Jump to content

தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3516157464f2800264wm1.jpg

விடியலுக்காய் விழித்தெழுவோம்..!

சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசு திணித்துள்ள போர் எமது தாயக மண்ணை இடைவிடாது துரத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில்.. எமது மக்களின் ஒரே அபிலாசையான தனித் தமிழீழம் நோக்கிய நகர்வுகள் வீறுபெற்று எமது மக்களின் நீண்ட நாள் துயரங்கள் நீங்கி.. சுதந்திர தேசம் இப்புத்தாண்டோடு மலர அனைவரும் ஓரணியில் நின்று பாடுபடுவோமாக..!

--------------------

13-04-2008 தமிழ் சித்திரை புத்தாண்டு தினமாகும்.

இதனை முன்னிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய விசேட செய்தி இங்கு: http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry401187

கனேடியப் பிரதமர் வழங்கிய செய்தி இங்கு: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சித்திரை புத்தாண்டை யாழ். களத்தின் மூலம் ஞாபகப்படுத்திய நெடுக்காலபோவானுக்கு நன்றி. யாழ்.களத்திலுள்ள அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இப்புத்தாண்டு எல்லா தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிதே மலர வாழ்த்துக்கள்.

tny06.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சித்திரை புத்தாண்டை யாழ். களத்தின் மூலம் ஞாபகப்படுத்திய நெடுக்காலபோவானுக்கு நன்றி. யாழ்.களத்திலுள்ள அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களோட நிற்காமல்.. தாயகக் கடமைகளை ஏற்று கொண்டு செயற்படுத்த மன உறுதியை வளர்த்துக் கொண்டு செயற்பட உறுதி பூணுறதுதான் எதிர்பார்க்கப்படுகுது.. இன்றைய புத்தாண்டு வேளையில்..!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எல்லோருடைய கனவும் சீக்கிரம் நிறைவேற இறைவனை பிரார்த்திப்போம்

Link to comment
Share on other sites

சித்திரைப் புத்தாண்டினைக் கொண்டாடும் யாழ்கள அனைத்துள்ளங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது.

தமிழர் வாழ்வோடும், வரலாறோடும் பின்னிப் பிணைந்த சித்திரையின் மாட்சிக்கு எத்தனையோ சாட்சியங்களை இலக்கியங்கள் கொண்டுள்ளன.

இந்திர விழா, வசந்த விழா என்றெல்லாம் கொண்டாடி களித்தது இச் சித்திரைத் திருநாளில்தான். திங்களையும், செங்கதிரையும் மாமழையையும் போற்றி இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்ந்த தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மதிமுக சார்பில் தமிழ்ப் பெருமக்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இல.கணேசன்:

பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகத்தில் முதன் முதலாக நாகரீகம் பண்பாடு தோன்றி வளர்ந்த நாடு நம் நாடு. 5,000 ஆண்டுக்கு முந்தைய புராணங்களில் கிரகங்களின் அசைவு குறித்து சொல்லப்பட்டுள்ளது. மிகிரர் வகுத்து அளித்த மிகிர சம்ஹிதா இன்றும் வானவியலுக்கு ஆதாரமாக உள்ளது.

காலக் கணக்கை வகுத்த நம் முன்னவர்கள் இந்த சித்திரை மாதத்தை ஒட்டிய காலம் ஆண்டு துவங்குவதாக கணித்தார்கள்.

அரசின் கொள்கை காரணமாக ஆண்டின் துவக்கத்தை மாற்றியமைக்காக ஆலய நடைமுறைகளில் குறிக்கிடுவது அத்துமீறிய செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

ஆர்.எம். வீரப்பன்:

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனது வாழ்த்துச் செய்தியில்,

தை முதல்நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள்.

சித்திரை பிறக்கிற நாளன்று, இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.

இதைப் போன்றே, ஓகேனக்கல் குடிநீர் திட்டம் வருகிற ஆண்டில் பணி தொடங்கும். மேலும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஏற்பட்டுள்ள நீர்வள சிக்கல்களும் முதல்வர் கருணாநிதியின் தீர்க்கமான நடவடிக்கைகளால் தீர்க்கப்படும்.

வருகிற ஆண்டுகள் தை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டாகத் தொடங்கும் என்று எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.

டாக்டர் சேதுராமன்:

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் ஆண்டாக தைத் திங்கள் முதல் நாளை அரசு ஒருபுறம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இதனை தமிழ் ஆண்டாக அல்லாமல் சர்வாதாரி ஆண்டாக வரவேற்கலாம் என்று கூறியுள்ளார்.

சரத் குமார்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரைத் திருநாள் என்பது தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும்.

வேளாண்மை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர் வாழ்வில், வருகிற ஆண்டுக்குத் தேவையான முன் ஏற்பாடுகளில் புதுக்கணக்கு துவங்குவது, விளை நிலத்தை அபிவிருத்தி செய்வது போன்ற புதிய முயற்சிகள் தொடங்குவது இந்த சித்திரைத் திருநாளையொட்டிய சிறப்புக்களாகும்.

