Jump to content

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கடுமையா போராட்ங்கள் வெடிக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில தி.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக 51 பேர் ஆரதரவு வழங்கியுள்ளனர்.

chennai_press_kathi_puliparvai.4.png

செய்தியாளர் சந்திப்பு பின் விடுக்கப்பட்ட செய்தியறிக்கை கீழே தரப்படுகிறது.

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.

chennai_press_kathi_puliparvai.6.png

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாகக் கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனச்சாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

chennai_press_kathi_puliparvai.5.png

ஏனெனில்

1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.

2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.

3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.

7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.

8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. 

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

chennai_press_kathi_puliparvai.3.png

கத்தி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

chennai_press_kathi_puliparvai.2.png

தமிழ்த திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்ற சப்பை கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத்தமிழர்தான் சந்தேகம் இல்லை.

ஆனால் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுக்குண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஸபக்ச கும்பலிடம் செல்வாக்குக் கொண்ட இன்னொரு டக்ளசும் கருணாவும் தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத்தமிழினம் நன்கறியும்.

chennai_press_kathi_puliparvai.1.png

முருகதாஸ், விஜய் ஏன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.

இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.

ஆதரவு தரும் கட்சிகள், இயக்கங்கள் பெயர் பட்டியல்

01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி

02. விடுதலைச் சிறுத்தைகள்

03. மனித நேய மக்கள் கட்சி

04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

05. கொங்கு இளைஞர் பேரவை

06. புரட்சி பாரதம்

07. எஸ்.டி.பி.ஜ

08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி

10. தமிழ்நாடு மக்கள் கட்சி

11. திராவிடர் விடுதலைக் கழகம்

12. தமிழ்த் தேசிய முன்னணி

13. மே 17 இயக்கம்

14. இளந்தமிழர் இயக்கம்

15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

16. தமிழர் எழுச்சி இயக்கம்

17. தமிழர் முன்னேற்றக் கழகம்

18. தமிழத் தேசப் பேரியக்கம்

19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்

20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்

21. நாகை திருவள்ளுர்

22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்

23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு

24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்

25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு

26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்

27. ஆதியமான்

28. மு.களஞ்சியம் இயக்குநர்

29. மருத்துவர் எழிலன்

30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்

31. தமிழர் படை – ஜோதிலிங்கம்

32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்

33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்

34. ராச்குமார் பழனிச்சாமி

35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்

36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி 

37. தமிழ்நாடு வணிகர் பேரவை

38. இயக்குநர் கீரா – களம்

39. காஞ்சி மக்கள் மன்றம்

40. மனித உரிமைகள் கழகம்

41. ராஜா ஸ்டாலின்

42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்

43. புலமைப்பித்தன்

44. மீனவர் வேங்கைகள்

45. தமிழக மீனவர் அமைப்பு

46. தமிழ்நாடு மீனவர் பேரவை

47. டி.எஸ்.எஸ். முணி

48. பத்திரிகையாளர்கள்

49. சுன்னத் ஜமாத்

50. பாப்புலர் ஆப் இண்டியா

51. வின் டிவி தேவநாதன்

 

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy5wYXRoaXZ1LmNvbS8=

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

படத்தை இயக்கியவர் சொல்கிறார் ....  ஒரு கற்பனை காட்சியில் பாலசந்திரன் சிருடையில் வருவதாகவும் அது ஒரு கற்பனை என்றும்.
 
இவர்கள் சொல்கிறார்கள் ..............
அவர் படம் முழுக்க சீருடையில் வருகிறார் என்று.
 
இதில் யார் நல்லவன் 
யார் கெட்டவன் என்பதை ............... முடிவுசெய்ய ஆறறிவு மனிதர்களுக்கு போதிய ஆதாரம் ஏதும் இல்லை என்பதே அடிப்படை உண்மை.  ஏழாம் அறிவு பெற்று பிரபஞ்சத்தில் சஞ்சரித்து கொண்டிருப்பவர்களுக்கு (சீமான் மீது) அவர்களது சொந்த தொழிலை செய்ய இது நல்ல சந்தர்ப்பம் வழங்கி இருப்பதால்....... கலக்கோ கலக்கு என்று கலக்கிவிட்டு இப்போ படம் பற்றிய உண்மை  வெளியில் வரும் நேரம் அச்சா பிள்ளைகள் நித்தா கொள்ள போய்விட்டார்கள்.  
 
