Jump to content

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல


Recommended Posts

தண்டனை விலக்கல் கலாசாரம் ஆழமாக வேரூன்றி வருவது யாருக்கும் நல்லதல்ல

அமெரிக்கா மற்றும் பல மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தற்போதைய 19 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ளதாகிய இலங்கைக்கு எதிரானதென்று கூறப்படும் பிரேரணை மீது 22. 03. 2012 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இலங்கை இரு நாடுகள் தரப்பிலும் மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகள் மத்தியில் கடந்த பல நாட்களாக சூறாவளிப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணலாம். குறித்த பிரேரணையானது வெற்றியை எட்டக் கூடிய அளவுக்கு ஆதரவுள்ளதாக அறிக்கைகள் காணப்படுவதால் ராஜபக்ஷ அரசாங்கம் கவலை அடைந்துள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் இலங்கை தரப்பிலும் குறிப்பிடத்தக்களவு ஆதரவு திரட்டப்பட்டு வந்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இருந்த போதிலும் வெற்றி இலங்கையின் கைக்கெட்டும் என்று கூறுவதற்கில்லை என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்யப்படும் அதே வேளை இலங்கை தரப்பில் வேகமான காய் நகர்த்தல்கள் அதிகளவு அங்கலாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதியின் அறை கூவல்

சென்ற மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கை அரச தரப்பில் மேற் குறித்த பிரேரணைக் கெதிராக நடத்தப்பட்டு வருவதற்கப்பால் “இலங்கை மீது கை வையாதே“ இலங்கை மக்களே கிளருங்கள் என ஜனாதிபதி ராஜபக்ஷ சென்ற வாரம் அலரி மாளிகையில் அமைச்சர் விமல் வீரவன்ச சகிதம் வீடமைப்பு விடயம் தொடர்பானதொரு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அறை கூவல் விடுத்தார்.

இலங்கைக்கு வெளிநாட்டு அறிவுறுத்தல்கள், தலையீடுகள் எதுவுமே தேவையில்லை என்று அவர் கூறியதோடு யுத்தத்தில் வெற்றியீட்டிய கட்டத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அதாவது பயங்கரவாதம் என்ற ஈனத்தை முறியடிப்பதற்கு கூலிப்படைகளை அமர்த்தவில்லை. உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட இராணுவ மூலோபாயத்தின் அடிப்படையில் எமது தளபதிகள் வழி நடத்தலில் முற்றிலும் எமது வீரதீரமான படையணியினராலேயே யுத்தம் நடத்தப்பட்டது என்று கூறியதோடு நின்று விடாமல் எமது கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களின் அடிப்படையில் நாட்டை நடத்திச் செல்வதற்கு வேண்டிய அறிவு, ஆற்றல், பலம் யாவும் இலங்கையில் உண்டு. அந்நிய சக்திகளிடமிருந்து கற்றுக் கொள்வதற்கோ எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வழி காட்டுவதற்கோ ஒன்றுமே இல்லை என்று ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

மேலும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்றெல்லாம் பிரதேச வேறு பாடின்றி இனம், மதம், குலம் போன்றவை ரீதியாக வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்றும் ஒரு தாய் பிள்ளைகள் ஆகிய நாம் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறாகவே இலங்கை மக்கள் எல்லோரும் சமாதானத்தின் பலனை அனுபவிக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் அல்லவா?

நல்லாட்சி என்பது பலத்த கேள்விக் குறியாகியுள்ளது

ஜனாதிபதி ராஜபக்ஷ அலரிமாளிகையில் நிகழ்த்திய “ மலைப் பிரசங்கம்“ ஒரு வகையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வந்ததன் மறு பதிப்பாகவும் நோக்க வேண்டியுள்ளது. பன்னிரண்டுக்கும் அதிகமான நாடுகள் யுத்தத்தின் வெற்றிக்குக் கை கொடுத்ததாக அன்று ஜனாதிபதி கூறி வைத்தது ஞாபகம்.

