Jump to content

'புலிப்பார்வை'யில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம்: இயக்குநர் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

 'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார்.

 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன.

தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

 

"'புலிப்பார்வை'யில் தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்படும். அக்காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தில் இணைப்போம்.

முழுவதுமாக படம் முடிந்தவுடன், தமிழ் அமைப்புகளுக்கு திரையிட்டு காண்பிப்போம். அவர்களின் ஆதரவோடு இப்படம் வெளியாகும்" என்று இயக்குநர் பிரவீன்காந்தி கூறினார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மதன், "'புலிப்பார்வை' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன். தமிழர்களின் எதிராக எந்த ஒரு படத்தையும் வேந்தர் மூவிஸ் தயாரிக்காது.

மீண்டும் படப்பிடிப்பு நடத்தி தயாராகும் படத்தை தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் படத்தை வெளியிட மாட்டோம். தமிழ் உணர்வாளர்களுக்கு மதிப்பு கொடுப்போம்" என்றும் கூறினார்.

இதன் மூலம் 'புலிப்பார்வை' படத்தின் பிரச்சினை முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6335128.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன.

தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

 

"'புலிப்பார்வை'யில் தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்படும். அக்காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தில் இணைப்போம்.

-----

 

அப்பாடா..... ஒரு மாதிரி, எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பபோதும்  சீமான் உயர்ந்து தான் நிற்கின்றார்.
தான் போராடாமல்  மக்களைப் போராட வைத்து வெற்றியும் கண்டுவிட்டார்

Link to comment
Share on other sites

பலரின் வேஷம் தெரிந்து போனது இதனால் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பபோதும் சீமான் உயர்ந்து தான் நிற்கின்றார்.

தான் போராடாமல் மக்களைப் போராட வைத்து வெற்றியும் கண்டுவிட்டார்

எந்த இடத்தில் உயர்ந்தார் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கோ,மாணவர்களுக்கு அடி விழும்போது மேடையில் சீமான் இருந்து ரசித்ததை சொல்லுறீங்களா
Link to comment
Share on other sites

6fa0e7126f02b893b984a2ba4603984c

 

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

VaakaiTV 19.08.2014

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கடுமையா போராட்ங்கள் வெடிக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில தி.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக 51 பேர் ஆரதரவு வழங்கியுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பு பின் விடுக்கப்பட்ட செய்தியறிக்கை கீழே தரப்படுகிறது.

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாகக் கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனச்சாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

ஏனெனில்

1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.

2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.

3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.

7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.

8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது.

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கத்தி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

தமிழ்த திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்ற சப்பை கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத்தமிழர்தான் சந்தேகம் இல்லை.

ஆனால் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுக்குண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஸபக்ச கும்பலிடம் செல்வாக்குக் கொண்ட இன்னொரு டக்ளசும் கருணாவும் தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத்தமிழினம் நன்கறியும்.

முருகதாஸ், விஜய் ஏன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.

இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.