மேலே இருக்கும் 51 கட்சிகளில் யார் படத்தை முழுதுமாக பார்த்தவர்கள்? 80 வீதம் யாரோ ஒருவரின் ஆட்டுவிப்பில் ஆடிகொண்டிருக்கிரார்கள் என்பது தெளிவானது. அந்த ஆட்டுவிப்பான் யார் என்பதும் தெளிவாகனும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் எங்கப்பா?

 

திமுக இல்ல.

 

அதிமுக இல்ல.

 

மதிமுக இல்ல.

 

ப.ம.க இல்ல.

 

நாம் தமிழர் மட்டும் இருக்கனுமா..?????! என்ன நியாயம்..??????????????!

 

இதில இருக்கிற பல அமைப்புக்கள்.. இந்த எதிர்ப்பின் மூலம் தான் மக்கள் முன் அறிமுகமாகவே போகின்றன.!!! :D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

புலிப்பார்வை முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட, போர்க்குற்றம் ஒன்றை நியாயப்படுத்தும் கருத்தியலைக் கொண்ட படம் என்பதால் அதனை எதிர்ப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. திரைப்படத்தின் திருட்டு விசிடி கூட வெளியாகக்கூடாது என்று விரும்புகின்றேன்.

 

ஆனால், கத்தியை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. புலம்பெயர் நாடுகள் தோறும் சிறிலங்காவின் பொருட்களை விற்பனை செய்தும், ஊக்குவித்தும் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கத்தி படத்தினை எதிர்க்கும் தார்மீக உரிமை கூட எமக்கு இல்லை. 2009 பின்னரான சூழ்நிலையில் வடக்கு கிழக்கின் உற்பத்திகளை, முயற்சிகளை ஊக்குவித்து பரந்த சந்தையை ஏற்படுத்தி பேரழிவுக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டிய தேசிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதால் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது என்பது கூட தவறான கருத்தியலாகத் தான் தெரிகின்றது.

 

இது என் தனிப்பட்ட கருத்தாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட, போர்க்குற்றம் ஒன்றை நியாயப்படுத்தும் கருத்தியலைக் கொண்ட படம் என்பதால் அதனை எதிர்ப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. திரைப்படத்தின் திருட்டு விசிடி கூட வெளியாகக்கூடாது என்று விரும்புகின்றேன்.

 

ஆனால், கத்தியை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. புலம்பெயர் நாடுகள் தோறும் சிறிலங்காவின் பொருட்களை விற்பனை செய்தும், ஊக்குவித்தும் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கத்தி படத்தினை எதிர்க்கும் தார்மீக உரிமை கூட எமக்கு இல்லை. 2009 பின்னரான சூழ்நிலையில் வடக்கு கிழக்கின் உற்பத்திகளை, முயற்சிகளை ஊக்குவித்து பரந்த சந்தையை ஏற்படுத்தி பேரழிவுக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டிய தேசிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதால் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது என்பது கூட தவறான கருத்தியலாகத் தான் தெரிகின்றது.

 

இது என் தனிப்பட்ட கருத்தாகும்.

எதை ஆதாரமாக வைத்து கொண்டு இப்படி சொல்கிறீர்கள்?
இவ்வாறு ஒரு துரோகத்தனம் அதில் இருந்தால் ................ அதை உலெகெங்கும் தடைசெய்யும் அளவிற்கு போராடனும்.
முளையிலேயே கிள்ளிவிடனும்.
 
அனால் படத்தை பார்க்காதவர்கள்தானே இப்படி சொல்லிவருகிறார்கள்?????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் எங்கப்பா?

அவங்கதான் நடுச்சந்தியில நிக்கினம்,செத்தான் சேகரு(ச்சீ மான்)
Link to comment
Share on other sites

 

எதை ஆதாரமாக வைத்து கொண்டு இப்படி சொல்கிறீர்கள்?
இவ்வாறு ஒரு துரோகத்தனம் அதில் இருந்தால் ................ அதை உலெகெங்கும் தடைசெய்யும் அளவிற்கு போராடனும்.
முளையிலேயே கிள்ளிவிடனும்.
 
அனால் படத்தை பார்க்காதவர்கள்தானே இப்படி சொல்லிவருகிறார்கள்?????

