Jump to content

நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன?


Recommended Posts

நல்ல பந்தில் அவுட் ஆவது என்றால் என்ன?

 

 

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் போராட்டமின்றி சரணாகதி அடைவதற்கு பல காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது நல்ல பந்து வீசப்படுகிறது என்பதும் கூறப்படுகிறது.

 

விராட் கோலி, புஜாராவை முன் வைத்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் நல்ல பந்து ஏன் வீச அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் ஒரு புறம் வைத்துக் கொள்வோம்.

 

கிரிக்கெட்டில் ஆடமுடியாத, மிகச்சிறந்த பந்துகளுக்கு எப்போதும் அவ்வளவாக விக்கெட்டுகள் விழுவதில்லை. குறிப்பாக வேகப்பந்துக்குச் சாதகமான ஆட்டங்களில் பந்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் பந்து மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் செல்லும்போது அது குட் பால் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பந்தை கணித்து ஆடாமல் விடும் போது அது சாதாரணப் பந்தாகவே இருந்து விடுகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் அபாயகரமான பல பந்துகளை, விக்கெட்டுகளை வீழ்த்தும் அச்சுறுத்தலான பல பந்துகளை உலகின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களுக்கு வீசியுள்ளார். ஆனால் விக்கெட்டுகள் அவருக்கு அந்தப் பந்துகளில் கிடைத்ததில்லை. மாறாக அந்த நல்ல பந்தை எதிர்நோக்கியே அச்சப்படும் பேட்ஸ்மென்கள் சாதாரண பந்தை சொதப்பலாக விளையாடி அவுட் ஆகிவிடுவார்கள்.

 

கிளென் மெக்ரா அதிகப்படியான விக்கெட்டுகளைக் குவித்தது நல்ல பந்துகளில் அதிகம் அல்ல என்பதும் நாம் அவரது பந்து வீச்சை வீடியோ ஆய்வு செய்தால் தெரியவரும். அதேபோல் ஷேன் வார்ன் எடுத்த பாதி விக்கெட்டுகள் பேட்ஸ்மெனை மனரீதியாகக் குழப்பிவிட்டு எடுக்கப்பட்டவையே. காரணம் அவரது அந்த பெரிய ஸ்பின் பந்து விழுந்து விடும் என்ற அச்சத்தில் அவரது நேர் பந்துகளை ஆடாமல் விட்டு, அல்லது தவறாக ஆடி அவுட் ஆன வீரர்களே அதிகம்.

 

இங்குதான் சச்சின் டெண்டுல்கரின் திறமையை நாம் விதந்தோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் ஷேன் வார்னின் பந்துகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியே எடுத்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவர் ஒரு தொடர் முழுதும் பின்னி எடுத்தார். ஷேன் வார்னை சகல விதமாகவும் அவரால் ஆட முடிந்தது. மேலேறி வந்து தூக்கி அடித்தல் அல்லது ஸ்வீப், அல்லது ஸ்லாக் ஸ்வீப், விக்கெட் கீப்பர் பின்னால் பெடல் ஷாட் ஆடுவது, ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடிப்பது பின்னால் சென்று கட், மற்றும் புல் ஆடுவது என்று சகல ஷாட்களையும் அவர் வார்ன் பந்துகளில் அடித்துள்ளார்.

வார்ன் அப்போது நல்ல பந்துகளை வீசவில்லையா? வீசினார். ஆனால் அது மிகநல்ல பந்தாக விடாமல் சச்சின் ஆடியதுதான் ஆதிக்கத்திற்குக் காரணம்.

ஆலன் டோனல்ட் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் தொடுத்தபோது ஸ்டீவ் வாஹ், கிரெக் ப்ளூவெட், டேமியன் மார்ட்டின், கில்கிறிஸ்ட் ஆகியோர் பின்னி எடுத்தனர், காரணம் நல்ல பந்துகளை அவர்களை வீச விடாமல் செய்தது.

