Jump to content

அவரும் இவரும்..!


sOliyAn

Recommended Posts

pxzv.jpgந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.

 

தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

 

வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார்.

 

வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகளுடன் கலகலத்தவாறு போய்க்கொண்டிருந்தார்கள். நத்தார் கொண்டாட்டங்களுக்கான கொள்முதல்களுடன் அந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் சென்றுகொண்டிருக்க, தான்மட்டும் இந்த உலகத்திலிருந்தே தனிமைப்பட்டுச் சோகச்சுமைகளால் நசுக்கப்படுவதான உணர்வுடன் தவித்தார். அந்த உணர்வு அன்ரனிமீது ஆத்திரமாக எழ, மீண்டும் உள்ளே சென்று, அவனது வீட்டுக் கதவைத் தட்டி, பலவந்தமாக அன்ரனியை வெளியே இழுத்து, கன்னத்தில் ஓங்கி இரண்டு அறை கொடுத்து, 'நீயும் ஒரு மனுசனா... நீ வில்லியத்ததுக்குத்தான் பிறந்தனியா...' என்று கேட்கவேண்டும்போல ஒரு வெறி உருவானது.

 

மறுகணம்.... மனச்சாட்சி விழித்துக்கொண்டு விளைவுகளைப் படம்பிடித்துக் காட்டி வெருட்டிப் பயமுறுத்தியது.

 

'எப்படிச் சமாளிக்கப் போகிறேன்... இன்னும் ஒரு கிழமை... அந்த ஒரு கிழமைக்கிடையில் சமாளித்தாக வேண்டும்..."

சிந்திக்க முடியவில்லை.

 

சிந்தையில் எந்தவொரு வழியோ, நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஒளியோ தென்படவில்லை.

எல்லாமே சூனியமாகத் தோன்றியது.

 

அந்தச் சூனியத்துக்கான வித்து பெரிதல்ல. பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் பெரும்பாலும் இடம்பெறும் அம்சம்தான். ஆனால் அந்த வித்து ஆலகால விசமாகுமளவுக்கு வியூகம் வகுத்ததற்குத் தனது தீர்க்கமற்ற, திட்டமற்ற, பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்பதை றொபின்சன் புரிந்துகொள்வதற்குள் காலம் கடந்து, பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துவிட்டதென்பதுதான் உண்மை.

 

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாயத்துடன் கூடி வந்த பழக்கங்களுள் ஒன்றான ஏலச்சீட்டுக்கு அந்த நகரில் பிரபலமானவர் சுப்பிரமணியம் அண்ணர். அவரிடம் சில வருடங்களுக்கு முன்னர் இருபத்தையாயிரம் மார்க்குக்கு சீட்டுப் போட்டார் றொபின்சன். மாதம் ஆயிரம் மார்க் கட்ட வேண்டும். மொத்தமாக இருபத்தைந்து பேரின் பங்களிப்பில் இருபத்தைந்து மாதம் அதன் ஆயுட்காலம்.

 

இரண்டாவது சீட்டை ஏறக்குறைய பத்தாயிரம் மார்க் ஏலத்தில் கழித்து எடுத்தார் றொபின்சன்

 

ஜேர்மனிக்கு வந்ததிலிருந்து ஒரேயடியாக அவ்வளவு பணத்தை கையில் வைத்தறியாத றொபின்சனுக்கும் மனைவிக்கும் தலைகால் புரியவில்லை.

பணம் பல தேவைகளை ஏற்படுத்தியது

 

தீர்க்கமான திட்டங்கள் எதுவும் இல்லாமல் அந்தச் சீட்டுக் காசு சிட்டாகப் பறந்து, தேவையில்லாத ஆடம்பரப் பொருட்களாக வீட்டை அலங்கரித்தன.

 

மாதாமாதம் சீட்டுக் கட்டவேண்டும் என்ற எண்ணம் காசெல்லாம் முடிந்த பின்னரே முன்னுக்கு வந்தது.

