Jump to content

மரணம் இழப்பு மலர்தல் - இலன்டனில் நூல் அறிமுக நிகழ்வு


Recommended Posts

இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள
(tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது.
மேலதிக விபரங்கள் விரைவில்.

 

இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன்.

மரணம்: இழப்பும் வலியூம்
மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும்.
மரணம்: அஞ்சலியூம் அரசியலும்
மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை

இந்த நூல் மரணம் இழப்பு அதன் வலி மற்றும் பாதிப்பு தொடர்பானதாக இருந்தபோதும்... அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல...
மேலும் நமது போராட்டம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்றபோதும்.... போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுடையதல்ல.....
ஆனால் நிலவுகின்ற அதிகாரத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரானது.....


இந்த நிகழ்வில் யாழ் கள நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.
நன்றி

Link to comment
Share on other sites

இதற்குத் தோதான பெண் பேச்சாளர் ரதிதான்..! :D

Link to comment
Share on other sites

மரணம் இழப்பு மலர்தல்

நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

 

 காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில்

தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள

(tube eastham அருகில்)

தலைமைபாலசிங்கம் சுகுமார் ...

உரையாற்றுவோர் -

மாதவி சிவலீலன் - மரணம்: இழப்பும் பாதிப்பும் பெண்களும் குழந்தைகளும்

நித்தியானந்தன் முத்தையா - மரணம் - அஞ்சலியூம் அரசியலும்

யமுனா ராஜேந்திரன் - மரணம் - இனஅழிப்பும் அரசியலும்

மீராபாரதி - இழப்பிலிருந்து மலர்தல் - நமது பொறுப்பு

மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு.

மாலை 6.00மணி குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு

 

ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

 

 

மரணம் இழப்பு மலர்தல்

நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

 

 காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில்

தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள

(tube eastham அருகில்)

தலைமைபாலசிங்கம் சுகுமார் ...

உரையாற்றுவோர் -

மாதவி சிவலீலன் - மரணம்: இழப்பும் பாதிப்பும் பெண்களும் குழந்தைகளும்

நித்தியானந்தன் முத்தையா - மரணம் - அஞ்சலியூம் அரசியலும்

யமுனா ராஜேந்திரன் - மரணம் - இனஅழிப்பும் அரசியலும்

மீராபாரதி - இழப்பிலிருந்து மலர்தல் - நமது பொறுப்பு

மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு.

மாலை 6.00மணி குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு

 

ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

 

 

Link to comment
Share on other sites

நால் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். 

 

எம் சமூகத்தில் புத்தகங்களை வெளியிடுபவர்கள் வியாபார ரீதியில் வெற்றியடையாத சூழ்நிலையை மாற்ற ஏதேனும் வழிமுறைகள் இருப்பின் அவற்றினை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமா மற்றும் பொழுது போக்குக்கு என பல நூறு ரிவி சனல்கள் கனடாவில் இருந்தாலும் கூட இங்கு புத்தகங்களை, நாவல்களை வெளியிடும் ஆங்கில, பிற மொழி எழுத்தாளர்கள் வியாபார ரீதியிலும் வெற்றி அடைகின்றனர். ஆனால் இது எம் சமூகத்தில் நிகழ்வதில்லை. சிங்கள சமூகத்திலும் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டாளர்கள் வெற்றி அடைகின்றனர்.

 

என்னைக் கேட்டால் புத்தக வெளியீட்டுடன் நஸ்ரியாவின் தொப்புள் காட்சி உண்மையில் எடுக்கப்பட்டதா என ஒரு விவாதமும் நடத்தினால் நிறையப் பேரிடம் புத்தகத்தினை கொண்டு சேர்க்கலாம் என்றே நினைப்பேன். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
 
Link to comment
Share on other sites

முடிந்தால் லண்டன் உறவுகள் இன் நிகழ்விற்கு போய் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும்படி வேண்டி நிற்கின்றேன் .

நான் உண்மையில் மீராவின் நிகழ்வுகளுக்கு போய் வித்தியாசமான அனுபவத்தை கண்டவன் என்ற படியால் சொல்லுகின்றேன் .

