Jump to content

ஏடா கூடமான கேள்விகள் .


Recommended Posts

1 . முத்தமிழ் அறிஞர் என ஒருவரை சிலர் கூறுகின்றனர் . எதை வைத்து ?

2 . தமிழரின் உணர்வுகளையும் போராட்டத்தையும் தமிழிலே தொண்டை கிழிய தமிழரிடம் கத்தி வரும் பலன் அதிகமா அல்லது பிற மொழியில் தெளிவாக பிறரிடம் எடுத்து சொல்வதின் பலன் அதிகமா ? மிக முக்கியமாக இந்திய மக்கள் .

3 . ஈழ பிரச்னை என வரும்போது தெளிவாக புலிகள் போராடுவது மக்களுக்கே என கூறுகிறார் வைகோ . ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்களின் கருத்தும் அதே . இருந்தும் தேர்தல் என வரும் போது அவருக்கு சொல்லிகொள்ளும்படி வெற்றி கிடைப்பதில்லையே . ஏன்?

4 . போர் நிறுத்தம் என்ற பேரில் புலிகளின் போர் உத்தி மற்றும் பூகோள ரீதியான திட்டங்களை அறிந்து (இப்போது நடைபெறும்) போருக்கு ராணுவம் திட்டமிட்டுகொண்டிருந்ததா அல்லது நடுநிலைமை என்ற பேரில் பிற நாடுகள் திட்டம் தீட்டி கொடுத்ததா? யார்?

5 . பலமுறை வெற்றி ஈட்டியதால் புலிகள் இம்முறை மெத்தனமாக இருந்து விட்டார்களா என்ன?

6 . புலம்பெயர் வாழ் நம்மக்கள் அங்கு இருக்கும் பிற இந்திய சந்ததியினரிடம் நமக்கு ஆதரவு திரட்ட எவரேனும் முயற்சி செய்தனரா ? முயற்சியே செய்ய வில்லையா ? ஆதரவு கிடைக்க வில்லையா ? இனியேனும் முயற்சி செய்வார்களா?

7 . ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் சோர்வடைந்த நம் மக்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தவா அல்லது புலிகளின் போர் முறையை சிங்களருக்கு போட்டு கொடுத்து நம் இனத்தையே அழிக்கவா ? ஏனெனில் எப்போதெல்லாம் கட்டுரை வரைகிறார்களோ அதன் பின் சரியாக ஒன்றிரண்டு மாதத்துக்குள் அந்த கட்டுரையில் உள்ள களம் வீழ்ந்துள்ளது . இது போன்ற வேலையை கொஞ்ச காலம் ஒத்திவைப்பார்களா ?

8. தமிழ் உணர்வு என கூறிவிட்டு பிற மொழிகள் நம்மக்கள் பயில்வதை தடுத்து நம் உணர்வுகளை பிற மொழியினருக்கு விளக்க முடியாத படி நம்மை பிறரிடம் இருந்து சூழ்ச்சி செய்து நம் அரசியல் வாதிகள் அவர்களின் சுயநலத்திற்காக பிரித்து விட்டனரா ?

9. ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் உள்ள சிங்கள இனத்தில் பத்து விழுக்காடு கூட நல்லோர் அல்லது நம்மை புரிந்தவர் இல்லையா ? அல்லது அவர்களை நசுக்கி விடுகிறார்களா? அல்லது அடக்கு முறைக்கு பயந்து ஒதுங்கி விடுகிறார்களா ?

10. யாழ்பாணம் வீழ்ந்ததுக்கு காரணம் வீரர்கள் பற்றாகுறை என செய்தி உலவுகிறது . ஏன் ? நம்மக்களுக்கு எல்லாம் முடிந்ததும் தான் முழிப்பும் உணர்வும் வருகிறதா ? அல்லது ஈழத்தில் கூட புலிகளை பற்றி தவறுரை பரப்புவதில் யாரேனும் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறார்களா?

11. இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? எவரேனும் தெளிவாக குழப்பாமல் நம்மை வழி நடத்த தலைமை தன்மை கொண்டவர் எவரேனும் உள்ளாரா?

12. புலிகள் மீதான தடையை நீக்கும் முயற்சி எதுவரை உள்ளது ? எவர் முயற்சி செய்கின்றனர் ? பலன் எப்போது எதிர் பார்க்கலாம் ?

13. நமக்கென ஆதரவு நாடு என ஒன்று கூட இல்லையே ? ஏன் ?

14. கடைசியாக ஒரே கேள்வி . எப்போது தணியும் நம் சுதந்திர தாகம்?. என்று முடியும் இந்த உரிமைபோர் ? என்று நாம் காண்பது நம் தமிழ் ஈழம்.?

இந்த கேள்விகள் அனைத்தும் சோர்வடைய செய்வதற்கோ அல்லது எதிர்மறை கருத்துகளோ அல்ல . இந்த கேள்விகளின் விடையே நம்மை வீறு கொண்டு எழவும் தெளிவான சிந்தனை பெறவும் உதவக்கூடும். மற்றபடி வேறு உள்நோக்கம் கொண்டவை அல்ல .

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.