 

சுப்பிரமணியம் அண்ணர் காசு விசயத்தில் ஈவிரக்கம் பார்க்கமாட்டார் என்பது அந்த நகரத்துத் தமிழர் அனைவருக்குமே தெரியும்.

 

சீட்டுக் காசு கட்ட வட்டிக்குக் கடன் வாங்க ஆரம்பித்து, வட்டி முதலுடன் போட்டிபோட்டு வளர்ந்து, தற்போது குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைக்கூட நிறைவேற்றப் படாதபாடுதலுக்குட்பட்டு, நிம்மதியும் அமைதியும் தூர விலகிவிட்டன.

 

'கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று சும்மாவா கூறினார்கள்?!

சீட்டுக்காரன் ஒருபுறம்.... சில்லறைக் கடன்காரர்கள் மறுபுறம்.... குடும்பத்தின் தேவைகள் இன்னொருபுறம்...

 

இவற்றுக்கெல்லாம் ஒரேயொரு வழி அன்ரனியிடம் உதவி கேட்பதுதான் சிறந்ததென்ற முடிவில், அன்ரனியின் வீடு தேடிச்சென்று, அங்கும் அன்ரனி கைவிரித்த நிலையில் தற்போது வழிதெரியாதவராக றொபின்சன் அந்த வாசற்படியில் நின்றிருந்தார்.

 

அன்ரனியின் தந்தையார் வில்லியம் தாயகத்தில் அந்தக் கிராமத்தில் வள்ளல்தன்மைக்கு பிரசித்தமானவர்.

எந்தப் பொதுக் காரியமானாலும் மனமுவந்து உதவிசெய்வார். கஸ்டப்பட்டவர்கள் அவரை நாடிச் சென்றால் ஒருவேளை உணவாவது கொடுத்தனுப்பத் தவறமாட்டார்.

 

ஆனால்...

அந்த வில்லியத்துக்குப் பிறந்தவனா இந்த அன்ரனி...?!

 

பெற்றோரின் அங்க அடையாளங்கள் பிள்ளைகளுக்குச் சென்றடைவதுபோல, அவர்களின் குண இயல்புகளும் பிள்ளைகளுக்குச் சென்றடையும் என்பார்களே?! மொத்தத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் உருவத்தில் வாழ்வார்கள் என்ற நினைப்பில் அவனது வீடு தேடிச் சென்ற றொபின்சனுக்கு, அன்ரனியின் போக்கு 'வில்லியத்தின் மகன்தானா அவன்?' என எண்ணவைத்தது என்னவோ உண்மைதான்.

 

அன்று....

மார்கழி இருபத்தினான்காம் திகதி.

இரவு பதினொரு மணியிருக்கும்.

 

அது சென் பீற்றர்ஸ் தேவாலயம்.

 

யேசு பிரானின் பிறப்பையொட்டி அந்த இரவு நேரத்தில் ஆரம்பமாகும் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவென அங்கே திரண்டிருந்த பெரும்பாலான ஜேர்மன் மக்களுடன் வேறு பல வெளிநாட்டவர்களும் கூடியிருந்தார்கள்.

றொபின்சனும் தனது குடும்பத்துடன் போயிருந்தார்.

 

அன்ரனியும் தனது குடும்பத்தினருடன் அங்கு வருவான் என்று தெரியும்.

அதனால் அவனுடனோ அல்லது அவனது குடும்பத்தினருடனோ எவரும் உரையாடக் கூடாது எனத் தனது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

 

அன்று அன்ரனி உதவிசெய்யாத ஆத்திரம்....!

எனினும், யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாரோ... அவன் வந்திருக்கிறானா என அறிய அலைபாயும் கண்களுக்குத் தடைபோட அவரால் முடியவில்லை.

 

அன்ரனியை அங்கே காணவில்லை.

அவனது மனைவியும் பிள்ளைகளும்தான் அங்கே நின்றிருந்தார்கள்.

 

ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் பிரார்த்தனைகளையே தவறவிடாத அன்ரனி, இன்று ஏன் வரவில்லை?!