Link to comment
Share on other sites

நன்றி  ரதி,arjun, kkaran


மரணம் இழப்பு மலர்தல்- நூல்வெளியீடு
18 அக்டோபர் 2013
lg-share-en.gif
 

 

Bahrathi%201_CI.jpg


ஈழத்தில்   புனைவு சாராத   கனதியான எழுத்து முயற்சிகள் இன்னும் பெருமளவில் வெளிவரத்தொடங்கவில்லை. இன்றைக்கு மிகவும் அவசியமாக இருக்கிற இந்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாக  மீரா பாரதி அவர்களின் மரணம் இழப்பு மலர்தல் என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை இயற்கை மரணங்களை விடவும்  அகால மரணங்களையே அதிகம் சந்தித்து வந்தது. யுத்தம் நிழந்த -நிகழ்கிற நாடுகளில் இப்படியொரு நிலை தோன்றுவது புதிதில்லை.

ஆனாலும் யுத்தத்தினால் உருவாகும் மரணங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை அடையவேண்டிய தேவையைக் காலம் உணர்த்தி நிற்கிறது. இந்த விழிப்புணர்வின் மேலாக உயிர்களின் மரணத்தை எப்படி எதிர் கொள்வது என்ற கேள்வி வரும் போது  மீராபாரதியின் கட்டுரைத்தொகுதி  அதற்கான  விடையைத்தேடுவதற்கான களத்தை திறந்து விடுகிறது. முள்ளிவாய்கால் அவலத்தின் பின்பு நாங்கள்  அடைந்த அவலங்கள் காரணமாக ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரு சமூகமாகி விட்டிருக்கிறோம். நாங்கள் அரசியல் அனாதைகள் ஆனது மட்டுமன்றி தனிமனித நிலையிலும் சமுக நிலையிலும்  ஆதரவைத் தேடுவோர்களாகி இருக்கிறோம். மிக நுண்ணுணர்வான பார்வையுடன் ஈழத் தமிழர்களின் வாழ்வை அலசும் ஒரு உளவியலாளன்  இந்த முடிவை வந்தடைவது தவிர்க்க முடியாது. (இதன் அர்த்தம் நாம் மனநோயாளிகளாகி விட்டோம் என்பதல்ல) நாங்கள் எதிர்கொண்ட இழப்புகளும் மரணங்களும் எல்லோரையும் எதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது என்பதே இதனர்த்தம். இந்தப்பாதிப்புகளில் இருந்து  விடுபடுவதற்கான  வழி என்ன?  பாரதியின் கட்டுரைத்தொகுதி  எங்களை இந்த  வழியை நோக்கி அழைத்துச்செல்கிறது. உளவியற் துறைசார்ந்தும் தன் சொந்த அனுபவம் சார்ந்தும்  உலக அனுபவங்களின் ஒளியோடும் அவர்  எங்களை மரணத்தில் இருந்து வாழ்வின் மலர்வு நோக்கி அழைத்துச்செல்ல விளைகிறார்.  

சமூகப்பிரக்ஞையோடு  குறுகிய பார்வைகள் அற்று மனிதம் என்னும் நிலையில் நின்று இதயசுத்தியுடன் தொழிற்படும் ஒரு செயற்பாட்டாளனாக மீராபாரதி இந்தக் கட்டுரைத்தொகுதியினூடு அதனை வாசிக்கிற ஒவ்வொருவருடனும் உரையாடுகிறார்.


எதிர் வரும் 20ம் திகதி லண்டனில் நிகழவிருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வில் அவரின் நூலை வாங்கி வாசித்து நேரிலும் உரையாடுங்கள்.

காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில் தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham

e12 6sg

அமைந்துள்ள (tube eastham அருகில்)

நன்றி

தேவ அபிராவின் குறிப்புடன்
நன்றி தேவஅபிரா Indran Thevaabira மற்றும் குருபரன் Nadarajah Kuruparan Globaltamilnews
http://tinyurl.com/oowc92t

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97803/language/ta-IN/--.aspx

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழாவுக்கு வரமுடியாவிட்டாலும் என்னுடைய சிறிய அன்பளிப்பை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி என்ன முழிக்கிறீங்கள் அந்த இரண்டு மாலைகளும் நான் அனுப்பியவைதான் உங்கள் முகநூலில் பார்த்தேன். யமுனா ராஜேந்திரனை தவிர மற்றையவர்கள் எல்லாரும் புலி எதிர்ப்பு புராணம் காதரக்கேட்டேன் எதிர்பார்த்த விடயமே ஆச்சரியபடஎதுவுமில்லை நன்றி .

Link to comment
Share on other sites

நிகழ்வுக்கு வருகை தந்த கிருபன் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி பல....

பெருமாள் அவர்கள் கூறுவது உண்மையாயின் அவருக்கும் நன்றி மாலை அவசியமற்றது...அதைவிட உங்கள் கருத்தை நீங்கள் பகிர்ந்திருந்தால் அது பெருமதியானது...

 

மலர் மாலையின் இரகசியம் என்னவென்று எனக்கும் தெரியாது...
நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஒருவர் வந்து இதை மீராபாரதியிடம் கொடுத்துவிட கூறினார்கள் எனக் சொல்லி தந்துவிட்டு சென்றார்....
நானும் யாரோ ஒரு நண்பர் சாப்பாடு கொடுத்தனுப்பியிருக்கின்றார் என்று திறந்து பார்த்தால் ,,,,
உள்ளே பூ மாலை....
நண்பர்கள் கூறினார்கள் 300 பௌவுன்ஸ் பெறுமதியாவது வரும் என....
எனது மரணத்திற்காக அனுப்பினார்களா...
மற்ற மாலை மரணம் நூலின் மரணத்திற்காக அனுப்பினார்களா....
இன்னும் தெரியாத இரகசியம் அது.....
ஆனாலும் அதைப் போட்டு கொண்டாடினோம் நாம்....
மனதில் சிறு பயத்துடன்....
மாலையில் என்ன இருக்கின்றது என்ற சந்தேகத்துடன்.....


இலண்டனில் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு – பாலன் தோழர்

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

death-in-london-002.jpg?w=372&h=282பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.death-in-london-017.jpg?w=327&h=249

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்

1395262_311911348952034_1698600360_a.jpg

பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

பாலசிங்கம் சுகுமார் தனது தலைமையுரையின்போது சுனாமியில் தனது ஒரே மகள் மரணமடைந்தபோது தானும் மனைவியும் துயரம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் தமது மகளின் நினைவுகள் தம்மை ஆற்றுப்படுத்தியதை தனது சொந்த அனுபவங்களினூடாக உரையாற்றினார். தனது மூதூர் கிராமம் பல மரணங்களை சந்தித்திருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் இனிமேல் யாவும் பேசப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் தான் தனது மகள் நினைவாக பல பொதுத் தொண்டுகள் செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

1380569_311911625618673_867727586_n.jpg
யமுனா ராஜேந்திரன் தனது உரையின்போது கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலுக்கு பின்னர் அதுபோன்று எந்த ஒரு மீள்பார்வை கொண்ட எழுத்தும் வரவில்லை என்றார். இயக்க அரசியலுக்கு அப்பால் முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த எழுத்துகள் வரவேண்டும் என்றும் அந்த வகையில் மீராபாரதியின் இந்த நூல் அதற்கு ஒரு முதற்படியாக இருக்கிறது என்றார்.
மு.நித்தியானந்தன் தனது உரையில் திலீபன் மரணம், ரஜனிதிரங்கமவின் மரணம் அவற்றின் அஞ்சலிகள் அதன் பின்னனியில் அமைந்த அரசியல்கள் குறித்து பேசினார். எல்லா காலம் சென்ற விரிவுரையாளர்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும்
1385267_311911785618657_1015115385_n.jpg

