Jump to content

முடியும், ஆனா முடியாது ; ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ).

game_2.jpgஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird  ) மொபைல் கேமை அறிந்திருப்பார்கள். பலர் அந்த விளையாட்டை ஆடி களைத்து கடுப்பாகியும் இருப்பார்கள். அதாவது அந்த விளையாட்டு நுயேனால் திரும்பப்பெறப்படும் வரை!.  இந்த விளையாட்டு நுயேனை உலக அளவில் புகழ்பெற வைத்த்து. பின்னர் அந்த புகழில் இருந்து ஓடி ஒளியவும் வைத்தது.

இப்போது நுயேன் இரண்டாவது மொபைல் கேமான ஸ்விங் காப்டர்சை ( Swing Copters)  ரிலிஸ் செய்து இணைய உலக முழுவதும் பேச வைத்திருக்கிறார். குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் , இணைய விவாத குழுக்களிலும் இந்த விளையாட்டு பற்றி படு சுறுசுறுப்பாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விவாதத்தின் முக்கிய சரடு இந்த விளையாட்டின் வெற்றிக்கொள்ள முடியாத தன்மை பற்றியதாகவே இருக்கிறது.

#SwingCopters எனும் ஹாஷ்டேகுடன் இந்த விளையாட்டு தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் பெரும்பாலும் 1 அல்லது 2 புள்ளிகளுக்கு மேல் எடுக்க முடியாதது பற்றிய புலம்பல்களாகவே இருக்கிறது. ஒருவழியாக 1 புள்ளி எடுத்து விட்டேன்,இனி நிம்மதியாக தூங்கப்போவேன் ‘என்கிறது டான் கவுன்சல் என்பவரின் குறும்பதிவு. இன்னொருவர் இந்த விளையாட்டுக்கு பிளாப்பிபேர்டே பரவாயில்லை எளிமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.

ஸ்விங் காப்டர்ஸ் பிலாப்பி பேர்ட் போல அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட விளையாட்டாக மாறுமா, அப்படியே மாறினாலும்  எவ்வளவு காலம் அந்த இடத்தில் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், இந்த விளையாட்டு அதன் தன்மை பற்றி சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூடவே பயனாளிகளை அடிமையாக்கும் ஆற்றல் கொண்ட வீடியோ கேமின் அடிப்படை தன்மை பற்றிய முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.

வெற்றி பெற முடியாத ஒரு விளையாட்டை ஆடுவதில் ஏன் இத்தனை ஆர்வம் ஏற்படுகிறது என்பது தான் அந்த கேள்வி.

ஸ்விங் காப்டர்ஸ் அறிமுகமான உடனே அதன் வெல்ல முடியாத தன்மையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இத்தனைக்கும் இது மிக எளிமையான விளையாட்டு. இதில் சிக்கலான சங்கதி எதுவும் கிடையாது. ஹெல்மெட் போட்ட ஒரு பாத்திரத்தை பறந்த படி முன்னேற வைக்க வேண்டும். பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருக்கும் சுத்திகளில் சிக்கி அடிபடாமல் அந்த பாத்திரத்தை முன்னேற வைக்க வேண்டும். அவ்வளவு தான் விளையாட்டு.

எளிதான விளையாட்டாக தான் இருக்கிறது இல்லையா? ஆனால் விளையாடிப்பார்த்தால் தான் இது உண்மையில் எத்தனை கடினமாக இருக்கிறது எனத்தெரியும் என்கிறனர்.

 

game_3.jpgஆட்டம் ஆரம்பித்த வேகத்திலேயே ஏதாவது தவறு செய்து ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது என்கின்றனர். விளைவு இன்னும் தீவிரத்தோடு அடுத்த முறை ஆட வேண்டியிருக்கிறது என்கின்றனர். ஆனால் என்ன தான் முழுகவனம் செலுத்தி ஆடினாலும் ஒரு புள்ளியை தொடவே படாதபாடு பட வேண்டிக்கிறது. விளைவு அடச்சீ என வெறுத்துப்போக தோன்றினாலும் இன்னும் தீவிரத்துடன் விளையாட தூண்டுகிறது.

