Jump to content

தமிழ் சினிமா கதைச் சுருக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா கதைச் சுருக்கம்

சு.தியடோர் பாஸ்கரன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக சலனப்படம் ஒன்று மதராஸ் விக்டோரியா பப்ளிக் ஹாலில் காட்டப்பட்ட போது இது ஒரு அசுர சக்தியின் பிறப்பு என்று யாரும் அறிந்திருக்கவில்லை. சீக்கிரமே நகரின் சில இடங்களில் சாலையோரக் காட்சிகளாக படங்கள் காட்டப்பட்டன.. மெக்னீஷிய விளக்கு ஒளியில் - நகருக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை - கையால் சுழற்றப்பட்ட புரொஜக்டர் மூலம் ஐந்தாறு நிமிடங்கள் மட்டுமே ஓடிய துண்டுப்படங்கள், காட்சித்துணுக்குகள் போல, நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்பட்டன.

இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இல்லையென்றாலும் முதல் சில ஆண்டுகளில் திரைப்படக்காட்சிகள் ஒரு அதிசயம் போல மக்களால் எதிர்கொள்ளப்பட்டன. படங்கள் அசைகின்றனவே. மேலை நாடுகளிலிருந்து கதைப்படங்கள் வர ஆரம்பித்தபின் இக்காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நிரந்தர கொட்டகைகள் கட்டப்பட்டன. இன்றும் இருக்கும் எலெக்ட்ரிக் தியேட்டர்தான் முதன்முதலில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட திரையரங்கம். அதையடுத்து வெங்கையா என்பவர் கெயிட்டி கொட்டகையை 1913இல் கட்டினார்.

படங்காட்டிகள்

சினிமா தொழிலுக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு. தயாரிப்பு , வினியோகம், படங்காட்டுதல். (Production, distribution and exhibition) இதில் படங் காட்டுதல் மூலம் தான் முதன் முதலாக தென்னிந்திய சினிமா தொழில் தோன்றியது. மனைவியின் வைர மாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட் பிரெஞ்சுக்காரர் டுபான் (Dupont) இடமிருந்து, 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜெக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்து பின்னர் திருவனந்தபுரம், மதுரை நகர்களில் முகாமிட்டு மதராஸுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னவ் நகரங்களில் படக்காட்சிகள் நடத்தி விட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார். அங்கே எஸ்பிளனேடில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டு சலனப்படங்களைத் திரையிட்டார். இதே கால கட்டத்தில் வெங்கையா, செல்லம் செட்டியார் போன்ற படங்காட்டிகள் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையிலிருக்கும்போது சினிமா தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடி எடுத்து வைத்தார். புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று. பின்னர் கோயம்புத்தூர் சென்று வெரைட்டி ஹால் என்ற பெரிய திரையரங்கு ஒன்று கட்டியதல்லாமல் ‘வள்ளிதிருமணம்’ (1933) போன்ற தமிழ் பேசும்படங்களையும் தயாரித்தார்.

baskaran-(2).jpg

படைப்பாளிகள்

இந்தியாவில் பல இடங்களில் படங்காட்டிகள் பயணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், சென்னையில் ஆர்.நடராஜ முதலியாருக்குப் படம் தயாரிக்கும் கனவு வந்தது. வெளிநாட்டுப் படங்களே திரையிடப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இந்தியா பிலிம்ஸ் என்ற ஸ்டுடியோவை கீழ்பாக்கத்தில் நிறுவி 1916இல் ‘கீசகவதம்’ என்ற படத்தை உருவாக்கினார். இதுதான் முதல் தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் தமிழில்தான் பேசினார்கள்.

ஒலித்தடம் இல்லாததால் அவர்கள் பேச்சு திரை யில் எழுத்து உருவில் விவரண அட்டைகள் (title cards) மூலம் காட்டப்பட்டன. சார்லி சாப்ளினின் ‘Gold Rush’ போன்ற படங்களில் பார்த்திருப்பீர்களே? ஒன்றன்பின் ஒன்றாகப் பல படப்பிடிப்பு தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டன. அதில் பெரியதும் அதிகமான படங்களைத் தயாரித்ததும் ஏ.நாராயணன் உருவாக்கிய ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன். ஏறக்குறைய நூறாண்டுகள் காலனி ஆதிக்கத்தில் உழன்று கொண்டிருந்த ஒரு சமூகத்தில் ஒரு புதிய நிகழ்கலை தோன்றியது.