யாழ் பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவபீட பேராசிரியர் ரஜனி திரங்கமவின் படம் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலின்போது கவுன்சிலர் போல் சத்தியநேசன் பல நல்ல கருத்துகளை கூறினார். குறிப்பாக லண்டனில் தமிழ்மக்கள் மரண நிகழ்வின் போது பல சிரமங்களை எதிர் கொள்வதையும் தான் அதற்கு உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1376606_311911988951970_1000877198_n.jpg
சபேஸ் சுகுனசபேசன் அவர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலின்போது தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல அவர் புகைப்படங்களும் எடுத்தார். அவர் அதை இங்கு முடியுமானால் பரிமாறினால் நல்லது.
1378468_311913092285193_383016850_n.jpg
death-in-london-015.jpg?w=360&h=270
death-in-london-014.jpg?w=360&h=270
death-in-london-005.jpg?w=360&h=270
மரணம்
ஒரு நிகழ்வு..
ஒவ்வொரு கணமும் நடைபெறுகின்றது..
நாம் எதிர் கொள்கிறோமோ? இல்லையோ?
நாம் அதை கவனிக்கிறோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கிறது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..
1377295_311916295618206_1707673268_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிகழ்வுக்கு வருகை தந்த கிருபன் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி பல....

பெருமாள் அவர்கள் கூறுவது உண்மையாயின் அவருக்கும் நன்றி மாலை அவசியமற்றது...அதைவிட உங்கள் கருத்தை நீங்கள் பகிர்ந்திருந்தால் அது பெருமதியானது...

 

 

யமுனா ராஜேந்திரன் உரையாற்றும் போதே போல் சத்தியநேசன் சபையடக்கம் தெரியாது குறுக்கிட்டு பின் யமுனா உரையை குறுக்கிக்கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது இதுக்குள் நம்ம கருத்தா  ? மாலைகளின் உபயோகம் உங்களுக்கு புரிந்தது சந்தோஷமே.

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணமும் மீராவின் ஆற்றுதலும்

- யமுனா ராஜேந்திரன்

முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.

செல்வி அல்லது ரஜனி திரணகமா எந்தச் சூழலில் கொல்லப்பட்டனர்? சிவரமணியை தற்கொலை நோக்கி இட்டுச் சென்ற குறிப்பான சூழல் எது? கோவிந்தனைக் கொலை செய்த மனிதர்களின் தனிப்பட்ட அடையாளம் என்ன? பாலச்சந்திரனை அல்லது இசைப்பிரியாவை எப்படிக் கொன்றர்கள்? காணாமல் போன கவிஞர் புதவை இரத்தினதுரை இன்னும் உயிருடன் இருக்கிறரா இல்லையா? யுத்தத் தவிர்ப்பு வலயங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன? இவர்களை நினைவு கூறும் சூழல் அன்றன்று ஆயுத அதிகாரம் கொண்டவர்களால் மறுக்கப்படும்போது அவர்களின் உறவுகள் எவ்வாறு தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்வதும் தமது இழப்புக்களில் இருந்து மீள்வதும் சாத்தியம்? போருக்குப் பின்னான நிலைமையில் இலங்கையில் புகலிட நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசுகிறது மீராவின் மரணம் இழப்பு மலர்தல் நூல்.

இரண்டு பகுதிகளாலான இந்த நூலின் முதல் பகுதி மரணமும் இழப்பும் ஆற்றுதலும் அதிலிருந்து மீளுதலும் ஆன சூழல் குறித்து வரலாற்றில் நடந்த ஆய்வுகளை யூதர்கள் நாசிகள் போன்றவர்களின் அனுபவங்களை முன்நிறுத்திப் பேசுகிறது. இரண்டாவது பகுதி மீரா பாரதியின் தந்தையாரின் படுகொலை குறித்த அவரது துயரத்தைக் கடந்து போதலாக ஆத்மரீதியான பயணமாக இருக்கிறது. தனது சொந்தத் தந்தையின் இழப்பிலிருந்தான சுய தேடலில் இருந்து வரலாற்று ஆய்வுகளின் வழி ஈழ நிலைமைக்குத் தக்கபடி ஆற்றுதல் குறித்த கோட்பாடுகளை அதன் வழி உகந்த நடைமுறைகளை எட்ட நினைக்கிறார் மீரா.

