைப்போன்றே உயிரோடையின் கலைக்கொல்ல்லி நிகழ்ச்சியைப் புறக்கணியுங்கள் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் தேவை.

தென்னிந்திய கலைகளின் கலாச்சார வன்முறைக்கு எதிரான படைப்புக்களை அம்பலப்படுத்துவதும் கேள்வி கேட்பதும் லைக்காவிற்கு எதிரான போராட்டங்களில் அடிப்படையான ஒன்று.

கூலிப்படைகள் அப்போராட்டத்தை கோடம்பாக்கத்தில் குடியிருத்தி வைத்து வேடிக்கப்பார்க்கின்றன. தேசியக் கலைகளுக்கான அப்போராட்டத்தை கோடம்பாக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்

www.inioru.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

95% புலம் பெயர்ந்தமக்கள் இன்று சுப்பர்சிங்கர்,விஜய் டிவி போன்றவற்றின் பரமரசிகர்கள் .....அவர்களை கட்டுரை எழுதி மாற்றமுடியாது.....இன்று மக்கள் வாசிப்பதே குறைவு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் உங்க‌ளை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌ண்டை காய் அவ‌ருக்கு அர‌சிய‌ல் எப்ப‌டி  செய்ய‌னும் என்று ந‌ங்கு தெரியும் திராவிட‌ ஊட‌க‌ங்க‌ள் ப‌ல‌ குறுக்க‌ ம‌றுக்க‌ ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டாலும் ச‌ரியான‌ ப‌திலை சொல்ல‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் சீமான்  உங்க‌ளால் அப்ப‌டி ப‌தில் முடியாது?    2009க்கு முத‌ல் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் உங்க‌ளுக்கும்  எந்த‌ வித தொட‌ர்வும் இல்லை என்று உங்க‌ள் எழுத்தே காட்டி கொடுக்கு...................2008க‌ளில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரையும் தூற்றின  ந‌ப‌வ‌ர்க‌ள் சில‌ர் இருந்த‌ன‌ர்  ...........................அவ‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ராய் இருக்க‌ கூடும் என்று நினைக்கிறேன் ............................இதுக்கு முத‌ல் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி நீங்க‌ள் என்று கேட்டேன் ஆனால் நீங்க‌ள் மெள‌வுன‌த்தை க‌டை பிடித்த‌ போதே தெரிந்து விட்ட‌து நீங்க‌ள் ப‌ழைய‌ காய் என்று............................த‌மிழ் இன‌த்தின் ச‌பாக் கேடு ஒரு த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ந்தால் ம‌ற்ற‌ த‌மிழ‌னுக்கு பிடிக்காது................................ ஆன‌ந்த‌ ச‌ங்க‌ரி இப்ப‌ யார் கூட‌ இருக்கிறார் க‌ந்தையா அண்ணா😏....................................................  
    • எதிர்கக வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கான காரணங்களை தேடுவதும் இளைஞர்களை தூண்டி  விடுவதும் தமிழரசு கட்சியின் கைவந்த கலை என்பது இலங்கை அரசியலை புரிந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.  பொதுமக்களும் இளைஞர்களும் ஆர்பட்டதில் ஈடுபட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களை கொம்பு சீவி விட்டது தமிழரசு கட்சியே என்பது வெள்ளிடை மலையாக தெரியும்.  பலகலை கழகம் திருகோணமலையில் அமைத்திருந்தால் அது  தமிழரின் முழுகட்டுப்பாடில் இருந்திருக்காது என்ற ஜதார்த்தத்தை கூட புரிய முற்படவில்லை.  அப்படியே அங்கு திறந்திருந்தாலும்  தமிழரின் கலாச்சார தலைநகரை புறக்கணித்து சிங்கள ஆக்கிரமிப்புக்காக திருகோணமலையில் பல்கலை கழகம் திறந்ததாக புரட்டு கூறி பிரச்சாரம் செய்திருப்பார்கள் இந்த தமிழரசு கட்சியினர் என்பது தமிழரசு கட்சியின் செயல்களை பார்தவர்கள் அனைவருக்கும் புரியும்.  தமிழரசுகட்சி எப்போதுமே தனது உசுப்பேற்றும் அரசியலுக்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் தெரிந்த விடயம் தான்.  அவை எல்லாம் ஆதாரங்கள் அல்ல.. 
    • இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த  வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய  பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.  கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார். கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர். கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார். மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார். இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார். தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார். எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார். இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர். இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.  மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த. தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார்.  பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.  தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார். கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம். மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.  அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார். தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.  https://www.virakesari.lk/article/180916  
    • தமிழ் - சிங்கள புத்தாண்டு முடிவடைந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தில் தத்தமது மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கொண்டாடப்படுகின்ற மே தினம் இலங்கையில் மாத்திரமன்றி பல நாடுகளிலும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.   உலகில் நாடுகளுக்கு இடையிலான மேலாதிக்க மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பெரும்பாலும் வல்லரசு நாடுகள், தனக்கு எதிரான நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகார மேலாதிக்க போக்குடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தடை விதிப்பது மாத்திரமன்றி உலக பொருளாதார ஒழுங்கிலிருந்தும் எதிரி நாடுகளை தனிமையப்படுத்துவதன் ஊடாக வல்லரசு நாடுகள் தமது மேலாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வகையான முதலாளித்துவ செயற்பாடுகளினால் தொழிலாளர் வர்க்கத்தினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 19ஆம் நூற்றாண்டில் பெரும் தத்துவ மேதையாக விளங்கிய கார்ல் மார்க்ஸ் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாக பல தத்துவங்களை எடுத்துரைத்தார். அத்தத்துவங்ளையே இடதுசாரி கோட்பாடுகள் என்றும், அக்கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளை கம்யூனிச நாடுகள் என்றும் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றன. 