Jump to content

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்


Recommended Posts

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்.

சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது.

இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த பெண் அறிவிப்பாளர்.அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானொலிக் குயிலுக்கு அஞ்சலி .......

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

திருத்தத்துக்கான காரணம் சில பின்னைய தகவல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் குரல் என்னும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நம்புகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

70. 80 களில் இலங்கை தமிழ் வானொலியை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர்களில் இராஜேஸ்வரி சண்முகமும் ஒருவர்! எம் வீடுகள் தோறும் இனிமைத்தமிழில் தட்டிய குரல் ... ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் காணாத, இனிமையான குரலுக்கு சொந்தக்காரி. ராஜேஸ்வரி சண்முகம்.

அவரின், குரல் கேட்டவர்களை.... மீண்டும், கேட்கத் தூண்டும் கணீர் குரல்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ராஜேஸ்வரி சண்முகம் அவர்களது. வானொலி ஒலிப்பதிவு யாரிடமாவதிருந்தால்... இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரது உடல் மறைந்தாலும் குரலும் புகழும் என்றும் நிலைத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

என் பெற்றோர், எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியளவிலான வானொலிப்பெட்டி ஊடாக எனக்கு அறிமுகமான அருமையான அறிவிப்பாளர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட ரேலங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட லேரங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

Link to comment
Share on other sites

திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் பிள்ளைகள், மருமக்களும் ஒலிபரப்புத்துறையை சேர்ந்தவர்கள் என்று நினைக்கின்றேன். வீரகேசரியில் இவர் பற்றியதொரு கட்டுரையை நீண்டகாலத்திற்குமுன் வாசித்தேன். தனது சிறுவயதிலேயே நாட்டியதாரகையாக அறிமுகமானார் என்று வாசித்ததாக ஞாபகம்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

நியாயமான கேள்வி. :)

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

நீங்கள், திருந்தவே... மாட்டீர்களா? அர்ஜீன்.

யார் அந்த ரேலங்கி?

அதற்கும், தலைப்புக்கும் என்ன.. சம்பந்தம்? :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.