Jump to content

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!
Posted by: Shankar Published: Monday, March 31, 2014, 10:44 [iST] சென்னை:
 
பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார். ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது சினிமா ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டும் ஆச்சி...!

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்து சிவாஜியின் காலத்தில் தமிழில் சிவாஜிக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரே ஒரு நடிகையாக ஆச்சி தான் இருந்து வந்தார். ஒரு பெண்ணாக பல போராட்டங்களுக்கு மத்தியில் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து வந்தவர் ஆச்சி.

 

அவரது வயது பற்றிய யதார்த்தம் அதிக நம்பிக்கையை கொடுக்கவில்லையாயினும் ஒரு ரசிகனாக ஆச்சி நலம் பெற்று  விரைவில் வர வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்திரையுலகிற்கு கிடைத்த... அரிய நகைச்சுவை நடிகர் இவர்.
இவரைப் போல்... இனியொருவர் கிடைப்பாரா... என்பது சந்தேகமே.
நலம் பெற வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சி மிகச் சிறந்த நடிகை.  ஆனால், ஆச்சி போன்ற நல்ல மனிதர்களின் உயிர் ஊசலாடுவதை நான் விரும்பவில்லை.  ஆகவே, அவர் நிம்மதியாக இறைபதம் அடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது வயது பற்றிய யதார்த்தம் அதிக நம்பிக்கையை கொடுக்கவில்லையாயினும் ஒரு ரசிகனாக ஆச்சி நலம் பெற்று  விரைவில் வர வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி மிகச் சிறந்த நடிகை.  ஆனால், ஆச்சி போன்ற நல்ல மனிதர்களின் உயிர் ஊசலாடுவதை நான் விரும்பவில்லை.  ஆகவே, அவர் நிம்மதியாக இறைபதம் அடைய வேண்டுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை: 
 
நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்திருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டது கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மனோரமா நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனார். தி.நகரில் உள்ள வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
 
கடந்த 1 வருடத்துக்கு மேலாகவே மனோரமா உடல்நிலை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சூர்யா நடித்த ‘சிங்கம் 2Õ படத்தில் நடித்தார். இப்போது பேராண்டி படத்தில் நடிக்க உள்ளார் - See more at:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடித்துக்கொண்டிருக்கும் போதே தன்னுயிர் பிரியவேண்டும் என கூறியவர் மனோரமா.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

 

சென்னை: குணச்சி்த்திர நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

77 வயதான நடிகை மனோரமா, 2 ஆண்டுகளுக்கு முன்பு முழங்காலில் ஏற்பட்ட வலியை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு காளஹஸ்தி கோயிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்த மனோரமாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோரமா, கடந்த மே மாதம் 26ஆம் தேதி தனது 77வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதாகவும், அடுத்த 28 மணி நேரத்துக்கு அவர் தீவிர சிகிச்சைக்குள்ளேயே வைக்கப்பட்டு இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனோரமாவுக்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருந்தன. தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28692

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி மிகச் சிறந்த நடிகை.  ஆனால், ஆச்சி போன்ற நல்ல மனிதர்களின் உயிர் ஊசலாடுவதை நான் விரும்பவில்லை.  ஆகவே, அவர் நிம்மதியாக இறைபதம் அடைய வேண்டுகிறேன்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி நலம் பெற்று விரைவில் வர வேண்டும்

Link to comment
Share on other sites

நலம் பெற்று மீண்டும் வந்து நடிக்க வேண்டும் ஆச்சி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.