Jump to content

மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல


Recommended Posts

மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன்: உதவிபுரிந்த சகலருக்கும் தலை வணங்குகின்றேன்: மஹேல

 


*உதவியஅனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்..

*கடினமான நேரத்தில் சரியான தீர்மானம்

*நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர்

*தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்!

*உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும்

*கடந்த வந்த பாதையும் சாதனைகளும்

*அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன்
Mahela-Jayawardene-Test_0_zpsc9cdb814.jp
மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன. எனக்கு பல வழிகளிலும் உதவி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், மனைவி, எனது கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கை கிரிக்கெட் சபை, எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழகம், பாடசாலை, பாடசாலை நண்பர்கள், பயிற்சியாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் அணி வீரர்கள் அனைருக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகளை தெரிவித்துகொள்வதாக இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான மஹேல ஜயவர்தன கண்ணீர் நிரம்பிய கண்களுடன் தெரிவித்தார்.
191703_0_zps4f24d6f9.jpg
இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று நட்சத்திரமும் ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தனவின் 17 வருட டெஸ்ட் அரங்கு இன்றுடன் நிறைவுக்கு வந்தது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி மஹேல ஜயவர்தனவுக்கு சமர்ப்பணமாக்கியது.
191705_0_zps9cf3f9f8.jpg
இலங்கை அணி போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் பட்டாசு கொளுத்தி ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, மஹேல ஜயவர்தனவை அணி வீரர்கள் தோலில் சுமந்து வர கண்ணீர் நிரம்பிய கண்களோடு அவர் கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து தனது கைகளை அசைத்து பிரியாவிடை பெற்றார்.

மஹேலவின் பிரியாவிடையில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார். மேலும் இரு அணிகளின் தலைவர்களுமான மிஷ்பா உல்ஹக் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரும் தமது வாழத்துக்களை தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், எஸ் எஸ் சி கழகம், இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் சார்பாகவும் மஹேல ஜயவர்தனவிற்கு ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து உணர்வுபூர்வமாக உரையாற்றி மஹேல ஜயவர்தன,
10556295_715398111830171_807485672342471

சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கின்றேன்..

நான் அதிர்ஷ்டசாலி. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரை காலமும் விளையாட கிடைத்தமையிட்டு சந்தோசமடைகின்றேன். எனது டெஸ்ட் வரலாற்றில் பலகோணங்களில் உதவிசெய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுளேன். முதலாவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு எனக்கு முதன் முதலாக பயிற்சிகளை வழங்கிய ஜயந்த மெண்டிஸ் மற்றும் பாடசாலை காலத்தில் பயிற்சிகளை வழங்கிய பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். மேலும் எனது பாடசாலைக்கும், பாடசாலை நண்பர்களுக்கும் எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கிளப்புக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாடசாலை கல்வியை நிறைவு செய்தன் பின்னர் எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கிளப் பல வழிகளில் இதுவரை எனக்கு உதவி செய்துள்ளது. நான் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட வீரர்கள் பலருடன் விளையாட வாய்ப்பு கிட்டியது. அர்ஜுண ரணதுங்க, அரவிந்த டி சில்வா, ரொசான் மஹானாம, ஹஷன் திலகரட்ன, சனத் ஜெயசூரிய, ஆகியோருக்கும் களத்தில் இருக்கும் போது ஒத்துழைப்புகளை வழங்கிய முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் உள்ளிட்டோருக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆரம்பத்தில் இருந்து எனக்கு பல வழிகளில் உந்துசக்தியாக இருந்து உதவி வந்த எனது பெற்றோருக்கும் எனது பல துன்பங்களில் பங்கேற்று உறுதுணையாக இருந்த மனைவிக்கும் எனது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது கிரிக்கெட் வரலாற்றில் சரி பிழைகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்கிய ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


சரியான தீர்மானம்

நான் மிகவும் கடினமான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்று நினைக்கின்றேன. நனாக சுயமாகவே இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் பின்னணியில் யாரும் இலங்கை. எனது உடலநலம் மற்றும் குடும்பம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்தேன். இதன் மூலம் ஏனைய இளைய வீரர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்புக்கள் கிடைக்க கூடியதாக இருக்கும்.

149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நான் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னர் தான் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. வீரன் என்ற வகையில் நான் அணியின் வெற்றியினை கருத்தில் கொண்டு மாத்திரமே விளையாடுவேன். எனவே போட்டிகளில் விளையாடிய எண்ணிக்கையோ அல்லது ஓட்ட எண்ணிக்கையோ ஒன்றும் பெரிதான விடயம் இல்லை.