ஆதரவு தரும் கட்சிகள், இயக்கங்கள் பெயர் பட்டியல்

01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி

02. விடுதலைச் சிறுத்தைகள்

03. மனித நேய மக்கள் கட்சி

04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

05. கொங்கு இளைஞர் பேரவை

06. புரட்சி பாரதம்

07. எஸ்.டி.பி.ஜ

08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி

10. தமிழ்நாடு மக்கள் கட்சி

11. திராவிடர் விடுதலைக் கழகம்

12. தமிழ்த் தேசிய முன்னணி

13. மே 17 இயக்கம்

14. இளந்தமிழர் இயக்கம்

15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

16. தமிழர் எழுச்சி இயக்கம்

17. தமிழர் முன்னேற்றக் கழகம்

18. தமிழத் தேசப் பேரியக்கம்

19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்

20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்

21. நாகை திருவள்ளுர்

22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்

23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு

24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்

25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு

26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்

27. ஆதியமான்

28. மு.களஞ்சியம் இயக்குநர்

29. மருத்துவர் எழிலன்

30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்

31. தமிழர் படை – ஜோதிலிங்கம்

32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்

33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்

34. ராச்குமார் பழனிச்சாமி

35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்

36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி 

37. தமிழ்நாடு வணிகர் பேரவை

38. இயக்குநர் கீரா – களம்

39. காஞ்சி மக்கள் மன்றம்

40. மனித உரிமைகள் கழகம்

41. ராஜா ஸ்டாலின்

42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்

43. புலமைப்பித்தன்

44. மீனவர் வேங்கைகள்

45. தமிழக மீனவர் அமைப்பு

46. தமிழ்நாடு மீனவர் பேரவை

47. டி.எஸ்.எஸ். முணி

48. பத்திரிகையாளர்கள்

49. சுன்னத் ஜமாத்

50. பாப்புலர் ஆப் இண்டியா

51. வின் டிவி தேவநாதன்

52. கோவை ராமகிருட்டிணன் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

fb

Link to comment
Share on other sites

சீமான் தன் வாயாலெயே சொன்னரே மாணவர்கள் காசு வாங்கப் போராடுகிறார்கள் என்று? இதில் என்ன உயர்ச்சி சீமானுக்கு இருக்கிறது?

 

சீமானிடம் எனக்கு எதிர்பார்புக்களும் நம்பிக்கைகளும் இருந்தன.ஆனால் அவர் பத்திரிகைக்காரர்களுக்கு பதில் சொல்லிய விதம் ,மாணவர் போராட்டத்தைக் கொச்சைப்படுதியமை என்பவற்றை நேரே காணொளியாகப் பார்த்தபின் இவருடம் தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்நாட்டில் முன் எடுப்பதற்கான தலமைத்துவப் பண்புகளோ அரசியற் தெளிவோ இல்லை என்று தெரிந்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.. தேசிய தலைவரை விட்டிட்டு.. கன்னடப் பெரியாரை தூக்கிப் பிடிச்சால் சிலர் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள்..! எப்ப சீமான் கன்னடனான.. பெரியாரை தேசிய தலைவருக்கு பின்னாடி போட்டாரோ அப்ப இருந்தே இன்னொரு குறூப் சீமான் மேல கடுப்பில இருக்கினம்.

 

பத்திரிகையாளர் என்ற அடையாளம் இன்றி... சிலர் விசத்தனமான கேள்விகளை.. பதிலளித்த பின்னும் மீண்டும்.. மீண்டும்.. கேட்ட இடத்தில் கூடி இருந்த மக்கள் தான் அண்ணன் சீமானை கேள்வி கேட்டவரை நோக்கி.. நீ யார் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். சிலர் காணொளிகளை சரியாகக் காணாமல்.. சீமானின் சீரிய முயற்சிகளை ஊக்கப்படுத்தாமல்.. வழமை போன்று.. பக்கவாதம் செய்கிறார்கள். அது அவர்களின் கடந்த காலமும் கூட..! ஆச்சரியமும் இல்லை..! :lol::icon_idea:

 

மேலும் மாணவர் அமைப்புக்கள் குறிப்பிட்ட கூட்டத்தில் சீமானிடம் எழுத்துமூலமாக தமது கோரிக்கைகளை வைத்திருக்கலாம். அதனை புலிப்பார்வை படக் குழுவினரிடம் அவர் மூலம் கொண்டு சென்றிருக்கலாம். அங்கு கூச்சல் குழப்பம் செய்ததில்.. அவர்களின் செயலிலும் தவறுள்ளது. மாணவர்கள் ஆக்கிரோசமாக போராடுவதை மட்டுமல்ல..  சூழ்நிலைக்கு ஏற்ப.. அறிவுபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எதிர்காலத்தில். :icon_idea:

Link to comment
Share on other sites

சீமானும் நாம் தமிழரும் தாம் பெரியார் பற்றி அவதூறாகக் கூறவில்லை. அவர் தான் தமது இயக்கத்தின் தந்தை என்று விளக்கம் சொல்லி , மன்னுப்பும் கோரி விட்டார்கள். எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது விமர்சினம் வைப்பது அவர்களின் எதிர்கால நலன் கருதேயே அன்றி. சீமானை நம்பி களத்தில் நிற்க்கும் ஆயிரம் இளயோரை அவர் ஏமாற்றாமல் , தன்னை அவர் வைத்திருப்பாரா? இப்போதே இப்படி இருப்பவர் , பதவிகள் வந்த்த பின் எவ்வாறு மாறுவார்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படக்கதை முடிச்சு இப்ப சீமான் கதை ஆரம்பம்.... வாழ்க வளமுடன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