தென்னிந்திய சினிமாவின் மௌனப்படக்காலம் 16 ஆண்டுகள் நீடித்தது. 124 படங்கள் வெளிவந்திருந் தாலும் ஒன்றைத்தவிர (மார்த்தாண்டவர்மன் 1931) மற்ற எந்தப்படங்களும் எஞ்சவில்லை.

பிறகு ஒலி வந்தது

baskaran-(3).jpg

ஒலி வந்தபின் சினிமாவின் வீச்சு பெருகியது. மளமளவென்று சினிமா அரங்குகள் எழுந்தன. எல்லா மக்களுக்கும் பொதுவான, யாவரும் சேர்ந்து அனுபவிக் கக்கூடிய ஒரு ஜனநாயக பொழுதுபோக்கு உருவானது. இதுவே ஒரு பெரிய சமுதாயப் புரட்சி. ஜாதி, சமயம், வகுப்பு, இனம் என்ற பாகுபாடுகளைத் தாண்டி ஒரே கூரையின்கீழ் எல்லா மக்களும் கூடக்கூடிய ஒரு முதல் இடமாக சினிமா அரங்கு உருவானது.

நமது கலைகளில் சினிமாவின் ஆரம்பம் பற்றி மட்டுமே நமக்கு ஓரளவு தெரியும். பேசும்படம் தோன்றியபின் பாட்டு, வாய்ப்பேச்சு என்ற பாரம்பரியத்தை தமிழ் சினிமா திரையிலும் தொடர்ந்தபோது அதற்கென சில அடையாளங்கள் உருவானது. இங்கே நாம் மனதில் கொள்ளவேண்டியது என்னவென்றால் தமிழ் பேசும்படம் அதன் மௌன சகாப்தத்தின் தொடர்ச்சியாக இருக்கவில்லை.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் சலனப்படங்களிலிருந்து பேசும்படம் பரிணாம வளர்ச்சியடைந்தது. ஆனால் இங்கேயோ 16 வருட சலனப்பட பாரம்பரியத்தை விட்டுவிட்டு, பாட்டு, நடனம், இசையமைப்பு. பாடும் நடிகர்கள் இவர்களைக்கொண்ட கம்பெனி நாடக பாரம்பரி யத்தை திரை ஸ்வீகரித்துக் கொண்டது. ஒரு ரெடிமேட் நிகழ்கலை தயார் நிலையில் அவர்களுக்குக் கிடைத்தது. ஆரம்பகால தமிழ் பேசும் படங்கள் படமாக்கப்பட்ட நாடகங்களே. சினிமா எனும் கலையில் தனித்தன்மை, தனி இயல்புகளுடன் வளர்வது தடுக்கப்பட்டது. இந்நிலையிலிருந்து விடுபட பல பத்தாண்டுகள் ஆயின. பேசும் படம் தோன்றி முதல் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப்படங்கள் பம்பாய், கொல்கத்தா, புனா, கோலாப்பூர் போன்ற நகரங்களில் தயாரிக்கப்பட்டன. நாடகக்கம்பெனிகளின் நடிகர்கள், ஒரு குழுவாக இந்த ஊர்களுக்குச் சென்று சீக்கிரமே படத்தை முடித்தனர்.

தமிழ்நாட்டில் ஜெமினி, ஜூபிடர், ஏ.வி.எம். போன்ற ஸ்டுடியோக்கள் நிறுவப்பட்ட பின்னர் படத்தயாரிப்பு தொழில் வெகுவேகமாக வளர ஆரம்பித்தது. தொடர்ந்த சில பத்தாண்டுகளில் தமிழ் சினிமா பெரும் வளர்ச்சி கண்டு உலகின் ஒரு முக்கியமான சினிமாவாக உருவானது.

இந்தி, தெலுங்கு சினிமா போலவே தொடக்க கால தமிழ்ப்படங்களும் பாட்டுகள் நிறைந்த புராணக் கதைகளாகவே இருந்தன. இது கம்பெனி நாடகப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. பேசும்படம் வந்து சில ஆண்டுகளிலேயே சினிமா பாட்டு ஏறக்குறைய ஒரு தனிக் கலையாக வளர்ந்து மக்களிடையே சினிமாவின் பிடிப்பை இறுக்கமாக்கியது. கிராமபோன் தட்டுகளும், மக்கள் வாங்கக்கூடிய விலையில் கிடைத்த கிராமபோன்களும் சினிமா பாட்டுகளைப் பிரபலப் படுத்தின. சினிமா கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கூறாகப் பாட்டு உருவானது. இன்று மேலை நாடுகளில் பாப் இசை இருக்கும் இடத்தில் தமிழகத்தில் சினிமா பாட்டுகள் இருக்கின்றன.