 

 

தமிழகத்தின் செய்திகளின் படியும், படத்தின் சுவரொட்டிகள் மற்றும் Trailer இன் படியும் பாலச்சந்திரனை இராணுவப்பயிற்சி பெற்ற போராளியாகவே காட்டியிருக்கின்றார்கள் என்று தெளிவாக தெரிகின்றது. இவற்றை விட நெடுமாறன் ஐயா, வைகோ போன்றவர்களுக்கும் பல மாணவ அமைப்பு பிரதிநிதிகளுக்கும் திரைப்படத்தினை விசேடமாக திரையிட்டுக் காட்டியுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.

 

Trailer:

 

 

இவற்றை விட, புலிக் கொடி ஒரு காட்சியில் வந்தாலோ தலைவர் பிரபாகரன் பெயர் வந்தாலோ விழுந்தடித்து தணிக்கை மற்றும் தடை செய்யும் இந்திய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் தணிக்கை குழு, இப்படத்தினை UA சான்றிதழுடன் வெளியிட அனுமதித்து இருப்பதும் சந்தேகத்துக்குரியது.

 

இவற்றை எதுவும் நம்பாமல், படம் வெளியாகி அதை எல்லாரும் பார்த்த பின் தான் தடை செய்வதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும் என்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் செய்திகளின் படியும், படத்தின் சுவரொட்டிகள் மற்றும் Trailer இன் படியும் பாலச்சந்திரனை இராணுவப்பயிற்சி பெற்ற போராளியாகவே காட்டியிருக்கின்றார்கள் என்று தெளிவாக தெரிகின்றது. இவற்றை விட நெடுமாறன் ஐயா, வைகோ போன்றவர்களுக்கும் பல மாணவ அமைப்பு பிரதிநிதிகளுக்கும் திரைப்படத்தினை விசேடமாக திரையிட்டுக் காட்டியுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.

 

Trailer:

 

 

இவற்றை விட, புலிக் கொடி ஒரு காட்சியில் வந்தாலோ தலைவர் பிரபாகரன் பெயர் வந்தாலோ விழுந்தடித்து தணிக்கை மற்றும் தடை செய்யும் இந்திய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் தணிக்கை குழு, இப்படத்தினை UA சான்றிதழுடன் வெளியிட அனுமதித்து இருப்பதும் சந்தேகத்துக்குரியது.

 

இவற்றை எதுவும் நம்பாமல், படம் வெளியாகி அதை எல்லாரும் பார்த்த பின் தான் தடை செய்வதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும் என்கின்றீர்களா?

உங்களுடைய இந்த சந்தேகம் ...... எனக்கும் ஏற்கனவே இருக்கும் ஒரு சந்தேகம்தான்.
புலிகளுக்கு சார்பாக ஒரு வசனம் இருந்தாலே கத்திபோடும் கூட்டத்திடம் இருந்து எப்படி இந்த படம் தப்பியது?
அப்படி  என்று நானும் சந்தேகத்தில்தான் இருக்கிறேன்.
 
என்னுடைய ஒரு குற்றசாட்டு ....... (நீங்கள் எந்த அளவிற்கு ஏற்பீர்கள் என்று தெரியவில்லை)
1970இல் சிவாஜி  எம்ஜிஆர் நடித்த அதே படங்களையும் காட்சிகளியும்தான் நாம் இப்போதும் புது நடிகர்கள் நடிக்க பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழ் சினிமாவில் கொப்பி  அடிப்பதுதான் நடக்கிறதே தவிர புதிய சிந்தனைகள் குறைவு. அப்படி யாரவது சிந்தித்தாலும் அதற்கு ஆதரவு இல்லை.
அகவே ஒரு தமிழ் இயக்குனர் வீரப்பனை எப்படி காட்ட்டினர்களோ அதே பாதிப்பை வைத்து கொண்டே தலைவரையும்  காட்ட  முனைவார்கள். அது அவர்களுடைய ஒரு குறைபாடு ஆகா கூட இருக்கலாம் இல்லையா?? 
 
 
படத்தில் ஒரு கற்பனை காட்சியில்தான் அவர் சீருடையில் வருவதாக இயக்குனர் சொல்கிறார்.
அதை ஏன் இவர்கள் யாரும் மறக்கவில்லை???
 
