Jump to content

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்


Recommended Posts

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்.

இது எனக்கு நேரடியாக கிடைத்த தகவல், இதை உங்கள் விமர்ச்னத்துக்கான தரவில்லை, எனது மன திருப்திக்கு தருகின்றேன்,

எனக்கு தெரிந்த அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என

கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்புகொண்டு

"நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்" என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிற்ர்,

இதை கேட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் இதை அடிக்கிறேன்,

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

தங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்

எல்லோரும் வரணும்

இறைவனை வேண்டுகின்றேன்

எமக்காக போராட கூப்பிடவில்லை

தங்கள் உயிர் இருக்கிறது என்பது போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மகிழ்வாக் இருக்கிறது............பிரிந்தவர் ..... கூடினால் பேசவும் வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்ததும் சிலரை விடுதலை செய்யக்கூடும். எல்லாம் தேர்தல் முடிவில்தான் தங்கியிருக்கின்றது. பலர் சேமமாக இருக்கின்றார்கள்போலத் தெரிகின்றது. நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. எங்கள் காவல் தெய்வங்கள் உயிருடன் இருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் .....நலமுடன் வருவீர்....தயவு செய்து அவர்கள் வருகையை கொச்சைப்படுத்த வேண்டாம்

Link to comment
Share on other sites

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

உண்மை தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கப்படலாம் என்பது ஒரு புறமிருக்க, அதைத் தக்க வைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறையவே கடினமான பணிகள் உண்டு. இவ்வளவு பலத்தோடு இருந்தபோதும் எம்மால் எதிரியின் படுகோரமான மனிதப்படுகொலைகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகத்தையும் தடுக்க முடியாமல் இருந்தது. மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் என்னும்போது, இதே போன்றதொரு அழிவை அவன் தரமாட்டன் என்பது என்ன நிச்சயம்??

இப்படியான அழிவுகளைத் தடுக்கக் கூடிய வகையில் புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கின்ற சக்தி ஒரு வேளை உதவக் கூடும். எனி வரும் போராட்டம் ஆயுதம் தூக்கித் தான் நடக்க வேண்டும் என்றில்லை. எம் புலம்பெயர் மக்களின் பலத்தாலும் நிச்சயம் முடியும் என்றே நம்புகின்றேன்.

முதலில் உலகத்தை எம் பக்கம் மாற்றுவதற்கு, இளையோர்களாகட்டும், கல்விமான்களாகட்டும், பலம் வாய்ந்த அமைப்புக்களில் வேலை வாய்புத் தேடிச் செல்லுங்கள்.. உங்கள் குழந்தைகளைப் பொறியிலளார் ஆகவும், வைத்தியராகவும் மட்டும் கனவு காணாமல், சட்டத்தினூடும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களோடு பணியாற்ற வழி ஏற்படுத்துங்கள். எந்த ஐநாவோ, அல்லது அது சார்ந்த எந்த அமைப்புக்களோ எம் மக்களின் அழிவுக்கு மௌனித்திருந்தனனவோ, அந்த அமைப்புக்களின் செயற்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவதே பலமாக அமையும்.

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

நன்றி தூயவன் பலகாலத்துக்குபின் தங்கள் கருத்துக்கு...

தமிழரின் போராட்டம் தொடரும்

வேறு வழி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.நீண்ட நாட்களின் பின் தூயவன் ஆக்கபூர்வமான கருத்தோடு மீண்டும் வந்ததற்கு நன்றி.

இன்னுமொரு ஆயதப் போராட்டம் தவிர்க்க முடியாததே.நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நடந்தால்தான் தமிழினம் ஒற்றுமையாக இருக்கும் என்பதை கடந்த சில மாத சம்பவங்களே சாட்சி.எதிரியை எதிர்க்க மட்டுமல்ல தமிழரை ஒற்றுமைப் படுத்தவும் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மீண்டும் முன்னெடுக்கப் படலாம்.அரசியல் போராட்டத்தை சர்வதேச அளவில் வலிமையாகச் செய்வோமானால் ஆயதப் போராட்டம் இன்றியே நாம் எமது உரிமைகளைப் பெறலாம்.ஏனெனில் இது வரை நடந்த ஆயுதப்போராட்டமானது தனது உச்சப் பங்களிப்பைச் செய்து விட்டு மௌனித்திருக்கிறது.அதாவது எமது பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொய்ய விடாமல் நாம் அரசியல் போராட்டத்தை சர்வதேச சமுகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.எல்லாவற்றுக்கும் எமக்குத் தேவை ஒற்றுமை.அது நாடு கடந்த தமிழீழமாய் இருந்தால் என்ன வட்டுக்கோட்டைத் தீர்மானமாக இருந்தால் என்ன.எல்லோரும் ஒன்றுபடுவோம்.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Link to comment
Share on other sites

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விளக்கமாக எழுதி வருகின்றவர்களையும்

வரவிடாமல் பண்ணாதீர்கள்!!

வாழ்த்துக்கள்

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

Link to comment
Share on other sites

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :lol:

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய துயவனுக்கு 11 பச்சைபுள்ளி

நல்ல கருத்து என்று சொன்ன விசுகண்ணைக்கு சிவப்பு புள்ளி

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமாகி போய்விட்டது............. என்ன எழுதுகிறார்கள் என்பதெல்லாம் யார் பார்த்தார்?

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

சாத்தியம் இல்லை என்றால்?

1972ல் தான் அதற்கான சாத்தியங்கள் இல்லாமலே இருந்தது என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

Link to comment
Share on other sites

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :lol::D

Link to comment
Share on other sites

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :rolleyes::lol:

தாடிக்கு பக்கத்தில் வாற கூலிப்படை கீழே கண்ணி வெடி இருக்கோ என்று இப்போதும் தேடுவது ஆச்சரியாமக இல்லை ??? :lol: ஏதோ ஒரு செய்தி சொல்கிரமாதிரி இருக்கல்லோ அண்ணை. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.