சுதந்திரம் வந்தபின் கிராமப்புறங்களுக்கு மின்சாரம் பரவியதோடு அங்கு சினிமாவும், நம் நாட்டிற்கே உரித்தான டூரிங் டாக்கீஸ் எனும் உத்தியுடன், செல்ல முடிந்தது. 1950களில் திரைப்படம் தமிழகத்தில் நன்கு பரவி மக்களின் வாழ்வில் ஒன்றாகக் கலந்து விட்டது. சா.கந்தசாமி கூறியது போல தமிழரின் கவனத்தை முற்றிலுமாக ஈர்த்துக்கொண்டிருப்பவை மூன்று கூறுகள். . . சினிமா, மதம், அரசியல் என்ற வரிசையில். தமிழ்நாட்டில் உருவான அரசியல், சமூக இயக்கங்கள் சினிமாவை பாதித்தன. சினிமாவும் இந்த இயக்கங்களின் கரிசனைகளைப் பிரதிபலிக்க ஆரம்பித்தன. தமிழ்நாட்டின் சினிமா-அரசியல் ஊடாட்டம் மேலை நாட்டுக் கல்விப்புல ஆய்வாளர் களை ஈர்க்க ஆரம்பித்தது. இதில் முதலில் ஆர்வம் காட்டியவர் ராபர்ட் ஹார்ட்கிரேவ். சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏ.கே. ராமனுஜனின் மாணவராக இருந்த போது இந்த ஈடுபாடு ஏற்பட்டது.

சினிமாவும் அரசியலும்

தமிழ் பேசும் படம் தோன்றியதும் நாடகக் கம்பெனிகளிலிருந்த கலைஞர்கள் பெருமளவில் சினிமா உலகிற்கு புலம் பெயர்ந்தனர். 1919ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் படுகொலை என்றறியப்பட்ட ஜாலியன் வாலாபாக் நிகழ்வு நாடெங்கும் ஏற்படுத்திய அதிர்வு நாடகக்கலைஞர்களை சுதந்திரப் போராட் டத்திற்குள் கொண்டு வந்திருந்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் சினிமா ஸ்டுடியோக்களுக்கு நுழைந்த போது தங்களுடன் கூடவே அந்த அரசியல் சிந்தாந்தத்தையும் பிரச்சார முறைகளையும் தேசிய ஈடுபாட்டையும் கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சினிமா கலைஞர்கள் இரண்டு வகையில் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார்கள். திரையின் மூலம் தேசிய கருத்துகளைப் பரப்புவது. இரண்டாவது, நடிகர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது. இத்தகைய பிணைப்பை ஊக்குவித்தவர் சத்தியமூர்த்தி. கலைஞர்கள் யாவரையும் காங்கிரஸுக்குள் கொண்டு வந்து அவர் ஆதரவு காட்டினார். தமிழ்சினிமாவின் சகல பரிமாணங்களையும் அரசியலுக்கு முதலில் பயன்படுத்தியது காங்கிரஸ்தான். தமிழ்நாட்டில் சினிமா-அரசியல் தொடர்பு இவ்வாறுதான் ஆரம்பித்தது.

1937 முதல் 1939 வரை ராஜாஜி முதல்வராக மதராஸ் ராஜதானியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது தணிக்கை முறை நடைமுறையில் இல்லாத நிலையில் பல பிரச்சாரப்படங்கள் ‘தியாக பூமி’, ‘தேசமுன்னேற்றம்’, ‘மாத்ருபூமி’ என வெளியாயின. எந்தப்படமும் அவை வெளியானபோது தடை செய்யப் படவில்லை. எந்தக் காட்சியும் கத்தரிக்கப்பட வுமில்லை.. ‘மாத்ருபூமி’யில் வந்த ‘நமது ஜென்ம பூமி நமது ஜென்ம பூமி’ பாட்டு வெகு பிரபலமாகி பள்ளிகளில் பாடப்பட்டது.

கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல சினிமா நடிகர்கள், காங்கிரஸ் கட்சிக்குத் தங்களது ஆதரவைத் தந்து நேரடி அரசியலில் ஈடுபட்டனர். 1937 பொதுத் தேர்தலில் சுந்தராம்பாள், மற்ற பல நடிகர்களுடன் காங்கிரஸுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1958இல் காங்கிரஸ் ஆதரவில் மேல்சபையில் இடம் பெற்ற இவர்தான் நாட்டிலேயே முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைந்த திரைப்பட நடிகர்.

சத்தியமூர்த்தி 1943இல் மறைகிறார். சினிமா கலைஞர்கள் சரியான தலைமையில்லாமல் இருந்தனர். அந்த மாபெரும் சக்தியை அன்றைய தி.மு.க. தலைவர் கள் அண்ணாதுரை, கருணாநிதி போன்றார் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களும் சினிமா வில் வசனகர்த்தாக்களாக இயங்கினர். ஆனால், பெரியார், சினிமாக்காரர்களைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தார். கலைஞர்களை கூத்தாடிகள் என்று இகழ்ந்த காமராஜர் கூட 1967 தேர்தலில் சிவாஜியின் உதவியை நாட வேண்டி வந்த்து.

திராவிட முன்னேற்றக் கழகம் சினிமாவில் ஈடுபாடு கொண்டபின், பல கலைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். கே.ஆர்.ராமசாமியும் என்.எஸ்.கிருஷ்ண னும் தி.மு.க. விற்கு ஆதரவு கொடுத்தனர். எஸ்.எஸ்.ஆர். போன்ற நடிகர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர். பெரிய அளவில் தன் பிரபலத்தை தி.மு.க. பயன் படுத்திக்கொள்ள எம்.ஜி.ஆர் அனுமதி கொடுத்தார். கட்சியின் நிழல் போல செயல்பட்ட அவரது ரசிகர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக ஒரே கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அதனால்தான் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி ஆரம்பித்தபோது ஒருமுகமாக அவரை ஆதரித் தனர். ஆனால் சிவாஜி கணேசன் 3000 ரசிகர் மன்றத் துடன் அரசியலில் ஈடுபட்டபோதும் எந்த தாக்கத்தை யும் ஏற்படுத்த முடியவில்லை. எனினும் சினிமா நடிகர்கள் அரசியலில் செயல்படுவதும், திரை-அரசியல் ஊடாட்டமும் தொடர்கின்றது.

அரசியல் நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சினிமாவிற்கும், அரசியல் சினிமாவிற்கும் உள்ள வேறுபாட்டை நாம் மனதில் கொள்ள வேண்டும். அரசியல் சினிமாவின் கதையில், உள்ளடக்கத்தில் அரசியல் சித்தாந்தம் அடங்கியிருக்கும். ஆகவே பாத்திரப்பேச்சு மூலம் பிரசங்கம் செய்யத் தேவை யிருக்காது. ‘அவன் அமரன்’ (1955). ‘அக்கிரகாரத்தில் கழுதை’ (1977). ‘ தண்ணீர் தண்ணீர்’ (1981) போன்ற படங்களைக் கூறலாம். சினிமாவின் இயல்புகளை, கூறுகளை நன்கு உணர்ந்து அதைப் பயன்படுத்துபவர் களால்தான் அரசியல் சினிமாவை உருவாக்க முடியும்.

ரசிகர் மன்றங்கள்

நடிகர்களுக்கு ரசிகர் குழுக்கள் இயங்குவது மௌனப்படக் காலத்திலேயே தமிழ்நாட்டில் துவங்கிவிட்டது என்றாலும் அறுபதுகளில் தான் அவை பரந்த அளவில் கட்டமைப்புடன் அரசியல் கட்சிகளின் நிழல் போல செயல்படத் தொடங்கின. அரசியல்-சினிமா ஊடாட்டத்தை தீர்க்கமாக்கின. அரசியலில் குதிக்க பல ரசிகர் மன்றப் பொறுப்பாளர் களுக்கு இந்த மேடை தோதாக வந்தது. எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்திலிருந்து முசிறிப்புத்தன் சட்டசபைக்குள் நுழைந்தார். ஆனால் எல்லா மன்றங்களுக்கும் அரசியல் முனைப்பு இருக்கவில்லை. கமல்ஹாசனின் மன்றம் ரத்ததானம் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றது. விஜய்யின் மன்றம் உறுப்பினர்களிடையே மிமிக்ரி, பாட்டுப் போட்டி போன்று நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு விஜய்யுடன் ஒரு விருந்து உண்ணும் வாய்ப்பை பரிசாக அளிக்கின்றது.

