Jump to content

கலைஞன் - பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்

பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி )

அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது.

மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப்பொதியுடன் மீண்டும் அவன் வருவதைப்பார்த்தேன். வந்ததும் அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றித்தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்துகளையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன்நடந்துபோய் மேடையின் மறுகோடியில் இருந்த தண்ணீர்க்குழாயில் முகம் கைகால் கழுவிவிட்டுவந்துநிலத்தில் சம்மணமிட்டமர்ந்து பொதியை அவிழ்த்துச் சாவகாசமாகச் சாப்பிட்டான். பின்ஜாக்கெட்டுப்பையிலிருந்து ஒரு பியர் கானை எடுத்துக்கொஞ்சம் குடித்துவிட்டு அதையும்இரும்புவாங்கில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு தானும் அதில் சற்றே தள்ளி அமர்ந்து சிகரெட் ஒன்றைஅனுபவித்துப்பிடித்தான். அப்போது நாலாவதோ ஐந்தாவதோ மேடையில் நகரத்துள் மட்டும் ஓடும் S – Bahnஎனப்படும் விரைவு தொடருந்து ஒன்று நூறு கி.மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கைபார்த்தான். பின் பியர்க்கானைக் கையில் எடுத்துக்கொண்டு அம் மேடையின் முழு நீளத்துக்கும் ஆறேழுதடவைகள் நடந்தான். அவன் நடந்து அணுக்கமாக வந்தபோது தெருவிளக்கின் வெளிச்சத்தில் இன்னும்அவனைத்தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உயர்ந்த ஒல்லியான தேகம். சதா சிந்தனை வயப்பட்டவன்போல்தோற்றமளித்தான். சாயம்வெளிறியும் அங்கங்கு தேய்ந்துமிருந்த டென்னிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான்.தலையை வாரிவிடுவதில் அக்கறை எதுவுமில்லை, ஒரு கிழமை வயதான தாடி, கண்வலயத்தில்லேசான ஐரோப்பியச்சுருக்கங்கள். அவனுக்கு 35-க்கும், 50-திற்கும் இடையில் அகவைகள்எத்தனையுமிருக்கலாம்.

மறுநாள் அவன் வெளியேபோய் வரும்போது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அக மிக மகிழவல்லதோற்பை ஒன்றைக் கொண்டுவந்தான். தினமும் இரவில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்துகொண்டுவருவதும், சாப்பிட்டுவிட்டுத்தூங்குவதும், பின் மறுநாள் பகல்வெளியேறுவதும் தினப்படிநடவடிக்கைகளாக இருந்தாலும் எங்கேயும் வேலை பார்ப்பவன் போலவுந்தெரியவில்லை. சில நாட்களில்மதியம்வரை தூளியைவிட்டிறங்காமல் படுத்திருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டியகாரியங்கள் ஒன்றுமில்லாமலிருக்கவேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்கவேண்டும். தொடருந்துநிலையத்துக்கு குடிவந்து ஒருமாத மேலாகியும் அவன் தன் காற்சட்டையையோ ஜாக்கெட்டையோமாற்றாததிலிருந்து அந்தத்தோற்பையில் ‘மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பான்’ என்ற என் ஊகமும்நசித்துப்போனது. தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலைசெய்தாலோ,செய்திப்பத்திரிகை விநியோகித்தாலோகூட இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றிராஜகுமாரனாகவே வாழலாம்.

