Jump to content

பொறாமைக் குணம் (jealous) நாய்களிடம் கூட இருப்பது பரிசோதனையில் நிரூபணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dog.jpg

மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன.

அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத்ததுடன் பொம்மை நாயைத் தாக்கவும் செய்துள்ளன. இக்குணம் பூனைகளிடம் இல்லை என்றும் பூனைகளை விட மனிதனுக்கு ஒப்பான சில உணர்வுகளை நாய்கள் கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த ஆய்வின் படி நாய்கள் முறை தவறி கையாளப் பட்டாலும் அவை புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நாய்க்ள் சமூகப் பார்வையாளர்களுக்கு இணையானவை என்ரும் கருதப் படுகின்றது.

விலங்குகளின் சுபாவம் பற்றிய நிபுணரான பட்ரிசியா மக் கொன்னெல் என்பவர் 'For the Love of a Dog' என்ற தனது புத்தகத்தில் நாய்களின் குணாதிசயங்கள் குறித்து விவரித்துள்ளார். ஆனால் இவரது கூற்றுப் படி மனிதர்களிடையே காணப் படும் பொறாமைக் குணமும், நாய்களிடம் காணப் படும் பொறாமைக் குணமும் வெவ்வேறு தன்மை உடையவை, ஒரே வகையானவை அல்ல எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை நாய்களிடம் மேற்கொள்ளப் பட்ட கலிபோர்னிய பல்கலைக் கழக மாணவர்களின் குறித்த ஆய்வு செல்லப் பிராணிகளின் தனிப்பட்ட உணர்வுகளை புரிந்து கொள்வதற்கான முக்கிய மைல்கல் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களிடம் இதனை.... அவதானித்துள்ளேன்.
சிலவேளை அந்தப் பொறாமையை தாங்க முடியுமால், ஒரு மூலையில் போய் சுருண்டு படுத்திருந்து கொண்டு,

பாதிக் கண்ணை மூடிய படி... நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டில் இரண்டு நாய்கள் உண்டு..!

 

ஒரு பெண் நாய்... பத்து வயது இருக்கும்!

 

இரண்டாவது ஒரு குட்டி நாய்... இரண்டரை வயது இருக்கும்!

 

வளர்ந்த நாயை, அடிக்கடி தடவிக்கொடுக்கும் போது... சிறிய நாய் படுகின்ற 'பாடு' இருக்கிறதே...!

 

தானாகவே வந்து..நக்கும்... கொஞ்சும்..... !

 

நான் கவனிக்காது இருந்தால், மேலும்...மேலும் அதன் அன்பு அதிகரிக்கும்...!

 

அப்போது தான் நியுட்டனுக்குப் 'பொறி' தட்டிய மாதிரி என்னுள் ஒரு பொறி தட்டியது...!

 

ஒரு மனிதனுக்கு .....இரண்டு மனைவிகள் இருந்தால்.......! :D

 

நபிகள் நாயகம் கெட்டிக்காரன் தான்....! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்ன நாய்க்கதை உங்கட வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா , புங்கை அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்ன நாய்க்கதை உங்கட வீட்டுக்காரம்மாவுக்கு தெரியுமா , புங்கை அண்ணா

ஹி...ஹி...எனக்கும், நாய்க்கும், மடிக் கணனிக்கும் மட்டும் தான் தெரியும்...! :D

 

images.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஒரு மனிதனுக்கு .....இரண்டு மனைவிகள் இருந்தால்.......! :D

-----

 

சென்ற சனிக்கிழமை, ஜேர்மன் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்.

 

திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர், இரண்டு திருமணம் செய்தவர்.

அவர் தனது இரு மனைவிகளையும்.... அழைத்து வந்திருந்தார்.

ஆனால் மனைவிகள் இருவரும், ஒரு மேசையில் அமராமல் வெவ்வேறு மேசையில் அமர்ந்திருந்தார்கள்.

அந்த மனைவிகளுக்கு, பக்கத்தில் ஒரு கதிரை காலியாக இருந்தது.

 

இவர் ஒவ்வொரு பதினைந்து,  நிமிடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு மனைவிகளுக்கு அருகிலும் சென்று....

ஒருவருடன் பியரும், மற்றவருடன் வைனும் அடித்துக் கொண்டு இருந்தார்.

 

கொஞ்ச நேரம் செல்ல.... மூத்த மனைவி டான்ஸ் ஆட கூப்பிட்டார்.

இவரும் சந்தோசமாக அவரை அணைத்துக் கொண்டு டான்ஸ் ஆடி களைத்து வந்து இருக்கையில் அமர முற்பட்ட போது...

இளைய மனைவி, டான்ஸ் ஆடக் கூப்பிட்டார். இவர் ஏதோ சொல்ல முற்பட்ட போது..... மனைவியின் முக பாவனை மாறியது.

 

உடனே இவர் அவரையும் அழைத்துக் கொண்டு, அடுத்த ஆட்டம் ஆடி....

சட்டையெல்லாம்... வியர்த்து, வந்திருந்ததை பார்க்க பாவமாக இருந்தது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற சனிக்கிழமை, ஜேர்மன் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன்.

 

திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர், இரண்டு திருமணம் செய்தவர்.

அவர் தனது இரு மனைவிகளையும்.... அழைத்து வந்திருந்தார்.

ஆனால் மனைவிகள் இருவரும், ஒரு மேசையில் அமராமல் வெவ்வேறு மேசையில் அமர்ந்திருந்தார்கள்.

அந்த மனைவிகளுக்கு, பக்கத்தில் ஒரு கதிரை காலியாக இருந்தது.

 

இவர் ஒவ்வொரு பதினைந்து,  நிமிடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு மனைவிகளுக்கு அருகிலும் சென்று....

ஒருவருடன் பியரும், மற்றவருடன் வைனும் அடித்துக் கொண்டு இருந்தார்.

 

கொஞ்ச நேரம் செல்ல.... மூத்த மனைவி டான்ஸ் ஆட கூப்பிட்டார்.

இவரும் சந்தோசமாக அவரை அணைத்துக் கொண்டு டான்ஸ் ஆடி களைத்து வந்து இருக்கையில் அமர முற்பட்ட போது...

இளைய மனைவி, டான்ஸ் ஆடக் கூப்பிட்டார். இவர் ஏதோ சொல்ல முற்பட்ட போது..... மனைவியின் முக பாவனை மாறியது.

 

உடனே இவர் அவரையும் அழைத்துக் கொண்டு, அடுத்த ஆட்டம் ஆடி....

சட்டையெல்லாம்... வியர்த்து, வந்திருந்ததை பார்க்க பாவமாக இருந்தது. :D

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ, கண்ணா?

 

நீ நடத்தும் நாடகத்தில் யாதும் உண்டு....! :D

 

விரைவில் 'பட்டினத்தார்' ஆகி விடுவார்....அல்லது ஆக்கப்பட்டு விடுவார்.! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களுடன் இருந்திருந்தே  உந்தப் பொறாமைக் குணம் நாய்களுக்கும் வந்திருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.