Jump to content

நான் பார்த்த சாத்திரி!!


Recommended Posts

ஆரம்பத்திலே சாத்திரியார் ஒரு உண்மை சம்பவத்தை சிறுகதையாக யாழில் எழுதினார்.. அதுதான் அவரது முதலாவது படைப்போ என்னமோ.. சில வசன நடைகளை தவிர்த்து பார்க்கும்போது அங்கே அவரது எழுத்தார்வம் மிகவும் தாராளமாகவே பொதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதிலிருந்து அவரை அவரது ஆக்கங்கள் மூலமாக அவதானிக்க ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சம்பவங்கள் கடந்தகால அனுபவங்களாக.. நிகழ்வுகளின் விமர்சனங்களாக.. கட்டுரைகளாக வெகுவேகமாகவே அவரது எழுத்தாற்றலும் சிந்தனைகளும் விரிந்துகொண்டே சென்றன.

அவரது ஆரம்பகால விமர்சனக் கட்டுரைகள் மூஞ்சையைப் பொத்தி அடிக்கிறமாதிரி இருக்கும். மூஞ்சையைப் பொத்தி அடிச்சால் அடிவாங்கினவனும் திருப்பி அடிக்கத்தானே முயற்சிப்பான்.. அதேபோல எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் சிலர் மிகவும் சினத்துடன் 'அவர் ஒரு மனுசனா..' என்னும் போக்கில் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்கள். நானும் அப்போது யாழில் இணைந்து பதில் எழுதுங்கள் என்று கூறிவிடுவேன். அவர்கள் யாழில் உள்ளார்களா இல்லையா என்பதை நான் அறியேன். :)

ஆனால் சாத்திரியின் அந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது எனக்கு மனதுள் சிரிப்பாக இருக்கும். ஏனெனில் 90களில் Dosல் ஆதமி போன்ற தமிழ் எழுத்துகளை பாவித்த காலத்தில் வெளியிட்ட கடல் என்ற சஞ்சிகையிலும் இப்படியான வகை கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதனால் திரும்ப வந்த அடிகளையும் தாங்கியிருக்கிறோம். அதற்கும் ஒரு துணிவும் அதன் தாக்கங்களைத் தாங்கும் குடும்பமும் வேண்டுமல்லவா?! :)

எழுத்தாளன் என்பவன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன். அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால்தான் அந்த உணர்வுகளை எழுத்தில் இறக்கிவைக்க முடிகிறது. அதுமட்டுமல்ல.. தனது உணர்வுகளை மற்றவனுடன் பகிர்ந்துகொண்டு அதை ஒரு அறிவித்தலாக அல்லது அனுபவமாக தான் சார்ந்த சமுதாயத்தில் பதிவுசெய்ய விளைகிறான். இந்த விளைவு இல்லாவிட்டால் தாக்கும் உணர்வுகளைச் சமாளிக்க மது.. போன்ற எத்தனையோ விடயங்களை நாடிவிட்டுப் போகலாம்.

ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் எழுத்தாளன்.. அந்த உணர்வுகளை தனது எழுத்தனுபவங்களைக் கொண்டு நிதானமாகச் சிந்தித்து ஒரு சீரான முறையில் எழுத்தாக்குகிறான் என்பதுதானே உண்மை?! ஆக உணர்ச்சிவசப்படுபவன் அந்த உணர்வுகளை ஒரு பக்குவமான நிலைக்குகொண்டு வரும்போதுதானே எழுத்தாளனாகிறான். இது அந்த எழுத்தாளனது அனுபவங்களைப் பொறுத்தே காத்திரமாகிறது.

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு காலத்தில் ஏதாவது ஒன்று பேசப்படும் பொருளாக இருக்கும்

தற்போது யாழில் "சாத்திரி" :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழி அண்ணா தனது அனுபவத்தில் சாத்திரி என்ற கள உறவு பற்றி தெளிவுறச் சொல்லி இருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றே..!

சாத்திரி ஒரு எழுத்தாளனாக தான் சொல்ல விரும்புவதை தனது வடிவில் சொல்லக் கூடியவர். அதனால் அவர் தனது எழுத்துக்கள் மூலம் நிறைய வாசகர்களைக் கவர்ந்தும் இருக்கிறார். பிரச்சனையும் பட்டிருக்கிறார்.