குறிப்பாக இந்தியா வழங்கிய பங்களிப்பினை அரசாங்க உயர் மட்டத்தினர் வெகுவாக பாராட்டினர். மற்றும் அமெரிக்கா வழங்கிய புலனாய்வு மற்றும் செய்மதி சேவைகள் யுத்த வெற்றிக்கு கைகொடுத்த விடயமும் தெரியாத ஒன்றல்ல. மற்றும் வெகு ஜீவகாருண்ய பாணியில் மிகக் கவனமாக அன்று நடத்தப்பட்டது “ மனிதாபிமான செயற்பாடுகள் என்று அரசாங்கம் நடித்து வந்ததாயினும் அதனை யுத்தம் என்று இன்று ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளதைக் காணலாம்.

மற்றும் பிரதேச மற்றும் இன, மத, குல, வேறுபாடின்றி கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பதற்கு ஒரு தார்மீக யோக்கியதை வேண்டுமல்லவா?

ஏனென்றால் மேற் குறித்த சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து அனைத்து மக்களையும் உள்ளீர்த்து நல்லாட்சி நடத்துவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் புறப்படும் என்பது பலத்த கேள்விக்குறியாக உள்ளது. முற்றிலும் மாறாக அரசாங்கத்துக்குள்ளேயே இடம் பெற்று வரும் அடாவடித்தனங்களின் பெறுபேறுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் கொலைகள் ஆங்காங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாயினும் அது பொது மக்களால முறியடிக்கப்பட்டு கடத்தல் காரர்கள் ஒப்படைக்கப்பட்டனராயினும் அவர்கள் இராணுவத்தரப்பினர் என்பதும் விரைந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் உலகறிந்த விடயமாகி விட்டதல்லவா?

உதயசாந்த வேறு யாருமல்ல ஆளும் ஐ.ம.சு.மு. வைச் சேர்ந்த பிரமுகர் என்பதும் தெரியாததொன்றல்ல. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி உதய சாந்தவின் சகோதரர் ஜானக்க பிரபாத் தொதபேக்ம இதே இராணுவ பிரமுகர்கள் சிலரால் கடத்தப்பட்டு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இன்று இலங்கை அரசாங்கம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த தருணத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றனவென்றால் தண்டனை விலக்கல் கலாசாரமானது எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையே வெள்ளிடை மலை போல காட்டுகின்றது. இன்று அரசாங்க கட்சிக்காரரே இலக்கு வைக்கப்பட்டு வரும் சூழலில் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடிக்கும் நாள் வந்து கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.

சம்பிக்க ரணவக்கையின் சித்து விளையாட்டு மற்றும் இன்றைய ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுகள் மீது மீண்டும் நோக்குவோமாயின் முதற்கண் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் கவனத்தில் கொள்ளப்படக்கூடியதாகும். போர்க் குற்றச்சாட்டுகள் மீது விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான சர்வதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் ( ஆயர்) வேண்டுகோள் விடுத்திருப்பதன் காரணமாகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று தான் கூறியுள்ளதாக பத்திரிகையாளர்கள் மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்கு ரணவக்க பதிலளித்தார்.

சரி அப்படியானால் இது தொடர்பான விண்ணப்பக் கடிதத்தில் ஒப்பமிட்ட ஏனைய 30 கத்தோலிக்க அடிகள் மாருக்கும் எதிராக வழக்குத் தொடர தேவையில்லையா என்று எழுப்பிய கேள்விக்கு மக்கள் யாரும் தத்தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குச் சுதந்திரம் உண்டு.

ஆயினும் அவர்கள் நல்லிணக்க முயற்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் மன்னிக்கும் மனப்பான்மையுடன் நலமான எதிர் காலத்தை நோக்கி நிற்க வேண்டும் என்று ரணவக்க பதிலளித்தார். இனவாதத்தை வெறியாகக் கொண்டு இனக் கலவரம் ஒன்றினைத் தூண்டும் மனோ பாவத்தைக் கொண்டிருப்பவராகிய சம்பிக்க ரணவக்க நல்லிணக்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ரணவக்க தனது அறிவுக்கு எட்டாத விடயங்கள் பற்றியே பேசுகிறார் என்று ஆயர் பதிலடி கொடுத்துள்ளதையும் காண முடிகிறது.