Inline மற்றும் Roller Skates படுவேகமாக இளசுகளிடையே ஒரு மோஸ்தர் போலப்பரவியபோது 70அகவைக்கும் மேலிருக்கக்கூடிய பெண்கள் பலர் தலைக்கவசமும், முட்டி மற்றும், பிட்டக்கவசங்கள்அணிந்துகொண்டு பார்க்குகளிலும், நடைமேடைகளிலும் Skates ஓடப்பழகியதைக்கண்டிருக்கிறேன்.மனிதன் வாழ்வுபூராவும் எதையாவது செய்துகொண்டு பிஸியா இருந்துவிட்டால் சோர்வும் விரக்தியும்விச்ராந்தியும் அணுகாதாம். ‘வயசு எழுபதாகிறதா…..பரவாயில்லை உடனே பரதநாட்டியம் கற்கஆரம்பித்துவிடு.’ என்பாராம் ஒஸ்கார் வைல்ட். மனிதனின் மரபான வாழ்வுமுறை சலிக்கும்பொதுதான்அநேகமான ஐரோப்பிய இளைஞர்கள் சிலர் வேறொரு வாழ்க்கைமுறையை முயன்று பார்க்கின்றனர்.இவ்வாறு மரபுவாழ்க்கையை உதறி வித்தியாசமான வாழ்வுமுறையைத் தேர்பவர்கள் தனியனாகவும் ,ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பதுபேர்கொண்ட கூட்டமாகவும் வாழ்வதுண்டு. எடுத்துக்காட்டாக‘ஒட்டோநோம்’ குமுகாயத்தினரைக்கூறலாம். இவர்கள் தங்கள் கூட்டுவாழ்வுக் குமுகங்களில்நாய்களையும் வேறுபிராணிகளையும் விரும்பிச் சேர்த்துகொண்டுமிருப்பார்கள். இவனும் ஒரு‘ஒட்டோநோம்’ குமுகாயத்திலிருந்து விலகி வந்தவனைப் போலிருந்தான்.

ஒருநாள் இரவு சாப்பாட்டைமுடித்துக்கொண்டு Warshau விலிருந்து Paris க்குச் செல்லும் நடுஇரவு Intercityதொடருந்தை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டு படுக்கை, தலையணை உறைகளைமாற்றிக்கொண்டிருந்தேன். Johann Sebastian Bach இன் பிரசித்த மெலோடியான ‘Jesus Christus meine Verlangen’ இன்அருமையான பல்லவி ஸோலோவாக சக்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. யாரோ சவுண்ட்சிஸ்டத்தையோ, தொலைக்காட்சியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்று இருந்தேன். ஒரு Contrad bass ன்ஒத்திசைவுகூட இல்லாமல் சக்ஸபோன் தனித்தே பல சுருதிகளிலும் பிளிறுவது மெலிதானசந்தேகத்தையுண்டுபண்ண ஜன்னலுக்கு வந்து பார்த்தேன். அவன் Dressel வீதியின் சோடியம் ஆவிவிளக்கில் மேடையின் இரும்புவாங்கில் ஆரோகணித்தமர்ந்து ஒரு சக்ஸபோனை வைத்துவாசித்துக்கொண்டிருந்தான். அதன் பின்னும் பீத்ஹோவனின் ஒரு அழகான கோர்வையைஅரைமணிக்கும் மேலாக உற்சாகம் ததும்ப வாசித்தான். அவனது கற்பனைகளும் அலாதியான கமகப்பிரயோகங்களின்போது அக்கருவியில் மட்டும் வரும் இனியபிளிறல்களும் செறிந்த இசை மிகவும்வித்தியாசமாக சுகமாக இருந்தது. அது முடிந்தபின் ஷம்பேன் போத்தலைத்திறந்து தொண்டையைநனைத்தபின் வேறொரு கோர்வை. அந்த இரவு வெகுநேரம் ஆனந்த பரவசத்துடன்நெளிவுசுழிவுகளுடன்கூடிய மிகநுட்பமான இசை அவனது சக்ஸபோனிலிருந்து பொங்கிப்பிரவகித்துCharlottenburg பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்து மேவியது.

பாவம்………… இவனும் ஒரு கலைஞன்!

