Jump to content

ரிங்டோன்


Recommended Posts

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான
அறுவை சிகிச்சை ஒன்றை மறுநாளே செய்ய வேண்டிய கட்டாயம். அந்த அறுவை சிகிச்சை சிக்கலானதும்கூட.

தாயார்மீது பாசம் மிக்க அந்த சகோதரர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகிய முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீருடன் அறுவை சிகிக்சைக்கு அனுப்பினார்கள். அறுவை சிகிக்சைக் கூடத்துக்குள் ஸ்ட்ரெச்சர் நுழையும்போதே, பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனில், ரிங்டோன் ஒலித்தது…. “சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்கிற கந்த சஷ்டிக் கவசம்.

கடவுள் அருள் கிடைத்த நிம்மதி, அந்த சகோதரர்களுக்கு. அவர்கள் நினைத்தது போலவே அறுவை சிகிச்சை நன்கு நடந்து அபாய கட்டத்தை அந்த அம்மையார் தாண்டினார். மறுநாள், தாயாரைக் காண அந்தச் சகோதரர்களில் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது அதே ரிங்டோன் ஒலித்தது. திரும்பிப் பார்த்தால் அதே மனிதர்!!

ஆனால் அந்த மனிதரும், அருகில் அமர்ந்திருந்த மூதாட்டியும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தார்கள். இந்த இளைஞர் அருகில் சென்று விசாரித்தபோது விவரம் புரிந்தது.

நல்லாபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, அந்த மனிதர். அவருடைய மனைவிக்கு கணையத்தில் ஏற்பட்ட கவலைதரும் நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். கையிருந்த சிறிதளவு நிலத்தின் பேரில் கடன்வாங்கி சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும். நாளொன்றுக்கு இருபதாயிரம்வரை ஆகும். சிகிச்சை வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ தொடரலாம். கையில் சிறிதும் பணமில்லாமல்,அவரும் அவருடைய அம்மாவும் அழுது கொண்டிருந்தார்கள்.

இளைஞர் சொன்னார், “எங்கள் அம்மா அறுவை சிகிச்சைக்கு உள்ளே போகும்போது உங்கள் செல்ஃபோனில் ஒலித்த பாடல் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதே போல் அவர்கள் குணமானார்கள். உங்கள் மனைவியின் சிகிச்சைக்கு எவ்வளவு இலட்சம் செலவானாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். மனம் கலங்காமல் சிகிச்சையைத் தொடருங்கள்”.

சொன்னது போலவே சிகிச்சைக்காக ஆன சில இலட்சங்களைத் தந்ததுடன், அந்த ஏழைப்பெண் குணமானதும் தன்னுடைய காரிலேயே ஊரில் போய் விட்டுவந்தார் அந்த இளம் தொழிலதி திரு.சிவா.

நல்ல ரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்! இதை நண்பரிடம் சொல்லி முடித்தேன். அதுவரை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பரின் ரிங்டோன் அந்த நேரம் பார்த்து அலறியது… “நான் அடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே?!!”

 

 

fb 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. சில நிகழ்வுகள் தான்
திருப்பங்க்  களைத்தருகின்ற து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை நெகிழ வைத்த நிகழ்வு.
பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.

Link to comment
Share on other sites

மனதைத் தொட்ட பதிவு. நன்றி அபராஜிதன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ரிங்டோன் அவர் வாழ்க்கைப் பிரச்சினையையே மாற்றி விட்டது...!

 

நன்றி அபராஜிதன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரிங்டோனில் என்ன இருக்குது எல்லாத்திற்கும் மனசு தான் காரணம் ^_^
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை...அது தானே மனித வாழ்வின் 'ஆணி வேர்"  !!!

 

நன்றிகள், அபராஜிதன்!

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி. சில நிகழ்வுகள் தான்

திருப்பங்க்  களைத்தருகின்ற து

 

 

மனதை நெகிழ வைத்த நிகழ்வு.

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.

 

 

மனதைத் தொட்ட பதிவு. நன்றி அபராஜிதன்..!

 

 

அவரது ரிங்டோன் அவர் வாழ்க்கைப் பிரச்சினையையே மாற்றி விட்டது...!

 

நன்றி அபராஜிதன்...!

 

 

 

ரிங்டோனில் என்ன இருக்குது எல்லாத்திற்கும் மனசு தான் காரணம் ^_^

 

 

 

நம்பிக்கை...அது தானே மனித வாழ்வின் 'ஆணி வேர்"  !!!

 

நன்றிகள், அபராஜிதன்!

 

 

 

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் உறவுகளே  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.