திரை நட்சத்திரங்கள் கிராமதேவதை போல உருவாகியுள்ளனர். அவர்களைச் சுற்றி உருவாகியுள்ள சம்பிரதாயங்களும் சடங்குகளும் இதை நினைவுபடுத்து கின்றன. ரஜினிகாந்தின் ஆளுயர கட்-அவுட் ஒன்றிற்கு அவரது விசிறிகள் பீர் அபிஷேகம் செய்தது செய்தியாக வந்தது. இந்தப் பின்புலத்திலும் இது போன்று சாரக்கட்டுகள் இல்லாமல் நடிகர்களாகப் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிப்பது போல ஜெமினி கணேசன், சத்யராஜ், சிவகுமார் போன்ற நடிகர்கள் ரசிகர் மன்றங்களைத் தவிர்த்திருக்கின்றனர். இன்றும் பரத், ஆர்யா, விஜய்சேதுபதி போன்ற இளம் நடிகர்கள் மன்றங்களில்லாமல் இயங்குகின்றனர்.

பாத்திரப்பேச்சு

தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம், பாத்திரப் பேச்சு மிகுந்திருப்பது. பேசுவதற்காகவே அவர்கள் திரையில் தோன்றுவது போலிருக்கின்றது. நாடகங் களிலிருந்து வந்த இந்தப் பழக்கம் திராவிட இயக்கத்தி லிருந்து திரைக்கு வந்த வசனகர்த்தாக்களின் அடுக்குமொழி உரையாடலால் அழுத்தம் பெற்றது. தங்கள் அரசியல் சிந்தாந்தங்களை விளக்கவும், சமுதாய அநீதிகளைச் சாடவும் பாத்திரப்பேச்சை - வசனத்தை - பயன்படுத்தினார்கள். இந்த நீண்ட வசனங்கள் ஒரு மேடைப்பேச்சின் பாணியில் அமைந்திருந்தன. காமிராக்கோணங்கள் கூட ஒரு பாத்திரம் சினிமா பார்வையாளர்களை நோக்கி ஒரு பிரசங்கம் பண்ணுவதுபோல அமைக்கப்பட்டிருந்தன. ‘பராசக்தி’ (1952) இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. மக்களிடையே இத்தகைய வசனம் பெரும் வரவேற்பு பெற்றது. பாத்திரப்பேச்சு புத்தகவடிவிலும் கிராமபோன் தட்டு வடிவிலும் வெளியிடப்பட்டது. ஆனால் இம்மாதிரியான வசனத்தால் சினிமாவின் இயல்பான மொழி வளராமல் இலக்கியத்தின் ஒரு கூறு போல உருவானது. வசனப் புத்தகங்கள் பெருமளவில் விற்பனையாயின.

நட்சத்திரப்போட்டி

ஐம்பதுகளிலிருந்து தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களாக எம்.ஜிஆர்., சிவாஜி கணேசன் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கோலோச்சினார்கள். அரசியலிலும் சினிமாவிலும் அவர்களது போட்டி வெளிப்பட்டது. அவர்கள் இருவரை ஆதரித்து செயல்பட்டுக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் அவர்களின் அரசியல் செயல்பாட்டிற்கும் சாரக்கட்டங்களாக இயங்கின.

எம்.ஜி.ஆர். வாட்போர் உள்ளிட்ட சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ‘நாடோடிமன்னன்’ (1958) இவ்வகைப் படங்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சிவாஜி கணேசன், ‘பாசமலர்’ (1962) போன்ற மிகையுணர்ச் சியுள்ள (னீமீறீஷீபீக்ஷீணீனீணீtவீநீ) சமூகப்படங்களில் கவனம் செலுத்தினார். இப்படங்களில் கதாபாத்திரங்களின் படைப்பும் கதையும் வடிவமைப்பும் இவை ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு விமர்சகர் எழுதினார்:

“இந்த இருபெரும் நட்சத்திரங்களின் கீழ் இருந்த ஒவ்வொரு ஆண்டிலும் தமிழ்சினிமாவின் வரலாறு இந்த இருவரும் என்னென்ன படம் பண்ணினார்கள்? எந்தப்படம் அதிக பணம் குவித்தது என்பவைதாம். அழகியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் இங்கே பணவசூலுக்கு அடுத்தபடிதான் அழகியல்.”