கலை மனிதனை ஆகர்ஷிக்க வல்லதுதான், அதுவே போதையாகி அதற்கே அடிமையாகி அதைத்தவிரவேறெதுவுமில்லையாகி அதைக்கொண்டு வாழ்வை நகர்த்தமுடியாத நிலை வந்தபின்னாலும் அதையேகட்டிப்பிடித்துக்கொண்டும் விலக்கமுடியாமலும் தவித்துச் சோம்பேறியாகிப்போகும்பட்டினிக்கலைஞர்கள் உலகம் முழுவதும்தான் உள்ளனர். வாழ்க்கையின் மறுபரிமாணங்களைக்காணத்தவறுவது, தவறவிடுபவை பற்றிய பிரக்ஞை இன்றி இருப்பதுவும் இவர்களின் பொதுக்குணங்கள். ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்கவித்துவான் இருந்தார். அடுப்பங்கரை நிலமை அடுப்புக்கால்களைநாய் நகர்த்தி விளையாடும் அளவுக்கு இருக்கும். மனிதன் விடிந்ததிலிருந்து மிருதங்கத்தைஎடுத்துவைத்து அதைத்தடவித்தடவி ‘குமுக்கு’ ‘குமுக்கு’ என்று கும்மிக்கொண்டிருப்பாரே தவிரஇந்தண்டையிருக்கிற துரும்பை எடுத்து அந்தண்டை போடமாட்டார். கர்ப்பிணி மனைவிவிறகுடைப்பாள். இவர் திண்ணையில் ஒருகாலை மடித்துத் தொடையின்மேல் போட்டுக்கொண்டுபான்பராக்கோடு வெற்றிலையைச் சேர்த்துக் குதப்பியபடி சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார். “விடுங்கோமாமி” என்றுவிட்டு கோடலியை வாங்கி நான் உடைத்துக்கொடுத்தால் ” கடினவேலை செஞ்சா அப்புறம்எனக்கு விரல்கள் ஜதிக்கட்டுக்களுக்கு வசையிறதில்லையடா அம்பி.” என்பார். குடல் காயத்தொடங்கினபிறகும் என்ன சாம்பலுக்குத்தான் ஜதி வேண்டிக்கிடக்கோ?

மறுநாள் இந்த சக்ஸபோன் கலைஞன் மேடையில் ஒரு புல்லை வைத்துக்கடித்துக்கொண்டுஅணில்களும் புலுணியும் ஓடிப்பிடித்து விளையாடுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனிடம் போய் ஒரு ‘ஹலோ’ சொல்லவேணும் போலிருந்தது. என்ன செய்வானோ…………பேசுவானோ முறைப்பானோ தெரியவில்லை. கிறுக்கர்களாகவும் சில கலைஞர்கள் இருப்பதுண்டு.பாவம், குளிர்காலம் வர என்னதான் செய்யப்போகிறான்? என் அறையில் ஒரு கட்டிலைப்போடவிடலாந்தான், அதற்கு வீட்டுச்சொந்தக்காரியிடம் அனுமதி பெறவேண்டும், அவளும் இந்தச்சாக்கில்வாடகையை உயர்த்திவிடலாம். அறையைக் கொடுத்தபின்னால் அவன் ஷாம்பேன் போத்தல்களையும்,பியர் புட்டிகளையும் கொண்டுவந்து நிரப்பினால்? உடுப்பையே மாற்றிக்கொள்ளாதவன்குளிப்பதில்லையென்று ஒரு கொள்கையைக்கூட வைத்திருக்கலாம், யார் கண்டா? பின்னர் கிடாய்மொச்சை கமழும் பெம்மானுடன் மானுஷன் உறைவதெங்கனம்? வானத்தால் போன பிசாசைஏணிவைத்து இறக்கின கதையாகிவிடலாம். அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவவேண்டும் என்கிறசிந்தனை தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒரு வாரம் ஆகியிருக்கும். திடீரென அந்தக் கலைஞனைக் காணவில்லை. அவனுக்கு வேறெங்காவதுஇதைவிட நல்ல ஜாகை வாய்த்திருக்கலாம் அல்லது வேறெங்காவது பரதேசம் புறப்பட்டிருக்கலாம்; தன்கூட்டத்தினருடன் போதை வஸ்த்தின் லாகிரியில் அமிழ்ந்து மீள்வதில் காலம் எடுத்திருக்கலாம் எனஎண்ணிக்கொண்டிருக்கையில் மீண்டும் ஒருநாள் திரும்பவும் வந்தான். அன்றும் இளம் நெல்வயலில்இளங்காற்றடித்ததுபோல இசை நளின அலைகளைக் கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக்குதித்துப்பரவசப்பட்டது. விமானம் ஒன்று இறங்குவதைப்போல தாழ்சுருதியில் பதிந்துசமதரையைத்தொடுவதுபோல இறங்கிப் பின் திடுப்பெனக் ‘கொங்கோடெ’னச் சிலிர்த்துப்பிளிறிச்செங்கோணத்தில் மேலே எழுந்து உயர்ந்து வித்தாரங்காட்டியது.