சரியான ஒரு பரஸ்பரம் அங்கே இல்லாமல் இருக்கிறது எனபது மட்டும் தெளிவாக தெரிகிறது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தவர்கள் தான் எதிர்க்கின்றனர்,சீமானைத்தவிர இங்கு உள்ள சிலர் சீமானுக்கு ஆலவட்டம் பிடிப்பதால் உண்மைகள் உறங்கப்போவதில்லை.தமிழீழ போராட்டத்தை மிக நேர்மையாக ஆதரிக்கும் திருமுருகன் காந்தியே இதை இப்படத்தை எதிர்ப்பது கூடஉங்களுக்கு புரியாமல் இருப்பதே பெருவியப்பாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தவர்கள் தான் எதிர்க்கின்றனர்,சீமானைத்தவிர இங்கு உள்ள சிலர் சீமானுக்கு ஆலவட்டம் பிடிப்பதால் உண்மைகள் உறங்கப்போவதில்லை.தமிழீழ போராட்டத்தை மிக நேர்மையாக ஆதரிக்கும் திருமுருகன் காந்தியே இதை இப்படத்தை எதிர்ப்பது கூடஉங்களுக்கு புரியாமல் இருப்பதே பெருவியப்பாக இருக்கின்றது.

 

உங்களது  நிலை தான் எனதும்

 

ஆனால் சீமான் தள்ளியிருப்பதையே  ஆதரிக்கின்றேன்

எல்லாவற்றுக்குள்ளும் நியாயம் கேட்கப்போய்

எல்லோருக்குள்ளும் பகையை  வளர்த்து

எதிரிக்கு எதிரி  நண்பன் என எல்லோரும் ஒன்று  கூடியதால் தான்

ஏற்கனவே அழிவைச்சந்தித்தோம்

இனியும் வேண்டாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தவர்கள் தான் எதிர்க்கின்றனர்,சீமானைத்தவிர இங்கு உள்ள சிலர் சீமானுக்கு ஆலவட்டம் பிடிப்பதால் உண்மைகள் உறங்கப்போவதில்லை.தமிழீழ போராட்டத்தை மிக நேர்மையாக ஆதரிக்கும் திருமுருகன் காந்தியே இதை இப்படத்தை எதிர்ப்பது கூடஉங்களுக்கு புரியாமல் இருப்பதே பெருவியப்பாக இருக்கின்றது.

 

பாலன்  பாலச்சந்திரன் கையில்.... துவக்கு கொடுத்து எடுத்த படம் மகாதவறு.

இதனை சீமான் எதிர்க்காவிட்டாலும், நாம் எதிர்க்க வேண்டும்.

திரு முருகன் காந்திக்கு, எனது ஆதரவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சீமானுக்கு யாரும் ஆலவட்டம் சுத்துவதில்லை ................. சீமானுக்கு சேறு அடிக்க வேண்டும் என்று இரவுபகலாக அலையும் உங்களுக்குத்தான் உண்மையான கருத்தாடல்கள் ஆலவட்டம்போல் தெரிகிறது.
நீங்கள் சீமான் மீது சேறு அடிக்க தொடங்கி 3 வருடம் ஆகிறது .......... அதற்கு தகுந்த காரணம் ஏதும் இருக்கிறதா??
 
தமிழருடைய போராட்டம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை சீமான் கேட்டுவிட்டால் போதும் எனும் மனநிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கிட்டதட்ட அர்ஜுன் அவர்கள்போல் 
புலிகள் 50 தமிழ் மக்களை சுட்டார்கள் என்று செய்திவந்தால் அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த தமிழனும் எண்ணுவான். ஆனால் அப்படி ஒரு பொய்யையும் எப்படி உணமி ஆக்குவது என்று அர்ஜுன் அலைவார் அந்த நிலையில் தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். உண்மையான தமிழனுக்கு புலி நல்லதா? கெட்டாத? என்பதை கடந்து 50 தமிழ் உயிர் இறந்திருக்க கூடாது என்றுதான் எண்ண தோன்றும். அர்ஜுனுக்கு அப்படியல்ல புலிக்கு சேறடிக்க ஒரு செய்தி வேண்டும்.
 