இயக்க அரசியல் கருத்தியல் கொண்டிராதபோது அது வெறும் வெறுப்பு அரசியலாகவே எஞ்சும்@ அதனது தேவைகள் மறைந்த பின்பும் வெறுப்பு அரசியலாகவே இயக்க அரசியல் இன்றும் ஈழ நிலைமையில் எஞ்சி நிற்கிறது. இயக்கம் தாண்டிய அளவில் நடந்து முடிந்த படுகொலைகள் உள்கொலைகள் வெகுமக்கள் கொலைகள் அணுகப்படவில்லை. வன்மம் மிக்க இயக்க அரசியல் இங்கு ஆற்றப்படுத்தலுக்கான மிகப்பெரும் தடையாக இருக்கிறது. இது நிறைவேறும்போது அற மொழியில் இதனை ஆற்றுதல் எனவும் அரசியல் மொழியில் மக்கள்நேய உணர்வு எனவும் சொல்லலாம். துரதிருஷ்டவசமாக இன்றளவிலும் வன்மமே இங்கு அரசியல் உரையாடலாக இருக்கிறது. சபிப்பதும் வெறுத்தலும் அவதூறும் பழிவாங்கும் உணர்வும் துவேஷமும் தூஷணமும் ஒரு போதும் ஆற்றுதலை உருவாக்க முடியாது. மீராபாரதி இந்த வெளியில்தான் மிகச் சிக்கலான தவிர்க்கமுடியாத ஒரு உரையாடலைத் துவங்கி வைக்கிறார்.

மீரா ஓஷோவினால் அதிகம் பாதிப்பப் பெற்றிருக்கிறர். ஓஷோவுக்கு காமத்தைக் கடத்;தலும் வன்முறையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான முன்நிபந்தனைகள். அவரைப் பொருத்து தான் எனும் அகந்தையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான பிறிதொரு நிபந்தனை. இதன் அடிப்படையில் மரணத்தை ஒப்புதல் சடங்குகள் மற்றும் நினவு கூறுதலின் வழி மரணத்தைக் கடந்து செல்லுதல் பற்றி மீரா பேசுகிறார். கொலைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் சந்தேகத்தக்குரியவர்கள் உறுதிபடச் சொல்ல முடியாதவர்கள் என அனைவரையம் மன்னித்தல் எனும் வழியை சுமத்தப்பட்ட மரணமெனும் துயரிலிருந்து மீளுவதற்கான வழிமுறையாக மீரா முன்வைக்கிறார். எதிரியை மன்னித்தல் எனும்போது எதிரியின் குடும்பம் இலங்கை ராணுவத்தினர்; அவர்களது குழந்தைகள் குறித்தும் மீரா பேசுகிறார்.

இலங்கை ராணுவத்தின் இழப்புக்களைக் கவனிக்கவும் அவர்களது உளவியல் மேம்பாட்டுக்காகவும் இலங்கை அரசு மற்றும் படை அமைப்பின் நிர்வாகப் பொறிமுறை மருத்துவ மனைகள் மனநலக் காப்பகங்கள் இவற்றிற்கான பொருளாதார வளம் என அனைத்தும் அவர்களுக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகமொன்று இது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது தனது மக்களின் துயர் குறித்துக் கவலபை;பட்டால் மட்டும் போதும். சித்திரவiயாளனின் உளவியல் சிதைவு பற்றி சித்திரவதைக்கு உள்ளான மக்கள் கூட்டம் கவலைப்பட வேண்டிய அவசியமி;ல்லை. இதனையே கொலை செய்ததால் உளச்சிதைவுக்கு ஆட்படும் இஸ்ரேலிய ராணுவத்தின் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியில்லை கொல்லப்பட்ட எமது சந்ததிகள் பற்றித்தான் நான் கவலைப்பட வேண்டும் என்கிறார் பாலஸ்தீனக் கோட்பாட்டாளரும் கவிஞருமான ஹனன் அஸ்ராவி. ஈழ நிலைமையில் தமிழர்களை இலங்கை அரசு அடிப்படை உயிரிகளாகவே கருதாத சூழலில் இது குறித்த அக்கறை உடனடியில் ஈழத்தமிழ் மக்களிடம் சாத்தியமில்லை