 

எளிமையான தோற்றத்தை மீறி இந்த கேமில் இருக்கும் சவாலான தன்மையும் அவை ஏற்படுத்தும் கடினமான உணர்வுமே இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையிலேயே கடினமாக தான் இருக்கிறது, வேண்டுமானால் நீங்களே முயன்று பாருங்கள் என பலரும் இந்த விளையாட்டு பற்றி பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதுவே இந்த விளையாட்டுக்கான கவனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பிளாப்பி பேர்ட் விளையாட்டும் இதே தன்மையை தான் கொண்டிருந்தது. அதில் ஒரு பிக்சல் பறவையை குழாய்களுக்கு மத்தியில் பறக்கச்செய்ய வேண்டும். எளிதான விளையாட்டு என்றாலும் சவாலானது, கடினமானது; அதனால் தான் பலரும் பிளாப்பி பேர்டே கதி என இருந்தனர். இப்படி பலரையும் அடிமையாக்குகிறது என்பதை காரணம் காட்டி தான் நுயேன் மிகவும் பிரபலமாக இருந்த நிலையில் பிளாப்பி பேர்ட் விளையாட்டை விலக்கி கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நுயேனின் இரண்டாவது விளையாட்டு இதைவிட எளிமையானதாக ,இதைவிட கடினமானதாக இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.

பிரபலமான சினெட்.காம் ( http://www.cnet.com/news/flappy-bird-follow-up-swing-copters-will-drive-you-to-insanity/) இணையதளத்தை சேர்ந்த நிக் ஸ்டாட் இந்த விளையாட்டை இதுவரை வந்த ஸ்மார்ட்போன் விளையாட்டுகளிலேயே கடினமானது என வர்ணித்துள்ளார். ஸ்டாட் இந்த விளையாட்டை ஒரு கை பார்க்க முயன்றுவிட்டு , 2 புள்ளிகள் எடுக்க 20 நிமிடம் வேறு எதுபற்றியும் சிந்திக்காமல் ஜென் யோகி போல இதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எளிமையான விளையாட்டு,ஆனால் எளிதான வெற்றி பெற முடியாத விளையாட்டாக இருப்பதே பிலாப்பி பேர்ட் மற்றும் ஸ்விங் காப்டர்ஸ் போன்ற விளையாட்டுகளின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால், ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றால் அந்த வெற்றி தரும் திருப்தியும் பெருமிதமும் அதன் மீது ஆர்வம் கொள்ள வைக்கும். இருப்பினும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போக வைக்கும் பிளாப்பி பேர்டும் , அதன் ஊக்கமாக கருதப்படும் சூப்பர் மரியோ பிரஸ் போன்ற வீடியோ கேம்கள் எப்படி பிரபலமாகின்றன என்பது சுவாரஸ்யமான கேள்வி.

game_1.jpgவீடியோ கேம் தாக்கம் பற்றி ஆய்வு செய்து தி ஆர்ட் ஆப் பைலியர் எனும் புத்தகம் எழுதியுள்ள ஜெஸ்பர் ஜூல் (Jesper Juul ) இந்த முரணான அம்சத்தில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். மனிதர்களுக்கு வெற்றி பெரும் உணர்வும் அது தரக்கூடிய திறமைசாலி என எண்ணமும் தான் முக்கியமானது என்றாலும் , வீடியோ கேம் பிரியர்கள் தங்களை தோல்வி பெற வைத்து,திறனற்றவர்களாக உணர வைக்கும் விளையாட்டுகளிலேயே ஈடுபட விரும்புவதாக ஜூல் குறிப்பிடுவதாக சினெட் கட்டுரை மேற்கோள் காட்டுகிறது. அதாவது தாங்கள் தோற்கப்போகும் விளையாட்டுகளையே வீடியோ கேம் ஆர்வலர்கள் விரும்புகின்றனர், இது தான் வீடியோ கேமின் முரண் என்கிறார் ஜூல்.

மைதானத்துக்கு சென்று கிரிக்கெட்டோ ,கபடியோ விளையாடும் தன்மை இல்லாமல் , கம்ப்யூட்டரிலும் ,ஸ்மார்ட்போனிலும் ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளில் மூழ்கியுள்ள தலைமுறையை சரியாக புர்ந்து கொள்ள , ஸ்விங்க் காப்டர்ஸ் போன்ற விளையாட்டுகளும் ஜூல் போன்றோரின் ஆய்வும் உதவும்.

இதனிடையே இந்த விளையாட்டில் எந்த புதுமையும் இல்லை, இது பிளாப்பி பேர்டின் இன்னொரு வடிவம் தான் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கடினமானது என்பதை விமசிப்பவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். 

இந்த விளையாட்டை இன்னும் நான் ஆடிப்பார்க்கவில்லை. நீங்கள் முயன்று பார்த்துச்சொல்லுங்களேன் , இது எந்த எளவு எளிமையாதனது? எந்த அளவு கடினமானது என்று?

https://play.google.com/store/apps/details?id=com.dotgears.swing. ஐஓஎஸ்-லும் டவுண்லோடு செய்யலாம்.

வீடியோ கேம் ஆய்வாளர் ஜெஸ்பர் ஜூல் இணையதளம்: http://www.jesperjuul.net/

- சைபர்சிம்மன்

http://news.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.