Jump to content

பாலஸ்தீனமும் நாமும்: புதிய திசைகள்


Recommended Posts

newdirections.jpg
பாலஸ்தீன மக்கள் மிருகத்தனமாக தாக்கி அழிக்கப்படுவதும் அத்தாக்குதலின் தன்மை, அளவு, நேரம், காலம் என்பனவற்றை வைத்து இதை எதிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் தத்தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒரு அரசியல், சமூக வழக்கமாகி விட்டது. ஏன் ஒருவகையில் அது ஒரு சடங்காக் கூட ஆகிவிட்டது. எதிரி வீழ்த்தப்படுவது தொடர்பான நம்பிக்கைகள் தெளிவில்லாத போது போராட்டங்களும் எதிர்ப்புகளும் சடங்காகின்றன. இது போராடுபவர்களின் தவறல்ல! இன்று உலக மக்களை கேட்பாரற்ற நிலையில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் உலக அதிகார சக்திகளின் எல்லையில்லா அட்டூழியங்களின் எதார்த்த நிலைதான்.

பாலஸ்தீனர்களின் எதிரிகள் அவர்களை விட பல மடங்கு ஆயுத பலமானவர்கள். இஸ்ரேல் என்னும் தேசம் யூத இன, மத அடிப்படைவாதத்தில் உருவான சியோனிச தேசமாகும். மத அடிப்படையில் உருவான ஒரு வரலாற்று புரட்டின் அப்பட்டமான தேசிய அழிப்பு, தேசிய ஆக்கிரமிப்பு வடிவந்தான் இஸ்ரேல். இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்கள் மீது போடும் குண்டு என்பது ஒரு அமெரிக்க, ஐரோப்பிய குண்டு என்பதும் ஒரு இஸ்ரேலிய உயிர், பலமடங்கு பாலஸ்தீனிய உயிர்களுக்கு சமன் என்பதும் உலகு நன்கறிந்த விடயங்கள் தான்.

உலகில் உள்ள அரசுகள் பெரும்பாலும் உலக ஆதிக்க அரசுகளின் தொங்கு தசைகளாக இருந்துவர, உலக ஆளும் குழுமங்களின் ஒடுக்குமுறைகள் தற்காலங்களில் மிக அப்பட்டமாக நடைபெறுகிறது. அவர்களுக்குள் உள்ள அதிகார போட்டிகளில், வீழ்ச்சியில் இருந்து காத்துக்கொள்வதில் இருக்கும் மூர்க்கத்தனம் உலக மக்கள் முன் அவர்களின் ஒடுக்குமுறையை அம்மணமாக்குகின்றது. மூலதனத்தின் ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகள் அகலமாவைதைப்போல், ஒடுக்குமுறைக்கும் அதை எதிர்க்கும் சக்திகளுக்குமான இடைவெளிகளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

நாம் வரலாற்றில் அறிந்து கொண்ட சூழ்ச்சி, பிரித்தாளுதல், ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்தல், மதத்திற்கான யுத்தம், இன அழிப்பு என்பன அனைத்தும் இன்றும் நம் கண்முன் அதே வடிவில் சில இடங்களின் சற்று மாறுபட்ட வடிவிலும் நடந்துதானே வருகிறது. இவையனைத்திற்கும் இன்று நாம்தான் வரலாற்று சாட்சிகள்.

சியோனிசத்தின் குரூர தேசிய ஒடுக்குமுறைக்குள் பாலஸ்தீன மக்கள் அகப்பட்டு தவித்துவர, சிங்கள பெளத்த பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்குள் இலங்கயில் தமிழ் பேசும் தேசிய இன மக்கள் அகப்பட்டு தவித்து வருகிறார்கள். முஸ்லீம் மதத்தை பயங்கரவாத மதமாக்கி, முஸ்லீம் மக்களை உலக மக்களின் எதிரியாக்க கடும் பிரயத்தனம் எடுத்துவரும் அமெரிக்க, மேற்கத்தய அரசுகளின் கோர முகங்கள் வெட்ட வெளிச்சமானவை. மறுபக்கம்; வர்க்கம், தேசம், இனம், பிராந்தியம் அனைத்தையும் கடந்து முஸ்லீம் மார்க்கத்தவர் என்ற ரீதியில் உலகு தழுவிய ரீதியில் ஒரு இணைவை காண முனையும் ஓர் போக்கு வளர்ந்து வருகிறது. இது ஒடுக்கு முறையின் எதிர்வினையாக இருக்கின்ற போதும் ஆபத்தானது தான்.


ஒரு சமூகம் தனக்குள் அதீத ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்கின்றது என்றால் அது தனக்குள் அதிகமான பிளவுகளை உடையது என்றுதான் பொருள். அரபு உலகத்தை அமெரிக்கா பந்தாடுவதும், அல்கைதா, தலிபான், ஐஸிஸ் என அமெரிக்க, மேற்கத்தைய அரசுகள் இஸ்லாமிய கூலிப்படைகளை உருவாக்குவதும்; தேவையான போது பயன்படுத்திவிட்டு பின் பயங்கரவாதிகளாக உலகிற்கு அறிவித்து அவர்கள் செய்யும் கொடூரங்களை வைத்தே முஸ்லீம் மக்களை உலக மக்களின் எதிரியாக்க முனைவதும் நிகழ்கிறது.

ஹமாசின் தவறுகளை வைத்து பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதும் இஸ்ரேலிய அரசை ஆதரிப்பதென்பது சமூக விரோதிகளின் அரசியல். ஐஸிஸ் இன் ஷியா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனத்தை அவர்களும் முஸ்லீம்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக கண்டிக்கத்தவறும் முஸ்லீம்கள், பாலஸ்தீன மக்களின் உரிமைகாக குரல் கொடுக்கும் உரிமையை இழந்துவிடுகிறார்கள்.

பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகள்; தமிழ்மக்கள் புலி பயங்கரவாதிகள்; இலங்கை முஸ்லீம் மக்கள் மதவாதிகள்; மலையக மக்கள் இந்திய கைகூலிகள்; என உரிமைப் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதற்கு என ஒடுக்குமுறையாளர்கள் உருவாக்கும் தோற்றப்பாடுகள் நாம் அறிந்தவைதான். ஒடுக்குமுறையாளர்களின் வகைப்படுத்தல்களை உண்மையாக்குபவர்களாக அல்லாது எமது மக்களின் சரியான. நியாயமான உரிமைப்போராட்டங்களை தெளிவான, சரியான அரசியலினூடாக எடுத்துச்செல்ல வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

ஒடுக்குபவர்கள் பலமாக இருந்தாலும் ஒடுக்கப்படும் நாம் தான் பெரும்பான்மையானவர்கள்; அதுதான் எங்கள் பலம். எங்கள் போராட்டங்கள், எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கும் சக்திகளுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடக்கப்படாது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கட்டமைப்பது தொடர்பாக போராடும் சக்திகள் சிந்திக்க தொடங்க வேண்டும். உலகில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்படும் போதும் நாம் எழுப்பும் எதிர்ப்பு குரல் என்பது எமது கடமை என்பதுடன் எமது மக்களின் உரிமைப்போருக்கான ஒரு அடித்தளமாகவும் அமையும் என்பதே வரலாறு எமக்கு தந்திருக்கும் பாடம்.

புதிய திசைகள்

http://www.kural.co.uk/news/2014/palestine

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.