Jump to content

டொரண்டோவில் ஒரே நாளில் மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள். 4 பேர் படுகாயம். -


Recommended Posts

[size=1]

[size=5]டொரண்டோவில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து கடந்த ஆறு நாட்களில் டொரண்டோவில் மொத்தம் ஆறு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.[/size][/size]

[size=1]

[size=5]இந்த மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தனவா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கடைசியாக நடந்த துப்பாகி சூடு Kennedy and Ellesmere roads area என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாகவும் இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரது வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனாலும் இவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=1]

[size=5]இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிலமணி நேரங்களுக்கு முன் அதாவது இரவு 11.30 மணியளவில், Bloor and Jane streets என்ற இடத்தில் இரண்டு துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 21 வயது வாலிபர் ஒருவருடைய தோள்பட்டையிலும், 19 வயதுள்ள வாலிபருக்கு காலிலும் குண்டுகள் பாய்ந்துள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.[/size][/size]

[size=1]

[size=5]கறுப்புநிற காரில் வந்த மர்ம மனிதர்கள் இரண்டு பேர்களே இந்த இரண்டு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணம் என்றும் இவர்களில் ஒருவன், கறுப்பு நிறத்தை உடையவன் என்றும், மற்றொருவன் தலையை மொட்டை அடித்துள்ளான் என்றும் நேரில் பார்த்த சாட்சிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இருவருமே வெள்ளை நிறத்தில் டி சர்ட் அணிந்துள்ளதாகவும் தெரிகிறது. இவர்களை பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், உடனே அருகிலுள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.[/size][/size]

[size="3"]\[/size]

[size=5]TO SEE THE SHOOTING PLACE OF IMAGE CLICK HERE[/size]

Link to comment
Share on other sites

[size=4]செவ்வாய்க்கிழமை நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் அதிகமான அளவில் காலவ்துறை இறக்கப்பட்டும் ஒவ்வொரு நாளும் சூட்டு நிகழ்வுகள் நடக்கின்றன. இரண்டு கறுவல் இனத்தவர்கள் செவ்வாய் அன்றும் அதன் பின்னர் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். [/size]

[size=1]

[size=4]இதுவரை காவல்துறை வெற்றிகரமாக கைது செய்தது ... ஒருவரை. அவரும் செவ்வாய்கிழமை துப்பாக்கிச்சூட்டில் காயப்பட்டவர். [/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.