படம் தமிழத்தேசிய விடுதலைப் போராட்டம் பற்றீயது. போராட்டம் பற்றீய தவறான பார்வையை வழங்கிய படம் சம்பந்தமாக , ஈழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளாராக தன்னை முன் நிறூத்தும் சீமானின் நிலைப்பாடு கருத்துக்கள் தொடர்பாக விமரிசனம் வைப்பதற்கு ஈழப் போராட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்த வல்லது. விமரிசனம் அற் றா அரசியல் இயக்கங்கள் அழிவையே சந்திக்கும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் கேக்கிற கேள்விகளுக்கு இணைய தேசிய வாதிகள் பதில் சொல்வாா்களா?


இது சீமானுக்கு ஆதரவல்ல நியாயம் என்று பட்டதை சொல்லுறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தன் வாயாலெயே சொன்னரே மாணவர்கள் காசு வாங்கப் போராடுகிறார்கள் என்று? இதில் என்ன உயர்ச்சி சீமானுக்கு இருக்கிறது?

 

சீமானிடம் எனக்கு எதிர்பார்புக்களும் நம்பிக்கைகளும் இருந்தன.ஆனால் அவர் பத்திரிகைக்காரர்களுக்கு பதில் சொல்லிய விதம் ,மாணவர் போராட்டத்தைக் கொச்சைப்படுதியமை என்பவற்றை நேரே காணொளியாகப் பார்த்தபின் இவருடம் தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்நாட்டில் முன் எடுப்பதற்கான தலமைத்துவப் பண்புகளோ அரசியற் தெளிவோ இல்லை என்று தெரிந்து விட்டது. 

 

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தவறுதலானபுரிதல் அண்ணன் சீமான் சொன்னார் , ஒரு சில மாணவர் கத்தி படக் குழுவினரிடம் காசு கேட்டதாக்க , அந்த காணொளியும் இணைய தளத்தில் வந்தது...இதில் நீங்கள் இன்னொன்றை புரிந்து கொள்ளனும், புலிப் பார்வை ஆடியோ வெளியிட்டு விழாவில் பல மாணவர்கள் கலந்து கொண்டவை , அதில் ஒரு மாணவன் தான் நாம் தமிழர் தங்களை தாங்கினார் என்று சொன்னார் , மற்ற மாணவர்கள் நாம் தமிழர் தங்களை தாக்கினார்கள் என்று கூட சொல்ல வில்லை..........நாம் தமிழர் தாக்கினால் மற்ற மாணவர்களும் எல்லோ சொல்லி இருக்க வேனும் , நாம் தமிழர் தான் தங்களை தாக்கினார் என்று சொன்ன மாணவன் தான் கத்தி படக் குழுவிடம் காசு கேட்டதாக்க காணொளியில் பார்த்தேன் உண்மை பொய்யோ யாருக்கு தெரியும்.............தமிழ் நாட்டு அரசியலை கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ அண்ணா எதுக்கு எடுத்தாலும் அவனில் நம்பிக்கை போட்டுது இவனில் நம்மிக்கை போட்டுது என்று எழுத முதல்.......இந்தக் காணொளியை பாருங்கோ எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்...........

Link to comment
Share on other sites

சீமானின் பேட்டியில் சில தகவற் பிழைகள் இருக்கின்றான ,

லைக்கா நிறூவனம் தமிழர்களீன் வாடிக்கையில் இங்கிலாந்த்திலோ  அய்ரோப்பவிலோ தங்கி இருக்கவில்லை.

லைக்கா நிறூவனம் ராசபக்சவுடன் கூட்டுச் சேர்ந்த பின் அவர்களூக்கு எதிராக பல போராட்டங்கள் புலத்தில் மேற்கொள்ளாப்பட்டன.

தமிழர்களீன் மத்தியில் லைக்கா தற்போது தனிமைப்படுத்தப்பட்டே இருக்கிறாது.

 

தமிழ்நாட்டிலும் லைக்கா புறாக்கணீக்கப்படுவது அவர்களூக்கு இன்னும் ஒரு பாடம். கத்தி, விஜேய் முருகதாஸ் என்னும் நட்சத்திரப் பின்னணீ அவர்களூக்கு இந்த தனிமைப்படுத்தலை முறீயடிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். தற்போது மானாவர் போராட்டத்தால் இந்தச் சதி முடிக்கப்பட்டிருக்கிறாது.