அவருடைய பல ஆக்கங்களோடு முரண்படாத போதும் சில ஆக்கங்கள் மக்களது மேன்மை பொருந்திய நம்பிக்கைகளுக்கு பாதகமாக அமைந்திருந்த நிலையில் அவற்றோடு இணைந்து அவரோடு விவாதம் செய்திருக்கிறேன். என்ன அவர் இலகுவில் தனது தவறை ஒத்துக் கொள்ளமாட்டார்..! ஆனால் கோபப் படுவார். அது சோழியண்ணா சொன்னது போல.. எழுத்தாளர்களின் சுபாவம் போலும்..!

அண்மையில் அவர் கள விதிக்கு மாறாக நடந்து கொண்டதை இட்டு ஏற்பட்ட தடை என்பது அவருக்கான ஒரு வழிகாட்டலாக இருக்குமே தவிர அவரின் எழுத்தாளுமையை அது பாதிக்காது என்றே நம்புகிறேன். சோழியண்ணா சொன்னது போல தடையை + ve ஆக எடுத்து சாத்திரி தனது படைப்புக்களை இன்னும் ஸ்திரமாக உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிச்சயமா.. சாத்திரியோ.. எவருமோ.. அவரவரின் படைப்பளவில் நாம் தவறு காணும் போது.. அதை நிச்சயம் சுட்டிக்காட்டியும்.. மெருகு காணும் போது வாழ்த்தியும் நிற்போம்..! சாத்திரியும் வாசகர்களின் விமர்சனங்களை நக்கலாக நளினமாக நோக்காது அதனுள் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த கருத்துக்களை சிந்தனைகளை உணர்ந்து ஆக்கங்களில் அவற்றை பிரதிபலிப்பது.. இன்னும் இன்னும் அவர் தன்னை எழுத்துலகில் ஸ்தரப்படுத்த உதவும்.

எழுத்துக்களுக்கு அப்பால்.. யாழ் கள உறவாக.. சாத்திரி எமக்கும் நல்ல நண்பரே. அவரோடு தனிப்பட்ட முறையில் தொடர்புகள் இல்லாத போதும் பிரச்சனைகளும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

Link to comment
Share on other sites

காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி விழும். என்ட பாசையில சொன்னா வடிவான பெட்டயளத்தான் பெடியள் சுழட்டுவாங்கள் (இதுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை, எதோ அனுபவத்தில கண்டதை எழுதியிருக்கிறன் :icon_mrgreen:)

அப்பிடியும் மரம் அந்த இடத்திலயே நின்று காய்க்கும்.. ஆனா...?? மரம் பெட்டர் என்கிறீங்க.. அப்படித்தானே?!! :)

Link to comment
Share on other sites

தற்போது அதேநிலையில் சாத்திரி அவர்கள்.. என்னைப் பொறுத்தளவில் சாத்திரி ஒரு நல்ல எழுத்தாளர். இன்றைய நடப்புகளை தனது எழுத்தாற்றல்மூலம் வாசகரிடம் சேர்க்கும் வல்லமை பெற்றவர்.

உணர்வுகள் வரும் போகும்.. பெறும் உணர்வுகளை எவ்வாறு பொறுமையுடன் எழுத்தில் வடிக்கிறோமோ.. அதேபோல் எழுத்துக்கு வரும் கருத்துகளால் விமர்சனங்களால் ஏற்படும் உணர்வுளையும் பொறுமையுடன் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதுதான் எழுத்தாளனுக்கு அழகும் பெருமையும்.

