Jump to content

தமிழ் கடை முதலாளிக்கும், அவரது மனைவிக்கும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை


Recommended Posts

தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது.

இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதா சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, தாமே அந்தச் சீட்டை வாங்கியதாக £156 659 தொகைக்கு உரிமை கோரியுள்ளார்கள். அதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு எங்கே வாங்கியது என்று உரிமை கோரியவர்களால் திட்டவட்டமாகக் கூறமுடியாமல் போய்விட்டது. 14 மாதச் சிறைத்தண்டனை முடியும் வரை இவர்களின் 10 வயது மகளை அவர்களது உறவினர்கள் பராமரித்துக் கொள்ளுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gwyn Badham-Davies க்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலம்... http://www.dailymail...y-winnings.html

Link to comment
Share on other sites

£156 659 தொகையக்கு என்ன வான்கலாம் சார்?????? வீடு வான்க கானுமோ :unsure:

அப எனகும் இபிடிதான் நடன்ததோ????????

:( :( :(

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

நித்திரை கொள்பவரை எழுப்பமுடியும்

நித்திரைபோல் நடிப்பவரை....???? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் பவுண்ஸ் பரிசு பெற்றவருக்கு, வெறும் பத்து பவுண்ஸ்சுடன், அல்வா கொடுக்க நினைத்திருக்கிறார்களே..... :o

நல்ல காலம், அந்த வயது போன தம்பதிகள் உசாராக இருந்ததால்.... குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்தது.

இப்படிப் பட்டவர்களின் செய்கையால்.... தமிழ்க் கடைக்கே வெள்ளைக்காரன் வராமல் விடப் போகின்றான்.

Link to comment
Share on other sites

ஒரு வயதான உழைப்பாளியை ஏமாற்றி உள்ளார்கள். கேவலமானவர்கள்.

இன்று தினசரியிலும் வந்தது. இவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தமிழ் ஆக்கள் காசு பார்க்கிறதில கெட்டிக்காரர்கள். கள்ள மட்டை என்றால் என்ன.. சீட்டு என்றால் என்ன.. இப்படி களவெடுக்கிறது என்றால் என்ன.. உதுகளால இப்ப போற இடமெல்லாம்.. சட்டதிட்டங்களும் கடுமையாகிட்டு வருகுது.

முந்தி எல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க.. சும்மா ஒரு ஆள் அடையாளம் இருந்தா போதும். இப்ப அதைக் கொண்டுவா.. இதைக் கொண்டுவா.. இரண்டு கிழமை பொறு.. கடவுளே. நம்ம சனத்தில சிலதுகள் செய்யுற கூத்தால எல்லோருக்கும் பாதிப்பு..!

இதுகள் திருந்துங்கள்..என்று நினைக்கிறீங்க...???! :):(

Link to comment
Share on other sites

14 மாதத் தண்டனை போதாது. இவர்களின் பிள்ளை பாவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.