Link to comment
Share on other sites

லைக்கவுடனான ராஜபக்சவின் உறாவை அம்பலப்படுதியவை இங்கிலாந்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களூம் ஒரு ஆங்கில நாளேடுமே. அதுவரை இவர்களீன் தொடர்புகள் வெளீயில் தெரியாமலே இருந்தன.

சீமான் இது பற்றீ முன்னர் தனக்கு தெரிந்து இருக்கவில்லை என்றூ சொல்லி உள்ளார். அதனை ஏற்றூக் கொண்டது நல்ல விடயமே. அவர் இங்கு நடந்த போராட்டங்கள் பற்றீயும் தெரிந்து கொண்டு பேச வேண்டும். சிரீலாங்காவைப் புறாக்கணீக்கும் போராட்டத்தை இங்கு இருக்கும் அமைப்புக்கள் பெரிய அளாவில் செய்ய வில்லை என்னும் விமரிசனம் நியாயமானது. இது தொடர்பாக இங்கிருக்கும் அமைக்களீடம் பலதடவை  கூறீ உள்ளேன், இனியாவது அவர்கள் சிந்திக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் கருத்து கத்தி,புலிபார்வை எதிர்ப்பு?
1)தேவைதான் 30%பேர் 
2)அதிதீதம்10%
3)புறக்கணிக்கபடவேண்டும் 60%
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமானின் பேட்டியில் சில தகவற் பிழைகள் இருக்கின்றான ,

லைக்கா நிறூவனம் தமிழர்களீன் வாடிக்கையில் இங்கிலாந்த்திலோ  அய்ரோப்பவிலோ தங்கி இருக்கவில்லை.

லைக்கா நிறூவனம் ராசபக்சவுடன் கூட்டுச் சேர்ந்த பின் அவர்களூக்கு எதிராக பல போராட்டங்கள் புலத்தில் மேற்கொள்ளாப்பட்டன.

தமிழர்களீன் மத்தியில் லைக்கா தற்போது தனிமைப்படுத்தப்பட்டே இருக்கிறாது.

 

தமிழ்நாட்டிலும் லைக்கா புறாக்கணீக்கப்படுவது அவர்களூக்கு இன்னும் ஒரு பாடம். கத்தி, விஜேய் முருகதாஸ் என்னும் நட்சத்திரப் பின்னணீ அவர்களூக்கு இந்த தனிமைப்படுத்தலை முறீயடிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். தற்போது மானாவர் போராட்டத்தால் இந்தச் சதி முடிக்கப்பட்டிருக்கிறாது.

 

2007ம் ஆண்டு மாா்ச் மாதம் லைக்கா ஸ்கை நெற் என்ற மகிந்தாின் உறவினரான ஹிமல் லலிந்த கொட்டியராச்சியின் (Himal Lalindra Hettiarachchi) நிறுவனத்தை லைக்கா குழுமத்தை சோ்ந்த நிறுவனம் வாங்கியுள்ளதான இணையத் தகவல் ஒன்று தொிவிக்கிறது. அப்படியானால் போராட்ட காலத்தில் தமிழ்த் தேசிய வாதிகளின் அனுசரனையோட இந்நிறுவனம் வாங்கப்பட்டது? அவா்களின் முதலீடு சிறிலங்காவில் செய்யப்பட்டது? 

லைக்காவுக்கு எதிரான போராட்டம் என்ன... அறிக்கை விடக்கூட தயாராய் இல்லை புலம்பெயா்ந்த எமது நாடுகளில் வாழும் தேசிய வாதிகள்... இதில் சீமான் போராட வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?   லெபராவினால் விலைக்கு வாங்கப்பட்ட இணையங்களும்.. சிறு குழுமமும் தற்போது லைக்காவை எதிா்பாதாக பாவனை காட்டுகின்றது. 

 

ஏன் எனில் தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறை அல்ல... சிறிலங்காவில் தம்மால் முதலீடு செய்ய முடியாதுள்ளது என்ற ஏக்கமே இந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தனவேயன்றி... தமிழ்த் தேசிய வாதிகள் என்று சொல்லுபவா்களின் நடவடிக்கை அல்ல. 