எழுத்தால் அடிக்கும்போது அடிபடுபவன் தரும் அடிகளையும் தாங்கி திரும்ப தாக்கி வெற்றிபெறுவதுதான் ஒரு ஒரு எழுத்தாளனை சமூகத்தில் நிலைநிறுத்தும். ஆகவே சாத்திரி அவர்கள் தனக்கான தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் யாழில் கருத்துகளை ஆக்கங்களை தொடர்ந்து எழுதவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அவர் இக்கருத்தை பார்வையாளனாவது இருந்து அவதானித்து உள்வாங்குவார் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!! :rolleyes:

அவரது எழுத்துக்களை யாழ்களத்தில் மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் கதைகளும் நாட்குறிப்புகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. நகைச்சுவையாகவும் இரட்டை அர்த்தத்திலும் எழுதும் திறமை கொண்டவர். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

அவரோடு நான் சில சமயங்களில் முரண்பட்டே வந்துள்ளேன். அதை அவருக்கு தெரிவித்தும் வந்துள்ளேன். அவரும் சில திரிகளுக்கு என் போன்றவர்களை வரவேண்டாம் எழுதவேண்டாம் என்று சொல்லியே திரியை ஆரம்பிக்கும் அளவுக்கு எமக்குள் புரிந்துணர்வு இருந்துள்ளது. இருக்கிறது.

அதேநேரம் எதைப்பகிடியாக எழுதணும் எதை எழுதக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டையும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அதைர அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது நடப்பது சட்டமீறல் சம்பந்தமானது. அதை நிர்வாகமும் அவரும்தான் தீர்க்கணும்.

அதேநேரம் காமம் என எழுதப்பட்ட திரியில் முழுப்போராளிகளையும் ஒருவித காமகளியாட்டக்காறர்கள் என திசை திருப்பியதால் அதை மட்டுப்படுத்தும்படி நிர்வாகத்திடம் நானும் கேட்டுக்கொண்டேன் என்பதை தெரிவிப்பதிலலிருந்து நான் ஒழிந்து கொள்ளமாட்டேன்.

நான் யாழில் செலவிடும் நேரம் எவருக்கானது என்பதை என்றும் ஞாபகம் வைத்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நல்லவர், வல்லவர், வடிவானவர், நல்லா எழுதக் கூடியவர். அண்மைய கால அவரது எழுத்துக்கள் நிலாந்தன் தன் ஆறாவடு விமர்சனத்தில் சொல்லியிருந்தது போன்று யுத்தகாலங்களின் இன்னுமொரு சாட்சியாக நாளை நிச்சயம் பார்க்கப்படும். முள்ளிவாய்க்காள் கதிக்கு பின்னால் உறைந்து இருக்கும் பல உண்மைகளை துணிவுடன் எழுதி வருகின்றவர். சிலரது எழுத்துக்கள் வாசிக்கும் போது visual லாக மனதுக்குள் விரிந்து செல்லும்; சாத்திரியின் எழுத்து நடையும்இவ்வாறானதே.

எழுத்துகளுக்கு அப்பால், பல சமயங்களில் அவரது அலைவரிசையும் எனது அலைவரிசையும் ஒத்து போயிருப்பதை அவதானித்துள்ளேன். யாழுக்கு வெளியேயும் நண்பர்களாக தொடர்ந்து இருக்க இந்த அலைவரிசை தான் உதவுகின்றது என நினைக்கின்றேன்

அது நிலாந்தனா அல்லது சயந்தனா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

ஆகா மொத்தத்தில் சாத்திரி எழுதுவதிலும் தவறில்லை அவரை 15 நாள்மாட்டும் தடைசெய்ததும் தவறில்லை என்ற நிலைப்பாட்டுக்கே அனைவரும் வருகிறார்கள் போல?

சோழியன் அண்ணா சொன்னது போல்:

நானும் முன்பொரு முறை இதே யாழில் முற்றம் என்னும் பகுதியில் எனது ஆக்கங்களை உணர்ச்சிவசப்பட்டு அகற்றினேன். ஒரு சில தினங்களின் பின்னர் அது தவறு எனப் புரிந்து மீண்டும் நானே இணைத்தேன். இது வெறும் உணர்வுகளை கட்டுப்படுத்த தவறியதன் விளைவு.

அந்த உணர்வுக்கு சாத்திரி ஜயா அடிமையானார் அதனால் அவர் ஆக்கங்களை நீக்கினார்

அதே போல் யாழ்கள விதிகளுக்கு நிழலி கட்டுப்பட்டு அவரை தடை செய்தார்.