தூதுவர் தமரா குணநாயகம் பேசுகிறார்

அமெரிக்காவின் பிரேரணையானது இலங்கையில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் கங்கணம் கட்டி நிற்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் கூறியதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் தமரா அம்மையார் அளித்த பேட்டியொன்றில் இப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் இலங்கை புவியியல் ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்திருப்பதாலும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகவும் அதற்கப்பால் உலகில் மிக அதிகளவு பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்டிருப்பதால் உலகாதிக்கம் செய்வதற்கு தென்கிழக்காசியாவில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறதாயினும் இது சுதந்திரமானதும் இறைமையுள்ளதுமான இலங்கை அரசாங்கத்துக்கு, அது மட்டுமல்லாமல் உலகில் படு மூர்க்கத் தனமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்ததாகிய இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கையாண்டு வரும் தந்திரோபாயங்கள் நிச்சயமாக ஒத்து வராதவை என்றும் அவர்கள் விரும்பும் அடி பணியும் அரசாங்கம் இலங்கையில் இன்று இல்லை என்றும் அர்த்தப்பட தமரா அம்மையார் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கடைப்பிடித்து வருவது அப்பட்டமான இரட்டை வேடமும் ஆசாடபூதித்தனமும் ஆகுமென்றும் அவர் கடிந்துள்ளார். அது உண்மைதான் என்றாலும் கூட இலங்கை அரசாங்கமும் நிழற் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னைப் பார்க்க வேண்டிய தேவையை மறந்து விடமுடியாது.

மன்னார் ஆயருக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய ( ஜே. எச். யூ.) தரப்பினர் வழக்குத் தொடரப் போகிறார்களாமே என்று எழுப்பிய கேள்விக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் (ஃஃகீஇ) ஏனையோரைப் போலவே ஆயரும் சாட்சியம் அளித்ததை அடுத்து அவர் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழு சில பரிந்துரைகளைச் செய்துள்ளது என்று தூதுவர் தமரா கூறியதோடு நாம் இப்போது சமாதானம் மற்றும் நல்லிணக்கப் பாதையில் பயணிக்கத் தலைப்பட வேண்டுமே தவிர சர்ச்சைகளிலும் முரண்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கத் வேண்டியதில்லை என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமரா அம்மையார் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ரோமா புரியில் வத்திக்கான் மையத்திற்கும் தான் சம காலத்தில் தூதுவராக பணியாற்றி வருவதால் ஙீஙஐ பாப்பாண்டவர் அருளப்பருடனும் வேறு பல வத்திக்கான உயர் மட்டத்தினரிடமும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் இலங்கை நிலைமை தொடர்பாக கொண்டிருக்கும் அறிவைப் பாராட்டியதோடு நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் அவர் அக மகிழ்ந்துள்ளதைக் காண முடிகிறது.

தூதுவர் என்பவர் ஒருவர் தனது நாட்டின் நன்மைக்காக வெளிநாடுகளில் தங்குபவர் என்று கூறப்படுவதுண்டு. அவர் பொய்களையும் கூறுபவர் என்றும் இது அர்த்தப்படும்.

மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக அதாவது வெளிநாடுகள் இலங்கை விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து வெளியிட்டுள்ளதை யாரும் அறிவர். அதில் தவறில்லை. ஆனால் அவர் அநேகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலித்து வருவதும் இலங்கை கத்தோலிக்க சமூகத்திற்குள் வடக்கு தெற்கு விரிசல்கள் உருவாகுவதைப் பார்த்து வாளா விருப்பதும்தான் கவலைக்குரியதாகும்.

http://www.thinakkural.com/articles/11431-2012-03-20-19-05-50.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.