அவன் பசி எடுத்தால்தான் இசைப்பானோ, இல்லை வயிறு நிரம்பியுள்ள குஷியில் இசைப்பானோவென்றுஒன்றுந்தீர்மானமாகச்சொல்ல முடியாது. ஷாம்பேன்போல ஒன்று தொண்டையை நனைக்கப்போதுமாயிருந்தால் போதும். அவனது சக்ஸபோன் குதிகொள்ளும். குளிர் காற்று மிதமாகவீசத்தொடங்கவும் இசைக்குச் சிறிய ஒரு இடைவெளிவிட்டுவிட்டு பெரியதொரு அட்டைப்பெட்டியைமூலைவிட்டமாக வெட்டி அதன் ‘ட’ ஒதுக்கில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்துஅலுமினியத்தாளில்சுற்றி வைத்திருந்த ‘கலமாறிஸை’ (கணவாய்மீன் பஜ்ஜி) ‘ஸோஸ்’ ஒன்றில்தொட்டுச்சாப்பிட்டான். பின் ஷாம்பேன். அன்று வழக்கத்தைவிட முன்னதாக ஆரம்பித்திருந்தும்அடிக்கொருதடவை கடந்து செல்லும் தொடருந்துகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் தொடருந்து சென்ற பின்னாலும் வெகுநேரம் இசைவேள்வி நடத்தினான். மீண்டும் ரேவதியின் சாயலில்நிறைய ஏக்கமும், பெற்றோரைத் தவறவிட்டுவிட்ட ஒரு பிள்ளையின் தவிப்பும் கலந்திருந்த ஒருசாஸ்திரீயக் கோர்வையை அனுபவித்து அனுபவித்து வாசித்தான். அடுத்து ‘Lilly was here’. இப்படியாகத்தொடர்ந்தது அவ்விரவு. மறுநாள் மதியம் வரையில் ஒருகாலை வெளியே தொங்கவிட்டபடிதன் தூளியுள் படுத்திருந்தான். பின் எப்போ எழுந்து போனானோ தெரியாது.

அவனது இசை கேட்டு ஒருமாதமாவது ஆகியிருக்கும். ஆளை அந்தப்பக்கம் காணவே இல்லை. ஒருநீண்ட சனிக்கிழமை (மாதத்தின் முதலாவது) மாலையில் Ku’Damm Karrie Passage இனுள் அவனைக்கண்டேன். அன்று வியாபாரஸ்தலங்கள் எல்லாம் மாலை 22.00 மணிவரை திறந்திருக்கும்.அதற்குள்ளிருந்த ஒரு மதுவகத்தின் வாசலில் நின்று இவன் தன் சக்ஸபோனைவாசித்துக்கொண்டிருந்தான். அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தொப்பியுள் அவ்விடத்தைக்கடந்துபோவோரும் , அம்மதுவகத்திலிருந்து வெளிப்படுவோரும் காசுகள் போட்டனர்.பரட்டைத்தலையுடன் அநாதைபோல் தென்பட்ட ஒரு பத்துவயதுச்சிறுவன் வத்தகைப் பழக்கீறல் ஒன்றை(தர்ப்பூசணி) நாடியால் தண்ணீர் சொட்டச்சொட்டச் சுவைத்துக்கொண்டு இவன் சக்ஸபோன் வாசிப்பதைவேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கலைஞனோ சேரும் சில்லறையில் கருத்தின்றிக்கண்களைமூடித் தன் சங்கதிகளில் ஒன்றி ஸ்வரப்ரதாபங்களில் உருகியுருகி வாசித்துக்கொண்டிருந்தான்.

இந்த Ku’Damm Karrie Passage இனுள் உணவகங்களும், மதுவகங்களும் நிறைந்துள்ளன. அதன்சுற்றுவட்டத்திலும் அநேகம் ஷொப்பிங் மோல்களும் இருப்பதால் அந்த இடம் எப்போதும்ஜனநடமாட்டத்துடன் ஜே’ஜே’ என்றிருக்கும். எனக்கும் மெல்ல வயிற்றைக்கிள்ளவே அங்கிருந்த ‘Imbiss’ஒன்றில் சூடாக உருளைக்கிழங்கு சிப்ஸும் பியரும் வாங்கிக்கொண்டு சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துஅவனை நானும் ரசித்தேன். Herbert-Von-Karajan இன் சில கற்பனைகளைத் தந்துவிட்டுத் திடுப்பெனச் ‘Sailing’என்ற ஜனரஞ்சகமான றொக் பிட்டுக்கு சுழன்றுவந்தபோது கும்பல் கணிசமாகவே சேர்ந்துவிட்டது. அவன்வாசிப்பில் கிறங்கிப்போவிட்ட சுவைஞர் ஒருவர் பெரிய கிளாஸில் நுரை ததும்ப ததும்ப பியர்வாங்கிவந்து கொடுத்தார். அதில் தொண்டையைக் கொஞ்சம் நனைத்துவிட்டு சில ‘அண்டர்கிரவுண்ட்’இசைச்சித்தர்களுடன் சஞ்சரிக்கலானான். எதுவுமே முன்பொருநாளுந்தான் கேட்டறியாதஇசைக்கோலங்கள். கேட்பவர் அனைவரையும் கிறங்கடித்தான்.