தமக்குள் இருக்கும் பிரச்சினைகளை கையளமுடியாத அளவுக்கு தமிழ்த் தேசியத்தின் பெயாில் இயங்கும் அமைப்புக்கள்  நழிவடைந்துள்ளன. 

ஒன்றுமை... போராட்டம் என்பது இங்கு வெறும் கோசங்களாகி போனது சோகம்...!

தந்தி தொலைக்காட்சியில் மக்கள் கருத்து கத்தி,புலிபார்வை எதிர்ப்பு?

1)தேவைதான் 30%பேர் 

2)அதிதீதம்10%

3)புறக்கணிக்கபடவேண்டும் 60%

 

 

பையன்... நீங்க பையனாகவே இருக்கிறீங்க... நாங்கள் இப்பிடி எத்தினை கருத்துக்கணிப்பை எமது கருத்துக்களுக்கு ஏற்றவகையில் மாற்றினாங்கள் என்பது பலருக்கு தொியும்...!  

Link to comment
Share on other sites

//அப்படியானால் போராட்ட காலத்தில் தமிழ்த் தேசிய வாதிகளின் அனுசரனையோட இந்நிறுவனம் வாங்கப்பட்டது? அவா்களின் முதலீடு சிறிலங்காவில் செய்யப்பட்டது? //

 

2009 ஆம் ஆண்டு புலிகள் அழிக்கப்பட்டனர். 2007 ஆம் ஆண்டு நிறூவனம் வாங்கப்பட்டால், இங்கு நீங்கள் தமிழத் தேசிய வாதிகள் என்பவர்கள் விடுதலைப் புலிகளே. அப்படியானால் நீங்கள் புலிகளீடமா இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை புலிகள் தமது இராணூவ நோக்கங்களூக்காக பல இத் தகைய முதலீடுகளைச் செய்து இருக்கிறார்கள்> அவ்வாறான ஒரு பாதையாக இது இருந்திருக்கக் கூடும். ஏனெனில் லைக்கா குழுமம் அப்போது மிக நெருக்கமாக வேலை செய்ததாகவே அறீகிறேன். புலிகளீன் அழிவின் பின்னர் அவர்கள் தமது முதலீடுகப் பெருப்பிக்கும் நோக்குடன் ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து இருக்க முடியும். 2009 ஆம் ஆண்டின் பின்னர் சிரீலங்காவில் எந்த முதலீடும் செய்யப்படாமல் அது புறாக்கனீக்கப்படிருக்க வேண்டும். தமிழத் தேசிய விடுதலைப் போருடன் நின்றா பலர் புலிகளீன் அழிவின் பின்னர் அரசுடன் கூட்டுச் சேர்ந்தனர்.  

 

//லைக்காவுக்கு எதிரான போராட்டம் என்ன... அறிக்கை விடக்கூட தயாராய் இல்லை புலம்பெயா்ந்த எமது நாடுகளில் வாழும் தேசிய வாதிகள்... இதில் சீமான் போராட வேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?//

 

புலம் பெயர் தமிழர் இல்லாமல், புலம் பெயர் அமைப்புக்கள் இல்லை. அவை தவறூ செய்தால் அதைத் திருத்த வேண்டிய பொறூப்பு எம்மிடமே இருக்கிறாது. அது உங்களீடமும் இருக்கிறாது என்னிடமும் இருக்கிறாது. மற்றாவர் மீது ஒரு விரல் நீளூம் போது நான்கு விரல்கள் எம்மை நோக்கி இருக்கின்றான. அதனாலேயே சீமானின் விமரிசனத்தை ஏற்றூக் கொள்கிறேன் என்றூ எழுதி இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருத்தரும் அங்க உள்ள சனத்தை பற்றி யோசிக்க மாட்டீங்களா.சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையாலாம்.அங்கை சுவரே ஆட்டம் கானுது. :rolleyes:

Link to comment
Share on other sites

அருமை பையா.. இணைப்பிற்கு நன்றி.. :D நான் நினைத்தமாதிரி இந்த பிரவீன் காந்திதான் அரைகுறை விளக்கத்துடன் படம் எடுத்துள்ளார். குறை காணுகிறவர்கள் ஒருமுறை இக்காணொளியைப் பார்ப்பது நல்லது. :D ஆனால் பார்க்கமாட்டார்கள்.. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.