உயிரே படம் வந்த போதும் இப்படிதான் சிலர் குத்தி முறிந்தார்கள் 
இயக்குனருக்கு படம் இயக்க தெரியாத ஒரு குறைபாடு கூட இருக்கலாம். சீமானும் ..... மாணவர்களும் வீணே முரண்பட்டு போக கூடாது. என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். 
படம் வெளிவராது போனால் கூட இப்போ தமிழ் இன விரோதிகளுக்கு பெருத்த வெற்றி வந்திருக்கிறது. அந்த வெற்றியை  தமிழன் தனதாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.... இந்த விடயத்தில்,
நெடுமாறன் ஐயா, வைகோ.  போல் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே..... உத்தமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு யாரும் ஆலவட்டம் சுத்துவதில்லை ................. சீமானுக்கு சேறு அடிக்க வேண்டும் என்று இரவுபகலாக அலையும் உங்களுக்குத்தான் உண்மையான கருத்தாடல்கள் ஆலவட்டம்போல் தெரிகிறது.

நீங்கள் சீமான் மீது சேறு அடிக்க தொடங்கி 3 வருடம் ஆகிறது .......... அதற்கு தகுந்த காரணம் ஏதும் இருக்கிறதா??

தமிழருடைய போராட்டம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை சீமான் கேட்டுவிட்டால் போதும் எனும் மனநிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கிட்டதட்ட அர்ஜுன் அவர்கள்போல்

புலிகள் 50 தமிழ் மக்களை சுட்டார்கள் என்று செய்திவந்தால் அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த தமிழனும் எண்ணுவான். ஆனால் அப்படி ஒரு பொய்யையும் எப்படி உணமி ஆக்குவது என்று அர்ஜுன் அலைவார் அந்த நிலையில் தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். உண்மையான தமிழனுக்கு புலி நல்லதா? கெட்டாத? என்பதை கடந்து 50 தமிழ் உயிர் இறந்திருக்க கூடாது என்றுதான் எண்ண தோன்றும். அர்ஜுனுக்கு அப்படியல்ல புலிக்கு சேறடிக்க ஒரு செய்தி வேண்டும்.

உயிரே படம் வந்த போதும் இப்படிதான் சிலர் குத்தி முறிந்தார்கள்

இயக்குனருக்கு படம் இயக்க தெரியாத ஒரு குறைபாடு கூட இருக்கலாம். சீமானும் ..... மாணவர்களும் வீணே முரண்பட்டு போக கூடாது. என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

படம் வெளிவராது போனால் கூட இப்போ தமிழ் இன விரோதிகளுக்கு பெருத்த வெற்றி வந்திருக்கிறது. அந்த வெற்றியை தமிழன் தனதாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

புலியாகவே ஒரு தசாப்தம் கடந்த எனக்கு நீங்கள் பாடம் எடுப்பதும் நல்ல நகைச்சுவையே,சிலருக்கு தாங்கள் ஆதரித்துவிட்டால் அதற்கு யாரும் யாரும் மறுப்பு கருத்து எழுதக்கூடாது.நீங்களும் அந்த மனநிலையில் இருப்பவரே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளி வந்த பிறகு அதில் பாலசந்திரனை இராணுவ போராளியாக படத்தில் காட்டி இருந்தால்[படம் முழுக்க அப்படித் தான் காட்டி இருக்குது என்பது என் கருத்து]மருதங்கேணி போன்றோர் படத்தை தடை செய்யச் சொல்லி போர் கொடி பிடிப்பினமோ? அதற்கு பிறகு போர் கொடி பிடித்தும் என்ன பிரயோசனம்?...என்னைப் பொறுத்த வரை நிழலியின் கருத்து தான் என்னோடது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளி வந்த பிறகு அதில் பாலசந்திரனை இராணுவ போராளியாக படத்தில் காட்டி இருந்தால்[படம் முழுக்க அப்படித் தான் காட்டி இருக்குது என்பது என் கருத்து]மருதங்கேணி போன்றோர் படத்தை தடை செய்யச் சொல்லி போர் கொடி பிடிப்பினமோ? அதற்கு பிறகு போர் கொடி பிடித்தும் என்ன பிரயோசனம்?...என்னைப் பொறுத்த வரை நிழலியின் கருத்து தான் என்னோடது

அப்போதும் பிடிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் 
 
 
கத்தியும் கோடாலியும் இப்போ யாருக்கு வேண்டும்?
ஒன்று பட்ட  தமிழ் இனத்தின் ஒற்றுமைதான் வேண்டும். மாணவர்கள் இதில் தனித்து விட கூடாது என்று தான் சொல்கிறேன். ஏழாம் அறிவிற்கு எட்டும் படி எழுத தெரியவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதும் பிடிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் கத்தியும் கோடாலியும் இப்போ யாருக்கு வேண்டும்?