தட்ஸ் ஆல்.,,

இனி சாத்திரி செய்ய வேண்டியது 15 நாள் முடியா தனது பயனத்தை யாழில் தொடரவேண்டியது தான் அந்த பயணத்தில் நானும் ஒரு வாசகனாக வருகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னனைப்பொறுத்த வைரைக்கும் சாத்துக்கு நடந்தது எப்ப பிழை விடுவான் அதுவும் தேசியம் அல்லது புலி என்று பா(கா)த்து இருந்து பழி தீர்க்கப்பட்டிருக்கு.இங்கு யாரோ சொன்ன மாதிரி காய்கிற மரம் தான் எறி வாங்கும்.சாத்து தொடர்ந்தும் எறி வாங்க எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் எழுத்து பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல எழுத்தாளர். அவர் தொடர்ந்து யாழில் எழுதவேண்டும். எங்களால் அறியபடாத பல சம்பவங்களை அவருடைய பார்வையில் மிக தெளிவாக தருவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. அவருடைய எழுத்துகளை மேலும் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

Link to comment
Share on other sites

மூத்த தளபதி சோழியானை களத்தில் கண்டது மகிழ்ச்சி.

மறப்போம் மன்னிப்போம்

தடையை எடுத்து உடனேயே ஆளை உள்ளுக்கு விடுங்கப்பா.

ஆகா.. இந்த தள(அதி)பதி மோகன்தானே?!! :)

வணக்கம் சோழியன் அண்ணை! கன காலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்......ஒருசில விடயங்களை ஆணித்தரமாக சொல்லியிருக்கின்றீர்கள்.

தொடர்ந்து எழுதுபவர்களை இழக்கக் கூடாது என்ற உணர்வுதான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவின் இணைப்பில், சாத்திரிக்கு ஏன் முன்னறிவித்தல் கொடுக்கப் படவில்லை என்பதற்கான விளக்கம், மிகத் தெளிவாகவேயுள்ளது!

சாத்திரியும், ஒரு எழுத்தாளன் என்ற முறையில், மனத்தின் ஆதங்கத்தால், எடுக்கப்படும் முடிவுகள் நிலையானவை அல்ல என்பதை அறிவார்!

எத்தனை தடவைகள், நாங்கள் ஒரு காலத்தில் எடுத்த முடிவுகளைத் திரும்பிப்பார்க்கும் போது, நமக்குள்ளேயே சிரித்து விட்டிருக்கின்றோம்!

பதினைந்து நாட்கள், சாத்திரியார் தனது முடிவைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து இருப்பார்! ஒரு தெளிவையும் அடைந்திருப்பார்!

திரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியால் "கலாச்சாரக் காவலர்" என்று பட்டம் வழங்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். கோமகன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் காட்டிய எதிர்ப்பு தவறாகப் புரியப் பட்டு இப்படி ஒரு பெயர் கிடைத்தது. சாத்திரி உட்பட பல தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை விபரித்து அல்லது முன்னிறுத்தி எழுதுவதை "முற் போக்கு" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யாராவது முகம் சுழித்தாலும் "இது எல்லா சமூகத்திலும் நடப்பது தான், தமிழர்கள் விதி விலக்கா? " என்பார்கள். நான் இவர்களுக்கு எப்போதும் சொல்லும் பதில்: காமம், கலவி, ஓரினச் சேர்க்கை, பாலியல் தொழில் இவையெல்லாம் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலங்களிலும் நடப்பது, மனித இனம் இருக்கும் வரை தொடர்ந்து நடக்கும். ஒரு விஷயம் பல ஆண்டுகளாக நடக்கிறது என்பதற்காக அதை நாங்கள் அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. "பெண்ணடிமைத் தனம் கூட பல ஆண்டுகள் பழையது, அதனால் இது சாதாரணமான விஷயம்" என ஒரு "முற்போக்கு" எழுத்தாளர் எழுதி விட முடியுமா? பாலியல் தொழிலும் அன்ரி மாரோடான காம லீலைகளும் சாதாரணமான விடயங்கள் என்ற பிரதிமையை சாத்திரி உட்பட யாழில் எழுதும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவதை எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் யாழ் பல வயதினரும் பார்க்கும் ஒரு தளம். எதை எழுதுகிறோம் என்ற கட்டுப் பாடு இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

நன்றி ஜஸ்டின்,

எனது கருத்தும் இதுதான்.