 

ச்சே... உதவி செய்யாமல் உசாதீனம் செய்தவனின் நினைப்பு இப்ப எதுக்கு?!

 

குரங்காய்த் தாவிய மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு பிரார்த்தனையில் கவனம் செலுத்தினார்.

 

மணி நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது.  

 

பாலனின் பிறப்பை ஒட்டிய பிரார்த்தனைகள் முடிந்து மக்கள் 'கலகல'ப்பாக தேவாலயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

தேவாலயத்தின் வாசற்புறம் பனிப்புகாரிலும் வெளியே கப்பியிருந்த இருளிலும் மங்கலாகத் தெரிந்தது.

 

அங்கே வாசலின் பெரிய மரக்கதவு நிலைக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழின் ஒளியின் கீழே ஒரு உருவம் முழந்தாழிட்டு மண்டியிட்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது.

 

பரபரப்பாக வெளியேறிக் கொண்டிருந்த பலரும் அந்த உருவத்தின் அருகே சென்றதையும் ஒருகணம் தாமதித்து நிற்பதையும், அவ்வுருவம் இரு கைகளாலும் ஏந்தியிருந்த பாத்திரத்தில் பணம் போடுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

 

'மனித குலத்தின் பாவங்களுக்காக இரத்தம் சிந்திய யேசுபிரானின் பிறப்பைக் கொண்டாடும் இந்தவேளையில், அதுவும் தேவாலய வாசலிலே குளிரில் முழந்தாழிட்டுப் பிச்சை எடுப்பவன் யாராக இருக்கும்?' என்று அறியும் ஆவலுடன் அவ்வுருவத்தை நெருங்கினார் றொபின்சன்.

 

காதுவரை மூடியிருந்த தொப்பிக்குக் கீழாகத் தெரிந்த அந்த முகத்தைக் கண்டு அதிர்ந்துவிட்டார்.

 

அங்கே முழந்தாழிட்டப் பிச்சையேற்பது அன்ரனியேதான்...!

அவனது கழுத்தில் ஜேர்மன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கடதாசி மட்டையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.

 

"தினம் தினம் பசியாலும் பட்டினியாலும் நோயாலும் இரத்தம் சிந்தாமல் அழிந்துகொண்டிருக்கிற எனது தாய்நாட்டு மக்களான ஈழத் தமிழருக்கு உதவுவீர்களா?

ஈழத் தமிழனாய்ப் பிறந்த ஒரே நிகழ்வுக்காக மரணத்துக்குள் வாழ்கின்ற என் நாட்டுப் பிஞ்சுகளுக்கு ஒருவேளைக் கஞ்சிக்காவது உதவுவீர்களா?....."

அதற்கு மேலும் றொபின்சனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.

 

கண்கள் குளமாகின.

கண்களில் பெருக்கெடுத்த நீர்த் திவலையினூடே அங்கே அன்ரனி தெரியவில்லை.

வில்லியம் தெரிந்தார்!

 

*****

(பிரசுரம்: பூவரசு கார்த்திகை- மார்கழி 1999)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா

இன்று  தான் பார்த்தேன்

கண்ணீரை வரவழைத்துவிட்டீர்கள்.............

 

புலம் பெயர் தமிழினம்

தன்னால் முடிந்ததுக்கும் மெலாக  செய்தது என்பதே உண்மை.

அதில் அன்ரனியும் அடங்குவார்.....

இன்று தோல்வியால் நாம் கலங்கி

தயங்கி

துவண்டு நின்றாலும்

தர்மம் வெல்லும் என்ற  நம்பிக்கையோடு இருக்கின்றோம்

அதையே  தங்களது கதையும்

எழுத்தக்களும் சொல்கின்றன

தொடருங்கள்

தாயகமும் புலமும் இவற்றை  வாசித்து ஒரு கோட்டின்கீழ் பயணிக்கணும்

Link to comment
Share on other sites

நன்றி ஐயா!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.