17 வருடங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை சாதாரண ஒரு விடயம் இல்லை. நான் கடந்த வந்த பாதையை திரும்பி பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கின்றது. இந்த 17 வருட காலத்தில் எனது வாழக்கையில் பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.


நல்ல மனிதர்களில் நண்பன் குமார் சங்கக்காரவும் ஒருவர்

நண்பன் குமார் சங்கக்காரவுடன் கடந்த ஆறு வருட காலம் ஒன்றாக விளையாடிமையிட்டு சந்தோசமடைகின்றேன். அவர் மிகவும் திறமயான வீரர். அணிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுபவர். நான் கண்ட நல்ல மனிதர்களில் நண்பன் சங்கக்காரவும் ஒருவர். நான் இறுதியாக களத்தில் இருக்கும் போது குமார் சங்கக்கார 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்லும் போது மிகவும் வேதனையாக இருந்தது. காரணம் டெஸ்ட் அரங்கில் இருவரும் இறுதியாக இணைப்பாட்டமாக விளையாடிது அதுவே இறுதித்தருணம். சங்கக்கார டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை அவர் எடுப்பார்.
Mahela-cap_zpsa7420d2f.jpg

தொப்பிக்கு வீட்டில் ஓர் இடம்!

நான் அணிந்து இருக்கும் இந்த தொப்பிக்கு மிகவும் மரியாதை செலுத்துகின்றேன். இந்த தொப்பிளை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பாவிக்கின்றேன். இந்த தொப்பி யாருக்குமே கிடைக்காத ஒன்று. நான் ஒரு அதிர்ஷ்டசாலியாகவே கருதுகின்றேன். இதேவேளை குமார் சங்கக்காரவின் தொப்பியை கையில் எடுக்க முடியாதளவுக்கு சேதமாகியுள்ளது. ஆனால் அதனையே அவர் அணிந்து விளையாடுகின்றார்;. அந்தளவுக்கு நாம் போட்டிக்கும் இந்த தொப்பிக்கு மரியாதை செலுத்துகின்றோம். மேலும் இந்த தொப்பியை ஞாபகமாக வைப்பதற்கு வீட்டிர் ஓர் இடத்தையும் ஒதுக்கியுள்ளேன்.

உலக கிண்ணத்துக்கு தயாராக வேண்டும்

நான் விளையாடிய காலத்தில் அணிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்துள்ளனே;. மேலும் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் ஆறுமாதங்கள் உள்ள நிலையில் அதற்கு தயாராக வேண்டியுள்ளது. உலகக் கிண்ணத் தொடக்கு அணிக்கு என்னால் வழங்க கூடிய ஆதவை வழங்குவேன். அந்தத் தொடருக்கு பிறகு ஒரு நாள் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பேன்.  மேலும் எதிர்காலத்தில் இலங்கை அணியின் நலன் கருதி என்னால் முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.


அரசியலுக்குள் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன்

நான் அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்தால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மேலும் பயிற்சியாளராகும் எண்ணமும் இல்லை.


கடந்த வந்த பாதையும் சாதனைகளும்

1997 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்த  மஹேல ஜயவர்த்தன, இந்தியாவுக்கு எதிராக கொழும்பு  எஸ். எஸ்.சி.யில்  நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 66 ஓட்டங்களை எடுத்தார். இந்நிலையில் தனது இறுதி டெஸ்ட் போட்டியையும் எஸ். எஸ்.சி.யில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 வருட ஸெ;ட் அரங்கில் 149 போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன துடுப்பாட்டத்தில் 49.84 சராசரிகளை கொண்டுள்ளதோடு 11ஆயிரத்து 814 ஓட்டங்களை கடந்துள்ளார். இதில் 34 சதங்களும் 50 அரைச்சதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சிலும் பிரகாசித்துள்ள மஹேல ஜயவர்தன ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதோடு 205 பிடியெடுப்புகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் டெஸ்ட் தொடரில் அதிக ஒட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் ஏழாம் இடத்தை பிடித்துள்ள மஹேல
டெஸ்ட்டில் அதிக பிடிகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள உள்ளார். 

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒட்ட இணைப்பாட்டத்தை பெற்றவர்கள் வரிசையில் குமார் சங்க்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இரண்டாம் இடத்திலுள்ளமையும் குறிப்பிடதக்கதாகும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/08/18/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பையோ.. போயிருக்க வேண்டியது.

 

சும்மா அலம்பாமல்... போய் சேருங்க சார். போய் தொடங்கின.. பிஸினஸ்ஸை எனியாவது ஒழுங்காக் கவனிங்க. :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.