நானும் சாத்தண்ணாவின் எழுத்தைவிட தலைவருடன் நின்று போராடிய முன்னாள் போராளி என்பதால்தான் அதிக விருப்பம், தலைவரின் மூச்சு காற்று பட கொடுத்து வைத்தவர்,

இதுவரை அவருடன் தனிமடலில் கூட தொடர்பு கொள்ளவில்லை, அவரில் உள்ள மதிப்பு பன்மடங்கு,

பிரான்ஸ் வரும் போது சந்திக்க விரும்பும் முதல் உறவு அவர்தான்

இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் தலைவரில் விசுவாசம் கொண்டவர்கள் என்று கூறமுடியாது,

முன்னையகாலங்களில் இயக்கத்தில் இருந்த இயக்க போராளிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளமாட்டார்கள் இவரைப்போல் சிலர் தான் இயக்கத்தில் இருந்ததாக கூறிக்கொண்டு இவர் எழுதும் தனது சொந்தகருத்துக்களை புனித இலட்சியம் கொண்ட இயக்கத்துக்கு மாசுவிளைவிக்கும் வகையில் எழுத அனுமதிக்கமுடியாது

சாத்திரியாரின் நகைச்சுவை எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அண்மையில்... அவரின் எழுத்துக்களில் பல மாற்றங்களை காணக் கூடியதாகவிருந்தது.

உதாரணத்துக்கு, சனல் 4 சம்பந்தமான தலைப்பு ஒன்றில்... "காந்தி செத்துட்டாரா?" என்று எழுதியதை வாசித்து முகம் சுழிக்க வேண்டி ஏற்பட்டது.

அவர் இன்னும் ஒரு கிழமையில் மீண்டும் வருவார், என்று நிச்சயமாக நம்புகின்றேன்.

நன்றி தமிழ்சிறி,

இவர் எழுதியதைப்பார்த்து என்னையும் ஆச்சரியப்பட வைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளிக்கு சரவெடி இல்லாமலா? யாழ் களம் சாத்தர் இல்லாமலா? 

அவர் இன்னும் சூடா வந்து தளத்தை பிரிச்சு மேயபோறார். 

Link to comment
Share on other sites

இதில் இன்னொரு விடயத்தையும் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்

நாம் 2008 இன் இறுதிப் பகுதியில் 'யாழ்கள கனடா உறவுகள் சந்திப்பை' நிகழ்த்தும் போது எம்மை தூற்றியவர்கள் பலர். தூற்றியதுடன் நின்று விடாமல் அதில் கலந்து கொண்ட கள உறவுகளின் மனைவிமாரையும் கொச்சையாக வேறு தளங்களில் எழுதி இருந்தனர். அந்த நேரத்தில் எம் நிகழ்வை வாழ்த்தி எம்மை பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களில் முக்கியமானவர் சாத்திரி !!

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

 

இன்று சாத்திரியின் வலைப்பூவிற்கு சென்று சர்ச்சைக்குரிய 'காமம்' எனும் பகுதியில் எழுதப்பட்டுள்ளதை வாசித்தேன். அதில் பல விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன. அதில் பயிற்சி முகாமில் நடைபெற்றதாக கூறப்படும் சில விடயங்களும் (காமம்) விபரிக்கப்பட்டு உள்ளன‌.

 

குறிப்பிட்ட தொடர்கதையில் காமம் பகுதியை நீக்குவதற்கு நிழலி அவர்களினால் கீழ்வருமாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

 

"பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன."

 

நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.

 

1. தொடர்கதையின் தலைப்பிலேயே கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை என்பதில் காமம் என்பதும் அடங்குகின்றது. வாசிக்கும்போது தொடர்கதையின் முதல்பகுதியிலேயே அதன் கனதி தெரிகின்றது. அவ்வாறான நிலையில் காமம் பகுதியும் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். காமம் பகுதி எவ்வளவு கனதியாய் இருக்கும் என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே அதை ஏன் நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளவில்லை? ஆரம்பத்தில் தொடர்கதையை அனுமதித்துவிட்டு இடையில் ஓர் பகுதியை அகற்றுவதை ஓர் படைப்பாளியாக என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