ஒன்று பட்ட தமிழ் இனத்தின் ஒற்றுமைதான் வேண்டும். மாணவர்கள் இதில் தனித்து விட கூடாது என்று தான் சொல்கிறேன். ஏழாம் அறிவிற்கு எட்டும் படி எழுத தெரியவில்லை.

மாணவர்களை தனித்து விடக் கூடாது என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு சீமானுக்கு இந்த தேவை இல்லாத மக்களது ஒற்றுமையை,தேசியத்தை விற்றுப் பிழைக்கும் கேவலம் கெட்ட வேலை...முதலில் ஒற்றுமையை சீமானுக்கு க்ற்றுக் கொடுத்து நீங்களும் கற்று கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

விளம்பரக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும்போதே இப் படத்தின்மீது சொல்லமுடியாத வெறுப்பு உண்டாகிறது. சீமான் ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகக் கூட இதை ரசிக்க முடியவில்லை.

 

இப் படத்தைத் தயாரித்த பாரிவேந்தர் பச்சமுத்து கூகிளில் மேலும் வெறுப்பேற்றுகிறார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அக்கா மன்னிக்கவேண்டும் !
அதுதான் முதலே எழுதிவிட்டேன் ஏழாம் அறிவுக்கு புரியும்படி எனக்கு எழுத தெரியாது.
 
 
(நான் தமிழ் நாட்டில் புலிபார்வை என்று ஒரு படம் வருகிறதாம் அதை சிலர் எதிர்கிறார்கள் சிலர் ஏதும் இல்லை என்று சொல்கிறார்கள். மேலே நான் அந்த விடயம் பற்றிதான் எழுதினேன். நாங்கள் வேறு விடயம் பற்றி பேசுவோம்)
 
லண்டனில் எப்படி காலநிலை?
மழையா ? குளிரா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை தனித்து விடக் கூடாது என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு சீமானுக்கு இந்த தேவை இல்லாத மக்களது ஒற்றுமையை,தேசியத்தை விற்றுப் பிழைக்கும் கேவலம் கெட்ட வேலை...முதலில் ஒற்றுமையை சீமானுக்கு க்ற்றுக் கொடுத்து நீங்களும் கற்று கொள்ளுங்கோ

 

தமிழினத் துரோகி கருணாவை அண்ணன் என்று பெருமையாய் சொல்லுற நீங்கள் எல்லாம் கேவலத்தை பற்றி கதைக்க வியப்பாய் இருக்கு............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி பந்தியாக எழுதுபவர்களைக்கூட நம்பலாம்.இந்த மயக்க நிலையில் எழுத்பவர்களை நம்பமுடியாது.அவர்கள் எந்நேரமும் தங்கள் கருத்தை மாற்றி வாதடக்கூடியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

 

படத்தின் இயக்குனா் தமிழ் அமைப்புக்களுக்கு படத்தை திரையிட்டு காட்டுவதற்க்கும், அது தொடா்பான மாற்றங்கள் செய்யவும் தயாராக இருக்கின்றாா் என்று சொல்லியிருக்கின்றாா்.

இது அரசியல் போலவே தொிகின்றது. சீமானை தேடுவோா், வைக்கோவை, நெடுமாறன் ஐயாவையும் காணவில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் துரோகி கருணாவை அண்ணன் என்று பெருமையாய் சொல்லுற நீங்கள் எல்லாம் கேவலத்தை பற்றி கதைக்க வியப்பாய் இருக்கு............

என்ட அண்ணா முந்தி எங்கட மக்களுக்கு செய்த நல்லதில் பத்தில் ஒன்றையாவது உங்கட சீமான் தங்கட மக்களுக்கு செய்தாரா? என்ட அண்ணா ஒன்றும் உங்கட சீமானை மாதிரி எங்கட போராட்டத்தை வித்துப் பிழைக்கவில்லை.அவரால் முடியாது என்றவுடன் ஒதுங்கி விட்டார்.அவரை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை.முடிந்தால் சீமானுக்கு உங்கள் போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லுங்கள் முடியா விட்டால் மூடிட்டு படுங்கள் தேவையில்லாமல் சீமான் செய்கின்றதை மறைக்க என்ட அண்ணாவை இழுத்து திரியை திசை திருப்ப வேண்டாம்.சீமானை அழிக்க அவரை எதிர்ப்பவர்கள் தேவையில்லை அவராலேயே அவர் அழிவார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.