தமிழர் நலனைப் பேணிக் காப்பதில் முன்னிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அண்மைக் கால நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே ஓகேனக்கல் பிரச்சினையில் தமிழ் உலகம் காட்டிய ஒற்றுமை உணர்வு வளமான தமிழகத்தை உருவாக்குவதிலும் மேலோங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதே போல இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இந்து இயக்க கூட்டமைப்பின் விநாயகர் வி.முரளி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நன்றி: தற்றிஸ்தமிழ்

இதை விட ஜெயலலிதா அம்மையாரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதை இணைக்க எனக்கு மனசில்லை

சிலரின் வாழ்த்தில் ஏற்பில்லாவிட்டாலும் வாழ்த்துத் தெரிவித்தார்கள் என்பதற்காக...

Link to comment
Share on other sites

இதுகளை வாசிச்சு அழுகிறதா சிரிக்கறதா எண்டு தெரியேல்லை ???? :wub:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை வாசிச்சு அழுகிறதா சிரிக்கறதா எண்டு தெரியேல்லை ???? ^_^:lol:

அப்ப ஏன் வாசிக்கிறியள். இப்படிச் சொல்லிட்டு திரியவா..??! :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TamilNewYear6.jpg

tny06.gif

அனைவருக்கும்

இனிய

தமிழ்

புத்தாண்டு

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..

TamilNet wishes its readers a Happy & Prosperous Tamil, Malayala & Sinhala New Year!

sun_earth_zodiac_140.jpg

It is not only the Tamil New year, but also the New Year of Sinhalese (Alut Avurudu) and Malayalis (Vishu), even though the Kollam Era of Malayalam begins from the month of Aava'ni (August-September).

It is not appropriate to call it a Hindu New Year since vast majority of Hindus in India don't celebrate it a New Year. Yet, it is an auspicious day called Mesha-samkraanti for them. In Orissa, it is observed as Paana-samkraanti. The Sikhs and some Assamese also celebrate it as New Year under different names.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25298

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

நினைவு படுத்திய நெடுக்காலபோவானுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

இன்று பிறந்திருக்கும் சித்திரைப்புத்தாண்டு உலகெல்லாம் பரந்து வாழும் உறவுகள் உட்பட, சுதந்திரக்காற்றை சுவாசிக்க தாயகத்தில் ஏக்கத்துடன் காத்திருக்கும் எங்கள் உடன்பிறப்புகள் உட்பட அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிதாகவும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் அனைவருக்கும் என் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புறவுகள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நன்றி நெடுக்ஸ். :lol::lol:

Link to comment
Share on other sites

அன்பு உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் பிரகடனம் செய்து ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் இந்துமாமன்றம் புதுவருட செய்தியில் வலியுறுத்து

தமிழ் சிங்களப் புத்தாண்டு வேளை யிலாவது அரசாங்கம் போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த முன்வரவேண்டும். ஏ9 பாதையைத் திறந்து வடபகுதி மக்களுக் குத் தேவையான பொருள்களை அனுப்பி வைக்கவும் அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி யில் வலியுறுத்தி உள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடவிருக்கி றார்கள். இச்சந்தர்ப்பத்தில் கூட ஏ9 வீதி மூடப்பட்டிருப்பது வடபகுதி மக்கள் நாட் டின் ஏனைய பகுதி மக்களிடமிருந்து பிரிக் கப்பட்டு அவர்கள் இந்த நாட்டு மக்கள் அல்லர் என்ற உணர்வை ஏற்படுத்துகின் றது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களை யும் ஒன்றுபடுத்துவதுதான் அரசாங்கத்தின் கொள்கையானால் ஏன் இந்த நிலை தொடர வேண்டும்?

உச்ச நீதிமன்றத்தின் பல கட்டளைகள் உதாசீனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் மீது வீதித் தடை நிலையங்களில் துன்புறுத்தல் தொடர்கின்றது. மேலும் அவர்கள் கைது செய்யப்படுதலும் கடத்தப்படுதலும் தொடர் கின்றன. அவர்கள் நடமாடுகின்ற சுதந் திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு ஒழுங்குகள் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள பல தடங்கல் களும் நீக்கப்பட்டு, நியாயமானதும் நீதியான துமான அரசியல்தீர்வை வழங்கவேண்டும் என்று அரசாங்கத்தை பகிரங்கமாக வேண் டுகிறோம்.

இலங்கை அரசாங்கத்துடன் தங்கள் செல் வாக்கைப் பாவித்து உடனடியாக போர் நிறுத் தம் செய்யப்படவும், இந்நாட்டில் மீண்டு ம் சமாதானம் ஏற்பட நியாயமான நீதியான அரசியல் தீர்வு காணப்படவும் வலியுறுத்து மாறு இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்திற் கும் அழுத்தம் கொடுக்கும்படி பாரெல்லாம் பரந்துவாழும் இந்து மக்களை பகிரங்கமாக வேண்டுகிறோம். என்று உள்ளது (அ)

உதயன்

Link to comment
Share on other sites

இன்றைய தினம் தமிழ்ப் புத்தாண்டு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கு என்பது மகிழ்ச்சிக்குரியதே. புலத்து தொலைக்காட்சிகளில் இதுபற்றி பலரது பேட்டிகளும் ஒளிபரப்பாயின. இவ் ஆரம்பமே மகிழ்வாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.