 

2. குறிப்பிட்ட தொடர்கதையை ஆயிரக்கணக்கில் வாசகர்கள், கருத்துக்கள உறவுகள் பார்வையிட்டுள்ளார்கள். ஏராளம் பதில் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் சிலர் (பலர்? எத்தனைபேர்? 4? 5? 6?) தனிமடல் ஊடகவும், முறைப்பாட்டுப்பெட்டி ஊடாகவும் கூறியதன் அடிப்படையில் கதையில் காமம் பகுதியை நீக்கியது தவறாகவே தெரிகின்றது. ஒரு ஆக்கம் வந்தால் போற்றியும், தூற்றியும் கருத்துக்கள் வருவது வழமை. அதிலும் சர்ச்சைக்குரிய பகுதிகள் வரும்போது கருத்தாளர்கள் உணர்ச்சிவசப்படுவது வழமை. அதற்காக அடி, நுனி தெரியாமல் நடுவால் கத்தரித்தால் அடிப்படையில் விவாதம் என்பது பொருள் அற்றதாகிவிடும். இதை இயலாமையின் வெளிப்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது. யதார்த்தத்திற்கு புறம்பான ஓர் மாயை உலகை சிருஷ்டித்து அந்த மாயை உலகினுள் கனவு காண்பதற்கே இப்படியான 'மறைப்புக்கள்' உதவும்.

 

3. சாத்திரி தனது தொடர்கதையின் ஓர் பகுதி நீக்கப்பட்டதால் மனமுடைந்து தான் எழுதிய பதிவுகளை நீக்குவதற்கு யாழ் நிர்வாகமும் நிச்சயம் காரணமாக அமைந்துள்ளது. நீங்கள் ஓர் படைப்பாளியாக இருந்தால் அதை - வேதனையை, அவமானத்தை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். யாழ் இணையம் பற்றி மோகன் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நேரம் இல்லை, அதிககவனம் செலுத்தமுடியவில்லை என்று. இவ்வாறே கருத்துக்களத்தை நிர்வகிக்கும் நிழலி, இணையவனின் சிரமங்களையும் நாம் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். அமரர் வசம்பு அவர்களின் நினைவுப்பகிர்வு பற்றிய ஓர் பகுதியில் கருத்துக்களம் பற்றிய சில சிக்கல்களை, சிரமங்களை நான் ஏற்கனவே கூறினேன். இந்தவகையில்...

 

இத்தகைய கசப்பான அனுபவங்கள், நடந்தவை நடந்தது போக... சாத்திரிவிடயத்தில் யாழ் கருத்துக்களத்தில் விடயங்கள் சுமுகமாகவும், நியாயத்துடனும் அமைவதற்கும், கையாளப்படுவதற்கும் கூறக்கூடிய ஆலோசனைகள்:

 

1. சாத்திரியின் வலைப்பூவில் ஏற்கனவே யாழில் பதியப்பட்ட பிரதான கருத்துக்கள் உள்ளன. எனவே நீக்கப்பட்ட கருத்துக்களை யாழில் மீண்டும் அந்தந்த இடங்களில் ஒட்டியதன் பின் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ள கதைகளை மீண்டும் கதைகதையாம் பகுதிக்கு இலகுவில் கொண்டுவரப்படமுடியும். இதற்கு சாத்திரியினதும், நிர்வாகத்தினதும் ஒத்துழைப்பு தேவை.

 

2. சாத்திரியின் கவர்ச்சி, காதல், காமம், கண்ணியமான நட்பு, கடந்துவந்தபாதை தொடர்கதையை ஆரம்பத்தில் உள்ளதுபோலவே தொடர அனைவரும் ஒத்துழையுங்கள். கதையில் கூறப்படும் பகுதிகளுடன் உடன்பாடு இல்லாவிட்டால் உங்கள் பார்வையை அங்கு கூறுங்கள், தவறுகள் காணப்பட்டால் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இவை சாத்தியப்படாவிட்டால் கதையை வாசிக்காதீர்கள்.

