Jump to content

'கத்தி'யை எதிர்ப்பது சரியா?- சீமான் சரமாரி கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கான எதிர்ப்பு தொடர்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

 

" 'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. லைக்கா நிறுவனத்தை எதிர்க்கிறார்களா அல்லது படத்தை எதிர்க்கிறார்களா? டெரரிஸ்ட், மல்லி, இனம் ஆகிய மூன்று படங்களை எடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். மூன்றையும் நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச் சிறந்த இயக்குநரோடு ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டே இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. சந்தோஷ் சிவன் என்ற ஒளிப்பதிவு கலைஞனோடு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவரது தனிப்பட்ட கருத்தை நான் எதிரிக்கிறேன்.

 

'அஞ்சான்' படத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றி இருக்கிறார். 'இனம்' படத்தை எடுத்து விட்டு எப்படி நீ பணியாற்றலாம் என்று நான் போராடவில்லை. லைக்கா நிறுவனர், ராஜபக்சேவோடு வியாபார தொடர்பு வைத்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்று இருக்கிறார் என்பதும் குற்றச்சாட்டு.

 

இந்தியாவில் இருந்து யாரும் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்று களத்தில் இறங்கி போராடினோம். அதே மாதிரி லைக்கா நிறுவனம் இருக்கும் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் எத்தனை?

 

'கத்தி' அப்படினு ஒரு படம் எடுப்பார்... அப்போ போராட்டம் நடத்தலாம் என்று காத்திருந்தீர்களா? அதுக்கு உங்களுக்கு சீமான் கிடைத்தானா? கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி இருக்கிறேன். எத்தனை பேர் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். ஏன் 'கத்தி' எதிராக சீமான் போராடவில்லை என்பவர்கள், நான் போராடிய போது எங்கு சென்றார்கள்?

 

நான் உங்களது அடிமை மாதிரியும், நீங்கள் வைத்த வேலை ஆள் மாதிரியும் இருக்கிறது. அதற்கான ஆள் நான் கிடையாது. எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து, முடிவெடுக்க தெரியாதவர்களா இவ்வளவு பெரிய பேரியக்கத்தை கட்டி காத்து வருகிறோம்.

 

தேர்தல் நேரத்தில் அவ்வளவு கூட்டங்களில் பேசினனே... அப்போது எல்லாம் எங்கே சென்றார்கள் இவர்கள். இந்தப் படத்தில் நடித்த விஜய்-க்கும், இயக்கிய முருகதாஸுக்கும், லைக்கா நிறுவனத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஏற்கெனவே கருணா என்பவர் 'வில்லு' போன்ற படங்கள் எடுத்தவர் என்பதால் போய் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். கருணா என்பவர் பணத்துக்காக லைக்காவை இணைத்துக் கொண்டார்.

 

முதலிலே என்னிடம் இந்தத் தகவலைச் சொல்லி இருந்தார்கள் என்றால், 'விஜய் நீங்க நடிக்காதீங்க, முருகதாஸ் இயக்காதீங்க, ஐயங்கரன் நீங்க லைக்காவில் இருந்து வெளியே வந்து படம் பண்ணுங்க' என்று சொல்லி இருந்தால் விட்டுவிட்டு போயிருப்பார்கள். விஜய்யும், முருகதாஸூம் தயாரிப்பாளர்கள் இல்லாமலா லைக்காவில் படம் பண்ணுக்கிறார்கள். தொடக்கத்தில் விட்டுவிட்டு, பாதி படம் தாண்டியவுடன் என்ன போராட்டம். லைக்காவை எதிர்க்கிறீர்களா, விஜய்யை எதிர்க்கிறீர்களா, படத்தை எதிர்க்கிறீர்களா அது ரொம்ப முக்கியம். 'கத்தி' படத்தை லைக்கா எடுக்கவில்லை என்றால் என்ன பண்ணி இருப்பீர்கள். 'சண்டியர்' படம் மாதிரி ஆகியிருக்கும்.

 

புதுமுகங்கள் நடித்திருந்தால் எதிர்த்து போராடி இருப்பீர்களா? பதில் சொல்லுங்கள். அன்றைக்கு கமல்ஹாசன் நடிக்கும் போது 'சண்டியர்' தலைப்பு பெரிதாக இருந்தது. புதுமுகங்கள் நடிக்கும் போது பெரிதாக தெரியவில்லை.

 

லைக்கா நிறுவனத்தை எதிர்த்து போராடி, கம்பெனியை முற்றுகையிடுங்கள், நானும் களத்தில் இறங்கி போராடுகிறேன்.

 

எல்லாருக்கும் பிரச்சினை பண்ண தெரியும். பிரச்சினையை சரி பண்ணத் தெரிந்தவர்கள் நாங்கள். பிரச்சினையே பண்ணிக்கிட்டு இருக்கிற ஆட்கள் நாங்கள் அல்ல. ராஜபக்சே காசு கொடுத்து தமிழ் படம் எடுக்கிறார் என்றால் யாராவது நம்புவார்களா? எங்களை மீறி தவறான கருத்துள்ள படங்களை எடுத்து வெளியிட முடியுமா? 'கத்தி' அருமையான படமாக வரப்போகிறது. அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்.

 

ஒரு வில்லன் குழந்தை கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டுகிறான். வில்லனை வீழ்த்த வேண்டும் சரி தான். ஆனால் குழந்தையை காப்பாற்ற வேண்டும் அல்லவா? சேர்த்து கொல்வதுதான் தர்மமா. இதான் போராட்ட வடிவமா... முறையா..?

'கத்தி' படத்திற்கு போராட்ட களம் இங்கில்லை. லண்டனில் இருக்கிறது. இந்தப் படம் முடிந்தவுடன், நீ படம் எடுத்தது போதும் கிளம்பு என்று சொன்னால் போய்விட போகிறார்கள்?" என்றார் சீமான். 

 

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6335473.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பு.பார்வை என்னாச்சு அதன் தற்போதைய மாற்றத்திற்கும் நீங்க தான் காரணம் என்று அறிக்கை விடலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கேள்விகள்  ஒவ்வொன்றும்  அர்த்தமுள்ளவை

இவை

திடீரென  எழுவதாக தெரியவில்லை

வலியின் ஆற்றமை  காரணமாகவே

பொறுத்து  பொறுத்து

இறுதியில் வருவதாக தெரிகிறது

ஈழத்தவர்

தம்மை  முதலில் உணரணும்

தாம் எதுவும் செய்யாது இருந்து கொண்டு

அடுத்தவனை ஏவி

எதனையும் செய்து முடிக்கமுடியாது என்பதனை  இனியாவது உணரணும். :(  :(  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"லைக்கா நிறுவனத்தை எதிர்த்து போராடி, கம்பெனியை முற்றுகையிடுங்கள், நானும் களத்தில் இறங்கி போராடுகிறேன்.

 

எல்லாருக்கும் பிரச்சினை பண்ண தெரியும். பிரச்சினையை சரி பண்ணத் தெரிந்தவர்கள் நாங்கள். பிரச்சினையே பண்ணிக்கிட்டு இருக்கிற ஆட்கள் நாங்கள் அல்ல"

 

 

ஆரம்பிக்கலாமே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான்..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.