 

மிகச்சிறந்த இந்திய உதாரணம் விரேந்திர சேவாக்:

சேவாக் ஏன் பெரிய பேட்ஸ்மென் என்றால், அவர் பவுலர்களை நல்ல பந்துகளை வீச அனுமதிக்க மாட்டார். எப்போது கங்குலி சேவாகைத் துவக்க வீரராகக் களமிறக்கினாரோ அதன் பிறகே 1ஆம் நிலையில் களமிறங்கிய திராவிட் பெரிய அளவுக்கு இந்திய அணிக்காக பல டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் என்பதைப் புள்ளி விவரங்களைக் கொண்டு சுலபமாக நிறுவ முடியும்.

 

2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் சேவாக் ஒரு 40 அல்லது 45 ரன்களை விரைவில் அடித்த பிறகு திராவிட் களமிறங்குவார் பவுலர்கள் சேவாகிற்கு வீசிவிட்டு திராவிடிற்கு வீச வரும்போது திண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில்தான் அடிலெய்டில் திராவிட் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 78 நாட் அவுட் என்று எடுத்து இந்தியாவை அரிய ஒரு வெற்றிக்கு இட்டுச் செல்ல முடிந்துள்ளது.

 

அதே போல் பாகிஸ்தானில் சேவாகுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய திராவிட் அவருடன் இணைந்து சதமெடுக்க இருவரும் இணைந்து 400 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர்.

 

இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அஜந்தா மெண்டிஸின் புதிர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சச்சின், திராவிட், லஷ்மண், கங்குலி என்று பெரும் தலைகள் சொற்ப ரன்களில் வெளியேற சேவாக் மட்டும் ஒருமுனையில் அனைத்துப் பந்துகளையும் சாத்தி எடுத்து இரட்டைச் சதம் கண்டு கடைசி வரை ஆட்டமிழக்கவேயில்லை.

 

திராவிடின் எழுச்சி பற்றி பேசும்போது நாம் சேவாகின் பங்கை மறந்துவிடலாகாது.

கோலி, தவான், புஜாரா ஆகியோரது பிரச்சனைகள் என்ன?

 

கோலி பேட்டிங் உத்தி ஐபிஎல் பாணியில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஆடினாரே, நியூசிலாந்தில் ஆடினாரே என்று கேட்கலாம். தவானுக்கும் இது பொருந்தும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய இந்தியா பாணி களம் அமைக்கப்பட்டதே அங்கு அவர் சோபித்ததற்குக் காரணம். ஆனால் ஜோகன்னஸ்பர்கில் முதல் நாளில் ஸ்டெய்ன், மோர்கெலுக்கு எதிராக சதம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அங்கு அவர் ஷைன் ஆனதற்குக் காரணம் அவரது பலவீனமான பகுதிகளில் பீல்டிங் சரியாக அமைக்கப்படவில்லை.

 

இங்கிலாந்து அதனை, குறிப்பாக ஆண்டர்சன் பிடித்து விட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்சர்கள், பவுண்டரிகள் அடிப்பதற்காக பேட்டிங் செய்யும் போது ஷாட்களில் வலது கையை அழுத்திப் பிடித்து அடிக்கும் பழக்கத்திற்கு கோலி, தவான் அடிமையாகியுள்ளனர். ரோகித் சர்மாவுக்கும் அதே சிக்கல்தான்.

டெஸ்ட் போட்டிகளில் அதே முறையை மாற்றியமைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் ஐபிஎல் முடித்துவிட்டு அடுத்து முக்கிய டெஸ்ட் தொடரை ஆடும்போது அதே பாட்டம் ஹேண்ட் பேட்டிங்தான் வருகிறது. இதனால்தான் ரோகித் சர்மா கவர் திசையிலும் மிட் ஆஃப் திசையிலும் கேட்ச் கொடுக்கிறார்.