 

சாத்திரியின் இத்தொடர்கதை ஏறக்குறைய ஒருவரின் (சாத்திரியின்) சுயசரிதைபோல் உள்ளது. சுயசரிதையின் ஓர் பகுதியை எங்களுக்கு சொல்லாதே என்றும் எமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே கூறு என்றும் படைப்பாளிக்கு கட்டளையிடுவதாகவே இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கவேண்டியுள்ளது.

 

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்புக்கு இரன்டாவது பச்சை குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது போராட்டம் பின்னடைந்துவிட்டது என்று சொல்லுபவர்களே, அதனுடைய காரணங்கள் என்னவென்று பார்க்க விளைவதில்லை. போராடத்தில் ஈடுபட்டவர்களும் மனிதர்கள்தான் அவர்களும் பல்வேறுபட்ட நெருகடிகளுக்கூடகவே பயணித்தார்கள் என்பதையும் , அவர்களுக்கும் ஏனையவைகளைப் போல மன உளைச்சல்கள் இருந்திருக்கும், இருந்தது என்று சொன்னால் அது அவர்களை பற்றி நாங்கள் கொண்டிருந்த (மாய) விம்பத்தை தகர்த்து விடும், எனவே அப்படியான செய்திகள், கதைகள் எழுதக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்கள். அப்படி எழுதுபவர்களையும் "மாற்று" கருத்து கொண்டவர்கள் என்ற (இழிவான) பட்டத்தை வழங்க தயாராக உள்ளார்கள். சின்ன வயதில் எனது பேரனார் சொன்ன "அவை மற்ற பார்ட்டி ஆக்கள்" என்பதன் அர்த்தம் இப்போதுதான் அதன் சரியான பொருளுடன்/வலியுடன் தெரிகிறது.

ஆயுத போராட்டத்தின் முடிவில், ஆயிரம் ஆயிரம் போராளிகளும், தளபதிகளும், சரணடையும் போது அல்லது சிலரின்/பலரின் வார்த்தையாலப்படி "ஆயுதங்களை மௌனித்த" போது "செய் அல்லது செத்துமடி" என்கிறவர்களாய் எதிரியிடம் போகவில்லை, நாங்களும் உங்களில் ஒருவர் எங்களுக்கும் உங்களை போன்ற வாழுகிற, அழுகிற, சிரிக்கிற உரிமைகள் இருக்கு, எங்களையும் உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள் என்றுதான் வந்தார்கள். அவர்களில் பலர்/சிலரைத்தான் சிங்களம் மனித வேட்டையாடினது, அதைதான் இன்று நாங்கள் பேசுகிறோம். அப்படி அழிந்த மறைந்த மனிதர்களுக்குத்தான் நிஜாயம் கேட்கிறோம்? அந்த பாதையை தாண்டி வந்தர்வர்களுக்குதான் வாழ்வுதேடி அவர்களும் அலைகிறார்கள் எங்களில் இயன்றவர்களும் உதவுகிறார்கள்.

இதிலே அவர்களுக்கும் இடையிடையே "மனிதகுனங்ககளும்" இருந்தது என்று எழுதினால் அதை தடை செயவேண்டும் என்று கடிதம் எழுதும் அன்பர்களும், அது காலத்தின் தேவை என்பவர்களும், ஒன்றை மறந்து விடுகிறார்கள், பிரபாகரனையும் மனிதனாக சிந்திக்க மறக்கும் கூட்டந்தான் சனல் நாலில் இருந்த எல்லாவற்றையும் அதிலே இருந்த பிரபாகரனின் இறப்பு பற்றிய பகுதியால் தவற விட்டு விட்டு இருக்கிறார்கள். காலம் இன்னும் ஓடும், சனல் நாலில் அடுத்த வெளியீடு என்னவாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்? அப்படி வரும் போது எங்களில் இன்னும் சிலர் மொட்டாக்கு போடவேண்டி வரலாம். அதுவரைக்கும் "மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்....."

மற்றும்படி சாத்திரி என்ன சாத்திரி, எழுதுங்கோ ஆனால் நாங்கள் எதை விரும்புவோம் என்று நாடி பிடித்து எழுதுங்கள். நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் எங்கடை நாலு பச்சை விழாட்டி அது உங்கடை கடைகணக்கு கொப்பியில எழுதின புண்ணாக்கு கணக்குத்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.