Jump to content

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!


Recommended Posts

டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!

“நான் இதய பூர்வமாய் சொல்கிறேன், என் இதயத்தில் காஷ்மீருக்கு எப்பொழுதுமே தனியான ஒரு இடம் இருக்கும்” என்று காஷ்மீர் மக்களை பார்த்து சொல்லியிருக்கிறார் இந்தி நடிகர் ஷாருக்கான். யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றது. அதன் முடிவில் கோடைக் காலத்தில் உருகும் காஷ்மீரின் பனி மலைகளை போல உருகி விட்டிருக்கிறார் ஷாரூக்கான்.

படிக்கவும்

“லண்டனிலோ ஸ்விட்சர்லாந்திலோ ஒரு படம் எடுக்கப்பட்டால் படத்தைப் பார்க்கும் மக்கள் அந்த இடங்களுக்கு போய் வர ஆசைப்படுவார்கள். அதே போல இந்தப் படம் காஷ்மீரில் பெருமளவு எடுக்கப்பட்டதால் பார்க்கும் மக்கள் இங்கு வர விரும்புவார்கள்” என்ற தனது நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

பனி படர்ந்த மலைகள், சில்லென்ற குளிர் “புது வெள்ளை மழை பொழியும்” சூழலில் காதல் பாட்டு. இப்படி அழகாய் போய்க் கொண்டிருக்கும் இளம் காதலர் வாழ்க்கையில் ரோஜா மலரை சுற்றிய முட்கள் போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் காதலனை கடத்தி சென்று விடுவார்கள். படம் பார்க்கும் நடுத்தர வர்க்க இந்தியர்கள் ‘இப்படிப்பட்ட அழகான ஊரில் தீவிரவாதமா?’ என்று தேசபக்தியில் கொதிப்பார்கள். 1990களில் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ரோஜா படம் மூலம் இப்படிக் காட்டி பணம் சம்பாதித்ததோடு தேசபக்த மதிப்பெண்களையும் பெற்றுக் கொண்டார் மணிரத்தினம்.

அந்த கால கட்டத்தில் ‘காஷ்மீர் என்றாலே முஸ்லிம் தீவிரவாதம், காஷ்மீரிகள் நாட்டுக்கு எதிரானவர்கள்’ என்று ஆளும் வர்க்கம் மக்களிடையே உருவாக்க முனைந்த படிமத்துக்கேற்ப ஊடகச் செய்திகளும் ‘கலைப் படைப்புகளும்’ வெளி வந்தன.

போலீசும் ராணுவமும் இன்னமும் காஷ்மீரி மக்களின் குரல்வளையில் கால் பதித்து நிற்கின்றன. இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக சிறுவர்களும் பெண்களும் கூட தெருவில் இறங்கி போராடுகிறார்கள். காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான போராட்டத்துக்கு எந்த ஒரு தீர்வோ முடிவோ ஏற்பட்டு விடவில்லை.

இருந்தாலும் இப்போது காட்சிகள் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒளிரும் இந்தியாவின் முதலாளிகளுக்கு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சி தேவைப்படுகிறது, அது தொடர்பான ரியல் எஸ்டேட் வாய்ப்புகள் தேவைப்படுகின்றன, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்திற்க்கு தேன் நிலவு செல்ல ‘பூலோக சொர்க்கம்’ ஒன்று இந்தியாவுக்குள்ளேயே தேவைப்படுகிறது.

கூடங்குளம் போன்ற பகுதிகளில் இந்திய மக்கள் அனுபவிப்பது போன்ற ஜனநாயகம் காஷ்மீரிலும் தளைத்து விட்டது. ‘அங்கு அமைதியும், அழகும், மகிழ்ச்சியும் பொங்குகின்றன’. அதை முன் வைக்க வேண்டிய இன்றைய தேவையின் வெளிப்பாடுதான் யாஷ் சோப்ராவின் திரைப்படமும் திரைப்படத்தை முன் நிறுத்தி அதன் மூலம் காஷ்மீரை உலகுக்கு விற்பதற்காக வெளிப்பட்டிருக்கும் ஷாருக் கான் என்ற தேவ தூதனும்.

அந்த திரைப்படத்தில் ஷாரூக் கான் ஒரு ராணுவ அதிகாரியாக வருகிறாராம். ஒரு இந்திய ராணுவ அதிகாரி தான் அடக்கி ஆளும் காஷ்மீரை எப்படி நேசிக்க முடியும்! தம்மை ஆயுதப் பிடிக்குள் வைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் ஒரு அதிகாரியை காஷ்மீர் மக்கள் எப்படி நேசிக்க முடியும்!

கொஞ்சம் யோசித்து பாருங்கள்! நாளையே ‘அணு விஞ்ஞானி’ அப்துல் கலாமும், ‘நாற வாய்’ நாராயணசாமியும் கூடங்குளத்தை தங்களுக்குப் பிடித்தமான இடம் என்று பிரகடனப்படுத்தலாம். கூடங்குளத்தின் பெயரில் (குறைந்த பட்சம் 300 கிலோமீட்டர் தொலைவில்) ஒரு IPL மேட்ச் நடத்த ஏற்பாடு செய்யலாம், ஏன் ஷங்கர் எடுக்கும் படத்தில் கூடங்குளம் ஒரு வசனமாக கூட இடம் பெறலாம்!

ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?

_______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

Tags: அடக்குமுறை, இராணுவம், காஷ்மீர், சுற்றுலா, தீவிரவாதம், போராட்டம், யாஷ் சோப்ரா, விளம்பரம், ஷாருக் கான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.