'மனித உழைப்பின்றி இந்த உலகில் எதுவுமே நிகழ முடியாது. இந்த உலகில் அனைத்தும் இயற்கையாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். மனிதர்கள் வாழ்வதற்கும், இன்பம் - துன்பம் என்பவற்றை உணர்வதற்கும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது, மனித உழைப்பே ஆகும். இந்த 'உழைப்பு' இன்று மனிதர்களை அடிமைப்படுத்தும் விலங்காக மாற்றமடைய வைத்துள்ளது.   உலகத் தொழிலாளர்களே உங்கள் உழைப்பு எனும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து, அதற்குப் பிரதிபலனாக உங்களுடைய உரிமைகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஒன்றிணைந்தால், ஒரு பொன்னுலகம் எதிர்காலத்தில் சாத்தியப்படும்' என்று உழைப்பாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதலாளித்துவத்துக்கு எதிராக பல கிளர்ச்சிகள் தொடங்கின. இதனடிப்படையில் 1986ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் மாத்திரமே வேலை செய்ய முடியும் என்ற கோஷத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் பல்லாயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வீதிக்கிறங்கி போராடினர். இப்போரட்டத்தின் 3ஆம் நாள் இறுதியில், இனந்தெரியாத கூட்டத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பாரியதொரு கலவரத்துக்கு வித்திட்டது. இதன் இறுதியில் 11 தொழிலாளர்கள் இறந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். இதுவே 1989ஆம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக உலக நாடுகளால் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் ஆரம்ப காலகட்டத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தினால் முதலாளித்துவ கோட்பாடுகள் அதிகம் பின்பற்றப்பட்டாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு சார்பான நிகழ்வுகள் பல நிகழ்ந்துள்ளன. இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம், 1927ஆம் ஆண்டில் தொழிற்சங்க தலைவரான குணசிங்க தலைமையில் இடம்பெற்றது.  அதன் பின்னரே 1956ஆம் ஆண்டில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினமாக கருதி அன்றைய தினத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பொது விடுமுறையாக அறிவித்தார். 1891ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி பிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.ஈ. குணசிங்க, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். இவரின் காலப்பகுதியிலேயே புகையிரத வேலைநிறுத்தம் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் போன்ற வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. அநேக வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிந்தாலும் ஆங்கிலேயருக்கு எதிராக முக்கியமான சில வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றிருந்ததுடன் இவரே இலங்கையின் தொழிலாளர் இயக்கங்களின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவ்வாறு உலக வரலாற்றிலும், இலங்கையின் வரலாற்றிலும் தொழிலாளர்கள் தினம்  போற்றுதலுக்குரியதாக அமைந்தாலும், தற்போதைய காலப்பகுதியில் அரசியல் செல்வாக்கினை காண்பிக்கும் மேடையாக மாற்றம் பெற்றுள்ளமை வேதனைக்குரிய விடயமாகிறது. முதலாளித்துவம், சம உடமை போன்ற கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, அரசியல் நலன் சார்ந்த மே தினத்தில் கூட்டத்தை நோக்கி தேசிய அரசியல் கட்சிகள் அனைத்து போட்டி போட்டுக்கொண்டு தலைநகர் கொழும்பில் இடங்களை ஒதுக்கிக்கொள்ள போராடுகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டம்  கொழும்பு - மருதானை சந்தியில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு கோரப்பட்ட இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இம்முறை மே தினத்துக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஆதரவாளர்களை கொழும்பு அழைத்து வரலாற்றில் என்றும் இடம்பெறாத வகையில் மே தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உள்ள எப்.ஆர். சேனாநாயக்க வீதியை பெற்றுத்தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணி அந்த இடத்தில் மே தின கூட்டத்தை நடத்தியிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த கோரிக்கைக்கு ஆரம்பத்தில் எவ்விதமான எதிர்ப்புகளும் அதிகாரிகளிடமிருநது வெளியாக வில்லை. ஆனால் இம்முறையும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை தருமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்துவதற்கும் அனுமதி கோரியுள்ளது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மே தின கூட்டத்தை நடத்த எப்.ஆர். சேனாநாயக்க வீதியை கோரியுள்ளமையினால் இருதரப்புக்குமே குறித்த வீதியை அனுமதிக்க முடியாது என்று அறிவித்து  கொழும்பு மாநகர ஆணையாளர், மாற்று இடங்களை பெயரிட்டு அனுப்புமாறு அறிவித்துள்ளார். இவ்வாறு தமது அரசியல் பலத்தை காண்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் போட்டிப்போடுகின்றதே தவிர, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அல்ல. மேலும், வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமக்குள் செல்வாக்கை வெளிப்படுத்தவும் இந்த அரசியல் கட்சிகள் மே தின மேடைகளை பயன்படுத்துகின்றன. எனவே, முற்றிலும் அரசியல்மயப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தினம், மீண்டும் சுதந்திரத்துக்கான போராட்டமாக மாற்றமடைவது அவசியமாகும்.   https://www.virakesari.lk/article/181851
    • பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.