Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மாயப் பிசாசு
மறைந்திருந்து கொல்லும்
எண்ணங்கள் எதிரிகளாக
கடிவாளமற்ற குதிரைகளில்
காததூரம் கடக்கும்

 

சொற்களற்ற நிழல்களிநூடே
சொல்லாது விடும்
வார்த்தைகள் கோர்த்து
சுவற்ற சிற்பங்களாய்
கனவுகள் ஆயிரம் வடிக்கும்

 

பகுத்தறிய முடியா
உண்மைக்கும் பொய்க்கும் இடையே
சஞ்சலம் மட்டும் கொண்டு
சக்திகள் எல்லாம் அற
சகலதும் துறக்கத் தோன்றும்

 

ஏன் தான் மனிதற்கு மட்டும்
இறைவன் ஒருமனம் தந்தான்
விருப்பமற்றதை விலக்கி
வேண்டாதவற்றை கழற்றி
வில்லங்கம் கொண்டதை விடுத்து
நின்மதியாய் நான் வாழ
நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு
இது என்னடாப்பா சுமேக்கு வந்த விபரிதாசை .:D ......இரண்டு மனம் வேண்டும் என கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.....
Link to comment
Share on other sites

மனம்...

 

மனங்களைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
படித்த புத்தகங்களில்
ஏதும் இல்லை
இவர்கள் முகங்களின்
கிறுக்கல்கள்போல.

முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு.

உலகை மிஞ்சும் எண்ணங்கள்
மனமில்லா உடம்பிற்குள்
எப்படிப் புகும்?

திணித்ததெப்படி ?!

Link to comment
Share on other sites

நின்மதியாய் நான் வாழ
நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு/////

 

அதுக்கு நிறைய மனம் கொடுக்கவும் வேண்டும். 

 

கவிக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னியுங்கள் உறவுகளே. கவிதைகளுக்கு இங்கு பெரிதாக வாசிப்பில்லை என்பதால் நான் கவனிக்கவில்லை. வருகைதந்து கருத்துக்களை எழுதிய உறவுகள் புத்தன், மாறன், யாயினி, நேற்கொழு ஆகிய உறவுகளே நன்றி.

 

Link to comment
Share on other sites

வேண்டாதவற்றை கழற்றி
வில்லங்கம் கொண்டதை விடுத்து
நின்மதியாய் நான் வாழ
நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு..
 
 
இதை தான் நானும் கேட்கிறேன் அக்கா ..அருமையான வரி .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சரன், வாத்தியார்

Link to comment
Share on other sites

மன்னியுங்கள் உறவுகளே. கவிதைகளுக்கு இங்கு பெரிதாக வாசிப்பில்லை என்பதால் நான் கவனிக்கவில்லை.

கிரேட் இன்சல்ட்.. :huh::lol:

Link to comment
Share on other sites

கிரேட் இன்சல்ட்.. :huh::lol:

இசை ..ஹா ஹா ஹா இது ஓவர்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேட் இன்சல்ட்.. :huh::lol:

 

என் கவிதைகள் உட்பட பல கருத்துக்களே எழுதப்படாமல் இருந்தன. அதனால் சொன்னேன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன  அமைதி  என்பது

தேவைகளின் அடிப்படையில் வருவது

தேவையை  அடக்கிக்கொண்டால்

சுருக்கிக்கொண்டால்  மட்டுமே 

மன  அமைதி  கிடைக்கும்

அந்தவகையில் சுமேக்கான நிம்மதி... :lol:  :D

 

கவிதைக்கு நன்றி  சுமே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மன  அமைதி  என்பது

தேவைகளின் அடிப்படையில் வருவது

தேவையை  அடக்கிக்கொண்டால்

சுருக்கிக்கொண்டால்  மட்டுமே 

மன  அமைதி  கிடைக்கும்

அந்தவகையில் சுமேக்கான நிம்மதி... :lol:  :D

 

கவிதைக்கு நன்றி  சுமே.

 

கிடைக்கவே போறதில்லை என்கிறீர்களா அண்ணா ???? :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.