Jump to content

நல்லுர் வளாகத்திற்குள் விக்னேஸ்வரன் அத்துமீறல்! Photo's


Recommended Posts

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இந்தமுறை திருவிழாவின் போது இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது.

vikki_nallur_1.JPG

ஆலயத்திற்கு வருபவர்களிற்கான பொது நடைமுறை என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

vikki_nallur_3.JPG

ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப் போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார்.

vikki_nallur_4.jpg

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள எப்.எம்மின் கலைகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில்  வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார்.

vikki_nallur_2.jpg

துவிச்சக்கர வண்டிகள் கூட உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், வாகனமொன்று உள்ளே வருவதை மக்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

இதேபோல, அண்மையில் மேர்வின் சில்வாவும் ஆலயத்திற்குள் இப்படி அதிரடியாக வாகனத்துடன் நுழைந்திருந்தார்.

ஆலய சூழல் மாசுபட்டுவிட்டதாக அப்பொழுது அறச்சீற்றம் கொண்ட தமிழ் பத்திரிகைகள் எல்லாம், இந்த விடயத்தில் மௌனம் காத்துக் கொண்டிருப்பது ஏன்?http://www.pathivu.com/news/33284/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாகனமொன்று உள்ளே வருவதை மக்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

இனிமேல் ஆம்புலன்ஸ் வந்தாலும் ஒருக்கால் நிப்பாட்டிப் போட்டுத் தான் வரவேணும்! :D

 

மேர்வின் என்கிற காவாலிக்கும், விக்கினேஸ்வரனுக்கும் உள்ள வித்தியாசம் 'மக்களுக்குத்' தெரியும் என நினைக்கிறேன்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எனில் விக்னேஸ்வரன் துரோகி தான்...

 

அவா் எப்பவோ....

தோ்தல் காலத்திலையே எத்தனையோ போ் அந்த பட்டத்தை கொடுத்திட்டாங்களே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி  நாம  சொல்லி

அவர் சட்டம் படித்து..

அதை மதித்து.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் முக்கிய தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில்.. பஜிரோக்களில் நல்லூர் ஆதினம் வரை அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக் கருதி வாகனங்களில் வர அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் ஒருபோதும் நல்லூர் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் மட்டும் அவர்களுக்குரிய வண்டிகளில் அமர்ந்து வர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

குறிப்பிட்ட காலங்களில் பள்ளிக்காக சாரண சேவையாற்றியதால்.. இது குறித்து எமக்கு தரப்பட்ட அறிவுரையும் இதே..! :icon_idea::)


பதிவு ஊடகக்காரர்கள் யாழ் இணையக் களத்தில் பொதுமக்களோடு நேரடி கலந்துரையாடல் ஒன்றை வைத்துக் கொண்டு..நாட்டு நடப்புகளை சரியாகப் புரிந்து கொண்டு எழுதுவது நல்லது.

 

மேர்வின் சில்வாவின் நடவடிக்கை அடாத்தானது. எந்த வாகனங்களும்.. (கோவில் பணியில் உள்ள வாகனங்கள் தவிர) நல்லூர் முன் வீதிக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. மேலும்.. திருவிழாக்காலங்களில்.. பாதணிகளும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில்.. இவை அனைத்தையும் மீறிய மேர்வினின் நடவடிக்கையையும்.... நல்லூர் பின் வீதியால்.. கடைத்தொகுதி வரை.. பாதுகாப்பு நிமித்தம்.. வாகனத்தில் வருவதையும்.. ஒன்றாக நோக்க முடியாது..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vikki_nallur_4.jpg

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vikki_nallur_4.jpg

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

 

 

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

 

 

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது

நான் அழுதிடுவன்

அவருக்கு

அந்தளவுக்கு வயசாகல.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.