 

கோலி பாட்டம் ஹேண்ட்டை அழுத்துவதால் பந்துகள் எளிதில் ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகிறது. முன்னங்காலில் வந்து டிரைவ் ஆடும் போது இடது கை மணிக்கட்டு நிலை பந்துக்கு நேர்கோட்டில் இருப்பது அவசியம். வலது கையில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் பந்து தரைக்குச் செல்லாமல் கேட்ச்தான் ஆகும். இதெல்லாம் பாலபாடங்கள் அவர்களுக்கும் தெரியும். ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் ஆடியாடி இதனை மாற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

 

புஜாரா நல்ல டெஸ்ட் வீரராக இருந்தார். ஆனால் அவருக்கும் இந்த பாட்டம் ஹேன்ட் பிரச்சினை இருக்கிறது. தவன் இடமே பறிபோயுள்ளது. ஆனால் மாற்று வீரர் கம்பீரும் பாட்டம் ஹேண்ட் பிரச்சினையால்தான் சரியாக ஆட முடியாமல் சொதப்ப நேரிட்டது. ஆகவே தவனுக்குப் பதிலாக கம்பீரைக் களமிறக்கியது சிறந்த மாற்று கிடையாது.

 

கேப்டன் தோனியின் ஆட்டமும் பார்க்க அசிங்கமாக இருப்பதற்குக் காரணம் பாட்டம் ஹேண்ட்தான்.

சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அயல்நாடுகளில் கிரீஸை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்பார். இதனால் எல்.பி. வாய்ப்பை முறியடிக்க முடிந்தது. மேலும் பவுலர்களை ஷாட்டாக வீச அவர் தூண்டினார். இதனால் லைன் மற்றும் லெந்த் கிடைக்காமல் பவுலர்கள் அவதியுற நேரிட்டது. பிறகு அவர்கள் அதனைக் கண்டுபிடிப்பதற்குள் சச்சின் டச்சிற்கு வந்து விடுவார்.

 

ஆகவே சச்சின், பாண்டிங், லாரா போன்றோரின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்தாவது கோலி, புஜாரா போன்றவர்கள் தங்கள் பலவீனத்தைக் கண்டடைய வேண்டும்.

எனவே நல்ல பந்து என்ற ஒன்றே கிடையாது என்று கூறவரவில்லை. பலமான பேட்ஸ்மென்கள் நல்ல பந்தை விழ விடாமல் செய்து விடுவர்.

ஆகவே கோலி நல்ல பந்தில் 4 முறை அவுட் ஆனார் என்று கூறுவது உயர்மட்ட கிரிக்கெட் ஆட்ட நிலவரங்களின் படி அபத்தமான கூற்றாகும். கோலியின் பாட்டம் ஹேண்ட் பிரச்சினை குறித்து திராவிடும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதில் சுதாரித்துக் கொண்டவர் அஜிங்கிய ரஹானே மட்டுமே. முரளி விஜய் கவனமாக ஆடுகிறார் அவ்வளவே. அதனால் அவரது பிரச்சினைகள் வெளியே தெரிவதில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6309291.ece?theme=true

 

 

 

Link to comment
Share on other sites

நல்ல பந்திற்கு அவுட் ஆகாமல் இலகுவான பந்திற்கு பலர் அவுட் ஆவது உண்மைதான் .காரணம் நல்ல பந்து என்றால் தடுத்து ஆடவே முயலுவோம் இலகுவான பந்து என்றவுடன் அடித்து ஆட அவுட் ஆகும் சந்தர்பங்களும் அதிகம் வரும் .

 

ஆய்வாளர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை கொஞ்சம் குழப்பி அடிக்கின்றார் .சேவாக் டிராவிட் உதாரணம் உண்மையல்ல .

Link to comment
Share on other sites

நல்ல பந்திற்கு அவுட் ஆகாமல் இலகுவான பந்திற்கு பலர் அவுட் ஆவது உண்மைதான் .காரணம் நல்ல பந்து என்றால் தடுத்து ஆடவே முயலுவோம் இலகுவான பந்து என்றவுடன் அடித்து ஆட அவுட் ஆகும் சந்தர்பங்களும் அதிகம் வரும் .

 

ஆய்வாளர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை கொஞ்சம் குழப்பி அடிக்கின்றார் .சேவாக் டிராவிட் உதாரணம் உண்மையல்ல .

 

உண்மைதான் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு பிறகு எல்லோரும் குழம்பிதான் போய் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.