Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 1

மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்

உயிரொளி வீச‌ உலகில் வாழலாம்.

திகதி 2

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி

போல் இனிதாவதெங்கும் காணோம்.

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

திகதி 4

உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும்

நிமிர்ந்து பார்க்க செய்யும்.

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 6

சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:

சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.

திகதி 7

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்

சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?

திகதி 8

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

திகதி 9

அர்த்தமற்ற‌ கண்ட‌றியாத புதுப் பெயர்களை விட‌

அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.

திகதி 10

சுதந்திர‌ம் தருபவர் முன் அட‌ங்கி இரு:

அட‌க்குபவர் முன் சுதந்திர‌மாய் இரு.

திகதி 11

சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!

சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.

திகதி 12

புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று

வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.

திகதி 13

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

திகதி 14

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நாட்காட்டி பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...தொடருங்கோ..

Link to comment
Share on other sites

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

இங்கை தான் ரதியக்கா நிக்கிறா :D:D தொடருங்கோ :):icon_idea: 1 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ரொம்ப அற்ராகிற்றிவ்வா இருக்கு...பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு

எனக்குப் பிடித்தது, இது தான் ரதி!

தொடருங்கள், உங்கள் கலண்டர் பொன்மொழிகளை!!!

Link to comment
Share on other sites

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

மனச்சாட்சி பலருக்கு இல்லாததால் தான் இன்று உலகமே ஒரு பதட்ட நிலையில் உள்ளது.

நாட்காட்டி பொன்மொழிகளை தொடருங்கள்,ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

உள்ளங்கள் பொங்க- உணர்வுகள் பொங்க

-உவகைகள் பொங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு. :D :D :D

இதை விட சிறப்பாக சொல்ல இயலாது,,,,,,,,,,,

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது.

ரதி இது உங்கள் சொந்த ஆக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் மிக்க நன்றிகள்...தப்பிலி எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் எனத் தான் ஆசை ஆனால் எழுதத் தெரியாதே :) ...இதை நான் சொந்தமாக எழுதியிருந்தேன் என நினைத்து யாராவது பாராட்டியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ...இதை நான் வாக்கிய பஞ்சாங்க கலண்ட‌ரில் இருந்து சுட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

அப்படியும் ஒன்று இருக்கின்றதா சிறீ அண்ணா ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம்

காதலின் அருமை காணா வெறுமணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் பொன்மொழிப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் .............ஒரு பச்சை

..........மேலும் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லாமே நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

விவாஹ சுப முகூர்த்தத்தின் நோக்கம்,மணமக்களின் நல்வாழ்வே தவிர,

விருந்தினர்கள் விருந்துண்ணும் பொழுதோ,விடுப்பெடுக்கும் நாளோ அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா,பூந்தோட்டம்

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

நான் நினைக்கிறேன் அங்கே என்டால் ஊரில்,இங்கே என்டால் புலத்தில்...இங்கே பொண்ணுங்கள் புடவை உடுப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறேன் :unsure::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.