சபாக்களின் வரவு

தமிழ் சினிமாவின் தொடக்கக்காலத்தில் மேடை நாடகங்களை ஆதாரமாகக் கொண்டே படங்கள் எடுக்கப்பட்டன என்று கூறியிருந்தேன். 1960களின் நாடக உலகிலிருந்து ஏ.பி. நாகராஜன், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் போன்ற சில புதிய இயக்குனர்கள் மூலம் இன்னொரு பாதிப்பு தமிழ்த்திரைக்கு நீர்த்தாரை போல வந்து, முன்னமே தமிழ்சினிமாவில் வேரூன்றி இருந்த நாடகக்கூறுகளை உறுதிப்படுத்தியது. ஒரு நாடகக் கம்பெனியில் வாத்தியாராக இருந்த நாகராஜன், திரைப்பட்த்திற்கு கதை வசனம் எழுதி பின்னர் நல்ல இடத்து சம்பந்தம் (1958.) மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல புராணப்படங்களை இயக்கி பிரபலமானார். தனது படங்களில் பல முந்நாள் நாடக நடிகர்கள் பலரை நடிக்க வைத்தார். அவர் படங்களின் நாடகத் தன்மை இதனால் கூடியது. நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் பயின்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இதே சமயத்தில் திரையுலகில் புகழடைந்தார். இந்த இரு இயக்குனர்களுமே நாடகக்கூறுகள் நிறைந்த, மேடை நாடக வடிவமைப்பு கொண்ட திரைப்படங் களையே தயாரித்தனர். அவர்களது படைப்புக்கள் படமாக்கப்பட்ட நாடகம் போலவே இருந்தன. சித்திரம் தீட்டப்பட்ட படுதாக்கள் பின்புலமாகப் பயன்படுத்தப் பட்டன. படப்பிடிப்பு தளத்தை விட்டு வெகு அரிதாகவே வெளியில் சென்று படமெடுத்தனர்.

சில ஆண்டுகளில் இன்னொரு தாக்கமும் திரை யுலகிற்குள் வந்தது. தொழில்முறை சாரா சபா நாடகங் களில் வெற்றி பெற்ற பலர் சினிமாவில் நுழைந்தனர். எஸ்.வி.சகஸ்ரநாமம் (சேவா ஸ்டேஜ), சோ (விவேக் ஃபைன் ஆர்ட்), மௌலி (நாடக ரசா), எஸ்.வி.சேகர் (நாடகப்பிரியா), விசு (விஸ்வசாந்தி) இவர்கள் முதலில் வசனகர்த்தாக்களாக வந்து, பின் இயக்குனர்களாகப் பரிணமித்தனர். அவர்கள் உருவாக்கிய பல வெற்றிப் படங்கள் மேடை நாடக அழகியலைச் சார்ந்தே இருந்தன. சினிமாவுக்கே உரிய சாத்தியக்கூறுகள், தனித்துவம் கதை சொல்லலில் பயன்படுத்தப்பட வில்லை. தமிழ் சினிமாவின் நாடக பாரம்பரியம் வலுவூட்டப்பட்டது. அவர்களது படங்கள், இயக்குனரின் திறமையைச் சாராமல், நடிகர்களின் திறமையை சார்ந்திருந்தது இவர்களில் மிகவும் வெற்றியடைந்த இயக்குனர், ராகினி ரெக்ரியேஷன் கே.பாலசந்தர் எடுத்த அரங்கேற்றம் (1973) உள்பட பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. சமகாலத்து, நகர்ப்புற நடுத்தர மக்களின் பிரச்சினை களைத் தொட்ட இவரது படங்கள், பாரம்பரிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் உறுதி செய்தது. தன்னை ஒரு ‘நடுப்பாதை படைப்பாளி’ (Middle of the road filmmaker) என்று வர்ணிக்கின்றார். இவர்களின் நடுவே, 60களில் ஸ்ரீதர் தோன்றி, ‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ (1962) போன்ற திரைப்படங்களை இயக்கிப் பெயர் பெற்றார். அவருடைய பல படங்கள் முக்கோணக் காதலைச் சார்ந்து இருந்தன. ஒருவனுக்கு ஒருத்தி போன்ற மரபு விழுமியங்களைப் போற்றின. ஒளிப்பதிவாளர் வின்சென்ட் துணையுடன் ஒளியூட்டத்தை அழுத்தமாக பயன்படுத்தி படங்களின் தாக்கத்தை கூட்டினார். ‘நெஞ்சில் ஓர் ஆலய’த்தின் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ பாடல் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.

