Jump to content

தேவனும் சாத்தானும்! – குறுங் கதை


Recommended Posts

சாத்தான் தேவனின் கழுத்தைப் பிடித்து திருகினான். சாத்தானின் கண்களில் கொலை வெறி தெரிந்தது. முடிந்தால் தேவனை உடனேயே கொலை செய்திருப்பான்.

ஆனால் அதுதான் முடியாதே. தேவன்தான் கடவுள் ஆகிற்றே. சாத்தானின் கையை விலக்கி விட்டு தேவன் அன்பாக புன்னகைத்தார்.

„என்ன காரியம் செய்தாய்? எதற்காக அவர்களை விடுவித்தாய்?' சாத்தான் வீரிட்டுக் கத்தினான்.

„என் குழந்தைகளை நீ இப்படி ஒரு அறிவற்ற நிலையில் வைத்திருப்பதை நான் எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் உடை கூட அணியாமல் இருந்தார்கள். தாம் நிர்வாணமாக நிற்கிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இதை எப்படி நான் பொறுக்க முடியும்? இதற்காகவா அவர்களை நான் படைத்தேன்' தேவன் அதே புன்னகையோடு கேட்டார்.

„உண்மை என்பதை அறிய முடியாமல் என் குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுக்கு என்று படைக்கப்பட்ட உலகின் இன்பங்களை நுகராமல், பயணங்களை செய்யாமல் உன்னால் இந்தத் தோட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறேன்' தேவன் மூச்சுவிடாமல் தொடர்ந்தார்.

„அவர்கள் போய் விட்டார்கள், அண்டவெளியெல்லாம் சஞ்சரிக்க, ஆயிரம் கண்டுபிடிப்புக்களை செய்ய, ஒவ்வொரு கேள்விக்கும் விடைகளை காண, பெரும் பயணம் ஒன்றை செய்ய போய் விட்டார்கள். இனி உன்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது' தேவன் தீர்க்கமாக பேசினார்.

சாத்தானின் கண்களில் குரூரம் தெரிந்தது. தேவனைப் பார்த்து கேலியாக சிரித்தான்.

„உனக்கு ஒன்று தெரியுமா? இனி நான்தான் கடவுள், நீ சாத்தான்' சாத்தானின் கேலிச் சிரிப்பு வெடிச் சிரிப்பாக மாறியது.

„உன் குழந்தைகளோடு சாத்தான்களையும் அனுப்புவேன். அவர்கள் அறிவை மழுங்கடிப்பார்கள், உன் குழந்தைகளை முட்டாள் ஆக்குவார்கள், மூடத்தனமான நம்பிக்கைகளை வளர்ப்பார்கள், அதற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யுமளவுக்கு போவார்கள், உன் குழந்தைகளை நான் அழிப்பேன்'

சாத்தானின் சபதத்தை கேட்டு தேவன் சற்று ஆடித்தான் போனார். ஆனாலும் சுதாரித்துக் கொண்டார்.

„உன்னுடைய சாத்தான்கள் பரப்பும் மூடநம்பிக்கைகளை தகர்க்க நான் என் தூதர்களை அனுப்புவேன்' தேவன் அமைதியாகவே இதைச் சொன்னார்.

சாத்தானின் முகத்தில் மீண்டும் குரூரம்.

„நீ அனுப்புகின்ற தூதர்களின் பெயரிலேயே நான் மதங்களை தொடங்குவேன். அவர்களையும் கடவுள் ஆக்கி மூடநம்பிக்கைகளை வளர்ப்பேன். மக்களை யுத்தம் செய்ய வைப்பேன். உன் குழந்தைகளை அழித்தே தீருவேன்' சாத்தான் மீண்டும் சத்தமிட்டான்.

„நான் விசேடமான தூதுவர்களையும் அனுப்புவேன். அவர்களை உன்னால் வெல்ல முடியாது' தேவன் அதே புன்னகையோடு பேசினார்.

„ஏன்? ஏன்? யார் அவர்கள்?' சாத்தானின் கேள்வியில் பதற்றம் தெரிந்தது.

„அவர்கள் என்னையே மறுப்பார்கள். கடவுள் இல்லை, அறிவுதான் அனைத்தையும் கடந்தது என்னும் உண்மையை பேசுவார்கள். என் குழந்தைகளை அழிவில் இருந்து பாதுகாப்பார்கள்' தேவன் சொல்லிவிட்டு அமைதியாக நடந்து போனார்.

Link to comment
Share on other sites

தேவன்களுக்கும் சாத்தான்களுக்குமான போராட்டம் இன்றுவரை தொடரத்தான் செய்கின்றது . என்ன அவ்வப்போது சமன்பாடுகளின் விகிதங்கள் மாறுபடுகின்றன . உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் என்னையே மறுப்பார்கள். கடவுள் இல்லை, அறிவுதான் அனைத்தையும் கடந்தது என்னும் உண்மையை பேசுவார்கள். என் குழந்தைகளை அழிவில் இருந்து பாதுகாப்பார்கள்' தேவன் சொல்லிவிட்டு அமைதியாக நடந்து போனார்.
இதைத்தான் எங்கன்ட சனம் எல்லாம் அவன்(தேவன்) செயல் எண்டு சொல்லுறவையள் போல.......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சபேசன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சபேசனை சாத்தான் பிடித்து ஆட்டுகிறது. இதை நான் சொல்லவில்லை. தேவனை நம்புகிறவர்கள் சொல்லப்போகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.