மீராவின் தந்தையாரது படுகொலையை முன்வைத்த அவரது அனுபவம் சார்ந்த மூன்று கட்டுரைகள்தான் இந்நூலின் மையமான பகுதி. சொந்த அனுபவத்தை மக்கள்நேய உணர்விலிருந்து பொது அனுபவமாக மாற்றும் உன்னதமான மனத்தை மீரா பெற்றிருக்கிறார். தனது தந்தையைப் படுகொலை செய்தார்கள் என எந்தக் குறிப்பிட்ட மனிதரையும் குறிப்பிட்ட இயக்கத்தையும் அவர் குற்றம் சுமத்தவில்லை. இந்தப் படுகொலை எனும் நிகழ்வை ஈழ சமூகத்தில் கடும்பனியாகி உறைந்துபோன அரசியல் கலாச்சாரத்தின் பகுதியாக அவர் பார்க்கிறார். இந்தக் கலாச்சாரம் எவ்வாறு உருவாகியது அதனை எவ்வாறு முழு சமூகமும் அங்கீகரித்து மௌனித்தது என்பது குறித்து அந்த சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதற்கான நேரம் இதுவே எனவும் அவர் கோருகிறார்.

ஈழ நிலைமையில் ஆற்றுதல் என்பது நடைமுறையில் எவ்வாறெல்லாம் நிகழ முடியும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ளும் மீரா பாரதி இலக்கியம் சுய நினைவு கூறல்கள் துயர்களை எழுத்தில் பதிவு செய்தல் கோட்பாட்டு உருவாக்கம் உளவியல் ஆய்வுகள் என்றெல்லாம் நிகழ முடியும் என்கிறார். துரதிருஷ்டவசமான இதை எழுதுபவனின் வாசிப்பு அனுபவத்தில் யுத்த காலம் குறித்த ஈழ இலக்கியம் குறிப்பிட்ட அளவில் மேலும் பிளவுன்ட மனிதர்களுக்கடையில் வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பதாகவே இருக்கிறது. பெர்னார்ட் ஸ்லிங்கின் ரீடர் போன்ற ஒரு நாவல் கோவிந்தனினது புதியதோர் உலகம் நாவலை அடுத்து அதனை மீறின போராட்டம் குறித்த இருளும் ஒளியும் பற்றிய இலக்கியம் எதுவும் இங்கு உருவாகவில்லை.

மீராவின் நூல் இந்த இடைவெளியில் முகிழ்த்திருக்கும் புனைவல்லாத ஒரு முன்னோடி நூல். படைப்பமைதி கொண்ட நூல். ஆய்வு நோக்கு கோட்பாட்டு உருவாக்கம் அனுபவத்திலிருந்து மீளுதல் நோக்கிய பயணம் என எல்லா வகையிலும் மீராபாரதியின் மரணம் இழப்பு மலர்தல் எனும் இந்த நூல் ஈழப்பரப்பில் ஒரு முன்னோடி நூல். ஆற்றுதல் என்பதன் முதல்படி மரணங்களைச் சுமத்தியவர்கள் அதனை ஒப்பி அதற்குப் பொறுப்புக் கூறுதலாகும். தனிமனிதர்கள். இயக்கங்கள் படையினர் இலங்கை அரசு என அனைவரும் இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. மீரா பாரதியின்; நூலைத் தொடர்ந்து விவாதிப்பதன் வழி இந்தப் பிரம்மாண்டமான கேள்விகளுக்கு நியாயமாக நாம் விடை காண முயலலாம். அதற்கான நடைமுறைகளையும் உருவாக்க முயலலாம். தமது சொந்தத் துயரை சமூகத் துயராக பிரபஞ்சத் துயராகக் காணும் மீராபாரதி தனது சுயதேடலில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். இது ஈழ சமூகத்திலும் இலங்கையின் தெற்கிலும் எப்போது நேரும் எனும் ஆற்றாமை இந்த நூலை வாசித்து முடிக்கையில் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கிறது.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2253:2014-08-22-04-12-01&catid=55:2013-08-30-03-06-41&Itemid=71

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.