1970களின் அலை

baskaran-(4).jpg

1970களில் ஸ்டுடியோக்களின் காலம் முடிந்து, இரு பெரும் நட்சத்திரங்களின் சகாப்தம் ஓய்ந்த பின் மாற்றத்திற்கான சில அறிகுறிகள் தென்பட்டன. ஒரு புதிய தலைமுறை படைப்பாளிகள் தோன்றிய வருடங்கள் இவை. இவர்களது படைப்புகள் நட்சத்திர ஆதிக்கத்தில் உருவான படங்களிலிருந்து உள்ளடக்கத்தி லும் வடிவமைப்பிலும் வேறுபட் டிருந்தன. தனது ‘16 வயதினிலே’ (1977) மூலம் கிராமப்புற தமிழ்நாட்டைக் கவனித்தார் பாரதிராஜா. மூன்று பள்ளிச்சிறுவர்கள் பற்றிய ‘அழியாத கோலங்கள்’ (1979) படத்தில் ஐரோப் பிய சினிமாவின் தாக்கத்தை பாலுமகேந்திரா பிரதிபலித்தார்.

புதுமைப்பித்தனின் கதை ஒன்றை ‘உதிரிப்பூக்கள்’ (1979) என்ற தலைப்பில் மகேந்திரன் படமாக்கிப் புகழ் பெற்றார். இவர்களிடம் பயிற்சி பெற்ற சில இளம் இயக்குனர்கள் கவனத்தை ஈர்த்த சில படங்களை எடுத்து, தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவு படுத்தினர். ‘சேது’ (1999) படத்தை இயக்கிய பாலா இவர்களில் ஒருவர். தமிழ்மக்கள் விரும்பிப் பார்த்த ‘ஆட்டோகிராப்’ (2005) படத்தை இயக்கிய சேரன் மற்றொருவர். இன்னும் சிலர் புதிய வடிவமைப்பு கொண்ட படங்களை உருவாக்கினர். இலக்கியப் பத்திரிகைகளில் சினிமா அழகியல் பற்றி பேச்சு எழுந்தது. ஃபிலிம் சொசைட்டிகள் சில செயல்படத் தொடங்கின. எனினும் பெருவாரியான திரைப்படங்கள் வேரற்ற கதைகளாகவும், ஆட்டபாட்டம், சண்டை, துரத்தல், பெண்ணுடல் காட்டல் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தன. 1999இல் ‘நாயகன்’ தொடங்கி மணிரத்னம் பாட்டு, குழு நடனம் போன்ற கூறுகளடக்கிய பல வெற்றிப்படங்களை உருவாக்கினார். காஷ்மீர் (‘ரோஜா’ 1992), ஸ்ரீலங்கா (‘கன்னத்தில் முத்தமிட்டால்’ 2002), வடகிழக்கு (உயிரே 1998) போன்ற அரசியல்-சமூக கொந்தளிப்புகளைப் பின்புலமாகக்கொண்டு படங்கள் எடுத்தாலும், அப்பிரச்சினைகளை எதிர்கொள்வதைத் தவிர்த்தார். பல படங்களுக்கு அவரே கதை, வசனம் எழுதினார்.

ஆனால் நட்சத்திர ஆதிக்கமும் தொடர்ந்தது. எழுதவும் இயக்கவும் செய்து, சினிமாக்கலையின் நுணுக்கங்கள் பற்றிய புரிதலைப் பல தடவை கமல்ஹாசன் வெளிப்படுத்தினார். யாராலும் வெல்ல முடியாத, ஆண்மையின் சிகரமாக பல படங்களில் நடித்த ரஜனிகாந்திற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் உருவானார்கள். அவரது ரசிகர் மன்றங்கள் தீவிரமாகச் செயல்பட்டன.

விருதுகள்

baskaran-(5).jpg

ஆறாயிரத்திற்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்தும், அண்மையில்தான் தமிழ்ப் படங்கள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டி ருக்கின்றன. இது வரை இரண்டு படங்கள் தான் தேசிய அளவில் சிறந்த படமாக விருது பெற்றிருக்கின்றன. முதலாவது, இந்திரா பார்த்தசாரதியின் நாவலைத் தழுவி, சேதுமாதவன் இயக்கிய ‘மறுபக்கம்’ (1992). இரண்டாவது படம் பட்டு நெசவாளர் குடும்பம் பற்றிய பிரியதர்ஷன் இயக்கிய ‘காஞ்சிவரம்’ (2008). பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக எழுதப்பட்ட கதை. சிறந்த இயக்குனர் விருதை இருவர், அகத்தியனும், பி.லெனினும் பெற்றிருக் கின்றனர். நடிகைகளில் லட்சுமி, ஷோபா, சுகாசினி, அர்ச்சனா பெற்றனர். கமல்ஹாசன் மூன்று முறை சிறந்த நடிகர் விருது பெற்றார். தாதா சாகேப் விருது ஒரு நடிகருக்கும் - சிவாஜி கணேசன் - ஒரு இயக்குனருக்கும்-கே பாலசந்தர் - கிடைத்தது.

