Jump to content

கோமாளி சுப்ரமணிய சுவாமிக்கு,கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி - மனோ


Recommended Posts

சுப்ரமணியன் சுவாமி என்ற ஒரு கோமாளியை இங்கே அழைத்து வந்து, அவரை இந்திய அரசின் பிரதிநிதி என்று, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி காட்ட, இலங்கை அரசாங்கத்தால் முடியுமானால், இந்திய அரசின் கதாநாயகனான நரேந்திர மோடியை சந்தித்து, 13ம் திருத்தம் Mano-ganeshan--news-pic_8.jpgதொடர்பாகவும், அதை மென்மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் உரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பால் முடியும்.

இந்தியாவில் ஒரு நகரசபை உறுப்பினராக கூட மக்களின்  வாக்குகளை பெறாத, பெற முடியாத சுப்பிரமணிய சுவாமிக்கும், இங்கே அவரை அழைத்து வந்து,ஊதிப்பெருப்பித்து காட்டி நாடகமாடியவர்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய பயணம் நல்ல ஒரு சாட்டையடி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை  பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்கின்றனர். இந்த ஊவா தேர்தல் களத்தை பயன்படுத்தி, கூட்டமைப்பின் டெல்லி பயணத்தை, திரித்து பேசி, நாட்டை குழப்ப, இனி ஒரு குழு கிளம்பும். இந்திய துணையுடன் நாட்டை இரண்டாக பிரிக்க முயற்சி என்று கூச்சல் அடுத்த சில நாட்களுக்கு கேட்கும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதை இலங்கை அரசு தன் செயல்கள் மூலம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது.  எனவே கூட்டமைப்பினர் இந்தியா சென்று தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண வழி தேடுவார்கள் எனில், அது இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்களுக்கும் நன்மை தருவதாகும். ஆகவே இந்தியா செல்லும் கூட்டமைப்பினர் இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்கள் சார்பாகவுமே செல்கிறார்கள். இந்நாட்டில், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் என்ற கொள்கையை முன்னெடுத்து செல்கிறார்கள்.  

இந்திய அரசு , இலங்கையின் உண்மை யதார்தத்தை உணர்ந்து செயல்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதிகாரத்தை பகிர பிடிவாதமாக இலங்கை அரசு மறுப்பதே,இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரதான முட்டுக்கட்டை என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.

இலங்கை அரசு, சுப்பிரமணிய சுவாமியை  ஒப்பந்த அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து  வந்து, அவருக்கு எழுதி கொடுத்து, அதை வாசிக்க சொல்கிறது. இந்த அரசு சொல்வதை அவரும் செய்கிறார்.  அதானால்தான் அவர், இலங்கை வந்து எங்களுக்கு13ம் திருத்தத்தின் அமுலாக்கம் பற்றி கற்று கொடுக்கிறார். இந்த சட்டமூலத்தில்,பொலிஸ் அதிகாரம் தவிர, ஏனைய 90 விகித அதிகாரங்கள் இன்று அமுல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். எங்கள் நாட்டில், எங்களை நிலைமையை பற்றி,எங்களுக்கு இவர் பாடம் நடத்துகிறார். இது இந்த வருடத்தின் மிகபெரும் நகைச்சுவை.

இவரை பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் ஒரு போலியான அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்த மகிந்த அரசு முயல்கிறது. சுப்ரமணிய சுவாமி, இந்திய அரசின் பிரதிநிதி என்றும், அவர் வாயில் வரும் கருத்துகள், இந்திய அரசின் கருத்துகள் என்றும் காட்ட இலங்கை அரசு முயல்கிறது. இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா, புது டெல்லி சென்று இந்திய அரசு சொல்லிக்கொடுத்ததை பேசினால் எப்படி இருக்குமோ,அப்படித்தான் இந்த சுவாமி டெல்லியில் இருந்து இங்கே வந்து இந்த அரசு சொல்லிக்கொடுத்ததை  பேசுவதாகும். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தமிழ், ஹிந்தி திரைப்படங்கள் இலங்கையில் பாரம்பரியமாக ரசிக்கபடுகின்றன. இவற்றில் நடிக்கும் காமெடி நடிகர்கள் இங்கே ரொம்ப பிரபல்யம். இத்தகைய  ஒரு காமெடி நடிகர்தான் சுப்ரமணிய சுவாமி.

 

http://virakesari.lk/articles/2014/08/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.