தெருப்பாடகர்கள், வயலின்வாசிப்போர்களென்று எத்தனையோ வீதிக்கலைஞர்களைச்சந்தித்திருக்கிறேன். சீமான்களது இசை அரங்குகளில் சீமான்கள்போலவே மெட்டாக உடுத்திப்போய்எத்தனையோ சிம்போனிகளைக் கேட்டிருக்கிறேன். இருந்தும் அவனது காயலான்கடை ரக (லுண்டாரக)வாத்தியத்திலிருந்து கிளம்பும் நாதத்தில் தோய்ந்துள்ள மாயலாகிரி எனக்குள் ஏற்படுத்தும்அதிர்வுகளைப்போல் முன்னொரு வாத்தியமும் ஏற்படுத்தியதில்லை. அவனது இசையோடு சேர்ந்துஏதோவொரு அலைவரிசையில் வரும் விபரிக்க முடியாத காந்தக்கதிர்கள் என்னை அவனோடுகட்டிப்போடுகிறது, கிளர்த்துகிறது, பஞ்சாகக்கிளப்பி மேலே மேலே முகில்களோடு மிதக்கவைக்கிறது.

வாசித்து நன்றாகவே களைத்தபின்னால் ‘Udo Lindenberg’ இன் ‘Auf wiedersehen’ என்ற மெலோடியை (மீண்டும்சந்திப்போம்) மென்சோகம் தோய்த்து மங்களமாக வாசித்தபோது சுவைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து”தயவுசெய்து மீண்டும் ஒரு முறை ” “மீண்டும்” என்று கேட்கவும் சம்மதித்து மீண்டும் ஒருமுறைவாசித்தான். ‘இத்தனை வித்தகனுக்கு சொந்தமாய் ஒரு கூரை இல்லை’ என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

அவனை அன்று பார்த்ததுதான். உயிர்தரித்திருக்க ஒரு மனுஷனுக்குத் தேவையான உணவு, உடை,படுக்கை, சூடான ஒருவதிவிடம் இவற்றைத்தேடி அக்கலைஞன் உலகத்தின் எக்கோடிக்குக்குத்தான்சென்றாலும் பரவாயில்லை என்று மனம் விரும்பினாலும் தினமும் காலையில் எழுந்ததும் கண்கள்அவன் வந்திருக்கிறானா, தூளியுள் தூங்குகிறானா என்றே தேடுகின்றன.

அதன் பின் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவின் நிற்கும் Gold-regen (தங்கமழையென்றுஅர்த்தம்) மரங்களின் மெலிந்தடர்ந்த நீண்ட கிளைகளின் பொன்மஞ்சள் பூம்பாளைகள் எல்லாம்ஏககாலத்தில் மலர்வதால் பூக்களின் பாரந்தாங்காமல் அவை தலைகீழாக விழுதுகள்போலத்தொங்குகின்றன. கஸ்டானியன் மரங்களும் தவறாமல் பழுத்துத் தம் விதைகளை நிலமெங்கும்இறைத்துவிடுகின்றன. அவனது தூளியும் தோற்பையும் அவனுக்காகக் காத்துக்கொண்டு இன்னும்அங்கேயே இருக்கின்றன. அணிலும் புலுணியும் மேடைகள் பூராவும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன.பாரீஸ் தொடருந்தும் தவறாது 23.05க்குக் கடந்து விடுகிறது.

இசை மட்டும் இல்லை.

*

’( காலச்சுவடு’ வெளியீடாக வெளிவந்துள்ள பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் நினைவுகள்’ நினைவலைகளிலிருந்து ஒரு அத்தியாயம். )

http://malaigal.com/?p=5313

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.