இன்றைய நிலைமை

baskaran-(6).jpg

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்சினிமா உலகில் ஒரு நல்ல மாற்றத்தை காண முடிகின்றது. சில இளைய இயக்குனர் கள் புதிய வடிவமைப்பு, அழகியலுடன் உள்ளடக் கத்திலும் வேறுபட்ட யதார்த்தபாணியிலும் படைப்புகளை உருவாக்கினர். அம்மாதிரியான ஒரு படமான ‘சுப்ரமணியபுர’(2008)த் தின் வெற்றி ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியானது. மதுரையின் ஒரு ஓரப்பகுதியில், எண்பதுகளின் பின் புலத்தில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவனின் பேச்சைக்கேட்டு சிறைக்குச் செல்லும் இளைஞர்கள் பற்றிய கதை இப்படங்களில் குத்து, வெட்டு, கொலைக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

வேறு சில படங்களும் வன்முறைக்காட்சிகளுடன் வெளி வந்தன. இப்படங்களை சில விமர்சகர்கள் ‘கொடூர சினிமா’ என வகைப்படுத்தினர். 2012இல் சான் ஃபிரான்சிஸ்கோவில் ‘கொடூர சினிமா. தமிழ்த்திரையின் புதிய திசை’ என்ற தலைப்பில் நடந்தேறிய கருத்தரங்கத்தில், திரையியலாளர்கள் சில புதிய தமிழ்ப்படங்களை விவாதித்தனர். ஒரு குதிரையும் அதன் சொந்தக்காரரையும் பற்றிய ஒரு கதையை ‘அழகர்சாமி யின் குதிரை’ (2011) யதார்த்த பாணியில் கூறியது. இப்படம் மதநம்பிக்கை சார்ந்த விமர்சனத்தையும் முன்னிறுத்தியது. பாட்டு, ஆட்டம்பாட்டம் இவற்றிலிருந்து விலகிச் சென்ற இந்தப்படங்களில் இலத்தீன் அமெரிக்கன் படைப்புக்களின் பாதிப்பைக் காண முடிந்தது. டிவிடி புரட்சியும் இந்த மாற்றத் திற்கு ஒரு காரணம். பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைச் சுற்றிய கதைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதிய பாணி படங்கள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளை களமாகக் கொண்டவை. வன்முறைகள், துரத்தல், காட்டிக்கொடுத்தல், பித்தலாட்டம் இவை நிறைந்தவகை.பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9 ‘ நகர்ப்புற வாழ்க்கையை பின்புலமாகக் கொண்டு, வீட்டுவேலை செய்பவர்களின் நிலையை ஆராய்ந்தது.

வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் புதிய கூறுகள் கொண்ட இறுக்கமான கதையமைப்பு கொண்டது. நலன் குமாரசாமி இயக்கத்தில் அண்மையில் வந்த ‘சூது கவ்வும்’ (2013) திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் நல்ல கவனிப்பு பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்கப் பார்வையாளர் களிடமும் வரவேற்பு பெற்றது.

பன்னாட்டளவில் விளிம்புநிலை மக்களைப்பற்றிய ஆய்வும் கலாச்சார ஆய்வும் வளர்சியடைந்த பின் பலருடைய கவனம் தமிழ்சினிமாவின் பால் திரும்பியது. இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்கள், தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலுள்ள மானிடவியலாளர்களும், ஆய்வு மாணவர்களும் தமிழ்த் திரையை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்ல, வரலாற்றியலுக்கு திரைப்படங்கள் ஒரு நல்ல மூலப்பொருளாகப் பார்க்கப்படுகின்றது. சினிமாவின் மூலம் அந்த சமுகத்தைபற்றிய ஒரு புரிதல் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் கல்விப்புலம் சினிமாவைப்பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை.

18.10.2013 Frontline இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

http://uyirmmai.com/Contentdetails.aspx?cid=6491

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.